Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல; புலிகளுடன் பேசுவது அவசியம் என்கிறார் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல; புலிகளுடன் பேசுவது அவசியம் என்கிறார் ரணில்

[29 - December - 2006] [Font Size - A - A - A]

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண முடியாதெனத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்படப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் அச்சுறுத்தலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குடனேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டிருப்பதாகவும் அந்த இலக்கை அடைவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமெனவும் குழிபறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாதெனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பிரிவு ஊழியர்களின் நலன்புரி இயக்கம் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் வைபவத்தை நேற்று நடத்தியது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது;

போருக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டது. ஜனாதிபதியும் நானும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லாட்சிக்கு வழிசமைக்கவும் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் காண்பதே எமது ஒரே நோக்கமாகும். இந்த முயற்சியை சீர்குலைக்க சில இனவாதச் சக்திகள் மறைமுகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து ஒன்றுபட்டு சமாதானத்தையடைய இணைந்து செயற்படுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆராய்ந்த பின்னர் அதனை சகல கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னரே இறுதித்திட்டம் தயாரிக்கப்படும்.

இதற்குப்புறம்பாக சர்வகட்சி மாநாடும் ஒரு தீர்வுத்திட்டயோசனையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. யோசனைகள் ஒட்டுமொத்தமாக ஆராயப்பட்டு அரசியல் தீர்வுத்திட்டமொன்று தயாரிக்கப்படும். இந்த தீர்வுத்திட்டத்துடனேயே விடுதலைப் புலிகளை சந்திக்க எண்ணியுள்ளோம். உறுதியானதும், ஆரோக்கியமானதும், சகல சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுத் திட்டத்தை விடுதலைப் புலிகளுக்கு சமர்ப்பித்துப் பேசத்தீர்மானித்துள்ளோம்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ் மக்களுக்கு உரியதீர்வு வழங்கப்பட்டால் தான் நாட்டுக்கு நல்ல எதிர்காலமுண்டு என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. எமது கூட்டு முயற்சிக்கு சகல தரப்பினரதும், கட்சிகளினதும் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் சமாதான முயற்சியை சரியான திசையில் முன்னெடுக்க முடியும்.

ஆளும் சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரதான நோக்கம் யுத்தமற்ற நாட்டை உருவாக்குவதும், அரசியல் தீர்வுமூலம் நிரந்தர சமாதானத்தை எட்டுவதுமே ஆகும்.

எமது எதிர்காலச் சந்ததியினருக்கு போரில்லாத தேசத்தைப் பெற்றுக் கொடுக்க அனைவரும் ஒன்றுபடுமாறும், பிறக்கும் புத்தாண்டு சமாதான ஆண்டாக பரிணமிக்க ஒன்றுபட்டுழைக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, நலன்புரிச் சங்கத் தலைவர் லால் பெரேரா, தயா பெரேரா ஆகியோருடன் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

http://www.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.