Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது: - முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொதுமக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி.திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால்தான் அரசியல்வாதிகளும் கொடுக்கின்றனர். மக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.

பொதுமக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி.திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால்தான் அரசியல்வாதிகளும் கொடுக்கின்றனர். மக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.

   

144 தடை உத்தரவால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது. 144 தடை உத்தரவு இல்லாத சமயங்களிலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்துள்ளனர். இதற்கு விகிதாச்சார பிரிதிநிதித்துவம் தீர்வாக இருக்காது.நமது நாட்டில் 100 சத வாக்குப்பதிவு சாத்தியமில்லை. தேர்தல் ஆணையம் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தல் சீர்த்திருத்தத்தை மக்கள்தான் அரசியல்வாதிகளிடம் வலியுறுத்த வேண்டும். அப்படி வலியுறுத்தினால் மட்டுமே தேர்தலில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர இயலும் என்றார். தொடர்ந்து அவர் விழாவில் பேசியது:

நம் நாடு உற்பத்தித் திறனில் மேலை நாடுகளை விடவும், சீனாவுக்கு அடுத்த நிலையிலும் முன்னேறியுள்ளது. ஆனால் படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதில் இன்னும் பின்தங்கி, முன்னேற்றமில்லாத நிலையில் உள்ளது.படித்தவர்கள் வேலைக்குச் செல்ல தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மற்றவர்களுடன் எப்படி பழகுவது, ஒருங்கிணைந்து செயல்படுவது, தகவல் தொடர்பு திறன், புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், கூர்ந்து கவனிக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. இது வெட்கக்கேடான விஷயமாகும். தங்களது பணத்தைத்தானே அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பணமாகக் கொடுக்கிறார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அது தவறு.

அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதில் 1,000-இல் ஒரு பங்கை மட்டும் உங்களுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இதில் ஏமாறுவது மக்களே. ஓட்டுக்கு கொடுக்கும் பணம் மக்களிடமிருந்து எடுக்கப்பட்டது அல்ல. அது கொள்ளையடிக்கப் போகும் பணம். இதனால் அரசியல்வாதிகள் செய்யப் போகும் தவறுக்கு மக்களும் உடந்தையாகிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். எனவே, ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை ஒவ்வொரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கோபாலசுவாமி.

http://www.seithy.com/breifNews.php?newsID=154372&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.