Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் வீதியமைப்பு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியமர்த்த திட்டம்!

Featured Replies

திருமலையில் வீதியமைப்பு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியமர்த்த திட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி என்ற பெயரில், வீதி அமைப்பு அதிகாரசபை மூலம் உயர் மட்டத்தினரால் அவசர அவசரமாக திருகோணமலை - புத்தளம் வீதியையும், திருகோணமலை - கண்டி வீதியினையும் இணைக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டு எட்டு கட்டங்களாக இந்த வேலைகள் துரித கதியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்தே உயர்மட்ட உத்தரவுகளும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பும் இதற்கு முழுமையாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் தற்போது இராணுவத்தினர் இந்த வீதி அமைப்புக்கு ஏதுவாக ஈச்சிலம்பற்றறு, மாவிலாறு போன்ற பகுதிகளில், இந்த வீதி வரவுள்ள இடங்களில் காடுகளை அழிக்கும் முயற்சிகளிலும் மும்மரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வீதி இணைக்கப்படுவதன் மூலம் முழுமையாக சிங்கள மக்களே நன்மை அடையவுள்ளனர். அவர்களுக்கான சுற்றுப்பாதையினை தவிர்த்து குறுக்கே பல தமிழர் பிரதேசங்களை ஊடறுத்தே மேற்படி இந்த பாதை வரவுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஐயத்தினை வரவழைத்துள்ளது.

இதன்மூலம் தமிழர்கள் பிரதேசங்கள் ஊடாக சிங்கள மக்கள் போக்குவரத்துக்களையும், குடியேற்றங்களையும் நடத்த ஏதுவாகவும் இது அமையும் என தெரிவித்துள்ளனர்.

www.sankathi.com

  • தொடங்கியவர்

தமிழர்களை விரட்டத்தான் மின் நிலையம்: தமிழ் எம்பிக்கள்

இலங்கையில் கிழக்கு பகுதியான சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் பிராமாண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்க்கு சிறிலங்கா அரசு இந்தியா பொதுதுறை நிறுவனமான என்.டி.பி.சியுடன் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தமானது இந்தியா அமைச்சின் பிரதிநிதிகள் மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது . திருகோணமலையில் சம்பூர் பகுதியில் இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்ட் போது அதில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மக்கள் இல்லாதா இடமாக சம்பூர் இருக்கும் போது அனல் மின்சார நிலையம் அமைப்பதில் சிறிலங்கா அரசுக்கு சுலபமாகிவிடும் என்று தமிழ் எம்பிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

சிறிலங்க அரசு புலிகள் பகுதிகள் மீது நடத்திய தாக்குதலில் சம்பூர் , சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை , பாட்டாளிபுரம் , கூனித்தீவு உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த தமிழர்கள் இடம் பெயர்ந்து காடுகளிலும் அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர் .

அவர்களினை திரும்ப குடியுருப்பிகளை இருபதற்கு ஏற்ப சுமுக நிலைமை ஏற்படுத்தமால் அரசு இவ்வாறான ஒப்பந்தம் செய்வது தமிழர்களுக்கு செய்யும் அநியாம் என்று கூறுகின்றனர் தமிழ் எம்பிகள்.

கடந்த செப்டம்பர் மாதம் புலிகள் வசமிருந்த சம்பூரை சிறிலங்கா படைடினர் கைப்பற்றினர் .

அங்கு மின்சார நிலையம் அமைப்பதற்க்கு தமிழ் எம்பிக்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர்.

திருமலை தமிழ் பிரதிநிதிகளும் ஆலோசனை செய்யாமல் அரசு இந்த ஒப்பந்தம் செய்வது குறித்து திருமலை மாவட்டம் தமிழ் எம்பிகள் துரைரட்ணசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

www.tamiloosai.com

  • தொடங்கியவர்

திருமலை மாவட்டத்துக்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டம்.

புதிய ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்துவதற்கான பாரிய திட்டமொன்றை சிறிலங்கா அரசு முன்மொழிந்துள்ளது.

அந்த மாவட்டத்தின் அடிப்படை வசதிகளைப் பெருக்குவதும் சமூகத்தை அபிவிருத்தி செய்வதும் இந்தப் பெரும் திட்டத்தின் முக்கிய அடிப்படை என்று திருகோணமலைக்கு சென்றிருந்த சிறிலங்கா அமைச்சர் ரோகித போகல்லாகம கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக திருகோணமலை மாவட்டம் கவனிக்காமல் விடப்பட்டு விட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், அங்கு நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

புதிய வீதிகள் அமைக்கும் பணி அங்கு ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது.

www.puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.