Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டில் கடத்தப்படுவோர், காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

Featured Replies

யாழ் குடாநாட்டில் கடத்தப்படுவோர், காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

யாழ்ப்பாணத்தில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த பெருமாள் பிரசாத் (22) என்பவரது வீட்டிற்கு சென்ற 15பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் இவரைக் கடத்தைச் சென்றுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் பிற்பகல் 4.00மணியளவில் வீட்டில் இருந்து யாழ் நகருக்கு சென்ற சோதிலிங்கம் ஜெனார்த்தனன் (23) கஸ்துரியார் வீதி யாழ்ப்பாணம் என்பவர் கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 1.00மணிக்கு இவரது வீட்டுக்கு சென்ற 20பேர் கொண்ட ஆயுதகுழுவினர் இவரது வீட்டில் சல்லடையிட்டு சோதனையிட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் படையினரே கடத்தியதாகவும் இவர்களது உறவினர்கள் யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழில் இருவரைக் காணவில்லை.

வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர் கடந்த 26ம் திகதி வடமராட்சி துன்னாலையிலிருந்து தென்மராட்சி சாவகச்சேரிக்குச் சென்ற கந்தசாமி சுந்தரராசா (39) துன்னாலை வெற்றிவேல் ஜெயபாலன் (42) துன்னாலை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பாக கொடிகாகமம் நெல்லியடி சிறிலங்கா பொலிஸ் நிலையங்களில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

www.sankathi.com

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

கடத்தல், காணாமற்போதல்

குடாநாட்டில் அதிகரிப்பு.

அண்மைக்காலங்களில் குடாநாட்டில் கடத்தல் மற்றும் காணாமற்போகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

கடந்த 28ஆம் திகதி வியாழக் கிழமையன்று தந்தையும் மகனும் காணாமற்போயுள்ளதாக உறவினர்களால் யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சந்திரலிங்கம் விஜயகுமார் (வயது32 ), அவரது மகனான விஜயகுமார் பிரசாந் (வயது 13), ஆகிய இருவரும் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை காலை 6 மணியளவில் கொடிகாமம் சந்தைக்குச் சென்றதாகவும் பின்னர் இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை ஊர்காவற்றுறை கரம்பனைச் சேர்ந்த இராசு சஞ்சீவன்(வயது 19) என்பவர் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமையன்று கடைக்குச் செல்லும்போது காணாமற் போயுள்ளதாக அவரது உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களில் 15 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமற்போயுள்ளனர் என யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

www.uthayan.com

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வெள்ளை வான் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வெள்ளை வானில் கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன கடந்த சில நாட்களாக வெள்ளை வானில் கடத்தும் நடவடிக்கைகள் குறைந்திருந்த போதிலும் தற்போது நேற்றிரவு நேரங்களில் வீடுகளுக்குச் சென்ற இளைஞர்களை கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன

குறிப்பிட்ட வெள்ளைவான் கடத்தல் நடவடிக்கையில் இராணுவப்புலனாய்வாளர்களுடன் ஈ.பி.டி.பி மற்றும் கருணா குழுவைச்சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

கடந்த வாரம் சுண்ணாகத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான வான் சுண்ணாகத்தில் நிலை கொண்டுள்ள ஈ.பி.டி.பி முகாமில் உள்ளவர்களினால் கடத்தப்பட்ட போதிலும் குறிப்பிட்ட வானின் உரிமையாளர் சுண்ணாகம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து குறிப்பிட வாகனம் உடனடியாக இராணுவத்தினரால் மீளப் பெறப்பட்டு உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

www.sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.