Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானிடம் இருந்து ரூ.450 கோடிக்கு இலங்கை அரசு ஆயுதம் வாங்குகிறது.

Featured Replies

பாகிஸ்தானிடம் இருந்து ரூ.450 கோடிக்கு இலங்கை அரசு ஆயுதம் வாங்குகிறது.

மகிந்தா ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற பிறகு உள்ள தமிழர் பகுதிகள் மீது போர் விமானங்கள் அடிக்கடி குண்டு வீசுகின்றன. இதில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

புலிகளை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து ரகசியமாக ஆயுதங்களை வாங்கி குவிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த தகவலை ஜேன் என்ற பாதுகாப்பு துறை பத்திரிகை தற்போது உறுதி செய்து உள்ளது. அந்த பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து 450 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் ஆளில்லா விமானங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், வெடிபொருட்கள், பல்வேறு வகையான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் உள்பட ஏராளமான ராணுவ தளவாடங்கள் அடங்கும். பெரும்பாலான தளவாடங்களின் சப்ளை ஏற்கனவே தொடங்கி விட்டது.

பாகிஸ்தான் நாடு உக்ரைன் போன்ற மற்ற நாடுகளிடம் இருந்து பல்வேறு வகையான ராணுவ தளவாடங்களை வாங்கி, இலங்கைக்கு சப்ளை செய்து வருகிறது. இதற்கான ஆர்டர்களை பெறுவதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு பெருமளவுக்கு லஞ்சம் தரப்படுகிறது. இந்த வகையில் ரூ.90 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக விடுதலைப்புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இலங்கை விமானப்படையினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதாக புலிகள் கருதினர்.

www.tamilwin.com

  • தொடங்கியவர்

சிறீலங்கா அரசாங்கம் 100 மில்லியன் டொலரில் ஆயுதக்கொள்வனவு.

இலங்கை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான யுத்த உபகரணங்களை பாகிஸ்தானிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளதாக தி இந்து ஊடக இதழ் தெரிவித்துள்ளது.

யுத்த தாங்கிகள், பல்வகையான குண்டுகள் மற்றும் விமானி இல்லாத கண்காணிப்பு விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்யப்பட உள்ளன.

பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை மேற்கொள்ளும் யுத்த உபகரண கொள்வனவு எதிர்வரும் 18 மாதங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவரை அதிகரிக்கலாம் என்பதை பாதுகாப்பு தொடர்பான ஊடகங்களின் செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

www.pathivu.com

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

சிறிலங்கா விமானப்படை தளபதியின் பாதுகாப்பு அதிகரிப்பு.

சிறிலங்கா விமானப்படை தளபதி ஏயர் மார்சல் ரொசான் குணதிலக்கவின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மறைந்த முன்னாள் அரச தலைவர் பிரேமதாசாவின் மனைவி ஹேமா பிரேமதாசவின் ஸ்ரான்மோ கிறசன்ற் இல்லத்தை மீளப்பெற அரசு தீர்மானித்தள்ளது.

விமானப்படை தளபதியின் விடுதியில் தற்போது பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஏயர் சீப்ஃ மார்சல் டொனால்ட் பெரேரா தங்கியுள்ளார்.

ஹேமா பிரேமதாசாவின் இல்லத்தை கையகப்படுத்தியதும் அந்த இல்லத்திற்கு பெரேரா குடிவைக்கப்படுவதுடன் ரொசான் குணத்திலக்க விமானப்படை விடுதியில் தங்க வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படை தளபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் ஹேமா பிரேமதாசா விரைவாக வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு கேட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, படிப்பு முடிந்ததும் விமானப் படையில் சேர தனது மகன் ஆர்வம் கொண்டுள்ளதாக விமானப்படை தளபதி ஏயர் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

மகனின் முடிவிற்கு எதிப்பு தெரிவிக்கப் போவதில்லை. எனது தந்தையார் ஹரி குணதிலக்க (முன்னாள் விமானப்படைத் தளபதி) விமாப்படையில் இருந்தது தான் எனக்கு ஆர்வத்தை கொடுத்தது.

படைகளுக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் நல்ல முன்னேற்றம் தற்போது தென்படுகின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது இரண்டாவது புதல்வரை கடற்படைக்கு அனுப்பியதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

www.puthinam.com

  • தொடங்கியவர்

சிறிலங்கா கடற்படைப் படகுகளில் நவீன பீரங்கிகளை பொருத்த நடவடிக்கை.

கடற்படை படகுகளில் மிக நவீன பீரங்கிகளைப் பொருத்துவதற்கு சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடற்புலிகளின் பலத்திற்கு ஏற்ப கடற்படையினரின் பலத்தையும் அதிகரிக்கும் நோக்கிலேயே கடற்படைப் பீரங்கிப் படகுகளில் பொருத்துவதற்கு மிக நவீன பீரங்கிகளை அரசு கொள்வனவு செய்யவுள்ளது.

அமெரிக்க கடற்படையினரதும் அமெரிக்க விசேட கொமாண்டோ படையினரதும் ஆலோசனைக்கமையவே சிறிலங்கா கடற்படை படகுகளில் மிக நவீன பீரங்கிகளைப் பொருத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக உடனடியாக மிக நவீன பீரங்கிகளைக் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு தனது மகனது பயிற்சிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, கடற்படையினரின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

அண்மைக் காலமாக கடற்படை கப்பல்களில் பொருத்தப்படும் பீரங்கிகளின் தாக்குதல் திறனை கூட்ட வேண்டுமென வற்புறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இந்தக் கப்பல்களில் மிக நவீன ரக பீரங்கிகள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

www.sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.