Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

65000 வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டது ; சீ.வி. விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

65000 வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டது ; சீ.வி. விக்னேஸ்வரன்

[ Sunday,10 April 2016, 05:10:27 ]   
CM-1.jpg

65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்திட்டம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம், உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் எமது பங்குபற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எம்மை மதிக்கவில்லை என்பதற்காக தாம் கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிகாரப்பகிர்வு என்று வாய் கிழியக் கத்திவிட்டு இதைக்கூட எமக்குத் தெரியாமல் செயற்படுத்த முன்வந்தால் மத்தியின் உண்மையான மனநிலை என்ன என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்மைச் சந்திக்கப் பல பாதிக்கப்பட்ட மக்கள் படையெடுத்து வருவதாகவும் பலரின் குறைகளைத் தீர்க்க முடியாத நிலையில் அவர்களின் பெயர்களையும் தேவைகளையும் பதிந்து வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மாணவ மாணவிகள், பிறநாடுகளில் இருந்து அவர்களின் உற்றார் உறவினர் அனுப்பும் பணத்தை நம்பி வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,

அங்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டு வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பணம் அனுப்புகின்றார்கள் என்பதை எம்முள் பலர் அறிவதில்லை, உணர்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவ மாணவியர் தம் சொந்தக் கால்களில் நின்று முன்னேற முடிவெடுக்க வேண்டும் எனவும் படித்துவிட்டு வேலை கிடைக்காது தவிக்கின்றோம் என்று பலர் கூறுவது எனது காதுகளுக்குக் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது மக்களில் பலர் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய நிதிவளம் இல்லாது தவிக்கின்றனர்.

அவர்களின் வீடுகளைக் கட்டி முடிக்க வெறும் இரண்டு அல்லது மூன்று இலட்சங்களே தேவைப்படுகின்றது. வீடுகளைக் கட்டத் தொடங்கி முடிவுறச் செய்ய முடியாது தவிக்கும் பலருக்கு ஒரு சுழலும் நிதியம் மறுமலர்ச்சியை உண்டு பண்ணும்.

அவ்வாறான ஒரு நிதியத்தை நடைமுறைப்படுத்த எமது அலுவலர்கள் தகைமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

பலர் எமக்குப் பணம் அனுப்புகின்றார்கள். அவற்றை ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் இட்டு, உதவிகோரும் மக்களின் உண்மையான நிலை பற்றி எங்கள் அலுவலர்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்து அறிக்கை பெற்று, பண உதவி செய்து, அவர்களின் தேவைகள் பூர்த்தியடைகின்றனவா என்று தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

தேவையென்றால் சுழல் நிதியப் பாவனையை நடைமுறைப்படுத்தவும் எமது அலுவலர்கள் உதவுவார்கள் என்று கூறி வைக்கின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்களைப் பிராந்திய ரீதியாகவோ மத, மொழி, சாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்காது வகையற்றவர்கள் வளம்பெற உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவையாற்றி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.http://ibctamil.com/news/index/21877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.