Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் கனவை நனவாக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

Featured Replies

எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அத்தனகல்ல மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கே இதுகாலவரை வாக்களித்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்க முதன் முதல் 1931 ஆம் ஆண்டு அத்தனகல்ல தொகுதிக்காகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் 1947 ஆம் ஆண்டில் அத்தனகல்லவுக்குத் தெரிவு செய்யப்பட்ட போது அவர் போட்டியிட்டது யானைச் சின்னத்திலாகும். 1952 இல் அவர் யானைச் சின்னத்துக்குப் பதில் கை.சின்னத்தை தெரிந்தெடுத்தபோது அந்தனகல்ல மக்கள் சின்னத்தைப் பற்றிக் கருதாமல் அவருக்கே வாக்களித்தனர். இவ்வாறே 1956 இல் சில்லுச் சின்னத்தில் அத்தனகல்ல தொகுதிகளில் போட்டியிட்டார் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க. இதன் பின்னர் கதிரை பண்டாரநாயக்க குடும்பத்தின் தேர்தல் சின்னமாகியது. அதைத் தொடர்ந்து வெற்றிலைச் சின்னம். இவ்வாறு எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அத்தனகல்ல மக்கள் வாக்களித்து வருவது பண்டாரநாயக்க என்ற சின்னத்துக்கே.

இதனாலேயே, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அத்தனகல்லவில் பண்டாரநாயக்க சின்னத்தை இல்லாமல் செய்வதற்கான திட்டம்பற்றித் தீவிரமாகச் சிந்தித்துவந்தார். இந்தவகையில், 1980 ஆம் ஆண்டில் அத்தனகல்லவில் போட்டியிடுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை ரத்துச்செய்யத் தீர்மானித்ததுடன் பின்னர் அத்தனகல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த தொம்பே தொகுதியில் போட்டியிடத் தெரிவாகிய பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் குடியுரிமையையும் ரத்து செய்யத் தீர்மானித்தார். இதன் மூலம் பண்டாரநாயக்க குடும்பத்தினரை அரசியலிலிருந்து விரட்டி விட்டு அத்தனகல்லவில் வெற்றிபெற நினைத்தார் ஜே.ஆர்.ஜயவர்தன. இவ்வாறு திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் அத்தனகல்ல தேர்தல் தொகுதி பிரதிநிதியற்ற நிலையில் வெறுமையானது. இந்தவிமாக அத்தனகல்ல தொகுதியை காலியாக்கி விட்டு அங்கு பண்டாரநாயக்க சின்னத்தை முற்றாக அழித்து விடுவதற்காக அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்தார் ஜே.ஆர்.ஜயவர்தன.

ஆயினும் திருமதி. சிறிமாவே பண்டாரநாயக்க இவ்வாறு ஜே.ஆர்.ஜயவர்த்தன அத்தனகல்லவில் இடைத்தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதியாக அனுரா பண்டாரநாயக்காவை அல்லது சந்திரிகா பண்டாரநாயக்காவை நியமிக்கத் தீர்மானம் செய்தார். இந்நிலையில், அனுராபண்டாரநாயக்காவோ, சந்திரிகா பண்டாரநாயக்கவோ அத்தனகல்ல தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அங்கு தோல்வியே ஏற்படுமெனவும் எனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கு மறுபடியும் உயிரூட்டப்பட்டு ஐக்கிய தேசிய கட்சிக்குப் பாதகமாக அமைந்து விடுமென ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு கட்சியின் பிரபல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதை உணர்ந்து கொண்ட ஜே.ஆர்.ஜயவர்தன அத்தனகல்லவில் இடைத்தேர்தல் நடத்தும் தீர்மானத்தைக் கைவிட்டு, அத்தனகல்ல தொகுதிக்கு இடைத்ததேர்தல் நடத்தப்படமாட்டாதெனவும், காலியான தொகுதிக்காக ஆசன ஒதுக்கீடுசெய்யும் முறைக்கு ஏற்று சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியை நியமிக்கும்படியும் தெரிவித்தார்.

இவ்வாறு சிறிமாவே பண்டார நாயக்காவின் குடியுரிமையை ரத்து செய்தாவது அத்தனகல்ல தொகுதியில் வெற்றி பெற ஜே.ஆர்.ஜயவர்தன கண்ட கனவு பலிக்க வில்லை. இதன் பின்னர் 1882 இல் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டபோது அத்தனகல்லவில் பண்டாரநாயக்க சின்னம் இல்லாமல் போய் அங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெற முடியம் என ஜே.ஆர்.ஜெயவர்தன எதிர்பார்ந்தார். இதற்காக அவர் அத்தனகல்ல தொகுதியெங்கும் நீலநிற சுவரொட்டிகளை ஒட்டுவித்தார். அதில் பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கு வேண்டாத கொப்பேகடுவ எங்களுக்கும் வேண்டாம் என்று மக்கள் கூறுவதுபோல் எழுதப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் கொப்பேகடுவ தோல்வியடையப் போகிறார் என்று நினைத்து திருமதி பண்டாரநாயக்கவும் அநுர பண்டாரநாயக்கவும் மௌனமாக இருந்து விட்டனர். ஆயினும், அத்தனகல்ல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளில் போவதைத் தடுக்க தனிப்பட்ட முறையில் திருமதி பண்டாரநாயக்க செயற்பட்டிருந்தார்.

1982 இல் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜேர்.ஆர். ஜயவர்தனவின் கனவு பாழாகியது. அத்தனகல்ல மக்களால் கொப்பேகடுவவே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர், அத்தனகல்லவில் கை வைப்பது கையைச் சுட்டுக் கொள்வதாகவே இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார் அவர். ஆயினும், ஜே.ஆர். ஜயவர்தனவும் இரண்டாவது பதவியிலிருந்த பிரதமர் பிரேமதாசாவும் அத்தனகல்லவைக் கைவிட விரும்பவில்லை அத்தனகல்ல வாக்காளர்களுக்குப் பெருமளவில் வேலை வாய்ப்புகளை வழங்கினார். உதாகம் வீடமைப்புத் திட்டத்தை ஏற்படுத்தினார். பண்டாரநாயக்க குடும்ப ஆட்சியில் இருந்தததைக் காட்டிலும் மிகவும் அபிவிருத்தியடைந்த நிலைக்குக் அத்தனகல்லவை கொண்டு வந்தார்.

ஒருமுறை பாராளுமன்றத்தில் பேசும்போது "நான் எப்பொழுதாவது அத்தனகல்ல ஹொறகொல்ல வளவைத் தரைமட்டமாக்கி அங்கு உதாகமவை அமைப்பேன்' என்று கூறினார். எவ்வாறாயினும், அத்தனகல்லவில் இருந்து பண்டாரநாயக்க குடும்பத்தை விரட்டி அத்தனகல்ல மக்களைத் தன்வசப்படுத்த அவரால் முடியவில்லை. அந்த அளவுக்கு அத்தனகல்லவில் மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினரை நேசித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் அவர்கள் நேசிக்கின்றனர்.

ஆயினும், தற்போது அத்தனகல்ல பண்டாரநாயக்க குடும்பத்திற்குச் சொந்தமில்லாமல் போய்விடக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு வருகிறது. பண்டாரநாயக்க சின்னத்தை அழித்துப் போடுவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரை 50 வருட காலமாக பிரயத்தனம் செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியால் அன்றி தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலேயே அங்கு உதாகமவை அமைப்பேன் என்று கூறினார். எவ்வாறாயினும், அத்தனகல்லவிலிருந்து பண்டாரநாயக்க குடும்பத்தை விரட்டவும் அத்தனகல்ல மக்களை வசப்படுத்தவும் அவரால் முடியவில்லை. அந்த அளவுக்கு அத்தனகல்ல மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினரை நேசிக்கின்றனர். அந்த அடிப்படையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் அவர்கள் நேசிக்கின்றனர்.

ஆயினும், தற்போது அத்தனகல்லவை பண்டாரநாயக்க குடும்பத்தினருக்குச் சொந்தமில்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகள் பண்டாரநாயக்க சின்னத்தை அத்தனகல்லவிலிருந்து அழித்துப் போடுவதற்காக 1956 இலிருந்து 2006 வரை முயற்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பிலிருந்து தற்போது செய்யப்படவில்லை. அத்தனகல்லவில் செல்வாக்குப் பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்தே தற்போது செய்யப்படுகின்றன. அத்தனகல்லவை 50 வருடமாகப் பாதுகாத்து வந்த சுதந்திரக் கட்சியே தற்போது மேற்படி முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரலாற்றில் முதல் தடவையாக தற்போது அத்தனகல்லவை தமது கைகளில் வசப்படுத்துவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் பண்டாரநாயக்க குடும்பத்தினரையோ அல்லது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆசனப் பங்கீட்டு அதிகார சபையையோ கவனிக்காத முறையில் கட்சியையும் அத்தனகல்லவையும் நெருக்கமாக இணைக்கும்படியாக குழுவொன்றை நியமித்துள்ளார்.

உண்மையில் இந்த அத்தனகல்ல தொகுதியை பண்டாரநாயக்க குடும்பத்தினருக்குச் சொந்தமில்லாமல் செய்வதற்காக ஜே.ஆர். ஜயவர்தனவும் ஆர். பிரேமதாசாவும் கண்ட கனவு பலிக்கும் ஒரு நிலையே ஏற்பட்டுள்ளது. சரியாகக் கூறுவதாயின் 1951 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டு வந்த கனவு தற்போது உண்மையாகிறது எனலாம்.

- லங்காதீப விமர்சனம்: 29.12.2006 -

http://www.thinakkural.com/news/2007/1/1/s...s_page18337.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.