Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம்.

Featured Replies

3578_1460753874_PhototasticCollage-2016-

“கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம். இது போன்ற விழாக்களுக்கு அதிதியாக அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தவீர்களேயானால் நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் ஏனென்றால் இவர் போன்றவர்கள் நியாயமான ஒரு தீர்வு வரகூடாது என்பதில் குறியாக இருக்கின்றார்கள்”  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்தில்  இன்று சித்திரை கலாசார விழாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில்அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்  மேலும் உரையாற்றுகையில்உரையாற்றும் போது
;கடந்த காலங்களிலே நீங்கள் எங்களது வீட்டுச்சின்னத்திற்கு எதிராக யானைச்சின்னத்திற்கு வாக்களித்தவர்களும் இருந்தீர்கள். அந்த யானைச்சின்னத்தில் போட்டியிட்ட தமிழர்களுக்கு  அளித்த வாக்குகள்  அமிர் அலியை; ப பாராளுமன்ற ஆசனத்திற்கு அமர்த்தி விட்டது. இன்று என்ன செய்கின்றார் தங்களுடைய இனத்தாலே ஒதுக்கப்பட்ட அந்த முஸ்லிம் பிரதிநிதியான் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் தமிழ் மக்களுடைய வாக்கினை பெற்று பாராளுமன்ற கதிரை ஏறியதும் தமி;ழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை ஒன்றுக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் அமீர் அலியினை ஓட்டமாவடி முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெறவில்லை தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்றுத்தான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். அவ்வாறல்ல நாங்கள் எந்தவொரு முஸ்லிம் வாக்குகளாலும் வெற்றி பெறவில்லை தமிழ் மக்களின் வாக்குகளாலேயே வெற்றி பெற்றோம். அவர் சில இடங்களில் கூறி வருகின்றார் தமிழ் மக்கள் எங்களை நிராகரிப்பார்களாம். அது பரவாயில்லை ஆனால் உங்களை முஸ்லிம் மக்கள் முற்றாக நிராகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


வட்டி கொடுப்பதில்லை வட்டிக்கு வாங்குவதில்லை என்று வாழும் முஸ்லிம் மக்களை  சமுர்த்தி பிரதி அமைச்சராக இருந்த கடந்த காலத்தில் அந்த மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயை கொடுத்து நான் வெற்றி பெற்றால் நீங்கள் தரத்தேவையில்லை என்று கூறி கொடுத்தது விட்டு தற்போது அந்த மக்களை வட்டியோடு கட்ட வைத்திருக்கின்றார் கௌரவ அமீர் அலி அவர்கள். இப்போது இவரை நன்றாக் புரிந்திருப்பார்கள் அந்த மக்கள்.
இவர் எங்களுடைய தமிழ்ப்பகுதிகளிலே ஊடுருவி கூட்டமைப்புக்கு எதிராகப் விமர்சித்து தமிழ் மக்களின் வாக்குகளை கபடத்தனமாக சுரண்ட முற்பட்டிருக்கின்றார். அவர் முதலில் தங்களுடைய இன மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் தற்போது பல தேவையுடையோர்களாகவும் காணியில்லாமல் காணிவசதியின்றி இருக்கும் இந்த தருணத்தில் அவர் அந்த முஸ்லிம் மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்காது தன்னுடைய சொந்த உறவுகளுக்கு புணானை வீதியிலே அரச காணிகளை கபடத்தனமாக பிடிப்பதில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். தங்களுடைய உறவுகளுக்காகவா அவர் அரசியலுக்கு வந்தவர். அந்த முஸ்லிம் மக்களை பற்றி சிந்திக்காத இவர் அவர்களால் நிராகரிக்கப்பட்டவரான் இந்த அமீர் அலி எங்களுடைய தமிழ் மக்கள் பற்றி சுட்டிக்காட்டுகின்றார்.
ஏன் இவரைப்பற்றி கூறுகின்றேன் என்றால் இந்த பகுதிகளிலும் அவரை விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிதியாக அழைப்பதாக நான் கேள்வியுற்றேன். யாரிந்த அமீர் அலி???


மஹிந்த அரசாங்கத்திலே மாகாண சபையிலே இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்தவர். மாகாண சபையிலே இருக்கும் போது ஜனாதிபதி தேர்தலுக்கு நான் உங்களுக்காக பூரணமாக ஒத்துழைக்கின்றேன் எங்கள் முஸ்லிம் மக்களை வாக்குகளை போடச்செய்கின்றேன் எனக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரவேண்டும் என்று கூறினார் .அதன்பிகாரம் அஸ்வர் அவர்களின் அந்த ஆசனத்ததை பறித்து நம்பிக்கையின் பேரில் அமீர் அலிக்கு கொடுத்தார். அவர் இன்னும் சலுகைகளை கேட்டார் அதையும் கொடுத்தார். அவற்றையெல்லாம் அனுபவித்துவிட்டு பின்னர் மைத்திரியின் பக்கம் சென்று விட்டார். இதுதானா இஸ்லாமிய சமயம் சொல்லுவது. நம்பிக்கைத்துரோகம் செய்தவர் அமீர் அலி அவர்கள். காலத்திற்குக் காலம் ஆட்சி பீடமேறும் போது கட்சி தாவும் இவர் என்னுடைய போட்டோவையும் அரசாங்க அதிபரின் போட்டோவையும் வைத்து பிரச்சாரம் செய்தவர் தான் அமீர் அலி. ஏன்றார்.

 

3578_1460753874_sports-a-1024x768.jpg   

3578_1460753874_sports-b.jpg   

3578_1460753874_sports-c.jpg   

3578_1460753874_sports-d.jpg   

3578_1460753874_sports-f.jpg 

http://battinaatham.com/description.php?art=3578

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.