Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா

Featured Replies

பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா

பிரிவினைவாதத்துக்கான பொது எதிரியை அழித்தொழிப்பதிலும் எமது தாய்நாட்டின் ஒருங்கிணைப்பைக் கட்டிகாப்பதிலும் நாங்கள் ஒன்று சேர்ந்து முன்வந்துள்ளோம் என்று சிறிலங்கா இராணுவத்தினருக்கான புத்தாண்டுச் செய்தியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இந்த நாட்டைப் பிரிக்கும் நோக்கில் பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன காட்டுமிராண்டித்தனமான பிரிவினை சக்திகளால் முடிவற்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன வருகின்றன என்று கூறிய அவர் இந்நிலையில் கட்டுப்பாடுடனும் ஒழுங்கோடும் மனித உரிமையைக் காக்கும் வகையில் செயற்படும் தமது இராணுவத்தினரை அவர் பாராட்டினார்.

நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் மனித உரிமையை ஏற்படுத்தித் தந்து அமைதியான அனைத்து மக்களும் அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே எமது இலக்கு என்று தமது உரையில் அவர் மேலும் கூறினார்.

www.puthinam.com

  • தொடங்கியவர்

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இந்த ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்கும்:ரட்ணசிறி விக்கிரமநாயக்க

இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற போது பயங்கரவாதிகள் தங்களது பயங்கரவாத செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் வியாபிக்க தொடங்கிவிட்டனர்.அந்த பயங்கர வாத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இவ்வாண்டுக்குள் முற்றுப்புள்ளிவைக்கும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின்அன்றாட வாழ்க்கைக்கு இடையூராக இருக்கின்ற பயங்கரவாதத்தை இவ்வாண்டிற்குள் முற்றாக ஒழிப்பதற்காக 2007 ஆம் ஆண்டை பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆண்டாக பிரகடப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார். புதுவருடினமான இன்று தனதுஅலுவலகத்தின் கடமைகளை காலை 7.30 மணியளவில் ஆரம்பித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

www.tamilwin.com

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கு முழுவதையும் விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா.

சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை தரிசித்த பின் மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றபின் கருத்து தெரிவிக்கையில் சிறீலங்காவின் வடக்கு பகுதியை வெகு விரைவில் கைப்பற்ற போவதாகவம் இன்னும் சில மாதங்களில் தமது படையினர் கிழக்குபகுதியை கைப்பற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

யாழ் குடா எமது அடுத்த இலக்கு: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை விடுவித்த பின்னர் வடபகுதியை விரைவில் முற்றாக விடுவிப்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெளியற்றப்படுவார்கள். அதன் பின்னர் படையினரின் முழுப்பலத்தையும் பயன்படுத்தி வடபகுதியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை தலதா மாளிகைக்கு சென்றிருந்த சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் தலதா மாளிகைக்கு சென்று அங்குள்ள புனித தந்தத்தை வழிபட்டதுடன், மகாநாயக்க தேரரிடம் ஆசீர்வாதமும் பெற்றார். தளபதியின் வரவை முன்னிட்டு கண்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

puthinam

ஆம் அரச பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதே நிரந்தர சமாதானத்திற்கு ஒரே வழி

இராணுவத்தை கலைத்துவிட்டு கிராமத்தில் போய் விவசாயம் செய்ய சரத் முன்வந்தால் அமைதியை நிரந்தரமாக நிலைநாட்டலாம்

புரியவில்லை. பொன்சேகா முட்டாளா அல்லது சிங்களவரை முட்டாள்களாக்குகிறாரா ?

ஏற்கனவே புலிகளை ஒழிப்பதற்கு காலக்கெடு வைத்தவர்களப் பற்றி அறிந்தும் இப்படிக் கூறுகிறாரே. வரலாற்றிலிருந்து சிங்கள இராணுவம் பாடம் கற்க மறுக்கிறதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.