Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?!

Featured Replies

600x400.jpg

மிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால்  நம்புவீர்களா..?!
தேர்தல் களம் கோடை வெயிலைவிட வெப்பமாக இருக்கிறது என்றெல்லாம் பிதற்ற விரும்பவில்லை. வாக்குறுதிகள், அவதூறு பேச்சுகள், மாற்று கட்சி மீதான தூற்றல்கள் என எல்லாவற்றையும், பிரதான நீரோட்டத்தில் இருக்கும் தமிழன் கடந்த பல தசாப்தங்களாக பார்த்து பழகிவிட்டான்.

இந்த கட்டுரை உங்களுக்கு தேர்தல் சூது, தலைவர்கள், வாக்குறுதிகள்,  ஏன் முதலமைச்சர் யார் என்றே கூட தெரியாத வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி. ஆம். ரோல்ஸ்ராய் கார் பறக்கும் இதே தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, லட்சம் கோடிகள் மூலதனம் திரட்டிவிட்டதாக பெருமை அடித்து கொள்ளும் இதே தமிழ்நாட்டில், ஐநூறுக்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இருக்கும் இதே தமிழ்நாட்டில் இன்னும் தமிழக முதல்வர் யார் என்று தெரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் யாரென்று தெரியாது. ஏனென்றால் அவர்கள் என்ன தொகுதியை சேர்ந்தவர்கள் என்றே அவர்களுக்கு தெரியாது. 

வாழ்தலுக்கான அர்த்தம் என்ன...?

IE04IRHM.jpg

தருமபுரியிலிருந்து ஏறத்தாழ நாற்பது கி.மீ தொலைவில் இருக்கிறது ஏரியூர் கிராமம். அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் இருக்கிறது கருங்கல்பாறை என்னும் குக்கிராமம், அங்கு இருக்கும் சிறு குன்றில் ஏறத்தாழ நூறு இருளர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்தலுக்கான அர்த்தம் வெறும் உயிரோடு இருப்பது மட்டும்தான் என்றால், அவர்களை நாம் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறலாம். இல்லை வாழ்தலுக்கான அர்த்தம் சில குறைந்தபட்ச அடிப்படை தேவைகளுடன் வசிப்பதென்றால், அவர்களை நாம் வாழ்கிறார்கள் என்று நிச்சயம் கூற முடியாது. ஆம், அவர்கள் பிறந்துவிட்டதால் இருக்கிறார்கள். பெரும்பாலும், பழங்குடி மக்களுக்கு தற்கொலை என்றால் என்னவென்று தெரியாது, அதனால் அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். 

வெயில் அப்பிய ஒரு மதிய வேளையில் அங்கு சென்ற போது, அந்த மக்கள் நம் மீது மண்ணை வாரி தூற்றினார்கள். யாரிடம் காட்ட வேண்டும் என்று தெரியாத மன அழுத்தம் அன்று நம் மீது காட்டப்பட்டது. அரசு அதிகாரி என்று நினைத்து விட்டதாக பின் சொன்னார்கள். 

தமிழக முதல்வர் யார், எந்த கட்சி ஆட்சி நடத்துகிறது, நடத்தியது என நமது எந்த கேள்விக்கும் அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பலர் தருமபுரி நகரத்திற்கே செல்லாதவர்கள், ரயிலை பார்க்காதவர்கள்.

அங்கு ஓரளவு விவரமானவராக இருக்கும் ராஜப்பன் என்பவர், “ஒரு அரசு இயந்திரம் மக்களை மெல்ல எப்படி சாகடிக்க முடியும் என்பதற்கு நாங்கள்தான் உதாரணம். இது வரை எந்த கட்சியும் எங்களிடம் வந்து வாக்கு கேட்டதில்லை. எங்களிடமெல்லாம் எப்படி வாக்கு கேட்பது என்று அவர்கள் சுயமரியாதை தடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ இதுநாள் வரை எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கவில்லை. வாக்காளர் அட்டையே இல்லாத மக்களை சந்திப்பதென்பது, அரசியல்வாதிகளுக்கு பெரும் பாவம் அல்லவா...?” என்றார் ஒரு வெறுமையான புன்னகையுடன். 

இவர்கள் தம் அடிப்படை தேவைகளை காட்டில் புளி பொறுக்குவது மூலமாகவும், சிறு கூலி வேலைகளுக்கு செல்வது மூலமாகவும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

“ஏன் இங்கிருந்து இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், மைய நீரோட்டத்தில் கலக்க வேண்டியதுதானே... முதலில் மலையை விட்டு கீழே இறங்குங்கள்” என்று அவர்களிடம் அக்கறையாக ஆலோசனை கூறினால், அவர்கள் சிரிக்கிறார்கள்.  “குறைந்தபட்சம், இந்த மலை தாய் மடியாக  எங்களை தாங்கிக் கொள்கிறது. கீழே இறங்கி எங்கே வசிப்பது?  இதுவரை மலையிலிருந்து கீழே இறங்கியவர்களுக்கு இந்த அரசு என்ன செய்திருக்கிறது?” என்பது அவர்களின் நியாயமான கேள்வி. 
  
இவர்களுடன், இவர்கள் தங்கி இருக்கும் சிறு குன்றும் மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது. ஆம் சுற்றி கல்லிற்காக, கிரானைட்டிற்காக மலைகள் அழிக்கப்பட்டுவருகின்றன. ஒரு நாள் இந்த மலை இல்லாமல போகும், அதனுடன் சேர்ந்து அந்த மக்களும்.

'அவர்களா பார்த்து ஏதாவது செய்வாங்க':

index2.jpg

இது ஏதோ அந்த ஒரு ஊரின் நிலை என்று சுருக்கிக் கொள்ளாதீர்கள். இதுதான் தமிழகமெங்கும் பரவி வாழும் பழங்குடிகளின் நிலை. அதுவும் குறிப்பாக இருளர்களின் நிலை. திருகண்டலம், தமிழக - ஆந்திரா எல்லையில், கொற்றலை ஆற்றின் கரையோரமாக இருக்கும் ஒரு சிறு ஊர்.  சென்னை வெள்ளத்தின்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஊர். அங்குள்ள சிறு அணையின் ஓரமாக அண்ணா நகர் இருளர் காலனி என்னும் பகுதியில் ஏறத்தாழ நானூறு இருளர் மக்கள் இருக்கிறார்கள். (வாழ்கிறார்கள் அல்ல... இருக்கிறார்கள்) வெள்ளத்தின் ரணத்தை அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் சொல்லும். அங்கு பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அரசு அவர்களுக்காக கொடுத்த நிவாரண தொகை  எவ்வளவு தெரியுமா...? வெறும் ரூபாய் ஐந்தாயிரம். இந்த தொகையில் எப்படி வீடு கட்ட முடியும் ? சில தனி மனிதர்களின் முயற்சியால் அங்கு சில வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

சமீபத்தில் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, “தேர்தல் வரப்போகிறது, உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். அவர்களிடன் என்ன கோரிக்கை வைக்கப் போகிறீர்கள் ?” என்ற நம் கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான், வெள்ளந்தி மனிதர்களை இந்த அரசுகள் எப்படி சுரண்டுகின்றன என்பதற்கான சான்று.

அவர்கள் அளித்த பதில் இதுதான், “நம்மை மதித்து வாக்கு கேட்கிறார்கள், அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும். நம்மை மதித்து வருகிறார்களே அதுவே போதும். நமக்கு அவர்களாக பார்த்து ஏதாவது செய்வாங்க” - இதுதான் அந்த வெள்ளந்தி மனிதர்களில் ஒருவரான தேவராஜனின் பதில். 

ஆனால், இது நாள் வரை எந்த அரசும் அவர்களுக்காக எதுவும் பார்த்து செய்யவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.  

IE26IRU.jpg

நம்மிடமாவது ஏதாவது பொய் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அவர்களிடம் அந்த தேவையும் இல்லை. கேட்டு பெறுவது நம் உரிமை என்பதை மறக்க செய்து, அவர்களாக பார்த்த போடும் பிச்சைக்காக தொடர்ந்து ஆளும் அரசுகள் அந்த மக்களை பழக்கிவிட்டன. இதுதான் நம்மை ஆண்ட, ஆளத்துடிக்கிற கட்சிகளின் சாதனை.

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்தாலும், அவர்களில் ஒரு பட்டதாரியும் இல்லை. ஒரு அரசு ஊழியரும் இல்லை. அனைவரும் ஒரு காலத்தில் கொத்தடிமையாக இருந்து, மீட்கப்பட்டவர்கள். இப்போது  தொண்ணூறு ரூபாய் கூலிக்கு உழைப்பவர்கள். 

முன்பே சொல்லியது போல், இது ஒரு ஊரின் பிரச்னை இல்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்கிராமங்களில் வசிக்கும் பழங்குடிகளின் பிரச்னை. இவர்கள் சமூகத்தில் தொடர்ந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எந்த அரசும் இவர்களின் பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை, ஏன் காது கொடுத்து கேட்க கூட தயாராக இல்லை.  


இது எல்லாருக்குமான அரசா...?

எல்லாருக்குமான அரசு என்பது சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். அனைத்து பிரிவு மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, திட்டம் தீட்டும் அரசாக இருக்க வேண்டும். ஆனால், சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இங்கு சமூகத்தின் ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டே வருகின்றனர். அவர்களின் மரபறிவு பயன்படுத்தப்படாமலே இருக்கிறது. இந்த தேர்தலிலும் அவர்களின் வளர்ச்சிக்காக பெரிதாக  எந்த வாக்குறுதியையும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.

சொன்னீங்களே... செஞ்சீங்களா... ?' என்பது இவர்கள் விஷயத்த்தில் பொருந்தாது. ஏனெனில், எந்த கட்சியும் இவர்களுக்கு சொல்லவே இல்லை. இது கட்சிகளும், அரசும் தெரிந்தே செய்யும் நவீன தீண்டாமை அன்றி வேறில்லை.

http://www.vikatan.com/news/coverstory/62701-sad-tale-of-innocent-tribes.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.