Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மஹிந்தவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம்: ஜயலத்

Featured Replies

அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மஹிந்தவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம்: ஜயலத் ஜெயவர்த்தன.

தமிழ் மக்கள் படும் அவலங்களுக்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவே சுதந்திரக் கட்சியுடன் உடன்பாடு செய்தோம். ஒர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு இதுவே இறுதிச்சந்தர்ப்பம் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டொக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் படும் அவதி, அவர்கள் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்கின்றமை, யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களால் தெற்கிற்கு வரமுடியாமை, அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பில் ஆட்கடத்தல்களுக்கு ஆளாகின்றமை என்பன போன்ற தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கருத்திற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு அரசில் ரீதியாகத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

ஆகவே நல்லதொரு அரசியல் தீர்வைப் பெற மகிந்த ராஜபக்ஸவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம். இதற்கான முழுப்பொறுப்பும் அவரிடமே தங்கியுள்ளது என்றும் ஜயலத் தெரிவித்தார்.

நேற்றுக் கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜயலத் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் தற்போது பாரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் அவர்களுக்குச் சரியான உணவில்லை, சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ முடியவில்லை, தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.

இது தவிர கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுகின்றனர் கொழும்பில் தமிழர்கள் மாத்திரமன்றி எல்லா மக்களும் அச்சத்துடனேயே நடமாடுகின்றனர். கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டு விட்டன மக்களின் சுதந்திரம் முழுமையாகப் பறிபோய் விட்டது எங்கு பார்த்தாலும் ஒரு பதற்றநிலை தெரிகிறது.

இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு உடன் படிக்கையில் கைச்சாத்திட்டோம் இந்த மாதிரியான அவல நிலையை நீக்குவதற்காக அன்றிவேறெந்த நோக்கத்திற்காகவும் நாம் இந்த ஒப்பந்தத்தைச் செய்யவில்லை.

நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி எம்மிடம் கூறினார் நாம் அதை ஏற்க மறுத்து விட்டோம் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதற்காக நாம் ஒப்பந்தம் செய்யவில்லை. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே ஒப்பந்தம் செய்தோம்.

இந்த ஒப்பந்தத்தை எவரும் மோசமாக விமர்சிக்கவில்லை சர்வதேச நாடுகளே பாராட்டியுள்ளன ஆனால அரசியலிலுள்ள சிறுபிள்ளைத்தனமானவர்கள் தான் இதன் முக்கியத்துவம் தெரியாமல் மோசமாக விமர்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

-sankathi-

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மாற்றம் செய்ய ஐ.தே.க. கோரிக்கை.

சிறிலங்காவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தெளிவாக இல்லை என்றும் அது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர், மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்ற அனுமதிக்கு சட்டத்தைச் சமர்பிக்கும் முன்னர் அதில் பல பகுதிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 27 ஆம் நாள் மகிந்தவுக்கு எழுதிய கடிதத்தில் செய்யப்பட மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த மாற்றங்கள் அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் ஐ.தே.க உறுப்பினர்கள் பரிந்துரைத்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் பரிந்துரைக்கும் சில மாற்றங்கள்:

சட்டத்தின் 16 ஆவது சரத்து, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு அதிகாரத்தையும் வழங்குகிறது. இது மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் அரசியல் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானதாகும்.

9 ஆவது சரத்து பரந்த அளவில் இருக்கிறது. பொதுமக்களுக்குத் தேவையான செய்திகளை வழங்குவதில் இருந்து ஊடகத்துறையைத் தடை செய்ய இந்த சரத்து வழி வகுக்கிறது.

நீதிமன்றம், அரசாங்கத்துக்கு மேன்முறையீடு செய்யும் முறைகளை மாற்றியமைக்கும் 18, 20 ஆவது சரத்துகளும் மிகப்பரந்த அளவில் உள்ளன. இது பேச்சுச் சுதந்திரம், வெளியீடு போன்ற பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பாதிக்கும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவுக்கு பிரதி காவல்துறை மா அதிபர் கையெழுத்திட வேண்டும்.

அதிக அளவில் ஆட்கள் கடத்தப்படுவது குறித்தும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய குழு அல்லது ஒர் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"அவசரகாலச் சட்டங்கள், பயங்கரவாதத்த தடைச்சட்டத்தில் மாற்றங்கள" என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட ரணிலின் கடிதம் மகிந்தவின் செயலாளரிடம் கடந்த வருடம் டிசம்பர் 28 ஆம் நாள் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை கடிதத்தைப் பெற்றுக்கொண்டது குறித்து எவ்வித பதிலையும் மகிந்த அலுவலகம் ரணிலுக்குத் தெரிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், ஜனவரி 9 ஆம் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தச் சட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது என்று தெரிவித்துள்ளது.

-puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.