Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நொய்டா கொலைகள்

Featured Replies

நொய்டா கொலைகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில்

உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வில்

காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல் போனதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய தயக்கம் காட்டி உள்ளதாக தெரிய வருகிறது.

குழந்தைகளின் உடல்கள் கிடைக்காததால் அவர்களின் உடல் உறுப்புகள் விற்பது தான் கொலையின் நோக்கமாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தரபிரதேசஅரசு, தேசிய பெண்கள் குழு ஒராணடுக்கு முன் அனுப்பிய விசாரணைக் கடிதத்துக்கு எந்த பதிலும் அளிக்காதது

மாநில அரசின் மீது பெரும் குற்றமாக கூறப்படுகிறது.

முக்கிய எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளனர். ஆனால் உச்ச நீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து விட்டது.

மத்ய அரசு ஒரு விசாரணைக்குழு வினை அனுப்பி உடன் அறிக்கை வைக்க கோரியுள்ளனர்.

கைதிகளில் ஒருவரான சுரேந்தர் மனநோயளியாக இருக்கலாமென சந்தேகமுள்ளதாக காவல் துறையினர் கருதுகிறார்கள்.மற்றொருவரான மொய்ந்தர் போதைமருந்து பழக்கம் உள்ளவரா என சந்தேகசோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இக்கொலைகள் உத்திரபிதேச தேர்தலில் முலாயம் சிங்கின் அரசியல் வாழ்வுக்கு முற்று புள்ளி வைக்குமா?

இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. என்னவென்றால் ஏழை பாதிக்க பட்டவன் என்றால் நீதி கிடைக்கமாட்டேன் என்கிறது. அவனே குற்றவாளி என்றால் உடனே விரைவு நீதிமன்றத்தில் விரைந்து தீர்ப்பளிக்கபட்டு தூக்கிலிடப்படுகிறான்.

நொய்டா

ஒரு

நோய்டா

-வே.பிச்சுமணி

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகள் கற்பழித்து கொலை: கொலையாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

நொய்டா அருகே சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத்த தொழில் அதிபர் மனீந்தர்சிங், அவரது வேலைக் காரன் சுரேந்தர் ஆகியோரிடம் நொய்டா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் இருவரும் செக்ஸ் நோக்கத்துக்காகவே சிறுமிகளை கொன்றதாக தெரிவித்தனர். ஆனால் சிறுவர்களையும், சில விபசார அழகிகளையும் கொன்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் உறுப்புகளுக்காக இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் இருவரும் போலீசாரிடம் உண்மையை சொல்ல மறுத்து வருகிறார்கள்.

அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக `நார்கோ அனாலிசிஸ்' எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத் தப்படுகிறது. இதற்காக கொலையாளிகள் இருவரும் இன்று காலை நொய்டாவில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

அகமதாபாத்தில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்தில் இந்த சோதனை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் மருத்துவ ஆலோசனைப்படி மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவர்களிடம் கேள்வி கேட்டு பேச வைத்து விசாரணை நடத்தப்படும்.

இந்த முறையின் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்கப்படுவது இல்லை. என் றாலும் இதன் மூலம் துப்பு துலங்காத கொலையில் புதிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளிடம் மனோதத்துவ ஹிப்னாடிசம் மூலம் சில உண்மைகளை வர வழைக்க முடியும் என்று பரிசோதனைக் கூடத்தின் துணை இயக்குனர் டாக்டர் வி.எச்.பாட்டில் கூறினார்.

உஜ்ஜைனியில் நடந்த 8 தொடர் படுகொலைகளில் இது போன்ற சோதனை மூலம் உண்மை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

உப்படிப்பட்ட ஆட்களை நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். குழந்தைப் பாலியல் கலாச்சாரம் முற்றாக அகற்றப்பட வேண்டியது. எவ்வித மன்னிப்புமின்றி.

  • கருத்துக்கள உறவுகள்

06delhing3.jpg

உண்மை கண்டறியும் சோதனை: சிறுமிகளை கொன்று பிணத்தை தின்றேன்- கொலையாளி திடுக்கிடும் வாக்குமூலம்

புதுடெல்லி, ஜன.6-

டெல்லி புறநகர் பகுதியான நொய்டா நிதாரி கிராமத்தில் சிறுவர்- சிறுமிகள் இளம் பெண்களை கொன்று புதைத்த தொழில் அதிபர் மனிந்தர்சிங், அவரது வேலைக் காரர் சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறுமிகளை கற்பழித்து கொன்றதாக போலீசில் தெரிவித்து இருந் தனர். இந்த படுகொலையில் உடல் உறுப்புகளை விற்கும் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

பிணங்களின் எலும்புகள் கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் நேர்த்தியாகவும், சீராகவும் துண்டிக்கப்பட்டு இருப்பதாக பிரேத பரிசோ தனை அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதில் கொலையாளிகளிடம் இருந்து உண்மையை வரவ ழைப்பதற்காக இருவரையும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வு கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு `நார்கோ அனாலிசிஸ்' முறையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ëடது. தடய அறிவியல் நிபுணர்கள் இருவரையும் மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டு உண்மைகளை வெளிக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையின் போது குற்றவாளிகள் என்ன சொன்னார்கள் என்பதை அறிய நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ë ஆனால் விசாரணை விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

என்றாலும் சுரேந்தரா சொன்ன சில தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகளுடன் முதலில் மனீந்தர் உல்லாசம் அனுபவிப்பார். தொடர்ந்ëது நான் கற்பழிப்பேன் என்று சுரேந்தரா முன்பு போலீசில் வாக்கு மூலம் கொடுத்து இருந்தான். அதையே இப்பாதும் திருப்பி கூறினான்.

பிணங்கள் எங்கே? எலும்பு கூடுகள் மட்டும் இருக்கிறது உடல் உறுப்புகளை என்ன செய்தீர்கள்? என்று சரமாரியாக கேள்விகள் கேட்டபோது, "அவைகளை தின்று விட்டேன்'' என்று சுரேந்தரா திடுக்கிடும் தகவலை கூறினான்.

"கல்லீரல் சாப்பிட்டால் உடம்பு சூடு தணியும் என்று கேள்விப்பட்டு சிறுமிகளின் உடலில் இருந்த கல்லீரல் போன்ற பாகங்களையும், மாமிசத்தையும் தின்று விட்டேன்.'' என்றான்.

தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு கொலையாளிகள் இருவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. அதுவரை இருவரும் ஆமதாபாத்தில் வைக்கப்பட்டு இருப்பார்கள்.

http://www.maalaimalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகள் மாமிசத்தை தின்று வாந்தி எடுத்த சுரேந்தர்

ஜனவரி 09, 2007

லக்னோ: நொய்டா கொடூரக் கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி சுரேந்திர் கோலி, சிறார்களைக் கொலை செய்த பின்னர் அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்டுள்ளான். அப்போது மாமிசத்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்தேன் என்று தெரிவித்ததாக உ.பி. மாநில டிஜிபி புவா சிங் கூறியுள்ளார்.

monindersingh07110ws4.jpg surimder070110pt5.jpg

நொய்டா அருகே மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான பங்களாவில் சமீபத்தில் குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பங்களா வளாகத்திலும், அருகே உள்ள சாக்கடையிலும் குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியது.

இதைத் தொடர்ந்து வீட்டுக் காவலாளி சுரேந்தர் கோலி, மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளைக் கடத்தி வந்து சிறுமிகளைக் கற்பழித்தும், சிறுவர்களை கொடூரமாக கொலை செய்தும் புதைத்ததாகவும் தெரிவித்தனர்.

இதில் கொடூரம் என்னவென்றால் கொலை செய்த பின்னர் உடல்களை துண்டு துண்டாக வெட்டி அதை சாக்கடைக் கால்வாயில் போட்டுள்ளனர். மேலும் வீட்டுக்குள்ளும் புதைத்து வைத்துள்ளனர். சுரேந்தர் கோலி உடல் உறுப்புகளை சாப்பிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இருவருக்கும் அகமதாபாத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது நர மாமிசம் சாப்பிட்டதை சுரேந்தர் கோலி ஒத்துக் கொண்டதாக டிஜிபி புவா சிங் கூறியுள்ளார்.

nitharikidspics070110jb2.jpg

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசாரணையின்போது சுரேந்தர் கோலி, உடல் உறுப்புகளை வெட்டி சாப்பிட்டதாக ஒத்துக் கொண்டான். ஆனால் அவற்றை சாப்பிட முடியாமல் அவன் வாந்தி எடுத்துள்ளான்.

சிறுமிகளை முதலில் கற்பழித்து விட்டு பின்னர் அவர்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விடுவானாம் சுரேந்தர். அதன் பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசி விடுவேன் என அவன் கூறியுள்ளான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இதற்கிடையே நேற்று மொஹீந்தர் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையிலிருந்து மேலும் 2 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. அந்த சாக்கடையை மொத்தமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் போலீஸார் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து தோண்டும் பணி நடந்து வருகிறது.

http://thatstamil.oneindia.in

  • கருத்துக்கள உறவுகள்

நொய்டாவில் சிறுவர், சிறுமியர் படுகொலை வழக்கு

40 பாலித்தீன் பைகளில்

மனித உடல் உறுப்புகள்

சிபிஐ அதிகாரிகள் "திடுக்' தகவல்

புதுடெல்லி, ஜன. 16:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சிறுவர், சிறுமியர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கி உள்ள மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள், மனித உறுப்புகள் அடங்கிய 40 பாலித்தீன் பைகளை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்தனர்.

நொய்டா அருகே நித்தாரி கிராமத்தில் தொழிலதிபர் மொனீந்தர்சிங் பாந்தர், அவரது உதவியாளர் சுரேந்திர கோலி ஆகியோர் ஏராளமான சிறுவர், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்திருக்கும் விஷயம் அம்பலமானதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உண்மை அறியும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கைதாகி உள்ள இருவரிடமும் வரும் 25ம் தேதி வரை விசாரணை நடத்த நொய்டா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனிடையே, கொலை சம்பவம் நடந்த நித்தாரி கிராமத்தில் தற்காலிக துணை அலுவலகத்தை சிபிஐ அமைக்கிறது. இந்த கொலை குறித்து விசாரிப்பதற்காக 12 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படுவதாக சிபிஐ இயக்குனர் விஜய்சங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் 19 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 30 அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மொனீந்தர்சிங் பாந்தர் வீட்டு அருகே ஓடும் சாக்கடை கால்வாயிலிருந்து சடலங்களின் உறுப்புக்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

40 பாலித்தீன் பைகளில் மனித உறுப்புக்கள் மீட்கப்பட்டிருப் பதாகவும் அவற்றில் பெரும் பாலானவை மனித எலும்புகள் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். சிபிஐக்கு உதவியாக சிஎப்எஸ்எல், ஏஐஐஎம்எஸ், ஆந்திராவில் உள்ள தடய அறிவியல் சோதனைக் கூடம் ஆகியவற்றிலிருந்து தடய அறிவியல் நிபுணர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே, தொடர் கொலை சம்பவங்களால் பீதி அடைந்துள்ள இக்கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேற தொடங்கி உள்ளனர். இங்கு வசிப்பவர்களின் பெரும்பாலானோர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். நேபாள நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வசித்து வந்தனர்

நன்றி - மாலைசுடர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.