Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லங்காதீபவின் கண்டுபிடிப்பு

Featured Replies

யுத்தத்தாலன்றி சமாதானத்தாலேயே விடுதலைப் புலிகள் பலமிழப்பு

[05 - January - 2007] [Font Size - A - A - A]

விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலம் குறிப்பிடும்படியான அளவுக்குக் குறைந்து போனது சமாதான நடவடிக்கைகள் பலமாக இருந்த காலகட்டத்திலேயே என்பதை மறந்து விடக் கூடாது. இந்த வகையில் புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய நிகழ்வு கருணா குழுவினர் வெளியேறியதே. 2002 இல் சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கருணா குழுவினர் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர்.

இவ்வாறு கருணா குழுவினர் வெளியேறியதற்கு சமாதான நடவடிக்கைகளே முக்கிய பின் புலமாக அமைந்தது. சமாதான காலத்திலேயே அவர்கள் அதுவரை வாழ்ந்த யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கையை விட வேறுபட்ட வாழ்க்கை வெளியுலகில் நடந்து கொண்டிருப்பதை கருணாவும் ஏனையோரும் கண்டனர். சமாதான காலத்திலேயே அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. கொழும்புக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. ஏனைய இனத்தவர்களுடன் நெருக்கமாகப் பழகும் சிங்கள மக்கள் தெற்கில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.இவ்வாறு அனைத்து இனமக்களும் சுமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையை அவர்கள் கொழும்பில் கண்டார்கள்.

ஜனநாயகக் கோட்பாட்டின் கீழ் அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழ்ந்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்பதை கருணாவும் அவருடைய சார்பினரும் உணர்ந்து கொண்டது.சமாதான நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே திகழ்ந்தது. இதனாலேயே பிரபாகரனுடையதும் புலிகள் அமைப்பினுடையதும் யுத்த செயற்பாடுகளிலிருந்து கருணா குழுவினர் விலகினர்.

எனவே, சமாதான நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு பலமடைந்ததாகவோ அல்லது சமாதான செயற்பாடுகள் புலிகளின் யுத்த செயற்பாடுகளுக்கு உகந்ததாக அமைந்தது என்றோ கூற முடியாது. நமது அனுபவங்களுக்கு ஏற்ப இராணுவரிதியில் புலிகள் அமைப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது சமாதான நடவடிக்கைகள் காரணமாகவே இது பற்றிய உண்மைகளை மறைப்பதற்கு சமாதானத்துக்கு எதிரான இனவாதிகள் எப்பொழுதும் முயன்று வந்தனர். அவர்கள் எப்பொழுதும் கூறி வருவது யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலமும் சமாதான நடவடிக்கைகள் மூலமும் புலிகள் அமைப்பு மேலும் பலமடைந்தது என்பதாகும். புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையினர் கொழும்புக்கு வந்தது யுத்த நிறுத்த காலத்திலேயே என்பதே அவர்களின் ஒரே நிலைப்பாடு. சாதாரண மக்களுக்கு இந்தக் கருத்துகளையே அவர்கள் ஊட்டி வருகின்றனர்.

ஆனால், சமாதான காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மற்றும் ஒரு பெரும் பலமிழப்பு ஏற்பட்டிருந்ததை சமாதானத்துக்கு எதிரான இனவாதிகள் கூறவில்லை. அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் சமாதான கால கட்டத்திலேயே திருமணம் செய்து வெளிநாடுகளில் வசிப்பதற்காகச் சென்றுள்ளார்கள். இதனை இனவாதிகள் கூற மாட்டார்கள். மேற்படி திருமணமாகி வெளிநாட்டுக்கு சென்று புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீண்டும் ஷ்ரீ லங்காவுக்கு வரவில்லை இதனையென்றும் இனவாதிகள் மக்களுக்குக் கூறுவதில்லை சமாதான செயற்பாடுகள் காரணமாக கருணா குழுவினர் புலிகள் அமைப்பிலிருந்து விலகினார்கள் என்றும் இனவாதிகள் மக்களுக்கு கூற மாட்டார்கள். இதனால் புலிகள் அமைப்பு இரண்டாகப் பிரிந்து பலமிழந்து போனது என்று அவர்கள் யாரும் மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கமாட்டார்கள்.

சாதாரண மக்களும் இனவாதிகளால் ஊட்டப்பட்ட கருத்துகளால் புலிகள் அமைப்பை யுத்தத்தின் மூலமாக மட்டுமே பலமிழக்கச் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். யுத்தமே சிறந்த தீர்வு என்ற கருத்தை மக்களுக்கு ஊட்டியவர்கள் இந்த இனவாதிகளே.

மேலும் அண்டை நாடுகள் சமாதான நடவடிக்கைகள் மூலம் பெற்ற வெற்றி களைப் பற்றி சமாதானத்திற்கு எதிரான இனவாதக் குழுவினர் மக்களுக்கு விளக்கப்படுத்துவதில்லை. அதைப் பற்றி பேச்சே எடுப்பதில்லை. நேபாளத்தில் மாவோ வாதப் புரட்சியாளர்களை வன்முறையிலிருந்து விடுவித்து ஜனநாயக நீரோட்டத்தில் இணையச் செய்ய முடிந்தது. சமாதானப் பேச்சுகளின் மூலமாகவே சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தோனேசியாவில் இருந்து வந்தபயங்கரவாதப் பிரச்சினையை சமாதான பேச்சுக்கள் மூலமாகவும் வெளிநாடுகளின் சமாதான ஆதரவுகளாலும் தீர்க்க முடிந்தது பற்றி மேற்படி இனவாதிகள் பேசுவதே இல்லை.

இவ்வாறு சாதாரண மக்களை யுத்தவாத அலைக்குள் சிக்க வைக்கும் நோக்கத்துடனேயே சமாதானத்துக்கு எதிரான இனவாதிகள் எப்போது செயற்பட்டு வருகின்றனர்.

-லங்காதீப: 02.01.2007-

http://www.thinakkural.com/news/2007/1/5/s...s_page18611.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.