Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட-கிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சத்தியத்தை பின் தள்ளியுள்ளது.

Featured Replies

வட-கிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சத்தியத்தை பின் தள்ளியுள்ளது.

அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா நாட்டின் அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அரசியல் தீர்மானங்களை மாற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளமை ஆரோக்கியமான விடயமல்ல. இந்த அரசியலமைப்பு தொடர்ந்து இருந்தால் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அரசாங்கத்தால் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாது என்று நீதி மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு விவகார பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எமது அரசியலமைப்பில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சாத்தியத்தை தள்ளிவைத்துள்ளது. தொடர்ச்சியாக அரசியல் தீர்மானங்கள் நீதிமன்றத்தால் மாற்றப்பட்டு வந்தால் சிங்கள மக்களுடைய நீதிமன்றமே நாட்டில் உள்ளது என்று தமிழ் மக்கள் கருதிவிடுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

வடக்கு கிழக்கு பிரிப்புத் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

இந்த நாட்டின் அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அரசியல் தீர்மானங்களை நீதிமன்றத்தால் மிக எளிதில் மாற்றிவிடக்கூடிய வகையில் அரசியலமை உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பானது அப்போதைய அரசாங்கத்தின் அரசியல் தீர்மானமாகும். ஆனால் மேற்படி அரசியல் தீர்மானம் நீதிமன்றத்தினால் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் நீதிமன்றத்தைக் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. காரணம் எமது அரசியலமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு சர்வஜன வாக்கெடுப்பு அல்லது பாராளுமன்றத்திற்கு சட்டமூலம் கொண்டுவரப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசியல் தீர்மானத்தை மாற்றும் வகையில் நீதிமன்றத்தால் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டமை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சாத்தியத்தை தள்ளிவைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக அரசியல் தீர்மானங்கள் நீதிமன்றத்தால் மாற்றப்பட்டு வந்தால் இந்த நாட்டின் நீதிமன்றம் சிங்கள மக்களுடையது என்று தமிழ் மக்கள் கருதிவிடுவார்கள். இதற்கு நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. எனவே அரசியலமைப்பபை மாற்றியமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதேவேளை நாட்டில் யுத்த நிலைமை அதிகரித்துவருகின்றமை கவலைக்குரியவிடயமாகும். அரசாங்கமும் விடுதலை புலிகளும் சமாதானப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பின்னணியை உருவாக்கவேண்டும். சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாவிட்டாலும் போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக பேச்சவார்த்தை நடத்துவதற்காக சரி அரசாங்கமும் புலிகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்.

போர் நிறுத்த உடன்படிக்கை திருத்தப்பட்டு பலப்படுத்தப்படவேண்டும். தற்போது செயலிழந்துள்ள போர்நிறுத்த உடன்படிக்கையை செயற்பாட்டு ரீதியான உடன்படிக்கையாக மாற்றியமைக்கவேண்டும்.

-வீரகேசரி-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.