Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள நாளேடுகளில் இருந்து

Featured Replies

புலிகளிடம் பணம் பெற்று கிளேமோர் பொருத்திக் கொடுத்த கிராம சேவையாளர்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறும் இடத்தில் இராணுவத்தினரை குறி வைத்து கிளேமோர் குண்டுகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு கிராம சேவையாளர்களை வெலிக்கந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 4 ஆம் திகதி வெலிக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு இவர்களை இரண்டு கிளேமோர் குண்டுகளுடனும் மற்றும் அவற்றை வெடிக்க வைக்கும் ஐந்து டெட்டனேற்றர்களுடனும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர்.

இந்த இரண்டு கிராம சேவையாளர்களிடம் வெலிக்கந்த பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப, இவ்வாறு கிளேமோர் குண்டுகளை புலிகள் இயக்கத்தினரின் அறிவுறுத்தல்களுக்கேற்ப குறிப்பிடப்படும் இடத்தில் பொருத்துவதற்காக இவர்கள் புலிகள் அமைப்பிடமிருந்து ரூபா 3,000 கைக்கூலியாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு கிராம சேவையாளர்களும் வெலிக்கந்த பிரதேசத்தில் கட்டுவன் நில பகுதியில் பொலிஸ் காவலரண் அமைந்திருக்கும் இடத்தை அண்டியுள்ள பிரதேசத்தில் சேவை செய்பவர்கள் எனவும் இவர்கள் இவ்வாறு நீண்ட காலமாக புலிகள் இயக்கத்தினர் கூறுவதற்கேற்ப கைக்கூலிகளாக கிளேமோர் குண்டுகளை அப் பகுதியில் பொருத்தி வந்துள்ளனர் எனவும் மேலும், விசாரணைகளிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு மேற்படி கிராம சேவையாளர்கள் இருவரும் புலிகள் இயக்கத்திடமிருந்து பெருந் தொகையான பணத்தை பெற்றுள்ளனர் என வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.கே.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளேமோர்களை விட மேலும் பல கிளேமோர்கள் உட்பட வெடிகுண்டு பொருட்களையும் உபகரணங்களையும் கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர்கள் எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள் என்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கிராம சேவையாளர்கள் இருவரும் வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக புலன் விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

- தினமின :05.01.2007 -

http://www.thinakkural.com/news/2007/1/8/s...s_page18792.htm

  • தொடங்கியவர்

இன்று இராணுவ மேஜருக்கு இராணுவ நீதிமன்றில் விசாரணை

புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களை வழங்கி அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று இலட்சக்கணக்கான பணத்தொகையைச் சம்பாதித்துள்ளதாக செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் உத்தியோகத்தருக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்புப் பிரிவின் தடுப்புக் காவலில் இருக்கும் இந்த இராணுவ மேஜரிடம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ஏற்ப அவர் இவ்வாறு கடந்த சுமார் மூன்று வருட காலமாக புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மேற்படி இராணுவ மேஜர் வழங்கிய தகவல்களின் உதவியுடனேயே புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் திட்டங்களை வகுத்து வெற்றிகரமாகப் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பெருந்தொகையான படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் வைத்து சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் மூவர் உட்பட பலர் மீது புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முடிந்ததற்குக் காரணம், இவ்வாறு மேற்படி இராணுவ மேஜர் புலிகள் இயக்கத்தினருக்கு வழங்கிய உளவுத் தகவல்களுக்கு ஏற்ப அவர்கள் தாக்குதல் திட்டங்களை மேற்கொண்டதே எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் கொலைத் தாக்குதல் பட்டியலிலுள்ள பல சிரேஷ்ட பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களும் மேற்படி மேஜரால் புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

- தினமின: 05.01.2007 -

http://www.thinakkural.com/news/2007/1/8/s...s_page18791.htm

  • தொடங்கியவர்

புலிகளால் கடத்தப்பட்ட மூவர் தப்பி வந்து இராணுவத்திடம் சரண்

புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் அவர்களிடமிருந்து தப்பி வந்து கடந்த 4 ஆம் திகதி மட்டக்களப்பு திரிகோணமடு பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் சரணடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பாதுகாப்பு பிரிவு இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரப் பிரிவைச் சேர்ந்த பிரதேசங்களிலேயே வசிப்பவர்கள் எனவும் மேலும் மூவரும் 17, 18 வயதினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஆறு மாதங்களாக மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் பல இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டும் தொடர்ந்து யுத்தப் பயிற்சியளிக்கப்பட்டு பின்னர் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாக மேற்படி சரணடைந்துள்ள இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறே புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர் ஒருவர் புலிகள் முகாமிலிருந்து தப்பி வந்து மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் சரணடைந்துள்ளார். இந்த மாணவர் கொழும்பு கொட்டாஞ்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர் எனவும் இவர் கடந்த டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண பரீட்சைக்காக அம்பாறையிலிருக்கும் தனது வீட்டிற்குச் சென்றிருந்த பேதே இவ்வாறு புலிகள் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார் எனவும் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து தப்பி வந்து இராணுவத்தினரிடம் அடைக்கலம் தேடி வரும் தமிழ் இளைஞர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

-திவயின: 06.01.2007

http://www.thinakkural.com/news/2007/1/8/s...s_page18790.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.