Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்!

புற்றீசல் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வருவதைக் கண்டித்து செஞ்சட்டை காம்ரேட்கள் சிவப்பாய் வெடித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இன்னொரு அதிர் வெடியைத் தூக்கிப்போட்டிருக்கிறது.

p5cgc0.jpg

‘இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை எல்லாம் நவீனப்படுத்த, அவற்றை தனியார் களிடம் ஒப்படைக்கப் போகிறோம்’ என்பதுதான் அந்த அதிர்வேட்டு. ஏற்கெனவே இந்த அதிர்வேட்டின் திரி, மும்பை மற்றும் டெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விஷயத்தில் கொளுத்தப்பட்டும் விட்டது. மேற்படி விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இந்த வரிசையில் அடுத்துத் தனியார் கைகளுக்குப் போகப்போவது... சென்னை விமான நிலையம்! இதை எதிர்த்து இந்திய விமான நிலைய ஆணைக்குழுமத்தின் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சென்னை விமான நிலையத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. இந்த விவகாரம் பற்றி மேலும் அறிய, விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷை சந்தித்தோம். ‘‘இந்திய விமான நிலையங்களைத் தனியார் நிறுவனங் களைக் கொண்டு நவீனப் படுத்துகிறோம், அதை அவர்களுக்குத் தாரை வார்க்கவில்லை என்று மத்திய அரசு சொல் கிறது. ஆனால் நடப்பது அதுவல்ல. உதாரணத்துக்கு டெல்லி, மும்பை விமான நிலையங்களை நவீனப்படுத்த விமான சேவையிலோ, பராமரிப் பிலோ எந்த அனுபவமும் இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. ஒரு விமான நிலையத்தை நவீனப் படுத்துவதற்கான காலமாக முப்பது ஆண்டுகளைக் கணக்கிட்டிருக்கும் அரசு, அந்தக் காலகெடுவுக்கு டெல்லி, மும்பை விமான நிலையங்களைத் தனியார் கைகளில் கொடுத்துவிட்டது. இனி விமான நிலையத்தின் சகல நிர்வாகங்களையும் அந்தத் தனியார் நிறுவனம்தான் கவனிக்கும். நாங்களும் அவர்களுக்குக் கீழ்தான் வேலை பார்க்க வேண்டும். மும்பை விமான நிலையத்தின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி யார் தெரியுமா? கிரீக் நாட்டைச் சேர்ந்த ஒருவர். அவருக்கு இந்திய கலாசாரம் தெரியுமா? மும்பை மாதிரியான நகரங்களுக்கு விமான நிலையத்தின் வழியாக எந்த மாதிரியான ஆபத்துகள் வரும் என்பது தெரியுமா? அல்லது இந்திய தேசத்தின் பாதுகாப்பின் மீது நெஞ்சார்ந்த பற்றுதான் அவருக்கு இருக்குமா? கிட்டத்தட்ட இதே விஷயத்தை எல்லா விமான நிலையங் களுக்கும் நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று மேலை நாடுகள் நம்மை நோக்கி ஆச்சர்ய பார்வைகளை வீசுகிறது. அப்படியிருக்கும்போது, ஒரு விமான நிலையத்தை மேம்படுத்த நம்மால் முடியாதா? முடியும் என்பதை இந்திய விமான நிலைய ஆணையங்கள் குழு கடந்த மாதம்தான் நிரூபித்திருக்கிறது. நைஜீரியா நாடு தன்னுடைய அனைத்து விமான நிலையங்களையும் நவீனப்படுத்த, பராமரிக்க உலக அளவில் டெண்டர் கோரியது. முன்னேறிய பல நாடுகளும் அதில் கலந்து கொண்டன. ஆனால், நைஜீரிய நாட்டு விமான நிலையங்களைப் பராமரிக்கும், நவீனப்படுத்தும் பொறுப்பு இந்திய விமான நிலைய ஆணைய குழுவுக்குத்தான் கிடைத்தது. இதைக் கண்ட பல நாடுகள், தங்கள் நாட்டு விமான நிலையங்களையும் பராமரிக்க இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் நம் அரசோ, நம்நாட்டில் இருக்கும் விமான நிலையங்களைப் பராமரிக்க ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படி வரும் தனியார் நிறுவனங்களும் விமான சேவையை, பயணிகள் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கத்துடன் உள்ளே வரவில்லை. இந்தியாவின் முக்கியமான இடங்களில் விமான நிலையத்துக்குச் சொந்தமாக இருக்கும் சொத்துக்கள் மீது குறிவைத்துதான் வருகிறது’’ என்றவரிடம், ‘‘இந்த சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணியைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று தமிழக முதல்வரை சந்தித்து முறையிட்டீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘டெல்லி, மும்பையை அடுத்து கொல்கத்தா, சென்னை விமான நிலையங்கள் தனியார் வசம் போகப்போகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பே எங்கள் போராட்டத்தின் எதிரொலிதான். இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ‘கொல்கத்தா விமான நிலையத்துக்குள் தனியார் நிறுவனங்கள் வர அனுமதிக்க மாட்டோம். விமான நிலைய ஆணையக்குழுவே நவீனப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்’ என்று எழுத்துப்பூர்வமாக பிரதமருக்கும், சிவில் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தெரிவித்து விட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரையில், முதல்வர் கலைஞர் அவர்கள் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இதற்காகவே நாங்கள் அனைவரும் போய் தமிழக முதல்வரை சந்தித்தோம். சென்னை விமான நிலையம் தனியார் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதையும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விளக்கமாக அவரிடம் சொல்லி, இந்த முயற்சிக்கு தடைபோடும்படி கேட்டுக் கொண்டோம். எங்கள் வேண்டுகோளை அக்கறையோடு கேட்டுக்கொண்ட அவர், ‘நாட்டு நலனில் அக்கறை கொண்டு நல்ல முடிவெடுக்கிறேன்...’ என்றார். அவர் இந்த விஷயத்தில் நல்ல முடிவெடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது...’’ என்றார்.

‘‘சென்னை விமான நிலைய விரிவாக்கம் எந்த அளவில் இருக்கிறது? இதற்காக விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர் ஏரியா வீடுகள் இடிக்கப்படுமா?’’ என்று ரமேஷிடம் கேட்டோம்.

‘‘சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தைப் பொறுத்தவரை நீங்கள் குறிப்பிடும் ஏரியாவில் உள்ள வீடுகளைக் காலி செய்து விமான நிலையத்தை விரிவுபடுத்தத்தான் நினைக்கிறது. ஆனால், பொதுமக்கள் மற்றும் மாநில அரசு எதிர்ப்புக் காட்டினால், தற்போது இருக்கும் விமான நிலையத்தை மூடிவிட்டு சென்னைக்கு வெளியே பிரமாண்டமான விமான நிலையத்தைக் கட்ட முடிவெடுக்கும். ஆனால், தற்போதுள்ள விமான நிலையத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையத்துக்கு எதிரிலும், கத்திப்பாரா சந்திப்பிலும் சில நூறு கோடிகளில் பாலங் கள் கட்டப்படுகின்றன. இதனால், இருக்கும் விமான நிலையத்தை மூடுவதற்கு மத்திய அரசு சம்மதிக்குமா என்பது தெரியவில்லை’’ என்றார்.

விமான நிலைய ஊழியர்களின் எதிர்ப்புக் குரல் ஒருபக்கம் இருக்க, தனியார் மயமாக்கலுக்கு எதிராக தி.மு.க&வின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க&வும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த வாரம் சிங்கப்பூர் சென்று விட்டு வந்த டாக்டர் ராமதாஸை ஒட்டுமொத்த விமான நிலைய ஊழியர்களும் விமான நிலைய வளாகத்திலேயே சந்தித்து மனு கொடுக்க, ‘எப்போதும் நான் மக்கள் பக்கம். அவர்களுக்கு ஒரு பங்கம் என்றால், நான் முதல் ஆளாக நிற்பேன். அந்த வகையில் நான் உங்கள் பக்கம்தான் இருப்பேன்’ என்று விமான நிலையத்திலேயே உரை நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறார்.

ராமதாஸின் ரியாக்ஷனுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 29&ம் தேதி சென்னை விமான நிலையத்தில் தனியார் மயமாக்கலை எதிர்த்து நடந்த கருத்தரங்கில் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி எம்.பி. கலந்து கொள்வது தெரிந்ததும் உடனே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டு அரசியல் சாயம் பூசிவிட்டு வந்திருக்கிறார்கள்.

சென்னை விமான நிலைய விவகாரத்தில் அ.தி.மு.க. அதிரடி வியூகம் வகுத்திருப்பதாக தகவல் அறிந்து, அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘எங்கள் ஆட்சியில்தான் சென்னை விமான நிலையத்தை உலகத்தரத்துக்கு உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். அதே சமயத்தில் எந்த விதத்திலும் தனியார் கைக்கு விமான நிலையத்தைக் கொடுத்து விடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அப்போது முதல்வராக இருந்த எங்கள் தலைவி ஜெயலலிதா சொல்லியிருந்தார். கூடவே, விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் எந்த குடியிருப்புகளையும் அகற்றக்கூடாது என்பதையும் வலியுறுத்தியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பொழிச்சலூர், அனகா புத்தூர், பம்மல் குடியிருப்புவாசிகளைத் தனது வீட்டில் சந்தித்து ‘எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீடுகளை இடிக்க நான் விடமாட்டேன். விமான நிலைய விவகாரங்களை உன்னிப்பாக எங்கள் கட்சி கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த விஷயத்தில் ஏதாவது தவறான முடிவுகளை மத்திய அரசும், மாநில அரசும் எடுத்தால் நானே களத்தில் இறங்கிப் போராடுவேன்’ என்று உறுதி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த விவகாரம் மீண்டும் பொதுமக்களை பாதிக்கும் திசையில் திரும்பினால் எங்கள் தலைவி, கொல்கத்தாவில் தொழிற்சாலை அமைய விவசாய நிலைத்தைக் கொடுக்கக் கூடாது என்று

மம்தா பானர்ஜி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, இங்கே உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறார். சமீபத்தில் விமான நிலைய ஊழியர்களின் பிரதிநிதிகள், கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைக் கேட்டிருக்கின்றனர். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், ‘ஏர்போர்ட் தனியார்மயமாவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கூடவே, நவீனப்படுத்தும்போதே அதை விரிவுபடுத்துவதற்காக குடியிருப்புப் பகுதிகள்மீது கைவைத்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஸ்டைலில் உண்ணாவிரதம் இருக்கவும் தயாராகிறார் என்று கேள்விப் பட்டோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் மக்கள் பிரச்னைகளுக்காக நாங்களும் அ.தி.மு.க. பக்கம் நிற்போம். இதை தி.மு.க. தலைவர்களிடமும் தெளிவாகச் சொல்லி விட்டோம். இத்தனைக்கும் பிறகு, விமான நிலைய தனியார்மயமாக்கம் நடக்காது என்று நம்புகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். விமான நிலைய விவ காரம் கூட்டணிகளையே மாற்றும் அளவுக்கு வலுப் பெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்று உற்சாகமாகச் சொன்னார்கள்.

சென்னை விமான நிலைய பிரச்னை இப்படி தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் அதன் ஊழியர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க பிரதமர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறாராம்.

பார்க்கலாம்... என்ன நடக்கிறதென்று!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.