Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தான்தோன்றித்தனமான செயற்பாடே கட்சிப் பிரிவினைகள் ஏற்படக் காரணம் (முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து)

Featured Replies

10492.jpg 

கூடிக் கலந்து தீர்மானங்களை எடுக்காமல் தான்தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் தான் சமூகம் மற்றும் கட்சிப் பிரிவினைகள் ஏற்படுகின்றது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

நாம் கூறுபவற்றை  மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்னொரு வரும் அவ் வாறே தீர்மானித்து எதிர்பார்க்கின்றார். இதுவே முரண்பாடுகளை அதிகம் வளர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் இயங்கும் அறிவகம் கணனிக் கல்வி நிலையத்தில் கணனி மென்பொருள் ஆரம்பக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளு க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நேற்றைய தினம்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

கணனிக் கற்கை நெறியை எமது மாணவ மாணவியர் தமது அன்றாட கல்வி நடவடிக் கைகளுடன் மேலதிக கற்கைநெறியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்று விடல் அவசியமாகியுள்ளது. அன்றைய வில்வித்தைக்கு மாற்றீடாக இன்று கணணி வித்தை சிறப்புப் பெற்றுள்ளது. அன்று ஆயுதம் ஏந்தினோம் இன்று அறிவைப் பாவிக்கின்றோம்.

இன்று  தொலைத் தொடர்புகளும் கல்வி நிலையும், நிர்வாகமும் எங்கெங்கோபோய்க் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்கள் நாங்கள் மறைந்து விடுவோம். ஆனால் உங்கள் அறிவுவிருத்தியடைய வேண்டும். 

எனவே இன்றையகாலகட்டத்தில் நாம் கணனிக் கற்கைநெறியை முறையாகக் கற்றல் மிகமிக அவசியமானதாகும். அரசின் பல்வேறு செயற் திட்டங்களின் ஊடாக கணனிக் கற்கைநெறிகள் பல்வேறு மட்டங்களில் மாணவர்களுக்கு பயிற்றப்பட்டு வருகின்றன. 

கடந்த ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்ப ட்ட மகிந்தோதய திட்டத்தின் கீழ் என்ற “உலக அறிவு கிராமத்திற்கு” என்ற கருப் பொருளில் கணனிக் கல்வி நிலையங்களைப் பல்வேறு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஊடாக அறிமுகம் செய்;து அவற்றை சிறப்பாக நடைமுறை ப்படுத்துவதற்கு அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இது ஒரு முன்னேற்றகரமான நிகழ்வாகும்.   

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”  என்ற வாக்கியம் எங்கள் யாவருக்கும் பொருத்தமுடையது. வட மாகாண மக்களுக்குப் பொருத்தமுடையது. நாம் யாவரும் ஒன்றுபட்டால்; தான் எமக்குண்டு வாழ்வு. பல விதமான சமூ கப் பிரிவினைகளுக்கும், கட்சிப் பிரிவினைகளுக்கும், பக்கச்சார்பான நடவடிக்கைகளுக்கும் காரணம் நாங்கள் கூடிக் கலந்து தீர்மானங்களை எடுக்காமையே. தான்தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுக்கின்றோம். அவற்றை மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்னொருவரும் அவ்வாறே தீர்மானித்து எதிர்பார்க்கின்றார். இது முரண்பாடுகளை வளர்க்கின்றது.
 
இது சங்கங்களில் மட்டுமல்லாமல் கோவில்களிலும், நிறுவனங்களிலும் பலத்த முரண்பாடுகளை உண்டுபண்ணுகின்றது. இம் முரண்பாடுகள் எங்களைச் சந்திசிரிக்க வைக்கின்றன. நீதிமன்றங்களுக்குச் செல்ல வைக்கின்றன. அடிப்படையை ஆராய்ந்தோமானால் சுயநலமே இதற்குக் காரணம். ஓரிருவரின் சுயநலம் முழு சமுதாயத்தையே தலைகுனிய வைக்கின்றது. போட்டி இருக்க வேண்டும், ஆனால் பொறாமை இருக்கப்படாது. 

எனவே அன்பார்ந்த இளைஞர்களே, யுவதிகளே, பெரியோர்களே வடபகுதி மக்கள் கற்றல் நடவடிக்கைகளில் மேம்பட்டவர்கள், பண்பாடுதெரிந்தவர்கள், ஏனையோரை மதி க்கின்ற தன்மை பொருந்தியவர்கள் எனப் பல்வேறு அடைமொழிகளால் வர்ணிக்கப்படும் போது நாம் அவற்றைப் புறக்கணித்துத் தவறான அல்லது பிழையான காரியங்களில் ஈடுபடக் கூடாது எம்முடைய நற்குணங்களுடன் சில சில தவறான குணங்களும் இருந்து வருவதை நாங்கள் மறுக்க முடியாது.  அவற்றை மனத்தில் ஏற்றுப் பிழைகள் களைந்து உங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.     

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10492&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.