Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகுமா பதவி? ஆபத்தில் 5 அமைச்சர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகுமா பதவி?

ஆபத்தில் 5 அமைச்சர்கள்!

p42rk5.jpg

தங்களுடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று தெரியாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் ‘திக்’கடித்தபடியே இருப்பார்கள். ஆனால், ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி! கடந்த ஆட்சிக்கு சற்றும் குறையாத நிலையில்தான் இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல அமைச்சர்கள் நகம் கடித்தபடி டென்ஷனில் இருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்படி ஒரு தவிப்பில் இருப்பதாக மாவட்டம் முழுக்க செய்திகள் பரவிக் கிடக்கிறது.

இதற்கிடையில் ம.தி.மு.க&வின் அவைத் தலைவராக இருந்த(?) எல்.ஜி&யும் தனி அணி அமைத்து, தி.மு.க&வில் இணைய காலம் பார்த்துக் கொண்டிருப்பதால், தி.மு.க&வின் மத்திய அமைச்சர்களில் சிலரும் பதற ஆரம்பித்திருக் கிறார்களாம்.

டெல்டா மாவட்டங்களின் சார்பாக கோ.சி.மணி, உபயதுல்லா, மதிவாணன் ஆகிய மூவர் மாநில அமைச்சர் களாகவும், ரகுபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் குறித்து வலம்வரும் செய்தி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இப்பகுதி தி.மு.க&வில் இருக்கும் சீனியர் ஒருவரிடம் கேட்டோம்...

‘‘என்ன செய்றது... அமைச்சர் பதவிக்கு வந்தாலே இப்படி நடுங்க வேண்டிய காலமாகிப் போச்சு. இதுல அ.தி.மு.க. என்ன, தி.மு.க. என்ன... எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கு. அதிகமா பயந்துபோய் இருக்கிறது உபயதுல்லாதான். இப்பதான் முதன் முறையாக அமைச்சராகி இருக்கார். முஸ்லிம் தரப்பில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்னு தேர்தலுக்கு முன்னாடி பேச்சு வந்தப்போ புதுக்கோட்டை ஜாஃபர் அலி, கவிஞர் சல்மா இவங்க ரெண்டு பேரோட பேருதான் அடிபட்டுச்சு. ஆனால், எதிபாராம அவங்க ரெண்டு பேருமே தோத்துப் போயிட்டாங்க. அதனால உபயதுல்லாவுக்கு யோகம் அடிச்சுது. அவரு பதவியேத்த புதுசுல, தலைமை அவர்கிட்ட, ‘தஞ்சாவூர்ல கள்ளர் சமூகத்தின் ஆதரவால் அ.தி.மு.க. பலமா இருக்கு. உங்களோட பொறுப்பான செயல்பாடுகளால அதை தி.மு.க&வோட வசமாக்கிக் காட்டுங்க’னு உத்தரவு போட்டுச்சு. அவரும் அதை செயலாக்க, தனி அணி அமைச்சு என்னென்னவெல்லாமோ செஞ்சு பார்த்தார். ஆனா, பெரிசா ஒண்ணும் பண்ண முடியலை. உபயதுல்லா மென்மையான அரசியலை மட்டுமே அறிஞ்சிருந்ததும், அதுக்கு ஒரு காரணம்.

p43azb2.jpg

இதுக்கிடையில மதுரை இடைத் தேர்தல்ல அழகிரியோட ஆள் கவுஸ் பாட்ஸா ஜெயிச்சதும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கணும்னு பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவருக்குக் கொடுக்கிறதா இருந்தா, எங்க தன்னோட பதவியைப் பிடுங்கி கொடுத்துவாங்களோனு டென்ஷனா இருக்கார் உபயதுல்லா.

உபயதுல்லாவுக்கு இப்படி ஒரு சிக்கல்னா திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனுக்கு வேற வகையில சிக்கல்! மாவட்ட நிர்வாகிகளோட சுமுகம் காட்டி செயல்பட்டுக்கிட்டுதான் இருக்கார் அமைச்சர். இருந்தாலும் கட்சிக்காரங்களைச் சமாளிக்கிற அளவுக்கு நிர்வாகத்தைக் கவனிக்கவில்லைனு அவர்மேல தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை சொல்லிக் கிட்டிருக்காங்க. தலைமையும் அதை உன்னிப்பா பார்த்துக் கிட்டுதான் இருக்கு. இதுக்கு இடையில அவ்வப்போது மீடியாக்கள்ல வேற இவரோட பதவிக்கு ஆபத்துனு செய்திகள் வரவும், ‘நம்ம மாவட்டத்துக்கு அமைச்சர் அந்தஸ்துல ஆள் இல்லாம போயிடுமோ’னு அஞ்சிக் கிடக்காங்க திருவாரூர் மாவட்டத்துக் கட்சிக்காரங்க. திருவாரூர் மாவட்டம், முதல்வர் கருணாநிதிக்கு சொந்த மாவட்டம். கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், கருணாநிதி திருவாரூரை தனி மாவட்டமா அமைச்சார். அந்த மாவட்டத்தை எல்லாவிதத்துலயும் முன்னேத்தணும்னு அவரு ஆசைப்பட்டுத்தான், இந்த முறை அந்த ஊருக்குனு அமைச்சர் ஒருத்தரை நியமிச்சார். சொல்லப்போனா, திருவாரூரைச் சேர்ந்தவர் ஒருவர் அமைச்சரானது இதுதான் முதல்முறை. ஆனா, அவர் பார்த்த அளவுக்கு மதிவாணனால செயல்படமுடியலை. அதனால, அவரை மாத்திடலாம்னு முடிவெடுத்துட்டாரு முதல்வர்.

p43bxm5.jpg

அடுத்ததா கூட்டுறவுத்துறை அமைச்சரான கோ.சி.மணி... வழக்கம் போல இவருக்கு உள்ளாட்சித் துறை கிடைக்கும்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, இந்தமுறை கூட்டுறவுத் துறையை மட்டும் கொடுத்து நாடிபிடிக்கிற வேலையில இறங்கிடுச்சு தலைமை. இருந்தாலும் இதையெல்லாம் அமைச்சர் பெரிய நோகடிப்பாக எடுத்துக்கிடலை. ஆனா திருவாரூர்ல நடந்த வெற்றி விழா கூட்டத்திலேயே மு.க.ஸ்டாலின், ‘திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள் ஈட்டிக் கொடுத்த வெற்றியை தஞ்சை மாவட்டம் கொடுக்கவில்லை. இதைச் சொல்வதால் அண்ணன் கோ.சி.மணி கோபித்துக் கொள்ளக் கூடாது’ எனப் பேச, கோ.சி.மணிக்கு ரத்தம் சுண்டி விட்டது. இதுக்கிடையில மத்திய அமைச்சரான பழனிமாணிக்கத்துக்கு தலைமைகிட்ட கிடைக்கிற வாஞ்சை வேற அவரை நொந்துபோக வைச்சிடுச்சு. இந்த நிலைமையில இப்போ அவருக்கு உடம்புக்கு வேற சரியில்லாம போயிடுச்சு.

ஏற்கெனவே சந்தர்ப்பம் பார்த்துக்கிட்டு இருக்கிறவங்க, இப்ப உடல்நிலை சரியில்லாததைச் சொல்லியே அமைச்சர் பதவியிலிருந்து கழட்டிவிடுவாங்களோனு கோ.சி.மணியோட ஆதரவாளர்கள் எல்லாம் கையைப் பிசைஞ்சுகிட்டு இருக்காங்க’’ என்ற அந்த சீனியர், ‘‘இவர்களில் யாராவது ஒருவருக்கு நிச்சயம் பதவிப் பறிப்பு சம்பவம் நடந்துவிடும் என்பது ஒருபக்கம் என்றால், தமிழக அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வருக்கு திருப்தியான ரிப்போர்ட் இல்லையாம். அதனால், அடுத்தடுத்த கட்டங்களில் மாற்றங்கள் பெரிய அளவில் இருக்கும். புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதிலும் முதல்வர் அக்கறையோடு இருப்பதாகத் தெரிகிறது...’’ என்றவர், அடுத்ததாக மத்திய அமைச்சர்கள் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘மத்திய அமைச்சர்களின் பதட்டம் இன்னும் ஜாஸ்தியாகி இருக்கிறது. ம.தி.மு.க&வை உடைச்சு எங்க கட்சியோட தலைமையின் மனதைக் குளிர வச்சிருக்கும் எல்.ஜி&க்கு எப்படியும் அமைச்சர் பதவி கிடைச்சுடும்னு ஒரு பேச்சு இப்பவே வர ஆரம்பிச்சிடுச்சு.

மத்தியில புதுசா ஒரு போஸ்டிங் கேட்டா கிடைக்குமாங்கிறது சந்தேகம்தான். ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு அளவுக்கு அதிகமா அமைச் சரவையில் இடம் கொடுத்திருக்கிறதா, மற்ற மாநில ஆட்கள் எல்லாம் குறை சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால யாராவது ஒருத்தரோட வாய்ப்பை தட்டிப்பறிச்சுதான் எல்.ஜி&க்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். இதுதான் பழனி மாணிக்கத்தையும், ரகுபதியையும் பதற வச்சிருக்கு. அதுலயும் எல்.ஜி&யும் பழனி மாணிக்கமும் ஒரே இனத்துக்காரங்க அப்படிங்கிறதால பழனி மாணிக்கம் பாடுதான் படுசிக்கல்ல இருக்கிறதா சொல்லிக்கிடறாங்க. ஆனால் நிதியமைச்சரா இருக்கும் ப.சிதம்பரத்துக்குக் கீழ இருந்து வேல செய்ய எல்.ஜி. விரும்ப மாட்டாரு. அதனால ரகுபதியோட ஸீட்டுதான் ஆடுதுனும் ஒருபக்கம் பேசிக்கிறாங்க. பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று!’’ சஸ்பென்ஸ் கொடுத்து தனது பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் அந்த சீனியர்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டைக்கு வந்த ரகுபதியிடம், ‘‘எல்.ஜி&க்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்காக தி.மு.க. அமைச்சர்கள் சிலரிடமிருந்து பதவிகள் பறிக்கப்படப் போகிறதாமே’’ என லோக்கல் நிருபர்கள் வாயைக் கிளறியிருக்கிறார்கள். இதில் கடுப்பாகிப் போன ரகுபதி, ‘‘யாருக்கு எப்ப மந்திரி பதவி கொடுக்கிறது, எப்பப் பறிக்கிறதுன்னு எங்க தலைவருக்குத் தெரியும். அதனால் அமைச்சர் பதவிகளை வைத்துப் பரபரப்பு கிளப்புவதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள்’’ என கோபமாகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.

அதேபோல, ‘‘உங்கள் பதவிக்குப் பிரச்னையா?’’ என்று பழனிமாணிக்கத்திடம் கேட்டால், ‘‘தலைவர் பார்த்து யாரை வேண்டுமானாலும் அமைச் சராக்கலாம். அதை மாற்றி இன்னொருவருக்கும் கொடுக்கலாம். எந்த பொறுப்பில் இருந்தாலும், மக்கள் பணியைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்... எல்லாத்தையும்விட கட்சிதான் எங்களுக்கெல்லாம் முக்கியம்...’’ என்று சிம்பிளாகச் சொல்கிறார்.

அரசியல் சகஜங்கள் அனைவரும் அறிந்தது தான். பார்க்கலாம், ம.தி.மு.க-வின் விரிசல் தி.மு.க. அமைச்சர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவருமா என்று!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க-வின் விரிசல் தி.மு.க. அமைச்சர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவருமா என்று! பொறுத்திருந்து பார்ப்போம்.

தலையை சுற்றுது........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.