Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூரோவின் ‘தல’!

Featured Replies

யூரோவின் ‘தல’!

எம்.பிரதீப் கிருஷ்ணா

 

p102a.jpg

`கிளப்புக்கு ஹீரோ... நாட்டுக்கு ஸீரோ’ என்ற விமர்சனத்தை அதிரடியாக உடைத் திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. முதன்முறையாக  ஐரோப்பாவின் மிகப்பெரிய கெளரவமான யூரோ கோப்பையை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

p102c.jpg

கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்திப்பெறாத நாடு போர்ச்சுக்கல். ஆனால், அது கால்பந்திலும் இதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. `நம் அணி ஒருமுறையாவது உலக அளவில் ஒரு கோப்பையை வெல்லாதா?’ என  ஏங்கிக் கிடந்தது போர்ச்சுக்கல். மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் அணித் தலைவனாக நின்று, கோப்பையை வென்று கொண்டாட் டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் ரொனால்டோ.  

யூரோ-2016 கோப்பையின் இறுதிப் போட்டியில், சொந்த மண்ணில் அசுர பலத்துடன் விளையாடிய பிரான்ஸ் அணியுடன் மோதியது போர்ச்சுக்கல். ஆரம்பமே போர்ச்சுக்கலுக்கு அதிர்ச்சி. போட்டி தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர்கள் முட்டித் தள்ளியதில், பலத்தக் காயம் அடைந்தார் ரொனால்டோ. காயத்தைத் தாங்கிக்கொண்டு மீண்டும் விளையாடியவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒரு பக்கம் வலி, மற்றொரு பக்கம் இறுதிப்போட்டியில் தன்னால் விளையாட முடியவில்லையே என்ற வேதனையில், ஒரு சிறுவன்போல பல கோடி ரசிகர்களின் முன்னிலையில் அழ ஆரம்பித்தார் ரொனால்டோ. ஆனால், ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் சப்ஸ்டிட்யூட்டாகக் களமிறங்கிய ஈடர் கோல் அடிக்க வெற்றிபெற்றது போர்ச்சுக்கல்.

மின்னல் மனிதன் உசேன் போல்ட்டும், கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டானும் கலந்த காக்டெய்ல் கிறிஸ்டியானோ ரொனால்டோ. எந்த ஒரு தடுப்பாட்டக்காரரையும் ஜஸ்ட் லைக் தட் கடந்துவிட்டு, மின்னல்போல் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறுவார். பந்தை தலையால் முட்டி கோல்போஸ்ட்டுக்குள் நுழைக்க 44 செ.மீ வரை காற்றில் பறப்பார். ஒரு சராசரி கூடைப்பந்தாட்ட வீரரால்கூட இவ்வளவு தூரம் குதிக்க முடியாது.

p102b.jpg

ரொனால்டோவின் கால்களில் பந்து சிக்கினால், அதற்கே தலைசுற்றல் வரும். அந்த அளவுக்கு பந்தைச் சுழற்றி, கால்களுக்கு இடையே சுழலவிட்டு ஆட்டம்காட்டுவார். பெனால்ட்டி, ஃப்ரீ கிக், ஹெட்டிங், டிரிப்ளிங் என கால்பந்தின் அனைத்து டிப்பார்ட் மென்டிலும் டிஸ்ட்ங்ஷன்தான்.

31 வயதான ரொனால்டோ  இதுவரை 548 கோல்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

போர்ச்சுக்கலின் மதீரா நகரில்  உள்ளூர் நகராட்சியில்  தோட்டக்காரராக பணிபுரிந்த அப்பாவுக்குக்கும், சமையல்கார அம்மாவுக்கும் பிறந்த நான்காவது குழந்தை ரொனால்டோ. குழந்தைகளைப் படிக்கவைக்கவே மிகவும் சிரமப்பட்ட ஏழைக் குடும்பம். ரொனால்டோவின் அப்பா, நடிகரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான ரொனால்ட் ரீகனின் தீவிர ரசிகர். அதனால்தான் தனது கடைசி மகனுக்கு `ரொனால்டோ' எனப் பெயர் சூட்டினார்.

See Also: மெஸ்ஸியின் கடைசி கிக்!

தோட்ட வேலையில் இருந்து ஆன்டோரினா எனும் சிறிய கால்பந்து கிளப் அணிக்கு கிட் மேனாக வேலைக்குச் சேர்ந்தார் ரொனால்டோவின் அப்பா. கால்பந்து வீரர்களின் உடைகள், பந்துகள் உள்ளிட்ட உபகரணங்களைச் சரியாகப் பார்த்துக்கொள்வது கிட்மேன் வேலை. அப்போது அப்பாவுடன் கால்பந்து மைதானங்க ளுக்குப் போன ரொனால்டோவுக்கும் கால்பந்து ஆசை வர, தீவிரமாக விளையாட ஆரம்பித்தார். ரொனால்டோவின் வேகமான பாஸ்கள் ஆன்டோரினோ அணியின் பயிற்சியாளரை வியக்கவைத்தது. அப்பா கிட்மேனாக வேலை செய்த அதே கிளப்பில் ரொனால்டோவுக்கு பிளேயராக இடம்கிடைத்தது.

p102d.jpg

14 வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுமையாக கால்பந்தில் கவனம்செலுத்த ஆரம்பித்தார் ரொனால்டோ. ஆனால், அடுத்த ஆண்டே டைகார்டியா என்னும் சீரற்ற இதயத் துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ரொனால்டோ. இதனால் கால்பந்து விளையாட்டுக்கே முழுக்குப்போட வேண்டும் என்ற நிலை உருவானது. 15 வயது சிறுவனுக்கு இதய அறுவைசிகிச்சை நடந்தது. பல மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. ஆனால் இதயம் முழுக்க கால்பந்து கனவு நிரம்பியிருந்த அந்தச் சிறுவன், மீண்டும் கால்பந்தோடு மைதானத் துக்குள் குதித்தான்.

 16 வயதில் தேசிய அளவில் பாப்புலரான ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக  விளையாட தேர்ந் தெடுக்கப்பட்ட ரொனால்டோ, அடுத்த எட்டே ஆண்டுகளில் உலகின் காஸ்ட்லி வீரராக ரியல் மாட்ரிட் அணியால் 8,800 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

ஆனால், இடைப்பட்ட அந்தக் காலம் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.ரொனால்டோவின் வெற்றிகள் பலரின் தூற்றல்களால் தூண்டப் பட்டவை. `போங்காட்டம் ஆடுகிறார், எதிர் அணி வீரர்களைக் காயப்படுத்துவதற்காகவே ரொனால்டோவை அணியில் வைத்திருக்கிறார்கள்' என அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதுவரை நல்ல விங்கராக மட்டுமே இருந்த ரொனால்டோ, இந்தத் தொடர் விமர்சனங்களுக்குப் பிறகுதான்  கோல்மெஷினாக மாறினார். தன்னை இழிவுபடுத்தும் விமர்சகர்களுக்குத் தன் கால்களால் பதில்சொன்னார். பயிற்சியாளருடன் ‘ஒன்-டூ-ஒன்’ பயிற்சியை இரவும் பகலும் இடைவெளி இல்லாமல் மேற்கொண்டார் ரொனால்டோ.  விளைவு 2006 பிரிமியர் லீக் சீஸனில் ரொனால்டோதான் டாப் ஸ்கோரர். எதிர் அணி வீரர்களே ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுக்கும் அளவுக்கு, உயர்ந்தார் ரொனால்டோ.

இன்றுவரை தனது திறமையின் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு தனது ஆட்டத்தால் மட்டுமே பதில் அளித்துவருகிறார் ரொனால்டோ. கோபா அமெரிக்காவோடு மெஸ்ஸியின் கதை முடிந்ததுபோல, இந்த யூரோவோடு ரொனால்டோ கதையும் முடிந்துவிடும் என மீம்ஸ்களும் ஜிஃப்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. அதற்கு ஏற்றாற்போல லீக் சுற்றுப்போட்டிகளில் ஒன்றில்கூட போர்ச்சுக்கல் வெற்றிபெறவில்லை. மூன்று லீக் போட்டிகளிலுமே போர்ச்சுக்கல் டிராவில் முடிக்க, மூன்றாவது போட்டியில்தான் ரொனால்டோவே முதல்முறையாக கோல் அடித்தார். ஹங்கேரிக்கு எதிரான இந்தப் போட்டியில் தோல்வியை நோக்கி போர்ச்சுக்கல் சென்றபோது, அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து கால் இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுக்கலை அழைத்துச்சென்றார் ரொனால்டோ.

கால் இறுதியில் போலந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்ற போர்ச்சுக்கல், அரை இறுதியில் முதல்முறையாக இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்றது. இதில் முதல் கோலை அடித்து போர்ச்சுக்கலுக்கு இறுதிப்போட்டி கனவை நனவாக்கினார் ரொனால்டோ.

`சப்ஸ்டிட்யூட்டாக நான் மைதானத்துக்குள் வந்தபோது `போர்ச்சுக்கலுக்காக நீதான் கோல் அடிக்கப்போகிறாய். நம்பிக்கையோடு விளையாடு' எனச் சொன்னார் ரொனால்டோ. அவர் சொன்னதை நான் வழக்கமான வார்த்தையாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த வார்த்தைகள் மைதானத்துக்குள் நான் நின்ற ஒவ்வொரு நொடியும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ரொனால்டோவின் எனர்ஜி எனக்குள் வந்ததுபோல இருந்தது. அதனால்தான் என்னால் கோல் அடிக்க முடிந்தது' என்றார் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கலை வெற்றிபெறவைத்த ஈடர்.

p102e.jpg

பெர்சனல் வாழ்க்கையிலும் தலைக்கனம் பிடித்தவர், ஆக்ரோஷக்காரர் என்று எல்லாம்  விமர்சிக்கப்பட்டவர் ரொனால்டோ. ஆனால், தன் தந்தை குடியால் இறந்தவர் என்பதால் இதுநாள் வரை மதுவைத் தொடாதவர். கிட்டத்தட்ட அனைத்து கால்பந்து வீரர்களுமே உடல் எங்கும் பச்சை குத்திக்கொள்ள,  ‘பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்தத்தானம் செய்ய முடியாது’ என்பதற்காகவே அதைத் தவிர்த்துவருபவர். தன் சொந்த ஊரில் சிறந்த புற்றுநோய் மருத்துவமனை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அறக்கட்டளை என சத்தம் இல்லாமல் பல உதவிகள் செய்துவருகிறார். திருமணம் ஆகவில்லை என்றாலும், 2010-ம் ஆண்டு `எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என அறிவித்தார் ரொனால்டோ. மகனின் பெயரும் கிறிஸ்டியானோ.

மீம்ஸ்களால் இகழப்பட்டவர், விமர்சனங்களால் துரத்தப்பட்டவர் இன்று பல கோடி ரசிகர்களின் புரொஃபைல் பிக்சராகவும் கவர் போட்டோவாகவும் மாறியிருக்கிறார். 

ரொனால்டோ - இந்த மில்லினியத்தின் பீலே!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.