Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி

Featured Replies

இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி
 
 

article_1468495703-TamausalsLEAD.jpgஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வீரர்கள் விரும்புகின்றனர். இலங்கை கிரிக்கெட் சபையும், முன்னாள் வீரர்களை நாடுவதில்லை.

ஆனால், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜெயவர்தன செயற்பட்டமை, இலங்கை கிரிக்கெட் சபை மட்டத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தான், இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய அணியோடு இணைந்து, முரளிதரன் பணியாற்றி வருகிறார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முத்தையா முரளிதரன், "இலங்கைக்காக நான் இறுதியாக விளையாடியமை, 6 ஆண்டுகளுக்கு முன்னராகும். இலங்கை கிரிக்கெட்டோடு நான் இப்போது சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அங்கு ஏற்கெனவே சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆகவே விடயங்களை நான் குழப்ப விரும்பவில்லை" என்றார்.

ஏற்கெனவே சிலர் ஈடுபட்டுள்ளனர் என்ற அவரது கருத்து, முன்னாள் வீரர்கள், இலங்கை கிரிக்கெட்டோடு இணைந்து செயற்படுவதற்குத் தடையாக, சிலர் காணப்படுகின்றனர் என்ற உட்கருத்தைக் கொண்டுள்ளதாக என்பது, விவாதத்துக்குரியது.

ஐ.பி.எல் போட்டிகளிலும் பின்னர் இந்தியாவின் வங்காள கிரிக்கெட் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் பிரதானமாகப் பணியாற்றுவதாகக் குறிப்பிட்ட முரளி, இடையில் அவுஸ்திரேலியாவுடன் அவ்வப்போது பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். தனது அறிவை, ஏனையோருடன் பகிரும் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முரளி, "என்னுடைய பிரச்சினை என்னவெனில், முழு நேரமாக என்னால் பணியாற்ற முடியாது. அதற்கு நான் தயாராக இல்லை. அப்படியில்லாவிடில், இருபதுக்கு-20 போட்டிகளில் உலகம் முழுவதும் விளையாடிக் கொண்டிருந்திருப்பேன்" என்றார். தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட விரும்புவதன் காரணமாக, இவ்வாறான நிலை காணப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, இலங்கையின் முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், டெஸ்ட் தொடர் சம அளவில் காணப்படும் எனக் கூற முடியாதுள்ளதாகத் தெரிவித்த முரளி, ரங்கன ஹேரத்தே இலங்கையின் பிரதான ஆயுதம் எனவும், ஏனைய பந்துவீச்சாளர்களைச் சமாளித்தால், அவுஸ்திரேலிய அணிக்குச் சிறப்பான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/177048#sthash.lHqhb0DD.dpuf
  • தொடங்கியவர்

முரளீதரனுக்கு எதிராக சில ஊடகங்கள் குற்றச்சாட்டு

முரளீதரனுக்கு எதிராக சில ஊடகங்கள் குற்றச்சாட்டு - தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு எதிராக சில ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக முத்தையா முரளீதரன் கடமையாற்றுகின்றார்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முரளீதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முரளீதரன் பந்தை வீசி எறிவதாக (சக்கர்) என குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் எனவும் தற்போது முரளீதரன் அவுஸ்திரேலிய அணிக்கு உதவி செய்வதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு முரளீதரன் இலங்கை அணியின் ரகசியங்களை எதிரணிக்கு வழங்குவதாக இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தொழில்சார் ரீதியில் முன்னாள் நட்சத்திர வீரர் ஒருவர் ஆலோசனை சேவை வழங்குவதில் தவறில்லை என இலங்கை அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் மஹல ஜயவர்தன இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டம் தொடர்பில் ஆலோசனை வழங்கிய போதிலும் இதேவிதமான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134111/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.