Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பத்திரிகையின் இன்றைய இலங்கை அரசியல் பற்றிய நோக்கு..

Featured Replies

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை நிலை - -ஷிரால் லக்திலக-

சிங்கள பத்திரிகையின் இன்றைய இலங்கை அரசியல் பற்றிய நோக்கு..

ஜனாதிபதியின் இணைப்பாளரும், சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக  சிங்களத்தில் ராவய பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவம் இது. இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  அனுப்பி வெளியீட்டிற்காக அனுப்பிவைத்தமைக்கு அமைவாக இங்கு வெளியிடப்படுகிறது... 

விக்டர் ஐவன், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் மனுவர்ண ஆகியோர்களின் கட்டுரைக்கான பதில் கட்டுரையாகவே இக்கட்டுரை அமைகின்றது. 

இவர்களின் பகுப்பாய்வானது 'நல்லாட்சி அரசாங்கம் சரிவடைந்து இரண்டாக பிரியும் ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றமை அரசாங்கத்திடம் பொதுவானதொரு தொலைநோக்கு காணப்படாமை இவ் அரசாங்கத்திலும் ஊழல்கள் இடம்பெறும் அதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே முறுகல் நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியன முக்கியமாகும்' 

இவ் எழுத்தாளர்கள் இக் காரணங்களை ஒப்பீட்டு ரீதியான வழியுறுத்துதலை இனங்காணுவதற்கே இக்கட்டுரை முயல்கின்றது.
 
இக்கட்டுரைகள் மூலம் சுட்டிக்காட்டப்படும் வாதங்களுக்காக அவர்கள் வழங்;கும் ஒப்பீட்டு ரீதியான வழியுறுத்துதல்கள் பெரும்பாலும் ஒரே தரத்தில் காணப்படுகின்றன. உதாரணமாக உயன்கொடவின் கட்டுரையில் 'நல்லாட்சி தொடர்பான பிரச்சினையில் பிரதான மூன்று மூலங்கள்' இனங் காணப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சிவில் சமூகம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தூர விலகிச் சென்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்திருத்தல், விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நல்லாட்சி எண்ணக்கருவிற்கு முரணாக ஊழல்களில் ஈடுபடுதல் மற்றும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ள பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள், பொருளாதார முகாமைத்துவத்தில் முற்றுமுழுதாக 'தோல்வியடைந்த சிறு பிள்ளைகளாக' இருத்தல் ஆகியனவாகும். ஆயினும் அவரது ஒட்டுமொத்த கட்டுரையில் குறித்த இம் மூன்று மூலங்களுள் முதலாவது மூலமான ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது சார்ந்திருத்தலும் அவரைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள் அவருக்கு 'அரசியல் கயிறுகளை' கொடுப்பதைப் பற்றியும் மாத்திரமே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இச் செயலானது நாம் அறிந்த, நமது மதிற்பிற்குரிய அறிவாளியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல.       கட்டுரையின் முடிவாக, சிவில் சமூகத்தின் சுயாதீன தலையீட்டுக்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விடயத்தை நானும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். அவர் இவ் அரசாங்கத்தின் ஊழல் பற்றியும், பொருளாதார வேலைத்திட்டமொன்று இல்லை என்ற விடயத்தைப் பற்றியும் விளக்குவதிலிருந்து தவறிச் செல்வது எதேச்சையாக அல்ல, என்பதே எனது கருத்தாகும். அவரும் மனுவர்ணவும் முன்வைக்கும் வாதத்திற்கு அமைய அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை பற்றிய கலந்துரையாடலில்         தயான் ஜயதிலக்க கலந்துகொண்டமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும் என்பதே அவரது வாதமாகும். அப்படியாயினன் இவ் அரசாங்கத்தினால் கட்டியெழுப்பப்பட வேண்டிய சுதந்திரமான சூழலிலும் அரசாங்கத்தின் கருத்தை மாத்திரம் எப்போதும் ஆதரிக்க வேண்டுமா? அரசாங்கத்தின் நிலைப்பாட்டை போற்றிய பேச்சாளர்கள் மூன்று பேருக்கு மத்தியில் அரசாங்கத்தை ஒப்பீட்டு ரீதியில் விமர்சிப்பதனைக்  கூட எம்மால் ஏன் தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கான காரணம் என்ன?

இரண்டாவது உதாரணம், விக்டர் ஐவன் அவர்களின் கட்டுரை ஆகும். இக்கட்டுரையிலும் அரசாங்கத்தில் காணக்கிடைக்கும் சிக்கல் தன்மைக்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் கட்டுரை முழுவதும் ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றல் பற்றியும், ஜனாதிபதியின் ஆலோசகர்களின் செயற்பாடு பற்றியும் தெரிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு காரணங்களான நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான முறையான சிறந்ததோர் எதிர்கால சிந்தனை அரசாங்கத்திடம் காணப்படாமை மற்றும் இரு தலைவர்களுக்குமிடையே நேர்மையான ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாய் அமையும் அதிகார பகிர்வு காணப்படாமை ஆகிய விடயங்கள் தொடர்பில்; ஐவன் அவர்களும் தான் சமர்ப்பிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விடயம் பற்றி தெளிவுப்படுத்தாமல் விட்டுவிடுகின்றார். அத்தோடு எந்தவொரு உதாரணங்களையும சுட்டிக்காட்டாது தீர்வு யோசனையை முன் வைக்கின்றார். 

நான் எடுத்துக்கொண்ட மற்றைய இரண்டு கட்டுரைகளிலும் இதே விதமாக அரசாங்கம் இரண்டாகப் பிரிதல், ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புதல், அவ் விடயத்தில் ஆலோசகர்களின் செயற்பாடுகள்  பற்றியே குற்றம் சாட்டுகின்றனர். இவ்வனைத்து உதாரணங்கள் மூலமும் தெளிவாக விளங்குவது யாதெனில், அரசாங்கத்திற்கு எதிராக சிவில் சமூகத்தின் கருத்துக் கணிப்பீட்டில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினரால் முன்வைக்கப்படும் விமர்சனம் ஒருதலைப்பட்சமாக உள்ளதென்பதேயாகும். ஆகவே முன் வைக்கப்படும் அடிப்படை குற்றச்சாட்டான 'ஜனாதிபதி அவர்களினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய முன்னணியினதும் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றலானது நானும் பங்காளராகவிருக்கும் ஜனவரி 08ஆம் திகதி எதிர்பார்ப்புக்களை வெற்றியடைச் செய்யும் அத்தியாவசிய ஓர் தேவையாக அமைவது எப்படி என்பது பற்றி விளக்கமளிப்பதற்கே நான் இங்கு முயற்சிக்கின்றேன்.




ஸ்ரீ.ல.சு.க தலைமைத்துவத்தை பொறுப்பேற்றல் 

ஸ்ரீ.ல.சு. கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்றதனால் அரசாங்கம் படுகுழியை நோக்கி பயணிப்பதாக கூறப்படுகின்றது. ஜனவரி 08ஆம் திகதி வெற்றிக்காக சிவில் அமைப்புக்கள் பாரியதொரு பணியை மேற்கொண்டது என்பதையும், மீண்டும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்த அது வழிவகுத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. சுதந்திரமானதும் நீதியானதும் ஜனநாயக ரீதியானதுமான ஒரு நாடு என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதில் ஊழல் ஒழிக்கப்பட்டு மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படுவதையும், அடைந்த சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், நாட்டை மீண்டும் பின்னோக்கித் தள்ளுவதை தவிர்ப்பதற்கும் அத்தியாவசியமான அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டன.
 
சுதந்திரத்திற்காக கிடைக்கப்பெற்ற இவ் வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை நாம் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றி 19வது அரசியலமைப்பு திருத்தமாகும். பாராளுமன்றத்தில் 2ஃ3 வாக்குகளால் மாத்திரம் அதாவது, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இன்றி மேற்கொள்ள முடியுமென உயர் நீதிமன்றம் முடிவு செய்த அனைத்து விதமான முற்போக்கான திருத்தங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இதற்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுள் 215 உறுப்பினர்கள் கையுயர்த்தி இதனை அனுமதித்த வேளையில் பாராளுமன்றத்தில் இருந்த ஐ.தே.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 60ற்கும் குறைவாகும் என்பதனையும், பெரும்பான்மையாக 140க்கும் மேற்பட்ட வாக்குகள் ஐ.ம.சு.கூ. உறுப்பினர்களிடமிருந்தே கிடைக்கப்பெற்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் மத்தியில் குற்றம் சுமத்தப்படுகின்றவர்களும் ஊழலில் ஈடுபட்டோரும் ஏமாற்றுக்காரர்களும் எத்தனோல்காரர்களும் காணப்பட்டனர் என்பது தனது கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டபோது அதனை நிராகரித்துவிட்டு பின்னர் அவர்களிடம் உதவியை எதிர்பார்ப்பது எவ்வாறு? ஆகவே அப்போது இருந்த பாராளுமன்றத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான ஆதரவைப் பெற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், ஐ.ம.சு.கூ மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சி ஆகியவற்றின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க நேரிட்டது. ஆகவே, ஐவன் மற்றும் விஜயசூரிய ஆகியோர் கூறுவதுபோல், பாராளுமன்றத்தை கலைப்பதன் மூலம் ஜனவரி 08ஆம் திகதி எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியுமாக இருந்திருக்குமோ என்பதைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 





பாராளுமன்றத்தை கலைக்காமை 

ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்து அன்னம் சின்னத்தில் போட்டியிட்டு மக்களிடம் 2ஃ3 பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருந்ததென்ற கருத்து. இது வெற்றியளிக்குமா? மஹிந்த ராஜபக்ஷ - ரணில் விக்கிரமசிங்க இரு முனைப் போட்டியில் ரணில் விக்கிரமசிங்கவினால் 2ஃ3 பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்ள முடியுமா? ஜனாதிபதி தேர்தலில் 48 விகிதம் வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபகஷவின் கிராமிய வாக்குத் தொகையில் சிரிவு ஏற்படுமென சிந்திப்பதற்கான காரணம் என்ன? விசேடமாக ஜனாதிபதி தேர்தலின் இறுதியில் தெளிவாக காணக்கிடைத்த விடயமாக, சிங்கள பெரும்பான்மையைக் கொண்ட மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும் ஆதரவு காணப்பட்டது.எ அந்தப் பின்னணியில் மீண்டுமொரு முறை பொதுத் தேர்தல் இடம்பெற்றிருப்பின் தேர்தல் இடம்பெற்ற விதத்தில் காணப்பட்ட இனத்தை அடிப்படையாகக் கொண்ட பெறுபறுகளே தேர்தல் முடிவில் கிடைத்திருக்கும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை அதிகாரத்தை எதிர்பார்ப்பதென்பது ஒரு பகல் கனவாகும். அந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இருந்தும் மஹிந்த ராஜபகஷ எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பாராளுமன்றமொன்றில் சாதகமான செயற்பாடு என்பது குதிரைக் கொம்பாகவே இருந்திருக்கும். ஐவன் அவர்கள் உள்ளிட்ட பகுப்பாய்வார்களின் கருத்துக்கமைய செயற்பட்டிருப்பின் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டிருக்கும். எந்தவித வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையற்ற அரசாங்கம் உருவாகியிருக்கும். 

அவ்வாறான ஆபத்தான, தீமைமிக்க பாதையில் பயணிக்காததையிட்டு நாம்            சிறிசேன  - விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில் முற்போக்கான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயன்ற அரசாங்கங்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளை நாம் நன்கு அறிவோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் திருத்தம் மேற்கொள்ள முற்பட்டபோது அம்முயற்சியினை அப்போதைய எதிர்க்கட்சியாகவிருந்த  ஐ.தே.கட்சியே அவ் ஆவணங்களை தீவைத்து பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்தது. விஜயசூரிய அவர்கள் அன்று எவ்வாறன கருத்தை கொண்டிருந்தாரென எமக்குத் தெரியாதபோதிலும் ஐவன் மற்றும் உயன்கொட ஆகியோர் அந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு சார்பாக இருந்தார்கள் என்பதனையும்,  அவர்களது அந்த எதிர்பார்ப்புக்கள் சிதைந்து போயின என்பதையும் நாம் அறிவோம். ஆயினும்      19வது திருத்தத்தின் தயவில் இவ் அரசாங்கம் உரிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. வெற்றிக் கம்பத்தை அடைய இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டி இருப்பினும், போட்டியின் முதலாவது சுற்றை வெற்றிகரமாக பூர்த்தி செயதிருக்கின்றது. இந்த அரசாங்கம் நாளை  சிதைந்தும் போக நேர்ந்தாலும்கூட '10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் எதையுமே சாதிக்கவில்லை' எனும் சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தின் மீது அடிக்கடி சுமத்தப்படுவதுபோல,     சிறிசேன - விக்கிரமசிங்க கூட்டு மீது எழாதிருப்பதற்கு, கடந்தகால அனுபவங்களினால் அவர்கள்  கற்றுக்கொண்டிருப்பதே காரணமாகும்.  

கட்சியை கட்டியெழுப்புதல்
கூட்டு அரசாங்கத்திற்கெதிரான மற்றைய விமர்சனம் யாதெனில், ஜனாதிபதி அவர்கள் கட்சியை கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதன் மூலம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் வாக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதாகும். ஜனவரி 08இன் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு மேலும் இரண்டு பிரதான இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இவ்வனைத்து கட்டுரையாளர்களும் மறைமுகமாகவேனும் ஒரே விதமாக, அனைத்து பிரஜைகளும் ஏற்றுக்கொள்ளும் அதிகார பகிர்வு மற்றும் தேர்தல் முறையினை மறுசீரமைத்தல் ஆகிய இலக்குகளைப்பற்றி குறிப்பிட தவறிவிட்டனர். இவை பாராளுமன்றத்தில் 2ஃ3 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பின் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டிய மாற்றங்களாகும். ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் சென்றிருப்போமாயின் இம் முற்போக்கான சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்பார்ப்பானது மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டு போயிருக்கும். ஏனெனில் ஜனாதிபதிக்கும் ஜனவரி 08 எதிர்பார்ப்புக்களுக்கும் சார்பானது என அழைக்கப்படும் ஐ.தே.கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு     106 ஆசனங்களை பெறுகையில் எதிரணியான மஹிந்த அவர்கள் தலைமை தாங்கிய ஐ.ம.சு.கூட்டமைப்பு தேர்தலில் 94 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியை ஒப்படைத்துவிட்டு சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் என்றும் கப்பலை வழி நடாத்தியிருப்பின் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் கற்பாறையில் மோதி அழிவடைவது திண்ணமாக இருந்திருக்கும். 

உண்மையிலேயே, ஜனவரி 08 எதிர்பார்ப்புக்கள் கூட்டு அரசாங்கம் என்ற பெயரில் இன்று நிமிர்ந்து நிற்பது பழுதடைந்து வளைந்துபோயுள்ள கைதாங்கிகளின் உதவியினாலேயே ஆகும். ஆகஸ்ட் 17 தேர்தலில் நாம் கண்ட உண்மையாதெனில் ஜனாதிபதி அவர்களுக்கு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட நபர்கள் தோல்வியடைந்தமையாகும். அதாவது ஐ.ம.சு.கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சார்பான வாக்குகளேயன்றி மைத்ரிபால சிறிசேனவிற்கு சார்பான வாக்குகள் அல்ல, ஆகையால் உண்மையிலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுவது ஜனவரி 08ஆம் திகதி எதிர்பார்ப்பிற்காக அழித்த 50 இலட்சம் வாக்குகள் அல்ல. மாறாக ராஜபக்ஷவிற்காக அழிக்கப்பட்ட 47 இலட்சம் வாக்குகளில் ஒரு பகுதியேயாகும். ஆக மைத்ரியின் குவியலில் இருந்து  மஹிந்த எடுத்துக்கொள்ளவில்லை என்பதுடன், மஹிந்தவின் குவியலில் இருந்தே மைத்ரி எடுத்துக்கொண்டமையே இங்கு நடந்துள்ளது.

எல்லா விதத்திலும் கூட்டு அரசாங்கத்தின் இருப்பு நியாயமானதென கூறுவதற்காக நான் இந்த வாதத்தை முன் வைக்கவில்லை. ஜனவரி 08 சீர்திருத்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அரசாங்கம் காட்டும் சாத்தியமான செயற்பாடுகளே இவ் அரசாங்கத்தின் இருப்பை நியாயப்படுத்தும். இப் பயணத்தின்போது சந்திக்க நேரிடும் தடைகளினால் பயணத்தின் முடிவில் தென்படவேண்டிய ஒளி மறைக்கப்படும் பட்சத்தில் எதிர்பார்ப்பை கைவிடாது பயணத்தை தொடர வேண்டும். அவ்வாறான ஓர் உன்னத கோணத்தில் தடைகளுக்கு மத்தியில் பயணிப்பதற்கு சிவில் சமூகம் தயாராக இருந்தால் மாத்திரமே ஜனவரி 08 எதிர்பார்ப்புக்களை அடையக்கூடியதாக இருக்கும்.

-ஷிரால் லக்திலக-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134092/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.