Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு

Featured Replies

சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு
 
 

article_1468834219-TamilControJoyce.jpgஅயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட் ஜொய்ஸுக்கு வழங்கபட்ட ஆட்டமிழப்பு சர்ச்சையாகியுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 60, மொஹம்மட் நபியின் 50 ஓட்டங்கள் கைகொடுக்க 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, ரஹ்மட் ஷா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, பந்துவீச்சில் அன்டி மக்பிரைன், பீற்றர் சேஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து தமது இன்னிங்ஸை ஆரம்பித்த நிலையில், அயர்லாந்தின் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே, சர்ச்சையை தோற்றுவித்த ஆட்டமிழப்பு நிகழ்ந்திருந்தது.

குறித்த பந்தை ஜொய்ஸ் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டியிருந்த நிலையில், குறித்த பந்தானது எல்லையைத் தாண்டிச் சென்று விட்டது என நினைத்த ஜொய்ஸ் களத்தின் நடுவிலேயே நின்ற நிலையில், குறித்த பந்தினை களத்தடுப்புச் செய்த நபி, அந்தப் பந்தை ரஷீட்டிடம் பரிமாற, அந்த ஓவரை வீசிக் கொண்டிருந்த யமீன் அஹ்மட்ஸாய் விக்கெட்டுகளைத் தகர்த்தார்.

இந்நிலையில், களநடுவர்களாகவிருந்த அலன் நீல், சி.ஷம்ஷூட்டின் ஆகியோர் , ஆட்டமிழப்புக் கோரிக்கையை வாபஸ் பெறுமாறு ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காயை கோரியிருந்த நிலையில், அதை அவர் மறுத்திந்தார். இப்போட்டியில் தொலைக்காட்சி நடுவர் இல்லாத நிலையில், குறித்த ஆட்டமிழப்புக்கு பின்னர், அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் ஃபோர்ட்பீல்டுக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது.

இறுதியாக, 41 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அயர்லாந்து, 79 ஓட்டங்களால் இப்போட்டியில் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கெவின் ஓ பிரைன் 34, போல் ஸ்டேர்லிங் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஷீட் கான் 4, ரஹ்மட் ஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

- See more at: http://www.tamilmirror.lk/177342/சர-ச-ச-ய-ன-ஜ-ய-ஸ-ன-ஆட-டம-ழப-ப-#sthash.Pfa5KxrM.dpuf
  • தொடங்கியவர்

பழிதீர்த்தார் ஜொய்ஸ்
 
 

article_1469021610-Tamil160Joyce.jpgஅயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில், பெல்ஃபாஸ்ட்டில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை, 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய், அயர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கடந்த போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட எட் ஜொய்ஸ் ஆட்டமிழக்காமல், 148 பந்துகளில், 3, ஆறு ஓட்டங்கள், 19, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 160 ஓட்டங்களைப் பெற்றதோடு, கரி வில்சன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக தவால்ட் ஸல்ட்ரான் இரண்டு விக்கெட்டுகளையும், மிர்வாய்ஸ் அஷ்ரஃப், மொஹம்மட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, நஜிபுல்லா ஸட்ரான் 54, ரஷீட் கான் 40, அஸ்கர் ஸ்டனிஸ்காய் 32, ரஹ்மட் ஷா 30, மொஹம்மட் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிரைன் மூன்று விக்கெட்டுகளையும், பரி மக்கிராத்தி, பீற்றர் சேஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடரின் நாயகனாக எட் ஜொய்ஸ் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/177540/பழ-த-ர-த-த-ர-ஜ-ய-ஸ-#sthash.SQ8mffkU.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மோசடி அவுட் செய்த ஆப்கான் வீரர் மொகமது நபிக்கு ஐசிசி கண்டிப்புடன் எச்சரிக்கை

 
எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று ‘லைவ்’ ஆக இருக்கும் பந்தை தடுத்து மோசடி ரன் அவுட் செய்த ஆப்கன் வீரர் நபி. | படம்: ட்விட்டர்.
எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று ‘லைவ்’ ஆக இருக்கும் பந்தை தடுத்து மோசடி ரன் அவுட் செய்த ஆப்கன் வீரர் நபி. | படம்: ட்விட்டர்.

அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸை மோசடியாக ரன் அவுட் செய்த குற்றச்சாட்டில் ஆப்கான் அணி வீரர் மொகமது நபிக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஞாயிறன்று நடந்த ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸ் 6-வது ஓவரில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் இது பந்தை எல்லைக்கோட்டிற்குள் பந்தை தடுத்து விட்டதாக மோசடியாகக் கூறிய மொகமது நபியினால் விளைந்த ரன் அவுட் என்று தெரியவந்தது.

230 ரன்கள் இலக்கை அயர்லாந்து துரத்தியது. ஆட்டத்தின் 6-வது ஓவரில் எட் ஜாய்ஸ் எக்ஸ்ட்ரா கவர் திசையில் டிரைவ் ஆடினார். பந்தை தடுக்கச் சென்ற ஆப்கன் வீரர் மொகமது நபி எல்லைக்கோட்டுக்குள் பந்தை தடுத்து விட்டதாகக் கோரி ரஷீத் கானிடன் பந்தை அளிக்க அவர் த்ரோ செய்ய பவுண்டரி என்று நினைத்து எட் ஜாய்ஸ் 3-வது ரன்னை பூர்த்தி செய்யாமல் நிற்க ரன் அவுட் செய்யப்பட்டது. 3-வது நடுவர் உதவி இப்போட்டிகளுக்குக் கிடையாது. எனவே,

நடுவர் நபியிடம் கேட்ட போது தான் பவுண்டரிக்குள்தான் பந்தைப் பிடித்தேன் என்று சாதித்தார், பீல்டரின் வார்த்தைகளை நம்புவதைத் தவிர நடுவருக்கு இம்மாதிரி சூழ்நிலைகளில் வேறு வழியில்லை. நடுவரும் எட்ஜாய்ஸ் அவுட் என்றார்.

ஆனால் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று லைவ் ஆக உள்ளப் பந்தை அவர் எல்லைக்கோட்டிற்கு வெளியேயிருந்து தடுத்தது புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது, அதாவது பந்து பவுண்டரி, 4 ரன்கள்! 3-வது ஒருநாள் போட்டியில் 105 ரன்கள் எடுத்து அயர்லாந்துக்கு வெற்றி தேடித்தந்த எட்ஜாய்ஸ் இந்தப் போட்டியில் மோசடியாக ரன் அவுட் செய்யப்பட்டதால் அயர்லாந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேரிட்டது.

நபியிடம் விசாரணைக்குழுவினர் கேட்கும் போது அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து கிரிக்கெட் ஆட்ட நேர்மை உணர்வு எனும் நடத்தை விதிமீறல் பிரிவில் மொகமது நபிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிறகு, 5வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் எட் ஜாய்ஸ் 160 ரன்களை விளாசி பழிதீர்ப்பு வெற்றியை அயர்லாந்துக்குப் பெற்றுத் தந்ததோடு தொடரும் சமன் ஆனது.

http://tamil.thehindu.com/sports/மோசடி-அவுட்-செய்த-ஆப்கான்-வீரர்-மொகமது-நபிக்கு-ஐசிசி-கண்டிப்புடன்-எச்சரிக்கை/article8881655.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.