Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகுமா?

Featured Replies

ஆஸ்­தி­ரிய அர­சியல் அமைப்பு
ஈழத்தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வா­குமா?

இனப்­ப­கைமை அற்ற ஆஸ்­தி­ரி­யாவில் உரு­வான அதி­கா­ர­மற்ற சமஷ்டி முறையை இனப்­ப­கைமை கொண்ட இலங்­கையின் அர­சி­ய­லுக்கு தீர்­வாக்க முடி­யாது. ஆஸ்­தி­ரி­யாவில் காணப்­படும் சமஷ்­டி­முறை ஆட்சித் தீர்வை இலங்­கையின் இனப்­பி­ரச்­ச­ினை­கக்கு தீர்­வாக பரி­சீ­லிக்­கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அர­சி­யல்­வா­தி­களால் பேசப்­ப­டு­கி­றது. இத்­த­கைய ஆஸ்­தி­ரிய சமஷ்­டி­மு­றையின் மீது தற்­போது பத­வியில் இருக்கும் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தா­கவும் அவ்­வா­றான ஒரு தீர்­வைக்­காண அது தமிழ்த் தலை­வர்­க­ளுடன் உள்ளூர உரை­யாடி வரு­வ­தா­கவும் பேசப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் ஆஸ்­தி­ரிய அர­சியல் யாப்பைப் பற்­றிய புரிதல் இங்கு அவ­சி­ய­மா­னது.

ஆஸ்­தி­ரியா ஒரு சமஷ்­டி­முறை அர­சியல் யாப்பைக் கொண்ட நாடாக உள்­ளது. (Austrian Federal Constitution – German : Osterreichiche Bundesverfassung) உண்­மை யில் இது எழுத்து வடிவில் அப்­படி இருந்­தாலும் நடை­மு­றையில் இது ஓர் ஒற்­றை­யாட்சி முறையைக் கொண்ட நாடா­கவே விளங்­கு­கி­றது.

பார்­வைக்கு இது அமெ­ரிக்­காவை ஒத்த சமஷ்­டி­முறை அமைப்பைக் கொண்ட நாடு போல தோன்­றி­னாலும் இங்­குள்ள மாநில அர­சு­க­ளுக்கு மிகச் சிறி­த­ளவு சுயாட்­சியே உண்டு.

ஒற்­றை­யாட்­சி­முறை அர­சியல் யாப்பைக் கொண்ட நாடு­களில் பிர­தேச சுயாட்­சி­முறை கொண்ட அர­சியல் முறைகள் உண்டு. இதற்கு பிரித்­தா­னியா ஒரு முக்­கிய உதா­ர­ண­மாகும். அதே­வேளை தெளி­வான சமஷ்­டியும் அல்­லாத, முற்­றிலும் ஒற்­றை­யாட்­சியும் அல்­லாத ஆனால் நடை­மு­றையில் அரை சமஷ்­டி­முறை (Quasi Federal) கொண்ட நாடு­களும் உண்டு. இதற்கு இந்­தியா ஒரு முக்­கிய உதா­ர­ண­மாகும். ஆனால் அர­சியல் யாப்பில் முற்­றிலும் தெளி­வாக சமஷ்­டி­மு­றையைக் கொண்ட நாடு என்று எழு­தப்­பட்டு அதே­வேளை அது நடை­மு­றையில் பெரிதும் ஒற்­றை­யாட்­சி­மு­றையைக் கொண்ட நாடாக இருப்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் ஆஸ்­தி­ரி­யா­வாகும்.

ஆஸ்­தி­ரியா நிலப்­ப­ரப்பில் இலங்­கை­யை­விட சற்று பெரி­யது. ஆனால் சனத்­தொகையில் அது இலங்­கை­யை­விட இரண்­டரை மடங்கு சிறி­யது. ஆஸ்­தி­ரி­யாவின் தற்­போ­தைய மக்­கள் ­தொகை சுமா­ராக 86 இலட்சம். இலங்­கையின் தற்­போ­தையை மக்­கள்­தொகை 2 கோடியைத் தாண்­டி­யுள்­ளது.

ஆஸ்­தி­ரி­யாவில் மொத்தம் 9 மாகா­ணங்கள் அல்­லது மாநி­லங்கள் உள்­ளன. இங்கு 80 இலட்சம் மக்கள் ஆஸ்­தி­ரியன்- ஜேர்மன் மொழியை தாய்­மொ­ழி­யாகக் கொண்­டுள்­ளனர். மீதி 6 இலட்சம் பேரும் 8 மொழி­களை தனித்­த­னியே தாய்­மொ­ழி­க­ளாகக் கொண்­ட­வர்­க­ளாவர்.

இவர்­களில் அல­மேனிக் (Alemannic), ஆஸ்த்­ரோ-­பா­வோ­ரியன் (Austro – Bavorian) அடுத்த மட்ட முக்­கிய மொழி பேசு­ப­வர்­க­ளாக விளங்­கு­கின்­றனர். மேலும் சிறு­பான்மை மொழி­க­ளாக 6 மொழிகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இவற்றில் 3 பிராந்­திய மொழி­க­ளாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவை­யா­வன மொத்தம் 1000 பேரைக் கொண்ட அங்­கே­ரியன் மொழி பேசு­வோரும், 2.5 வீதத்­தி­னரைக் கொண்ட புர்­ஜி­யன்லேண்ட் கோஸியன் மொழி பேசு­வோரும், 0.3 வீதத்­தி­னரைக் கொண்ட ஸ்லோவின் மொழி பேசு­வோரும் உள்­ளனர். இவர்கள் செறிந்து வாழும் பிர­தே­சத்தில் தமது தாய்­மொழி உத்­தி­யோக மொழி­யாக பயன்­ப­டுத்த முடியும். இது மேற்­கூ­றப்­பட்ட 5 மொழி­க­ளுக்கும் பொருந்தும்.

ஆனால் ஆஸ்­தி­ரிய- ஜேர்மன் மொழியே நாடு தழு­விய உத்­தி­யோக மொழி­யா­கவும் தேசிய மொழி­யா­கவும், இணைப்பு மொழி­யா­கவும் (Lingva – Franca) செயல்­பூர்வ இரண்டாம் மொழி­யா­கவும் உள்­ளது.

ஆஸ்­தி­ரி­யாவில் வயது முதிர்ந்த மிகச் சிறு தொகை­யி­னரைத் தவிர அனை­வரும் ஆஸ்­தி­ரி­ய-­–ஜேர்மன் மொழியை பேசவும் அநே­க­மாக எழு­தவும் கற்­ற­வர்­க­ளாக உள்­ளனர். இவ்­வ­கையில் பார்க்கும் போது ஆஸ்­தி­ரியா மொழி­ரீ­தியில் ஒரு மொழித் தன்மை கொண்ட நாடா­கவே உள்­ளது. மேலும் இங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில் 2001ஆம் ஆண்­டு­வரை 74 வீதத்­தினர் ரோமன் கத்­தோ­லிக்­கர்­க­ளாகக் காணப்­பட்­டனர். ஆனால் தற்­போது ரோமன் கத்­தோ­லிக்கர் 60 வீதத்­தி­ன­ரா­கவும், பழை­மை­யான கிறிஸ்­த­வர்கள் 6 வீதத்­தி­ன­ரா­கவும், இஸ்­லா­மியர் 6 வீதத்­தி­ன­ரா­கவும், லூத்­தரன்ஸ் கிறிஸ்­த­வர்கள் 4 வீதத்­தி­ன­ரா­கவும் ஏனைய கிறிஸ்­தவ கிளை­யினர் அனை­வரும் சேர்ந்து 24 வீதத்­தி­ன­ரா­கவும் உள்­ளனர். இங்கு இஸ்­லா­மி­யரைத் தவிர ஏனைய அனை­வ­ருமே அடிப்­ப­டையில் கிறிஸ்­த­வர்­க­ளாவர்.

2001ஆம் ஆண்­டு­வரை இங்கு இஸ்­லா­மி­யர்­களின் மக்கள் தொகை 3 வீதத்­தி­ன­ராக இருந்­தது. ஆனால் கடந்த 15 ஆண்­டு­கா­ல­மாக ஆப்­கா­னிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களில் இருந்து புலம்­பெ­யர்ந்தோர் குடி­யே­றி­யதன் மூல­மாக இஸ்­லா­மிய மக்கள் தொகை 3 வீதம் அதி­க­ரித்­தது. அதே­வேளை ரோமன் கத்­தோ­லிக்­கத்தில் இருந்து மற்­றைய கிளை கிறிஸ்­தவ சபை­க­ளுக்கு மக்கள் மதம் மாற்றம் பெற்­றதன் மூலம் ரோமன் கத்­தோ­லிக்­கரின் மக்கள் தொகை 14 வீதம் மத­ரீ­தியில் குறைந்­தது.

எப்­ப­டியோ மொழி­ரீ­தி­யாக மிகப்­பெ­ரிய அளவு ஆஸ்­தி­ரிய- ஜேர்மன் மொழி பேசு­வோரைக் கொண்ட நாடா­கவும் மத­ரீ­தி­யாக 6 வீத இஸ்­லா­மி­யர்­களைத் தவிர அதுவும் சித­றுண்டு வாழும் இவர்­களைத் தவிர ஏனையோர் அடிப்­ப­டையில் கிறிஸ்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­வதால் ஆஸ்­தி­ரி­யாவை ஓரி­னத்­தன்மை (Homogeneous) கொண்ட நாடு என்றே ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

ஏறக்­கு­றைய ஓரி­னத்­தன்மை கொண்ட இந்த நாட்டில் சமஷ்­டி­மு­றை­யா­னது இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. 19ஆம் நூற்­றாண்டின் மத்­தியில் இருந்து இங்கு மாகா­ணங்­க­ளாக பிரிக்­கப்­பட்ட சமஷ்­டி­மு­றைக்­கான தோற்­றத்தை இனங்­கா­ணலாம். ஆனால் உண்­மையில் இந்த 9 மாகாண பிரிப்­புக்­களும் பிர­தேச ரீதி­யான நிர்­வாகத் தன்மை கொண்­ட­வை­யாக உள்­ள­ன­வே­த­விர அர­சியல் தன்மை கொண்­ட­வை­யாக இல்லை. அவற்­றிற்கு அவ்­வா­றான தேவையும் இல்லை.

பாது­காப்பு, வெளி­வி­வ­காரம், குற்­ற­வியல் சட்டம், பொரு­ளா­தாரம் சார்ந்த சட்டம், கல்வி, ஆய்­வியல், சமூக நலன், தொலை­தொ­டர்பு, சுகா­தார சேவை, நீதித்­துறை என்­பன முற்­றிலும் மத்­திய அர­சாங்­கத்தின் கையில் இருக்கும்.

அத்­துடன் காவல்­துறை அதி­காரம் அடிப்­ப­டையில் மத்­திய அர­சாங்­கத்­திற்கு உரி­யது. அது சமஷ்டி காவல்­துறை (Federal Police – Bundespolize) என அழைக்­கப்­படும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்டில் உள்­ளது.

புல­னாய்­வுத்­து­றை­யா­னது சமஷ்டி குற்­ற­வியல் காவல்­துறை (Federal Criminal Police Office – Bundeskriminal amp) பிரிவின் பொறுப்பில் உள்­ளது. அதே­வேளை சில மாந­கர சபைகள் தமது மாந­கர எல்­லைக்குள் மாந­கர காவல்­துறை (Municipal Police – Sladpolize) பிரிவைக் கொண்­டி­ருக்க முடியும். இதன்­படி எந்­தோரு மாநில அர­சாங்­கத்­திற்கும் காவல்­துறை மற்றும் புல­னாய்­வுத்­துறை, நீதி­மன்­றங்­களை வைத்­தி­ருக்கும் அதி­கா­ரங்கள் என்­பன இல்லை.

ஆஸ்­தி­ரி­யாவின் அர­சியல் யாப்பின்படி மத்­திய அர­சாங்கம் இரு­ச­பை­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தைக் கொண்­டி­ருக்கும். அவை தேசிய அவை (National Council), மாநி­லங்கள் அவை (Federal Council) என்ற இரு அவை­களைக் கொண்ட மத்­திய பாரா­ளு­மன்­ற­மாக (Federal Assembly) விளங்கும்.

இங்கு தேசிய அவை 183 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தா­கவும் அந்த உறுப்­பி­னர்கள் நாடு­த­ழு­விய விகி­தா­சார தேர்தல் முறை மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளாயும் அமைவர். மாநி­லங்கள் அவை 64 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தா­கவும் அந்த உறுப்­பி­னர்கள் மாநி­லங்­களின் சட்­ட­ச­பை­களால் தேர்ந்தெடுக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளா­கவும் அமைவர். மாநி­லங்­களின் மக்கள் தொகை அள­வுக்கு ஏற்ப ஒவ்­வொரு மாநி­லங்­க­ளுக்­கு­மான மாநி­லங்கள் அவை உறுப்­பி­னர்­களின் தொகை நிர்­ண­யிக்­கப்­படும். ஆகப்­பெ­ரிய மாநிலம் 12 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தா­கவும், ஆகச்­சி­றிய மாநிலம் 3 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தா­கவும் இதன் அளவு வேறு­பா­டுகள் உண்டு.

 

 

இதில் தேசிய அவையில் பெரும்­பான்மை பலத்தைப் பெறும் கட்­சியின் தலைவர் சான்­சி­ல­ராக (Chancellor) ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­டுவார். இவரே அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும் விளங்­குவார். அதே­வேளை மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் ஜனா­தி­பதி 6 ஆண்­டுக்­காலம் பதவி வகிப்பார். இவர் ஆகக்­கூ­டி­யது இவ்­வாறு இரண்டு முறை பத­வியில் இருக்க முடியும். இவரே அரசின் தலை­வ­ரா­கவும் விளங்­குவார். ஆனால் நடை­மு­றையில் பெரிதும் அதி­கா­ர­மற்ற ஒரு சம்­பி­ர­தா­ய­பூர்வ தலை­வ­ரா­கவே இருப் பார்.

மத்­திய அரசின் இரு­ச­பை­களில் தேசிய சபையே பல­மான அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்கும். மாநி­லங்கள் அவை அதி­கா­ரங்கள் அற்ற ஒன்­றா­கவே உள்­ளது. சட்­டங்­களை முன்­மொ­ழி­வதில் நடை­முறை ரீதி­யாக அமைச்­ச­ர­வையே அதி­காரம் உள்­ள­தாக விளங்­கு­கி­றது. அமைச்­ச­ரவை முன்­மொ­ழியும் சட்­ட­மூ­லங்கள் தேசிய அவைக்கு முதலில் சமர்ப்­பிக்­கப்­படும்.

அங்கு நடை­மு­றையில் ஒரு சம்­பி­ர­தா­ய­பூர்வ விவாதம் நிக­ழுமே தவிர செயலில் அமைச்­ச­ர­வையின் சட்­ட­மூ­லத்தை எப்­போதும் தேசிய அவை ஏற்­றுக்­கொள்­வதே வழக்­க­மாக உள்­ளது. பின்பு இது மாநி­லங்கள் அவைக்கு சமர்ப்­பிக்­கப்­படும் போது அதனை மாநி­லங்கள் அவையால் ஆகக்­கூ­டி­யது 8 வாரங்கள் தாம­திக்க முடி­யு­மே­த­விர அதனை அவர்­களால் தடுக்க முடி­ யாது.

மாநி­லங்கள் அவையின் மொத்த உறுப்­பி­னர்­களில் 3இல் ஒரு பங்­கி­னரின் ஆத­ர­வுடன் ஒரு சட்­ட­மூ­லத்தை மாநி­லங்கள் அவையால் முன்­மொ­ழிய முடி­யு­மா­னாலும் 1945ஆம் முதல் இன்­று­வரை அப்­ப­டி­யொரு சட்­ட­மூலம் தானும் அதனால் முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை. ஏனெனில் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றும் அதி­காரம் நடை­மு­றையில் முற்­றிலும் தேசிய அவையின் கையி­லேயே உள்­ளது.

மாநி­லங்கள் அவையால் ஒரு சட்­ட­மூலம் நிரா­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து அவை வரை­ய­றுக்­கப்­பட்ட குறைந்­த­பட்ச எண்­ணிக்­கையைக் கொண்ட உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் மீண்டும் நிறை­வேற்­றினால் அது இறு­தியில் ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் சட்­ட­மா­கி­விடும். ஜனா­தி­பதி இதில் ஒரு சம்­பி­ர­தா­ய­பூர்வ கையெ­ழுத்­திடும் அதி­காரம் கொண்­டவர் மட்­டுமே.

பொரு­ளா­தாரம், கலா­சாரம், மொழி சம்­பந்­த­மான அனைத்­திலும் மத்­திய அர­சாங்­கமே தனிப்­பெரும் அதி­காரம் மிக்­க­தாக உள்­ளது. இந்­த­வ­கையில் ஒருத்­தன்­மை­யான மத்­திய அரச மைய (Unipolar) அதி­காரம் கொண்­ட­தாக ஆஸ்­தி­ரிய அர­சியல் யாப்பின் நடை­முறை காணப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய மத்­திய அரசின் கீழ் மொத்தம் 9 மாநி­லங்கள் உள்­ளன. இம்­மா­நி­லங்கள் ஒரு சபை ஆட்­சி­மு­றையைக் (Unicameral) கொண்­ட­வை­யாகும். ஒவ்­வொரு மாநி­லமும் தமக்­கென சொந்த அர­சியல் யாப்பை உரு­வாக்க முடியும். இம்­மா­நி­லங்கள் கண்­டிப்­பாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்ட அவை­யாக விளங்க வேண்டும் என்­பது யாப்பின் விதி­யா கும்.

அமெ­ரிக்க யாப்­பின்­படி அங்கு மாநில அரசுகள் தமக்கென யாப்புக்களை உரு வாக்கலாம் என்று இருப்பதுபோல ஆஸ் திரிய யாப்பில் மாநிலங்களின் அதிகாரம் காணப்பட்டாலும் இந்த மாநிலங்கள் நடைமுறையில் வெறும் நிர்வாக பிரிவுகள் போல் காணப்படுகின்றனவே தவிர அரசியல் அதிகாரத்திற்கு வாய்ப்பில்லை. மத்திய அரசு தன் கையில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துக்கொண்டு அவை தவிர்த்த ஏனைய விடயங்களில் மாநிலங்கள் தமக் கென யாப்புக்களை உருவாக்கலாம் என்று இருப்பது மாநகர சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்ததாகவே உள்ளது.

பொருளாதாரம், கலாசாரம், மொழி, கல்வி, நீதி, பொலிஸ் அதிகாரம், தகவல் தொடர்பு என அனைத்தும் மத்திய அரசின் கையில் இருக்கும்போது மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரம் என்பது உளவியல் ரீதியான ஒரு திருப்தியையும், நிர்வாக ரீதியான அதிகாரங்களையும் தவிர அது வேறெதனையும் கொண்டிருக்கவில்லை.

ஆதலால்தான் பெயருக்கு சமஷ்டியும், நடைமுறையில் வலுவான ஒற்றையாட்சி முறையையும், அதிகாரமற்ற பெயரளவி லான மாநிலங்களையும் கொண்ட ஓர் ஆட்சிமுறையைப் பற்றி தமிழ்த் தரப்பின ருக்கு ஆளும் சிங்கள தரப்பினர் உபதேசிக்கத் தொடங்கியுள்ளனர் போல் தெரிகிறது.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=30/07/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.