Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள்!

Featured Replies

30 வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள்!

தமிழ் மக்கள் 30 வருட காலம் அதாவது தோற்றுப்போன திம்புப் பேச்சுவார்த்தைக் காலத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது உரிமை பற்றிக் கதைப்பதற்கு தற்போது எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் இல்லையென அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராதனது கட்டுரையில்  தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது,

நான் அண்மையில் நன்றாகச் சிங்களம் பேசக்கூடிய முதியவர் ஒருவரைச் சந்தித்திருந்தேன். இதன்போது, அவர் நன்றாகச் சிங்களம் கதைப்பதன் பின்னணி குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பதவி வகித்ததாகவும், தான் குருநாகல், கழுத்துறை தெற்கு, காலி மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வேலைசெய்ததாகவும், அதனால் 40 வருட அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியின் மாற்றம் தொடர்பாக அவரிடம் வினவினேன். அதற்கு, ஜனநாயக வாழ்வின் மறுசீரமைப்புத் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், இது ஒரு ராட்டினம் விளையாட்டைப் போன்றது. இதனுடைய ரிக்கற் விற்பனையாளரும் றைவரும் மாறியுள்ளனர். அவர்கள் ஏதோ புதியதுபோல் வர்ணம் பூசியுள்ளனர்.  எனத் தெரிவித்தார்.

அப்படியானால், மாற்றமெதுவும் நடக்கவில்லையென நீங்கள் கருதுகிறீர்களா? என நான் வினவியபோது, எல்லாமே ஒரோமாதிரியே நடைபெறுகின்றது. நாங்கள் திரும்பத் திரும்ப பழைய பாதையிலேயே பயணிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

நான் அண்மையில் இரண்டு தடவைகள் வடக்குக் கிழக்கிற்குப் பயணம் செய்துள்ளேன். போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்கள்  முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென விரும்புகின்றனர். ஆனால் கொழும்பில் வாழும் தமிழர்கள் இதனை வேறு மாதிரியாக உணர்கின்றனர். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி சிறீலங்கா அரசாங்கம் எப்போதுமே வடக்கையும் கிழக்கையும் ஒரு முரண்பாடுகளின் முக்கோணமாகவே வைத்துள்ளது.

தமிழர் மீதான அடக்குமுறைகள் தமிழர் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததிலிருந்தே  ஆரம்பிக்கின்றது. இருப்பினும், விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தத்தினாலும் இதனை  அடையமுடியவில்லை. வடக்குக் கிழக்கில் இந்தப் போர் இரத்தம் தோய்ந்த வரலாற்றை மாத்திரமே விட்டுச் சென்றுள்ளது.

இதில் உயிர் பிழைத்தவர்கள் 30 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தோற்றுப்போன திம்புப் பேச்சுவார்த்தை சகாப்தத்துக்கு மீண்டும் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தமிழருக்கான தாயகம் பற்றிக் கதைப்பதற்கோ அல்லது தமிழர் தேசமோ, ஆகக்குறைந்தது ஒரு மத்திய மாநில ஆட்சியைப் பற்றிக் கதைப்பதற்கு எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளும் இல்லை என அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=39476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.