Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்?

Featured Replies

முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் வழக்கமான அரசுப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. 

400_08132.jpg

இந்நிலையில், இனி முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். 

http://www.vikatan.com/news/politics/69564-o-panneerselvam-to-sign-on-files-for-chief-minister.art

  • தொடங்கியவர்

வந்துட்டேன்னு சொல்லு...பழைய பன்னீர்செல்வமா வந்துட்டேன்னு சொல்லு!

Ops%2005.jpg

முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் 'முக்கிய' பதவிக்கு ப்ரொமோட் ஆகியிருக்கிறார் ராஜ விசுவாசி ஓ.பி.எஸ். தலைமைக்கு சிக்கல் வரும்போதெல்லாம் இப்படி 'சூப்பர் சப்ஸ்டிடியூட்' ஆவது ஓ.பி.எஸ்-ஸின் வழக்கம். வரலாறு இப்படி யூ டர்ன் போட்டுத் திரும்பும்போதெல்லாம் சில காட்சிகளும்கூடவே தொற்றிக்கொண்டு ஓடிவரும். அவற்றின் சின்ன லிஸ்ட்தான் இவை.

* பாசிட்டிவோ, நெகட்டிவோ எப்போதும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருப்பார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். இதை வைத்துதான் தலைமையும் 'உள்ளே வெளியே' ஆடும். ஆனால் இப்போது ஜெ. சிகிச்சையில் இருப்பதால் பூஜை புனஸ்காரங்களைத் தவிர வேறு எந்தப் பராக்கிரமங்களையும் வைத்துக்கொள்ளாமல் அடக்கி வாசிப்பார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். 'வாவ், இவரோட தலைமையில் அமைச்சருங்க அடக்கமா இருக்காங்களே' என்ற குட்நேம் ஓ.பி.எஸ்-ஸுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

* தமிழ்ப் படம் கேங் போல தமிழக அமைச்சரவையிலும் ஒரு கேங் உண்டு. அ.தி.மு.க-வில்தான் எந்தக் காட்சியுமே நிரந்தரம் இல்லையே. ஸோ, அந்த கேங்கும் மாறுதலுக்குட்பட்டதுதான். கேங் லீடர் ஓ.பி.எஸ்-ஸுக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதால் பழைய பாசத்தில் கேங் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. டைமிங் குறியீடாக யுவன் வேறு 'Boys are back'பாட்டைப் போட்டிருக்கிறார். இதில் சிலிர்த்துப்போய் 43 கேங் ஆதிக்கம் திரும்ப வர வாய்ப்பிருக்கிறது.

Ops%2007.jpg

* சும்மாவே சட்டமன்றம் ஆஸ்திரேலியா - நமீபியா டி20 போல ஒன்சைடாகத்தான் நடக்கிறது. இப்போது பவர் சென்டரும் இல்லாததால் குபீர் சடீர் நடவடிக்கைகள் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. 'எதுக்கு நடத்திக்கிட்டு?' என்ற சலிப்புதான் இருக்கும். 'சிக்குச்சு பாரு சான்ஸு' என இதைவைத்தே கிடைக்கும் கேப்பில் எல்லாம் அறிக்கைக் குண்டு போட்டு அதிரடிப்பார் கருணாநிதி.

* ஜெ. ஆக்டிவாக இல்லாதபோதுதான் அம்மா புகழ் அதிகமாக ஒலிக்கும். அதன்படி இனி சில நாட்களுக்கு ஆக்கப்பூர்வமாக வேலைகள் நடக்கிறதோ இல்லையோ, 'அம்மா புகழ்' கண்டிப்பாகப் பாடுவார்கள் அமைச்சர்கள். சட்டைப்பையில் அம்மா படம், அம்மா படம் போட்ட பட்ஜெட் பெட்டி என சகலமும் அம்மா மயம்தான்.

* வெள்ளமோ வெயிலோ, மந்தமாக இயங்கும் அதிகார மட்டத்தை ஓப்பனாக விமர்சனம் செய்து வந்தார்கள் மக்கள். இப்போது, 'அவர் கையிலேயும் முழு அதிகாரம் இல்லைல, என்னதான் பண்ணுவார்? பாவம்ங்க அவரு' என அனுதாப ஓட்டுகளை அள்ளுவார் ஓ.பி.எஸ். ஒருவேளை சலிக்காமல் அவர் சூப்பர் சப்ஸ்டிடியூட்டாகத் திரும்பத் திரும்ப களத்தில் இறங்க இதுதான் காரணமோ என்னவோ?

Ops%2004.jpg* வார்டு கவுன்சிலர் கூட தெருவிளக்கு உபயம் என கரன்ட் கம்பத்தில் தன் பெயரை பச்சை குத்திக் கொள்ளும்போது நான்தான் டாப் என்பதை கொஞ்சம் கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் அநியாய அடக்கமாய் வலம் வருவார் ஓ.பி.எஸ். நுனி நாற்காலியில் அமரும் அளவிற்கான தன்னடக்கம் அது. சட்டம் அனுமதித்தால் அம்மா மாஸ்க் அணிந்துகொண்டு அவர் வேலை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது. 

* எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ. என கடந்த 30 ஆண்டுகளில் பேர் சொல்லும் திட்டங்களை(?) அளித்த தலைவர்களுக்கு மத்தியில் ஓ.பி.எஸ் பேரில் ஒரு பக்க அறிக்கை.. அட துண்டு சீட்டு கூட இதுவரை வெளியானதில்லை. இந்த சுயநலமற்ற சூப்பர் குவாலிட்டியை இந்த முறையும் கரெக்ட்டாக பின்பற்றுவார். 

* அரசு சார்பில் வரும் வாழ்த்துகள்தான் அல்ட்டிமேட்டாய் இருக்கும். 'மாண்புமிகு இதயதெய்வம் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தீபாவளி வாழ்த்துகள்' என அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே பொங்கல் வந்துவிடும். அதே டெம்போவில் பொங்கல் வாழ்த்தை ஆரம்பித்தால் தமிழ்ப் புத்தாண்டு வந்துவிடும். அப்புறம் உழைப்பாளர் தினம், சுதந்திர தினம் என அப்படியே போக வேண்டியதுதான்! 

http://www.vikatan.com/news/miscellaneous/69516-a-satire-on-the-comeback-of-ops.art

  • தொடங்கியவர்

ஓ.பி.எஸ்ஸை பின்தொடரும் எடப்பாடி பழனிச்சாமி!  -மூவரணியின் விஸ்வரூபம்

edapadi600_15055.jpg

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். ' தற்போது முதல்வரின் துறைகளை கவனித்து வரும் ஓ.பி.எஸ்ஸை கண்காணிப்பதுதான் எடப்பாடிக்கு முழுநேர வேலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு அலுவல்களை கவனிப்பதற்காக பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பேசி வந்தன. இதுகுறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவும் தீவிரமாக ஆலோசனை செய்தார். இறுதியாக, 'முதல்வரின் துறைகளை மட்டும் அமைச்சர் ஒருவருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம்' என்று பேச்சுக்கள் வந்தபோது, 'எடப்பாடியை நியமிக்குமாறு' கோரிக்கை வைத்தார் சசிகலா. ஆளுநரோ, ' அவை முன்னவர் என்ற அடிப்படையிலும் முதல்வருக்கு அடுத்தபடியாக புரோட்டோகால்படி ஓ.பி.எஸ்தான் இருக்கிறார். அவரே முதல்வரின் துறைகளை கவனிக்கட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். ஆளுநரின் இந்த அதிரடியை சசிகலா உள்ளிட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

'எடப்பாடி பழனிச்சாமி மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை?' 

அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " வன்னியர்கள் அதிகம் நிறைந்திருக்கும் எடப்பாடி தொகுதியில் வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கு, தேர்தலில் முக்கியத்துவமான வெற்றிகள் கிடைத்ததில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியின் பக்கமே நின்றார். எடப்பாடியின் தீவிர அரசியலுக்குத் தொடக்கத்தைக் கொடுத்தவர் செங்கோட்டையன். கட்சிக்குள் முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியதும், செங்கோட்டையனை ஓரங்கட்டினார். ' தன்னைத் தவிர சேலம் மாவட்ட அரசியலில் யாரும் கோலோச்சிவிடக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார். கட்சியின் சீனியர்களான எஸ்.கே.செல்வம், விஜயலட்சுமி பழனிச்சாமி எனப் பலரும் அமைதியாக இருக்கின்றனர். தனக்கு நெருக்கமான வெங்கடாசலத்தை மாநகர் மா.செவாக கொண்டு வந்தார்.  

"முதல்வர் மீது காட்டிய விசுவாசத்துக்காகத்தான், 1989-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எடப்பாடிக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டு வந்தது. அதிலும், 89 மற்றும் 91  ஆகிய இரண்டு தேர்தல்களில் மட்டுமே வென்றார். அதன்பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இடைப்பட்ட காலத்தில் ஆவின் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். சட்டமன்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், ஒவ்வொரு எம்.பி தேர்தலிலும் எடப்பாடியின் பெயர் லிஸ்ட்டில் வந்துவிடும். திருச்செங்கோடு மக்களவைத் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு, ஒரே ஒருமுறை வென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்த கையோடு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. இதற்கு முக்கியமான காரணம், சேலத்தில் அ.தி.மு.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுதான். கடந்த தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10-ல் அ.தி.மு.கவுக்கு வெற்றி கிடைத்தது. சசிகலாவின் பூரண ஆசீர்வாதமும் எடப்பாடிக்கு கிடைத்தது. அதன்பிறகு, அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டபோதும், எடப்பாடியின் முக்கியத்துவம் குறையவில்லை. 

edapadi1_15299.jpg

அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர் காட்டி வந்த நேர்மையால், பதவிக்கு பங்கமில்லாமல் பார்த்துக் கொண்டார். அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், ஓ.பி.எஸ், பழனியப்பன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மீது கார்டன் கோபம் திரும்பியது. அவர்களைப் பற்றி தலைமைக்குக் கூடுதல் தகவல்களைக் கொடுத்ததே, எடப்பாடிதான் என்ற பேச்சும் இருக்கிறது. அதற்கு விசுவாசகமாகத்தான், ஓ.பி.எஸ் வகித்துவந்த பொதுப் பணித்துறை எடப்பாடியின் கைக்குத் திரும்பியது எனவும் சொல்கின்றனர். இன்றைய தேதியில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி, தங்கமணி, வேலுமணி என மூன்று முக்கிய அமைச்சர்களும் சசிகலாவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றனர். தேர்தல் உள்பட கொடுக்கப்படும் அசைன்மெண்ட்டுகளைத் தெளிவாக முடித்துக் கொடுப்பதுதான் மிக முக்கியமான காரணம். தலைமைச் செயலாளரை விடவும் எடப்பாடி மீது அதிக நம்பிக்கையோடு இருக்கிறார் சசிகலா" என்றார் அவர். 

"தொடக்ககாலத்தில் சசிகலாவால் முன்னிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ், தற்போது மன்னார்குடி உறவுகளால் வெறுக்கப்படுகிறார். கட்சியில் அவர் முன்னிறுத்தப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான், கவர்னரை சந்திப்பதற்காக ஓ.பி.எஸ் செல்லும்போது, அருகில் எடப்பாடியும் அமர வைக்கப்பட்டார். தலைமைச் செயலகத்துக்கு ஸ்டாலின் வந்தபோதும், எடப்பாடி வரவேற்கிறார். நிதியமைச்சர் எங்கு சென்றாலும், நிழல் போலவே பின் தொடர்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர். இதையும் ஒரு வகையில் வரவேற்கிறார் ஓ.பி.எஸ். ' தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்' என அமைதியாக இருக்கிறார். முதல்வரின் அதிகாரங்கள் நிதியமைச்சர் கைவசம் இருந்தாலும், எடப்பாடிதான் அனைத்து பணிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். கோட்டையில் அவரது ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது" என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.  

ஐவரணி என்ற பெயரில் கடந்த ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்களை, ஆட்சியின் முடிவில் களையெடுப்பைத் தொடங்கினார் ஜெயலலிதா. தற்போது மூவரணி என்ற பெயரில் ஆதிக்கம் தொடங்கியிருக்கிறது. ஆட்சியின் முடிவில்தான் இதற்கும் விடை கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

 

http://www.vikatan.com/news/tamilnadu/69625-is-edapadi-palanisamy-monitoring-ops.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.