Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!

Featured Replies

கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!

 

p42a.jpg

‘ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து...  பத்திரம்... ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன.    லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது. அவரது உடல்நலம் தேறிவர வேண்டும் என தமிழகமே பிரார்த்திக்கிறது. லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் என டாக்டர்கள் படையெடுத்தபடியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தமில்லாமல் ஒரு காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம். அடுத்து நான் சொல்லப்போகும் தகவல் அ.தி.மு.க-வின் உள் வட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னது.

‘சில சொத்துக்களைக் கை மாற்றும் காரியங்கள் ரகசியமாக நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்பதுதான் அவர் சொல்வது.”

‘‘அதிர்ச்சியாக இருக்கிறதே!’’

‘‘ஹைதராபாத் ஜிடிமேட்லா ஏரியாவில் சுமார் 15 ஏக்கர் விவசாய நிலத்தை 1968-ம் ஆண்டு ஜெயலலிதா வாங்கினார். அப்போது அதன் மதிப்பு 1.78 லட்சம் ரூபாய். ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. இப்போது இந்த சொத்தின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டிவிட்டது. தேர்தல் கமிஷனில் ஜெயலலிதா தாக்கல்செய்த வேட்புமனுவில்கூட இந்த சொத்தின் மதிப்பு ரூ.14.44 கோடி எனச் சொல்லியிருக்கிறார். இதே போல் ஹைதராபாத் நகர் காலனியில் ஜெயலலிதாவும் அவருடைய தாயாரும் சேர்ந்து 651.18 சதுர மீட்டர் கட்டடத்தை 1967-ல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பு ரூ.5.03 கோடி.

P42.jpg

ஜெயலலிதா தற்போது வசிக்கும் வீட்டின் பரப்பு 10 கிரவுண்ட். 1967-ம் ஆண்டு இந்த இடம் 1,32,009 ரூபாய்க்கு ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் வாங்கப்பட்டது. இப்போது மதிப்பு ரூ.43.96 கோடி. அதே போயஸ் கார்டன் ஏரியாவில் இன்னொரு இடமும் ஜெயலலிதாவுக்கு உண்டு. 1.5 கிரவுண்ட் பரப்புகொண்ட அந்த இடத்தை 1991-ம் ஆண்டு 10.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் ஜெயலலிதா. இதன் தற்போதைய மதிப்பு ரூ.7.83 கோடி. இந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்பது தேர்தல் கமிஷனில் காட்டிய கணக்கு. ஆனால், சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகம். இந்த சொத்துகளை முன் வைத்துத்தான் காரியங்கள் நடக்க  ஆரம்பித்துள்ளதா எனத் தெரியவில்லை!”

‘‘இதெல்லாம் சாத்தியமா?”

‘‘இந்தக் கேள்வியை அந்த

அ.தி.மு.க புள்ளியிடம் கேட்டேன். ‘ஜெயலலிதா பேசினார். உணவு சாப்பிட்டார். எழுந்து உட்கார்ந்தார்’ என செய்திகள் வருவதைக் கவனித்தீரா? அப்போலோவின் லேட்டஸ்ட் அறிக்கைகளிலும் இது வெளிப்படுகிறது. இதன் பின்னணியையும் இந்த தகவலையும் வைத்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.’’ 

‘‘ஓஹோ!’’

‘‘மன்னார்குடி ஆட்களின் மூவ் பற்றித்தான் கட்சிக்குள் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிப்பதற்காக ராஜாத்தி அம்மாள் போனார். ஆனால், இந்த செய்திக்குப் பின்னணியும் உண்டு என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். சசிகலா அழைத்துதான் ராஜாத்தி அம்மாள் போனாராம். தி.மு.க. தரப்பில் இருந்து தங்களுக்கு எந்த வகையிலும் இடைஞ்சல் தரக்கூடாது என்பதுதான் சசிகலாவுக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தமாம் எனச் சொல்லி அதிர வைக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு மன்னார்குடியினருக்கு எந்த அதிகாரமும் இருக்காது. அதனால், பிறகு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை மூவ்கள் நடக்கின்றன. ராகுல் விசிட்டைக்கூட அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு தூண்டுதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவரே இருந்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘ஜெயலலிதாவின் சொத்துக்களைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றனவா?’’

‘‘அப்படித்தான் கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக் கணக்கைக் காட்டியிருந்தார். வங்கி, நிதி நிறுவன இருப்புகளைப் பொருத்தவரை ரூ.2.50 கோடி மதிப்பு முதலீடுகள் மற்றும் பாண்டுகளும் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட 24 வங்கிக் கணக்குகளில் 9.80 கோடி ரூபாயும் இருக்கின்றன. இதுதவிர சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.2.47 கோடி உள்ளது. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் ரூ.22.09 கோடியும் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் ரூ.1.37 கோடியும் கொடநாடு எஸ்டேட்டில் ரூ.3.14 கோடியும் ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட்டில் ரூ.2.76 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதுதவிர மகேந்திரா ஜீப், மகேந்திரா பொலிரோ, டெம்போ டிராவலர், சுவராஜ் மஸ்டா மேக்ஸி, கான்டசா, டெம்போ ட்ராக்ஸ், இரண்டு டொயோட்டோ பிராடோ கார்கள் என 8 வாகனங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா பயன்படுத்தும் காரின் பெயர் டொயோட்டோ எல்.சி 200. இதன் விலை ரூ.1.45 கோடி. டி.என்.09 பி.ஈ 5969, டி.என்.09 பி.ஈ 6167 ஆகிய இரண்டு பதிவெண் கொண்ட டொயோட்டோ எல்.சி 200 கம்பெனி கார்கள் பயன்படுத்துகிறார். இதுதவிர டி.என்.09 பி.எக்ஸ் 3737 என்ற டொயோட்டோ எல்.சி 200 புத்தம் புது காரைப் பயன்படுத்தி வருகிறார். இது ஜெயா பப்ளிகேஷேன் பெயரில் இருக்கிறது. 21280.300 கிராம் தங்கம் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதோடு ரூ.3.12 கோடி மதிப்புகொண்ட 1,250 கிலோ வெள்ளி பொருட்களும் இருக்கின்றன. செய்யூர் கிராமத்தில் விவசாய நிலம், சென்னை பார்சன் மேனர் மற்றும் மந்தைவெளி ஏரியாக்களில் இடம் என மேலும் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. தேர்தல் கமிஷனில் கொடுத்த கணக்குப்படி பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இருக்கிற ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 120 கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், சந்தை மதிப்பைக் கணக்கிட்டால் பல மடங்கு அதிகம். இந்த சொத்துக்கள் சிலரது கண்ணுக்கு முக்கியமானதாகத் தெரிய ஆரம்பித்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்து ஜாமீனில் இருந்தபோது

ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழக அரசு செயல்படவே இல்லை. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்து தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காகவே அம்மா குழந்தைகள்  பெட்டகம், புதிய பஸ்கள் தொடக்கம் என நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. அவ்வளவு ஏன்... முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்துக்கூட தெரிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் கண்ணீரோடு பதவி ஏற்றார்கள். எந்தப் புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை. முதலீட்டாளர்கள் மாநாடுகூட ஜெயலலிதாவுக்காகத் தள்ளிப்போனது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்காக அரசை முடக்கி வைத்திருந்தார்கள். அன்று ஜெயலலிதா ஜாமீனில் இருந்தபோது ஏற்பட்ட நிலைதான் கிட்டத்தட்ட இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதற்காக அரசு முடங்கிவிடவில்லை என்பதுதான் ஆச்சர்யம். மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக அறிக்கை வெளியிட்டார்கள். அவர் மருத்துவமனையில் இருந்தபோதுதான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தார்கள். அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்களும் அதற்காக நான்கு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன. காவிரிக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொய்வில்லாமல் அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடக்கிறதா என்கிற சந்தேகம் கட்சிக்குள் நிலவுகிறது. ஜாமீனில் இருந்தபோது அரசை முடக்கியவர்கள் இப்போது மட்டும் வேகத்தைக் காட்டுவது ஏன் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள். ‘அம்மாவை எதிர் பார்க்காமல் காரியங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்று சொல்கிறார்கள்” என்று நிறுத்திய கழுகாரிடம், ‘‘காவிரிக்காக தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றி செய்தி உண்டா?’’ என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘காவிரிக்காகக் கூடிய அந்தக் கூட்டம் மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது திருமாவளவனின் விருப்பம். சி.பி.ஐ. கட்சியின் செயலாளர் முத்தரசனும்கூட அந்த யோசனையில்தான் இருந்தார். ஆனால், வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் கலந்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால், மக்கள் நலக் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கடைசியில் திருமாவளவன் கலந்துகொள்ளாமல் போனாலும் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஸ்டாலின், ‘உங்களின் உள்ள நிலை - உண்மை நிலையைப் புரிந்துகொண்டேன்’ என பதில் அனுப்பியிருந்தார். ‘உள்ள நிலை - உண்மை நிலை’ என ஸ்டாலின் பொடி வைத்ததிலேயே மக்கள் நலக் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது புரிந்தது.”

‘‘ஆமாம்!”

p42b.jpg

‘‘திருமாவளவன் ஸ்டாலினுக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து மக்கள் நலக் கூட்டணியில் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி இதேப் போல நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ம.ந.கூ தலைவர்கள் இந்தக் கூட்டத்தை மட்டும் புறக்கணித்ததற்குக் காரணம் உண்டாம். அக்டோபர் 6-ம் தேதி கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க கூட்டவில்லை. அப்படி கூட்டப்பட்டிருந்தால் ம.ந.கூ புறக்கணித்திருக்க முடியாதாம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் பொது இடத்தில் கூட்டாமல் அறிவாலயத்தில் நடத்தியதும் புறக்கணிப்புக்குக் காரணமாம். ‘தி.மு.க ஆதாயம் அடையப் பார்க்கிறது’ என வைகோ உறுதியான முடிவுக்கு வந்ததற்கு காரணமே, அறிவாலயத்தில் கூட்டியதுதான். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007-ல் வெளியான போது மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் அங்கம் வகித்தது. அந்தக் காலகட்டத்தில், தீர்ப்பை அரசிதழில் வெளியிடவோ, காவிரி ஒழுங்காற்று வாரியம் அமைக்கவோ தி.மு.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது தி.மு.க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டது என வைகோ உறுதியாக இருந்தார். அதைவிட முக்கியமாக தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ம.ந.கூ தலைவர்கள் கருதினர்.’’

‘‘ம்.’’

‘‘திருமாவளவன் இதை தமிழக மக்கள் நலன் சார்ந்து கூட்டப்படும் கூட்டமாகப் பார்த்தார். அதனால், அதில் பங்கேற்க நினைத்தார். அதை ம.ந.கூ தலைவர்களிடமும் வலியுறுத்தினார். ‘அறிவாலயத்தில் நடத்துவது சரியா?’ என அவர்கள் கேட்டதற்கு திருமாவளவனிடம் பதில் இல்லை. அதன்பிறகு, வேறு வழியில்லாமல் அவரும் தி.மு.க-வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தார். உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்தப் பதவியிடங்களுக்கு தனி அலுவலரை நியமிப்பது தொடர்பாகக் கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்து சில நாட்கள் ஆவதற்குள் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் அவசரமாகக் கூடுவதற்கு ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்தான் காரணம். காவிரி விவகாரம் தொடர்பாக அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம்’’ என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்.

அட்டைப்படம்: கே.ராஜசேகர், படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்


வசூல் வேட்டை!

ள்ளாட்சித் துறையின் முக்கிய வி.ஐ.பி. ஒருவர் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேற ஆன்மிகப் பிரார்த்தனை நடத்தவேண்டும் என்று ரேட் நிர்ணயித்திருக்கிறார். சென்னையில், ஒரு மண்டலத்துக்கு ரூ. ஐந்து லட்சம் வீதம் வசூல் வேட்டை நடந்ததாம். மொத்தம் 15 மண்டலங்களில் இருந்து ரூ. 75 லட்சம் கலெக்‌ஷன் ஆனதாம். ஒரேயொரு இடத்தில் மட்டும் சின்ன லெவலில் பிரார்த்தனை நடத்திவிட்டு, மொத்தத்தையும் ஸ்வாகா போட்டுவிட்டாராம் அந்த உள்ளாட்சி வி.ஐ.பி.

அப்போலோ... அட்மிட்... தேவா!

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த தேவா என்ற தெய்வேந்திரனை, சென்னை மாநகராட்சித் தேர்தலில், 136-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அறிவித்தது அ.தி.மு.க! இந்த நிலையில், அப்போலோவில் சிகிச்சைக்காக அட்மிட் ஆன தேவாவின் நடவடிக்கைகள் கட்சிக்குள் அதிர்வைக் கிளப்பின. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி. அக்டோபர் 23-ம் தேதி தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய தேவா, ‘நான் எது சொன்னாலும் சின்னம்மா கேட்பாங்க. கூடிய சீக்கிரம் நான் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்துவிடுவேன். யாருக்கு என்ன பதவி வேணும்னு சொல்லுங்க. நான் வாங்கித் தருகிறேன்’ எனப் பேசியது கட்சி அலுவலகத்துக்குப் புகாராகப் போயிருக்கிறது.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.