Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்ட நரிகள் இரண்டு!

Featured Replies

மாவீரர் நாளை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்ட நரிகள் இரண்டு!

2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக நடந்தேறி முடிந்திருக்கிறது.

மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றுமுடிந்தாலும் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீதான விமர்சனங்களும் சரமாரியாக காணப்பட்டுவருகின்றன.

உண்மையில் கிழக்கிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வே மிகக்கூடுதலாக அவதானிக்கப்பட்டதாக தெரிகிறது.

நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளில் தங்கள் உறவுகளுக்கு அவர்கள் விதைக்கப்பட்ட மண்ணில் சுடரேற்றுகின்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்தார்கள்.

ஆன போதிலும் அந்த நிகழ்வுகளில் தங்கள் பிள்ளைகளுக்காக திரண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அழைப்புக்காகத் திரண்டதாகத் தோற்றம் காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

அதாவது, துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இவற்றில் குறிப்பாக கனகபுரம், முழங்காவில் மற்றும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான சுடர் ஏற்றியிருந்தனர்.

துயிலும் இல்லங்களுக்கு திரண்டிருந்த பெற்றோரிலோ உறவினர்களிலோ தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மாவீரர்கள் மூவர் அல்லது நால்வரை விடுதலைக்காகக் கொடுத்தவர்களே கூடுதலாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையேனும் பிரதான சுடர் ஏற்றவைத்துவிட்டு அதற்கு துணையாக அரசியல் பிரமுகர்கள் நின்றிருக்கலாம் என்பது தான் அனைவரது அங்கலாய்ப்பாகவும் ஏதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது.

இந்த இடத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜனநாயகப் போராளிகள் நடந்துகொண்டவிதம் அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. மாவீரர்களின் தாயார் ஒருவரே பிரதான சுடர் ஏற்றியிருக்கிறார். இந்த இடத்தில் தான் ஜனநாயகப் போராளிகள் தாங்கள் முன்னாள் போராளிகள் தான் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகளோ அரசியல் ஆதாயத்துக்காக மாவீர்களுக்கு பிரதான சுடர் ஏற்ற ஆசைப்பட்டு தங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றியபோதிலும் அதுகுறித்த ஒளிப்படங்களோ, செய்திகளோ சமூகவலைத் தளங்களையோ ஊடகங்களையோ அலங்கரிக்கவில்லை.

ஆனால் கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூலில் (கவனிக்க) நேரலையாக ஒளிபரப்பட்டப்பட்டது. அதனைவிடவும் தரமான ஒளிப்படங்களும் வெளியாகியிருந்தன.

எனவே தாயகத்தை மட்டுமல்லாது சர்வதேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்களையும் உற்றுப்பார்க்கும் அளவிற்கு அவருடைய முகநூல் காட்சிகள் அமைந்திருந்தன. இதுவரையில் இலட்சக்கணக்கான வாசகர்கள் அந்தக் காட்சியினைப் பார்த்திருந்ததை அவதானிக்கமுடியும்.

இதேவேளையில் இன்னொரு விடயமும் நடைபெற்றிருந்தது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது அந்த மாவீர்நாளின் பிரதான விடயமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உரை அமைவது வழக்கம்.
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் சுடர்ஏற்றிக்கொண்டிருக்க. விடுதலைப்புலிகள் பாணியில் அமைக்கப்பட்ட பிரதான சுடரினை சிறிதரன் ஏற்றியிருந்தார். அதன் பின்னர் பாராளுமன்றில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ஆற்றியிருந்த உரையினை துயிலும் இல்லத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

துயிலும் இல்லங்களில் உரைகளை தவிர்க்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையிலும் சிறிதரனின் ஏற்பாட்டுக்கு அமைய அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஒளிபரப்பட்டிருக்கிறது.

சரி, அவருடைய முகப்புப்புத்தகத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டுமழைகள் ஏராளமாக குவிந்துவருவதை அவதானிக்கமுடிகிறது. தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் வடிவேலு என்கிற நகைச்சுவை நடிகரை நினைவுபடுத்தும் வகையில் சிறீதரனின் உரையும் அதன் பின்னணியும் அமைந்திருந்தமை அடுத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.

“மண்டைக்குள்ள இருக்கிற கொண்டைய மறந்திட்டீங்களே” என்பது போல பாராளுமன்றத்தில் சிறீதரன் ஆற்றிய உரையின் மூலங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள் தமிழ்மக்கள்.

தமிழீழத் தேசியத் தேசியத்தலைவர் அவர்கள் ஆண்டு தோறும் ஆற்றிய மாவீரர்நாள் உரைகளில் ஒவ்வொரு பந்தியை களவாடி தன்னுடைய உரையாக பாராளுமன்றில் முழங்கியிருக்கிறார் சிறீதரன். தலைவருடைய உரையை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கது தானே என்கின்றனர் சிறீதரனின் ஆர்வலர்கள்.

அன்பான ஆர்வலர்களே,

அவர் தலைவருடைய உரையினை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவர் தன்னுடைய உரையின் போது எந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர்நாள் உரையில் தலைவர் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார் என்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கலாம்.

ஆனால் அவர் ஆற்றிய உரை இரண்டு உள்நோக்கங்களின் பின்னணியைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று பாராளுமன்றில் ஆற்றப்படுகின்ற உரையை மையப்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது.

இன்னொன்று அதே உரையை துயிலும் இல்லத்திலும் ஒளிபரப்பினால் பாராளுமன்ற உரையைத்தான் ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துவிடலாம்.
தலைமையை இலக்குவைத்தே அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், சொந்தமாக மாவீரர்கள் நினைவாக ஒரு உரையைக் கூட எழுதமுடியாத நிலையில் “கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன் வானம் ஏறி வைகுண்டம் போனேன்” என்றானாம் என்பது போல அவருடைய தலைமைக்கனவு என்கின்றனர் விமர்சகர்கள்.

சிறீதரனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை தங்களுடைய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடந்ததாக எண்ணிக்கொள்ளலாம். அந்த எண்ண ஓட்டம் பாமர மக்கள் மத்தியில் எடுபட்டும் இருக்கலாம்.

ஆனால் இந்த விடயங்களுக்குப்பின்னால் இன்னொரு நரித்தனத்தின் தந்திரம் இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.

மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றன, படங்களும் வெளியாகியிருந்தன. இவை ஒருவகையான திடீர் எழுச்சியாகவும் அரசியல்வாதிகளின் சாதனையாகவும் தெரியலாம். ஆனால் இந்த விடயங்கள் பல மாதங்களுக்கு முன்னரே அரச இயந்திரத்தினால் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

துயிலும் இல்லங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துவைத்திருந்த படையினர் அங்கு தங்களுடைய முகாம்களையும் நிறுவியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் கைவிட்ட சம்பவங்களை ஊடகங்கள் சில வெளியிட்டுமிருந்தன.

உண்மையில் துயிலும் இல்லங்களை விடுதலைசெய்வது என்பது பரந்த மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் என்று யாராவது கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

மைத்திரி அரசாங்கத்தின் பிரதான இயங்குதளமாக ரணில்விக்கிரமசிங்கவே விளங்கிவருகிறார். அவருடைய திட்டத்தின் அடிப்படையிலேயே துயிலும் இல்லக் காணிகள் சில விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் காணி விடுவிப்பிற்கான உரிமையை கூட்டமைப்பினர் கோரமுடியாது. காரணம் மண்வெட்டிகொடுப்பதையோ, கோழிக்குஞ்சு கொடுப்பதையோ அரசியலாக ஊடகங்களில் பயன்படுத்துகின்ற கூட்டமைப்பினர் தாங்கள் இவ்வாறு ஒரு கோரிக்கை விடுத்திருந்தால் அமைதி காத்திருப்பார்களா?

இந்த இடத்தில்தான் ரணிலின் திட்டமே இது என்ற விடயம் வலுக்கிறது. எதிர்வரும் காலத்தில் ரணில் – மைத்திரி அரசின் கூட்டுஅணி வெற்றிபெறுவது என்பது சிங்கள தேசத்தினை மட்டும் வைத்துக்கொண்டால் எட்டாக்கனியே. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் இருக்கின்ற மக்களின் மனங்களை நிரந்தரமாக அபகரிக்க ஒரே வழி மாவீரர்நாளை கொண்டாட அனுமதிப்பது என்ற தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கு அவர் வழிசெய்திருக்கிறார் என்றே கருதவேண்டும்.

அடுத்த மாவீர்நாளுக்கு முன்பாக இன்னும் பல மாவீரர் துயிலும் இல்லங்களும் விடுவிக்கப்படலாம்.

இதேவேளையில் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் நல்லாட்சியில் சிறந்து விளங்குவதாக காட்டுவதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளின் மாவீர்ர்களை நினைவுகூரும் அளவிற்கு நிலமை சுமூகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளமுடியும். இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீண்டுவருகின்ற சிங்கள ஆட்சிபீடத்தினை இன்னும் மீட்டுத்தரும் என்பதை அவர்கள் செயல்வடிவில் காட்டியும் வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் மாவீரர்நாளை நடைபெற வைப்பதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதற்கான இன்னொரு ஆதாரத்தையும் முன்வைக்கமுடியும்,
துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளைச் செய்வதற்காக ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்தினை நாடி அனுமதி கோரியிருக்கின்றனர்.
பொலிஸார் மூன்று நிபந்தனைகளை முன்வைத்து அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

அவையாவன,

தமிழீழத் தேசியக் கொடி ஏற்றக்கூடாது, விடுதலை கீதங்கள் இசைக்கக்கூடாது, தமிழீழத் தேசித்தலைவரின் ஒளிப்படங்களையோ சீருடைகளையோ பயன்படுத்தக்கூடாது என்பன.

ஆக, மேலிடத்திலிருந்து கிடைத்திருக்கின்ற அனுமதியின் அடிப்படையிலேயே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளும் நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக மனம் உருகி சுடரேற்றி வணங்கினார்கள் என்பது மாற்றுக் கருத்துக்கிடமின்றிய ஆறுதல் தரும்விடயம்தான்.

ஆனாலும் இந்தத் தியாகங்களை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்ற தந்திரங்கள் தென்னிலங்கை மையப்பீடத்திலும் வடக்கின் அரசியல்மைய பீடத்திலும் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை அப்பாவி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

-கீதன்-

http://thuliyam.com/?p=49915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.