Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் காட்டப்படும் தாமதம்

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் காட்­டப்­படும் தாமதம்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்டில் தாம­தப்­போக்கு காட்­டப்­ப­டு­கின்­றதோ என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் எந்­த­வொரு விட­யங்­களும் உறு­தி­ செய்­யப்­ப­ட­வில்லை. அனைத்தும் பேச்சு மட்­டத்­திலும் யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யி­லுமே காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அந்தச் செயற்­பா­டுகள் தொடர்­பாக தவ­றான கருத்­துக்கள் மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் பேச்­ச­ள­வி­லேயே உள்­ளன. குழுக்­களின் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவை ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வி­ட­யங்கள் தொடர்பில் எந்­த­வித உடன்­பா­டு­களும் எட்­டப்­ப­ட­வில்லை என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக விமர்­சிக்­கின்­றார்கள். எதிர்­கா­லத்தில் அதி­கா­ரத்­துக்கு வரும் நோக்­கத்­துடன் குறு­கிய அர­சியல் நோக்­கத்­தோடு இத்­த­கை­ய­வர்கள் செயற்­ப­டு­வார்­க­ளாயின் அதன் பிர­தி­ப­லனை எதிர்­கா­லத்தில் சக­லரும் அனு­ப­விக்­க­வேண்டி வரும். எமது பொறுப்பை நாம் தற்­போ­தைய சூழலில் நிறை­வேற்­றா­விட்டால் எதிர்­கா­லத்தில் நாடு இருள் சூழ்ந்­த­தா­கி­விடும். ஆகவே பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நாம் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் செயற்­ப­டு­வ­தற்கு அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்­தா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்-கும் விட­யத்தில் அர­சாங்­க­மா­னது பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றது என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது நாட்டை பிள­வு­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் குற்றம் சாட்டி வரு­கின்­றனர். இவ்­வி­டயம் குறித்து விசேட அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான உப குழுக்­களின் அறிக்கை அமைந்­துள்­ளது. மாகாண சபை­க­ளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்கும் யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. மாகா­ணங்கள் தனி நிர்­வாக அல­கு­க­ளாக மாற்றும் திட்டம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, குறித்த அறிக்­கையில் மிகவும் பாதிப்­பான யோச­னை­களை அர­சி­ய­ல­மைப்பு உள்­ள­டக்­கக்­கூ­டாது. இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் இல்­லாத கொள்­கை­களை பரி­சீ­லித்து நாட்டை சீர­ழிக்­க­வேண்டாம் என்று மஹிந்த ராஜபக் ஷ தனது அறிக்­கையில் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

நாடு பிள­வு­படும் என்ற வாக்­கி­யத்தை பயன்­ப­டுத்­தாமல் நாட்டை பிள­வு­ப­டுத்தும் உப­குழு யோச­னை­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அடி­மைப்­பட்­டுள்ள சுதந்­திரக் கட்­சி­யினர் இணங்கி தமது கட்­சியின் கொள்­கைக்கு துரோகம் இழைத்­து­வி­டக்­கூ­டாது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கடும் தொனியில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

இந்­த­நி­லையில் அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பொது எதி­ர­ணியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களும் இந்த விவ­காரம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றனர். இவ்­வி­டயம் தொடர்பில் 8 அம்­சங்­களைக் கொண்ட யோச­னை­யொன்­றையும் பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் பிர­தி­நி­தி­யு­மான தினேஷ் குண­வர்­தன குழு­வுக்கு சமர்ப்­பித்­துள்ளார். ஒற்­றை­யாட்சி பேணப்­ப­ட­வேண்டும். பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும் உட்­பட 8 அம்­சங்கள் இந்த யோச­னையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விட­யங்­க­ளுக்கு அப்பால் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மானால் வழி­ந­டத்தல் குழுக் கூட்­டங்­களை பகிஷ்­க­ரிக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென்றும் அவர்கள் எச்­ச­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்‑­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யில்தான் அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட 6 குழுக்­களின் அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த உப­கு­ழுக்­களின் அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் ஜனவரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதம் நடை­பெ­ற­விருக்­கின்­றது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் 10ஆம் தி­கதி சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென்று முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் தற்­போது அந்த முயற்சி இடை­நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் ஏற்­பட்­டுள்ள இழு­பறி நிலை கார­ண­மா­கவே இந்த இடைக்­கால அறிக்­கையும் பிற்­போ­டப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மை­யி­லேயே அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் இது­வரை தேர்தல் முறை மாற்றம் தொடர்­பிலும் ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்கள் குறித்தும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற விட­யங்கள் தொடர்பில் இன்­னமும் தீர்க்­க­மான முடிவு எட்­டப்­ப­ட­வில்லை. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியை உள்­ள­டக்­கிய தீர்வு வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலோ அல்­லது சமஷ்டி குறித்தோ அர­சியல் யாப்பு வழி­ந­டத்தல் குழுவில் இன்­னமும் ஆரா­யப்­ப­ட­வில்லை. இந்த விட­யங்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­டு­மிடத்து இன்­னமும் குழப்­ப­க­ர­மான நிலை ஏற்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பும் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது.

இதனால், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­கூட இந்த விட­யங்­களை வலி­யு­றுத்­தாமல் மென்­போக்குத் தன்­மை­யுடன் செயற்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவ்­வாறு மென்­போக்குத் தன்­மை­யுடன் தமிழ் தரப்பு கலந்­து­ரை­யாடல்­களில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலை­யில்­கூட இன­வா­திகள் அதற்கு எதி­ராக குரல்­கொ­டுப்­பது எந்­த­வ­கை­யிலும் நியா­ய­மற்ற செயற்­பா­டா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தின்­போது சிறு­பான்மை தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வுகள் காணப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். ஆனாலும் தற்­போ­தைய போக்­கா­னது இதற்­கான சூழலை ஏற்­ப­டுத்­துமா என்ற சந்­தே­கத்தை உரு­வாக்கி வரு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு எதி­ராக இன­வாத சக்­திகள் கூக்­கு­ர­லி­டு­வதும் அதற்குப் பயந்து இந்த விவ­கா­ரத்தில் இழுத்­த­டிப்புப் போக்கை அர­சாங்கம் கடைப்­பி­டிப்­பதும் இந்த சந்­தே­கத்தை வலு­வாக்கி வரு­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து நல்­லாட்சி அமைத்­துள்ள நிலையில் எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் அர­சாங்­கத்தின் முயற்­சிக்கு ஆத­ரவு தெரி­வித்­து­வரு­கின்ற சூழலில் அர­சி­ய­ல­மைப்பை மாற்றி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண வேண்டும் என்­பதே பெரும்­பாலான மக்­களின் நிலைப்­பா­டாக உள்­ளது. ஆனாலும் அதற்­கான சூழல் ஏற்­ப­டு­வ­தற்கு சகல தரப்­பி­னரும் உறு­தி­யுடன் நின்­று­ செ­ய­லாற்ற வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகையில் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நல்­ல­தொரு சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தச் சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­வி­டு­வோ­மானால் எதிர்­காலத்தில் வர­லாற்றுத் தவ­றி­ழைத்­த­வர்­க­ளாக மாற­வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விடும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விடயம் தொடர்­பிலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெறு­வ­தற்கு இடை­யூ­று­களை விளை­வித்தால் எதிர்­காலத்தில் கவ­லை­ய­டைய நேரும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

கடந்த காலங்­களில் பல சந்­தர்ப்­பங்கள் எமக்கு வாய்த்­தி­ருந்­த­போதிலும் அந்தச் சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டதே வர­லா­றா­க­வுள்­ளது. 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண ஆட்சி முறை உரு­வாக்­கப்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தை நாம் இழந்­தி­ருந்தோம். இதேபோல் 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் இணைந்த பிராந்தியங்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் குழப்பியடித்திருந்தோம்.

இதேபோன்று 2002ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் இழந்துவிட்டோம். இவ்வாறு கிடைத்த பல சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுவிட்டு இன்று கவலைப்படுவதைப் போன்று தற்போது உருவாகியுள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடித்துவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்துக்குள் தள்ளு-ம் நிலையை உருவாக்குவது நல்லதல்ல.

எனவே, வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு நாமனைவரும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வினைக் காண்பதற்கு முன்வரவேண்டும். இதற்கு பொது எதிரணியினரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலன் கருதி ஒத்துழைக்கவேண்டும். இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்துக்கு வித்திடமுடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.