Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு

Featured Replies

சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு

 

ஐக்­கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திக­தி­யன்று மனித உரி­மைகள் சாச­னத்தைப் பிர­க­டனம் செய்­தது. ஐ.நா சபையின் பிர­க­ட­னத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த அங்­கத்­துவ நாடுகள் பிர­க­ட­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­றுக்­கொண்­டன. பிர­க­ட­னத்தைத் தொடர்ந்து ஐ.நா சபை­யினால் பல தீர்­மா­னங்கள், உடன்­பா­டுகள், படிப்­ப­டி­யாகச் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டன. ஒவ்­வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டு மனித உரி­மைகள் தினத்தை அனுஷ்­டிக்­கும்­போது அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆலோ­ச­னை­களும் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளமை சிறந்த ஒரு எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­துக்கு மக்கள் மத்­தி­யி­லி­ருந்து ஆலோ­ச­னைகள் பெறு­வ­தற்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி லால் விஜ­ய­நா­யக்க தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் யாப்புச் சீர்­தி­ருத்த ஆணைக்­குழு பொது மக்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னைகள் கோரிய போது பல கட்­சிகள், அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்கள் தங்கள் அறிக்­கை­களை ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பித்­தார்கள். மனித உரி­மைகள் சாசனம் ஒன்று புதிய அர­சியல் யாப்­பிலே இடம்­பெற வேண்டும் என்­பது ஒரு முக்­கியம் வாய்ந்த கோரிக்­கை­யாக இருந்­தது.

சமூக நிலை மாற்ற மன்றம் (Foundation for Community Transformation); 11 பரிந்­து­ரைகள் அடங்­கிய அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்­களை முன் வைத்­தது. மன்றம் முன் வைத்த 11 விட­யங்­களும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருந்­தன. ஜன­நா­யக ஆட்சி முறை­யு­டைய ஒரு நாடு என்ற வகையில் இலங்கை கீழ்க்­காணும் கொள்­கை­களைக் கடைப்­பி­டிப்­பது அவ­சியம் என்­பதை சமூக நிலை­மாற்ற மன்றம் சுட்­டிக்­காட்­டி­யது. மக்­க­ளி­ட­மி­ருந்­துதான் ஆட்­சிக்­கு­ரிய அதி­காரம் பெறப்­பட வேண்டும்.   

பெரும்­பான்மை வாக்­கு­களை மக்­க­ளி­ட­மி­ருந்து பெறு­வதன் மூலம் மக்­க­ளி­ட­மி­ருந்து அரசு நடத்­து­வ­தற்கு ஆணை பெறப்­ப­டு­கின்­றது. ஆனால் அரசை நடத்­து­ப­வர்கள் இத்­த­கைய ஒரு அரசின் கீழ் தனி­நபர் சுதந்­தி­ரத்­தையும், சிறு­பான்­மை­யினர் உரி­மை­க­ளையும் பாது­காத்தால் தான் அதை ஜன­நா­யக அரசு என்று கூற­மு­டியும். அரச தலை­மைத்­து­வத்தின் மாற்றம் குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­றைக்குள் தேர்­தல்கள் மூலமே இடம்­பெற வேண்டும்.   

அர­சுக்கு இருக்கும் அதி­கா­ரங்கள், சட்­டங்கள் மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். இது எழுத்­து­வ­டி­வா­கவோ அல்­லது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மர­பு­க­ளா­கவோ இருக்­கலாம். அமைப்பு ரீதி­யா­கவும் சில நடை­மு­றைகள் மூல­மா­கவும் அர­சாங்­கத்தால் செலுத்­தப்­படும் அதி­கா­ரங்­களை சட்­டத்தை மீறிச் செயல்­ப­டுத்த முடி­யாது. ஒரு ஜன­நா­யக நாட்டில் அதி­கா­ரங்கள் பகிர்ந்து கொள்­ளப்­பட வேண்டும். சட்­ட­மி­யற்றும் அதி­காரம், நிர்­வாகம், நீதித்­துறை ஆகி­யவை தனித்­த­னி­யாக சுதந்­தி­ரத்­துடன் செயல்­ப­ட­வேண்டும். இத்­து­றை­க­ளுக்­கி­டையே ஆட்சி அதி­காரம் பகிர்ந்து கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். 

அரசின் பல்­வேறு அமைப்­புகள் அதி­கா­ரத்தை மட்­டுப்­ப­டுத்­தியே செயல்­ப­டுத்த வேண்டும். தனி மனி­த­ரு­டைய வாழ்­வு­ரிமை, சொத்­து­ரிமை போன்­ற­வை­க­ளுக்குச் சட்ட நிய­தி­க­ளுக்­குட்­பட உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படல் வேண்டும். ஜன­நா­யக முறையின் அடி­நாதம் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு உத்­த­ர­வாதம் அளிப்­ப­தி­லேயே தங்­கி­யுள்­ளது. ஐ.நா. பிர­க­ட­னங்­களும், விதி­மு­றை­களும் இத்­த­கைய அடிப்­படை உரி­மை­களைப் பட்­டி­யலிட்­டுள்­ளன. தனி மனிதப் பிரத்­தி­யேகம்; (Privacy), குடும்பம், சமயம் சார்ந்த நட­வ­டிக்­கைகள் மற்றும் சமூக உரி­மை­களைப் பாது­காப்­பது அரசின் தலை­யாய பொறுப்­பாகும். அதேபோல் இனத்­துவ, சமய, உரி­மை­களைப் பாது­காப்­பது அரசின் கட­மை­யாகும். 

சமூக நிலை மாற்ற மன்றம் 2003ஆம் ஆண்டு முதற்­கொண்டே இந்­திய வம்­சா­வளி தமிழர் போன்று நாட்டின் சில இடங்­களில் செறி­வா­கவும் மற்றும் சில இடங்­களில் செறிவு குறை­வா­கவும் வாழு­கின்ற மக்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய ஜன­நா­யக உரி­மை­களை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தலாம் என்­பது பற்றி சர்­வ­தேச நிபு­ணர்கள் பங்­கு­பற்­றிய கருத்­த­ரங்­குகள் நடத்தி அறிக்­கை­க­ளையும் நூல்­க­ளையும் வெளியிட்­டுள்­ளது.

தென்­னா­பி­ரிக்க முன்­மா­தி­ரியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறிப்­பாக அதன் 9ஆவது சரத்தைக் கவ­னத்தில் வைத்து புதிய யாப்பில் இப்­பொ­ழுது இருக்­கின்ற அடிப்­படை அத்­தி­யா­யத்­துக்குப் பதி­லாக உரி­மைகள் பட்­டயம் ஒன்றை உள்­ள­டக்க வேண்டும் என்ற கோரிக்­கையை அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆணைக்குழு­வுக்குச் சமூக நிலை­மாற்ற மன்றம் முன்­வைத்­தி­ருந்­தது.

எனவே அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தின் சார்­பாக தயா­ரித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன 1996ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்ட அதே போன்ற உரி­மைகள் பட்­டயம் ஒன்று புதிய யாப்பில் சேர்க்­கப்­படும் என்று கூறி­யி­ருப்­பது மிகவும் வர­வேற்கத்தக்­க­தாக இருந்­தது.

தென்­னா­பி­ரிக்­காவில் வர­லாற்று ரீதி­யாக ஏற்­பட்ட இனப் பார­பட்­சங்­களை நீக்கும் பொருட்டு, பிரிவு 9(1), பிரிவு 9(2) என்­பன சட்­டத்தின் முன் அனை­வரும் சமம். சம­மான பாது­காப்­புக்கு உரித்­து­டை­ய­வர்கள் என்­கி­றது. குறிப்­பாக 9(2) பின்­வ­ரு­மாறு ஏற்­பாடு செய்­கின்­றது: சமத்­துவம் என்­பது, அனைத்து உரி­மை­க­ளையும், சுதந்­தி­ரங்­க­ளையும் முழு­மை­யா­கவும், சம­மா­கவும் அனு­ப­விப்­ப­தாகும். சமத்­து­வத்தை அடை­வதை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, சட்­டங்கள் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களை எடுப்­பதன் மூலம் நியா­ய­மற்ற பார­பட்சம் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக விசேட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம் எனக் கூறு­கின்­றது.

இலங்­கையில் இது ஒரு புதிய விட­ய­மல்ல. இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 12(4) பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளுக்­கான விசேட சட்­டங்கள் இயற்­றப்­ப­டலாம் என்ற ஏற்­பா­டுள்­ளது.

இத்­த­கைய விசேட ஏற்பாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கின்றன. Affirmative Action அல்லது நேரொத்த நடவடிக்கை என்ற விசேட ஏற்பாடுகள் மூலம் பின்தங்கிய மக்களை அபிவிருத்தியின் உயர் மட்டத்திற்கு எடுத்துவர முடியும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் கறுப்பின மக்கள், பெண்கள், உடல் ரீதியாக இயலாதோர் போன்றவர்களுக்காக விசேட சட்டங்களை இயற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது போன்று 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின் பிரஜாவுரிமை, வாக்குரிமைச் சட்டங்கள் மூலம் அரசியல் நீரோட்டத்திலிருந்தும் அபிவிருத்தி நீரோட்டத்திலிருந்தும் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இத்தகைய ஒரு சட்டத்தின் மூலமே நிவாரணம் காணவேண்டும்.   

பி.பி. தேவராஜ்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.