Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கப் பொறிமுறை நம்பகம் பெறுமா?

Featured Replies

நல்லிணக்கப் பொறிமுறை நம்பகம் பெறுமா?

Page01-895dee619dd12e1cff920cc3fa7e2f71108f836f.jpg

 

நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்கை கடந்­த­வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டது.

இந்த அறிக்கை ஜன­வரி 3ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­படும், அதற்­கான வாய்ப்புக் கிடைக்­காது போனால், ஜன­வரி முதல்­வா­ரத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும் என்று, நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­லணி கூறி­யி­ருக்­கி­றது.

கலா­நிதி மனோ­கரி முத்­தெட்­டு­வே­க­மவை தலை­வ­ரா­கவும், கலா­நிதி பாக்­கி­ய­ சோதி சர­வ­ண­முத்­துவை செய­லா­ள­ரா­கவும் கொண்ட- மூவி­னங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் இந்தச் செய­லணி, நாடு முழு­வதும் நடத்­திய கலந்­தாய்வுக் கூட்­டங்­களின் அடிப்­ப­டையில் அறிக்கை ஒன்றைத் தயா­ரித்­துள்­ளது.

சுமார் 500 பக்­கங்­களைக் கொண்ட இந்த அறிக்­கையில், மக்­களின் கருத்­துக் கள் மற்றும் செய­ல­ணியின் பரிந்­து­ரை­க ளும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும், சிறப்பு நீதி­மன்ற விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று இரு­வேறு கருத்­துகள் பொது­மக்­களால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், சர்­வ­தேச விசா­ர­ணையே நடத்­தப்­பட வேண்டும் என்ற பரிந்­து­ரை­யையே, கலந்­தா­லோ­சனை செய­லணி முன்­வைத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­முறை எத்­த­கை­ய­தாக இருக்க வேண்டும் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக, இந்தக் கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் நிய­மித்­தி­ருக்­கு­மே­யானால், இந்தப் பரிந்­து­ரையை கவ­னத்தில் எடுத்துக் கொள்ள வேண்­டி­யி­ருக்கும். சர்­வ­தேச விசா­ரணை என்னும்போது, இரண்டு வகை­யா­ன­தாக அத்­த­கைய விசா­ர­ணை­களை நடத்த முடி யும். ஒன்று, இலங்கை அர­சாங்­கத்தின் ஒப்­பு­த­லுடன், இலங்கை அர­சாங்­கமே சர்­வ­தேச நிபு­ணர்­க­ளையும், நீதி­ப­தி­க­ளையும் நிய­மித்து நடத்­து­கின்ற விசா­ரணை.

இரண்டு, இலங்கை அர­சாங்­கத்தின் ஒப்­புதல் இன்றி, ஐ.நா. உள்­ளிட்ட சர்­வ­தேச அமைப்­பு­களால் நடத்­தப்­ப­டு­வது.

இது­போன்ற ஒரு விசா­ர­ணையே, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் அந்த விசா­ரணை, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக- ஒவ்­வொரு சம்­ப­வத்­தையும் ஆழ­மான விசா­ர­ணை­களை நடத்தும் ஒன் ­றாக இருக்­க­வில்லை.

ஆனால் தற்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சர்­வ­தேச விசா­ரணை என்­பது, போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரித்து, அத்­த­கைய சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை அடை­யாளம் காண்­ப­தற்­கா­ன­தே­யாகும்.

நல்­லி­ணக்க முயற்­சி­களில் பொறுப்­புக்­கூறல் முக்­கி­ய­மா­னது. அதனால் தான் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­ முறை எத்­த­கை­ய­தாக இருக்க வேண்டும் என்று மக்­களின் கருத்தை அறி­வ­தற்­கான ஒரு கலந்­தாய்வு செய­லணி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்தச் செய­ல­ணியின் மூலம் திரட்­டப்­பட்ட மக்­களின் கருத்­துக்­கள, குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­துக்கள், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சார்­பா­கவே இருந்­துள்­ளது. இதற்கு முக்­கி­ய­மான காரணம், உள்­நாட்டு விசா­ர­ணை­களின் மீதான நம்­பிக்­கை­யீனம். இலங்­கையின் நீதித்­துறை கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் மோச­மாக அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. தற்­போ­தைய அர­சாங்கம் அந்த நிலையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு, முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தாலும், இன்­னமும் முழுமை­யான மாற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

அதை­விட, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் அர­ச­ப­டைகள் மற்றும் முன்­னைய அர­சுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை மையப்­ப­டுத்­தியே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், உள்­நாட்டில் அவர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­படும் விசா­ர­ணை­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் நீதியை எதிர்­பார்க்க முடி­ய­வில்லை.

முன்­னைய அர­சாங்­கத்தில் இருந்­த­வர்கள், முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அனு­தா­பிகள் பலரும் இப்­போ­தைய அர­சாங்­கத்­திலும் உள்­ளனர். முன்­னைய அர­சாங்­கத்­தினால் உள்­வாங்­கப்­பட்­ட­வர்கள்தான் நீதித்­துறைக் கட்­ட­மைப்­பு­களில் இன்­னமும் உள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், உள்­நாட்டு விசா­ர­ணை­களில் நீதியை எதிர்­பார்க்க முடி­யாத நிலை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உள்­ளது. ஆனால், முன்­னைய அர­சாங்­கமும் சரி, தற்­போ­தைய அர­சாங்­கமும் சரி, சர்­வ­தேச விசா­ரணை என்ற விட­யத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே வந்­துள்­ளன.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் வேலை­நி­றுத்தம் செய்த ஊழி­யர்கள் மீது கடற்­ப­டை­யினர் தாக்­குதல் நடத்­திய சம்­ப வம் தொடர்­பாக, அண்­மையில் கடற்­ப­டை

­யிடம் ஓர் அறிக்கை கோரி­யி­ருந்தார் ஜனா­தி­பதி. அந்த அறிக்கை தொடர்­பாகக் கருத்து வெளி­யிட்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, திரு­டனின் தாயி டம் போய் மைவெ­ளிச்சம் கேட்­ட­தற்கு ஒப் ­பான செயல் என்று விமர்­சித்­தி­ருந்தார்.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக உள்­நாட்டு விசா­ரணைதான் நடத்த முடி யும் என்ற விட­யத்­திலும் அதே­போன்ற கருத்

துத் தான் தமிழ் மக்­க­ளிடம் உள்­ளது. ஒரு சிறிய தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்

­பு­டைய கடற்­ப­டை­யி­னரின் உள்ளக விசா ­ரணை அறிக்கை­யையே மஹிந்த ராஜபக் ஷ போன்­ற­வர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி ­யாத போது, மிகப்­பெ­ரிய அழி­வு­களை எதிர்­கொண்ட தமிழ் மக்­களால், நம்­ப­கத்­தன்­மை­யற்ற உள்­நாட்டு விசா­ர­ணை­களை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடியும்?

நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அமர்­வு­களின்போது, சர்­வ­தேச விசா­ர­ணைக்குச் சாத­க­மாக பெரு­ம­ள­வி­லானோர் கருத்து வெளி­யிட்­ட­மைக்குக் காரணம், இந்த நம்­பிக்­கை­யீனம் தான்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு சரி­யான நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்று இது­ வரை இருந்து வந்த எந்­த­வொரு அர­சாங்­க­முமே, நிரூ­பித்­தி­ருக்­க­வில்லை. 

பல ஆணைக்­கு­ழுக்கள் கடந்த காலங்­களில் அமைக்­கப்­பட்­டன. ஆனால் அந்த ஆணைக்­கு­ழுக்­களின் பரிந்­து­ரைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. இதுவே வர­லா­றாக இருந்து வரு­கி­றது.

இப்­ப­டி­யான ஒரு சூழலில் தான் சர்­வ­ தேச விசா­ரணை ஒன்று மாத்­தி­ரமே, தமக்கு நியா­யத்தைப் பெற்­றுத்­தரும் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உறு­தி­யாக நம்­பு­கின்­றனர்.

அதனைத் தான், நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்­கையும் பிர­தி­ப­லித்­தி­ருக்­கி­றது. இந்த அறிக்கை அர­சாங்­கத்­துக்கு சாத­க­மான ஒன்­றாக நிச்­சயம் இருக்­காது.

அதனால் தான் போலும் இந்த அறிக்­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் இழுத்­த­டித்து வரு­கி­றது.

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒரு­போதும் இணங்க முடி­யாது என்று அர­சாங்கம் தெளி­வாக அறி­வித்­துள்­ள­துடன், உள்­நாட்டு விசா­ரணை தான் நடத்­தப்­படும் என்றும் கூறி­யி­ருக்­கி­றது.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், கடந்த ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்­கவும் அர­சாங்கம் தயா­ராக இல்லை என்று ஏற்­க­னவே கூறி­விட்­டது.

உள்­ளக விசா­ர­ணையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை என்று திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ள அர­சாங்கம், வெளி­நாட்டு நிபு­ணர்­களின் ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன என்று மாத்­திரம் கூறி வந்­துள்­ளது.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யதால், தன்­னிச்­சை­யாக ஒரு விசா­ரணைப் பொறி­மு­றையை ஐ.நாவினால் அமைக்க முடி­ய­வில்லை. அதை­விட, அத்­த­கைய விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­ப­தற்கு, பாது­காப்புச் சபையின் அனு­ம­தியும் தேவை.

இலங்கை அர­சாங்­கத்தைக் கொண்டே, நம்­ப­க­மான ஒரு விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­பது தான், ஐ.நாவின் இலக்­காக இருந்­தது. ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் அர­சாங்­கமும் அதற்கு இணங்­கி­யி­ருந்­தது.

இருந்­தாலும், ஜெனிவா தீர்­மா­னத்தில் கலப்பு விசா­ரணைப் பொறி­முறை குறித்த பரிந்­து­ரையை ஏற்றுக் கொண்­டி­ருந்த அர­சாங்கம், தாம் அத்­த­கைய விசா­ர­ணையை மேற்­கொள்ள முடி­யாது என்று கூறி­விட்­டது.

அர­சாங்­கத்தின் இந்த இரட்டை நிலைப்­பாட்டை சர்­வ­தேச சமூ­கமும் கண்­டு­கொள்­ள­வில்லை. ஜெனிவா தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு அளிக்­கப்­பட்ட கால­அ­வ­கா­சத்­துக்குள் ஏதா­வது ஒரு விசா­ரணைப் பொறி­மு­றையைக் கூட அர­சாங்கம் அமைக்­குமா என்று சந்­தேகம் கொள்ளும் அள­வுக்கு இதற்­கான நகர்­வுகள் நத்தை வேகத்தில் தான் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும் போது, பதி­ல­ளிப்­ப­தற்குத் தேவை­யான வகை­யி­லேயே அர­சாங்கம் நட­வ­டிக்­கைளை எடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

அதற்கு அப்பால் பொறுப்­புக்­கூறல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் உறு­திப்­பாட்டை அர­சாங்­கத்­திடம் காண­மு­டி­ய­வில்லை. செய்­தி­யாளர் சந்­திப்­பு­களில் பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தும் அர­சாங்கம் செயல்­மு­றையில் அதற்கு மாறான வகை­யி­லேயே நடந்து கொள்­கி­றது.

நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் பரிந்­துரை சர்­வ­தேச விசா­ர­ணைக்குச் சார்­பான வகையில் அமைந்­தி­ருப்­பது முக்­கி­ய­மான ஒரு விடயம்.

இந்தப் பரிந்­து­ரையை அர­சாங்கம் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளுமா, நடை­மு­றைப்­ப­டுத்­துமா என்­பது சந்­தேகம். ஏனென்றால் ஏற்­க­னவே அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ரணை என்ற கோரிக்­கையை நிரா­க­ரித்து விட்­டது.

இத்­த­கைய நிலையில் அதே பரிந்துரையை உள்நாட்டு ஆணைக்குழு ஒன்று முன்வைக்கும் போது அதனை அரசாங்கம் செயற்படுத்தும் என்று நம்ப முடியவில்லை.

எவ்வாறாயினும், இந்தப் பரிந்துரையை அரசாங்கம் நிராகரிக்குமானால் அது தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச ரீதியாகவும் நம்பிக்கையீனத்தை எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எவ்வாறு குப்பைக்குள் வீசினவோ அதேபோன்று தான் இந்த அரசாங்கமும் நடந்து கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறும்.

இந்தச் செயலணி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவே அமைக்கப்பட்டது, இதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது, இறுதி முடிவை எடுப்பவர் ஜனாதிபதி தான் என்று அரசாங்கம் மீண்டும் வாதிடக் கூடும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் இதே நிலைப்பாட்டை தான் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் வெளிப்படுத்தியது.அதே கதி, இந்தச் செயலணிக்கும் ஏற்படலாம்.

அவ்வாறு இந்தச் செயலணியின் பரிந்துரைகள் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாது போனால், இந்தச் செயலணியை உருவாக்கியதில் அர்த்தமில்லை.

பொறுப்புக்கூறலுக்காக அமைக்கப்பட்ட செயலணியாக கருதப்படாது ஒப்புக்காக அமைக்கப்பட்ட செயலணியாகவே மாறும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.