Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

நீ இல்லையேல் கவிதையில்லை 
-------------------------------
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் சொன்ன வார்த்தையே.....!

என் கவிதையை ...
ரசித்து விட்டு சொன்னாள்.....
இத்தனை கவிதையை......
எழுதிய உன் கையில்.......
முத்தமிட்ட ஆசை......!

அவளுக்கு புரியவில்லை.....
அவள் இல்லையேல் எனக்கு......
கவிதையே இல்லை............!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை

  • Replies 233
  • Views 43.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எனது தொடர்கவிதைகளை அந்த தொடரின் கீழ் பதியவா...? 
கஸல் தொடர்... அகராதி தமிழ் கவிதை தொடர் இவற்ரை அதிலேயே பதியவா...?
இல்லையேல் இதில் தான் பதியனுமா...? பதில் தந்தால் நன்று

  • தொடங்கியவர்

கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!

என் 
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!

நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை 02 

  • தொடங்கியவர்

கண்களால் தோன்றிய........
காதலை கவிதையால்......
வடிக்கிறேன்.........
நீ கண்ணீரால் .......
எழுதச்சொல்கிறாயா........
ஒருமுறை என்னோடு......
பேசிவிடு..........................!

காதல் .....
என்ன உடல் நலத்துக்கு.........
கேடானதா.......?
இப்படி ஜோசிக்கிறாய்........
காதல் செய்ய....?

நீ ................
என்னை காதலிப்பாயோ.....
இல்லையோ தெரியாது......
உன் நினைவுகள் என்னை......
காதலிக்க தொடங்கிவிட்டன......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09
 

  • தொடங்கியவர்

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!

$$$$$

மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!

$$$$$

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எதற்காக.....
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!

$$$$$

என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும் 
என் இதயம் ....!

$$$$$

நீ 
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!

^^^^^^

  • தொடங்கியவர்

முதல் ........
காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி 
ஆசிரியரிடம்  முதல் திட்டும்  
மறக்க முடியாதவையே ...!

தந்தையே நீர் திடீர் என 
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு 
இன்றுவரை -புரியவில்லை ...!

ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு..... 
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!

-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------------

  • தொடங்கியவர்

தினமும் அர்சனை ...!
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!

நீங்கள் சொன்ன 
அர்ச்சனைதான் எதிர் 
கால வாழ்க்கை தத்துவம் 
இன்று உணர்ந்தேன் 
தந்தையே ....!

-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------
 

  • தொடங்கியவர்

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?

எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?

எதற்காக என்னை பிரிந்தாய் ...?

எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?

இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^^^^^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அனைத்தையும் காதல் செய்கிறேன் 
----------------------------------------------

கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!

பொறாமைப்படாமல் இருப்பதற்கு...! 
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!

உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!

மகிழ்வோடு வாழ்வதற்கு...! 
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!

அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!

எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!

^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்

  • தொடங்கியவர்

சின்ன சின்ன காதல் வரிகள்
--------------

என்ன கொடுமை 
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம் 
என்கிறோம்........!

^^^

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!

^^^

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!

^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
 ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!

^^^

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!

^^^

கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நான் எழுதுவது கவிதை இல்லை

-----------------------------------------------

 

கண்டதையும் கேட்டதையும்....

கண்டபடி கிறுக்குகிறேன்.......

யார் சொன்னது நான்...............

எழுதுவது கவிதை என்று ....?

 

பயணம் பல செல்கிறேன்.....

பயணத்தில் பல பார்க்கிறேன்.....

பட்டதை  பார்த்த அனுபவத்தை.......

வாழ்க்கை கவிதை  தலைப்பில்.....

கண்டபடி கிறுக்குகிறேன்......

யார் சொன்னது நான்........

எழுதுவது கவிதை என்று ....?

 

 

மரம் வெட்டும் போது......

மனதில் இரத்தம் வடியும்.......

எழும் என் உணர்வை......

சமுதாய கவிதை  தலைப்பில்......

கண்டபடி கிறுக்குகிறேன்.......

யார் சொன்னது நான்

எழுதுவது கவிதை என்று ....?

 

 

அடிமாடாக அடித்து.....

அடுத்த வேளை உணவுக்கு......

அல்லல் படும் குடும்பங்களை.......

பார்ப்பேன் மனம் வருந்தும்....

பொருளாதார கவிதை தலைப்பில்.....

கண்டபடி கிறுக்குகிறேன்....

யார் சொன்னது நான்........

எழுதுவது கவிதை என்று ....?

 

 

காதோரம் கைபேசியை வைத்து.....

கண்ணாலும் சைகையாலும்......

தன்னை மறந்து கதைக்கும்.....

காதலரை பார்க்கிறேன்.......

காதல் கவிதை  தலைப்பில்....

கண்டபடி கிறுக்குகிறேன்.....

யார் சொன்னது நான்.......

எழுதுவது கவிதை என்று ....?

 

சின்ன வயதில் எல்லோருக்கும்.....

காதல் தோல்வி வரும் -அதை.....

மீட்டு பார்க்கும் போது உயிரே.....

வலிக்கும் .வந்த வலியை கொண்டு....

காதல் தோல்வி கவிதை  தலைப்பில்.....

கண்டபடி கிறுக்குகிறேன்.....

யார் சொன்னது நான்......

எழுதுவது கவிதை என்று ....?

 

நண்பர்களுடன் சிரிப்பேன்....

நலினமாக பேசுவார்கள்.....

நையாண்டியாக பேசுவர்.......

எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு.....

நகைசுவை கவிதை தலைப்பில்......

கண்டபடி கிறுக்குகிறேன்....

யார் சொன்னது நான்......

எழுதுவது கவிதை என்று ....?

 

கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்...

கடுகு கவிதை என்பேன் திருக்குறள்....

ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்....

என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்....

யார் சொன்னது நான்.....

எழுதுவது கவிதை என்று ....?

 

சினிமாக்களில் மசாலாப்படம்....

சிலவேலைகளில் கருத்து படம்....

என் கவிதையும் இப்படித்தான்.....

மசாலாப்படம் கூடாததுமில்லை.....

கருத்துபடத்தால் சமூகம் வெற்றி ...

பெற்றுவிட்டது என்றும் இல்லை.....

படைப்புகள் மன இன்பத்துக்கே......

எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்

சமூக ஒழுக்கத்தோடு .....!

 

நான் எழுதும் கவிதையே....

சிறந்தது என்று நினைப்பவன்....

நான் இல்லை - நான் அறிந்ததை....

அவன் அப்படி கேள்வி படுகிறான்....

என்று உணர்பவன் நான் என்பதால்....

கண்டபடி கிறுக்குகிறேன்....

யார் சொன்னது நான்....

எழுதுவது கவிதை என்று ....?

 

^^^

கவிப்புயல் இனியவன்

இக் கவிதை என் மீள் பதிவு

  • தொடங்கியவர்

யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
-------------------------------------------------

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை தெரியாத பொழுதில் ...
தலையிலே கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி - உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் ....
உடல்விறைக்க.உழைப்பாய்  .......
வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் .......
வெளிவர உழைப்பாய் .............
நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!
அதுவரையும் காத்திருக்கும் -துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் ..........
நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் .....
நச்சு பொருளை உண்டு மடியாத ....
உன் மனதைரியம்...!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
நஞ்சை அருந்தாதவிவசாய தோழனை .........
நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் ......
வணங்குகிறேன்.....................!

உணவை விரயமாக்காதீர்........
சிதறிகிடக்கும் சோறு ஒவ்வொரும்......
இறந்து கிடக்கும் விவசாயியின்......
உடல் என்பதுபோல் கற்பனை செய்.....
உன்னை அறியாமல் கண்ணீர் வரும்.......
அரியும் சிவனும் சேர்ந்ததே "அரிசி"....
ஒவ்வொரு சோறும் இறைவன்.............!

&&&
கவிப்புயல் இனியவன்
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

  • தொடங்கியவர்

----------------
கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
----------------

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு 
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி 
தனியாக பேசி இன்பம் காணாமல் 
துணையாக பேசி இன்பம் காண்போம் வா 
-------------------------------------!
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே 
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே 
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் 
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் 
-------------------------------------!
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் 
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது 
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
------------------------------------!
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
-----------------------------------!
&
காதல் வெண்பா 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் அன்புள்ள ரசிகனுக்கு
கவிப்புயல் எழுதும் கவிதை 
---------------------------------------
ஒரு
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள் 
என்னை ஊனமாக்கி மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!

#

என்இரவுகளின் வலி......
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும்..... 
இதயத்துக்கு புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!

#

என்
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!

#

வேதனையில்
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!

#

பள்ளி
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...
ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!

#

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!

#
என்
கவிதைகள் பூத்துகொண்டே .....
இருக்கிறது பூ என்றால் வாடும் ....
மீண்டும் மரத்தில் பூக்கும் ....
பாவம் இதயம் முள் வேலிக்குள்...
சிக்கிதவிர்க்கிறது.....
இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...
துளிர்விடாமல் இருக்காது ....
என்னவள் மீண்டும் வருவாள் என்று ...
இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....
ரசிகனே நீதான் துணை ....!

^^^
என் அன்புள்ள ரசிகனுக்கு
கவிப்புயல் எழுதும் கவிதை

  • தொடங்கியவர்

நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!

ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!

உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!

^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

தந்தை....! அப்பா...! தந்தை.....!
-----------------------------------

அம்மாவை .......
இழந்து நான் வேதனைபடுவதை.....
காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்.....
அப்பா படும் வேதனையை தான்.....
தங்க முடியவில்லை.........!

^^^

பிள்ளை தான் படும்வேதனையை.......
அனுபவிக்க கூடாது என்பதற்காய்.....
தன் தொழிலையே மறைப்பவர்.....
தந்தை.....! 

^^^

தந்தையின் தியாகம்.......
தந்தை இறந்தபின் தான்.......
முழுமையாக தெரிகிறது......
தந்தையாய் இருக்கும் போது.....
ரொம்ப வலிக்கிறது......
தந்தைகாய் செய்ததென்ன...?

^^^

கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
-----------------------

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!

-------

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!

-------

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!

^^^
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
---------------------------------------------

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
குற்றும் உணர்வை தா......!

^^^
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதை
^^^

உன் நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

தீயால் 
சூடுபட்டிருகிறேன்.....
வேதனை பட்டிருக்கிறேன்........
அத்தனையும் பெரிதல்ல.....
உன் பிரிவால் தினமும்....
கருகிக்கொண்டிருக்கிறேன்.....
தாங்கமுடியா வலியுடனும்.....
மாறா தழும்புடனும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் கவிதை
^^^

  • தொடங்கியவர்

உன் ........
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!

------

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!

------

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

------

இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!

------

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!

------

காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்


 

  • தொடங்கியவர்

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

------

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!

------

கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!

------

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!

-----

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!

-----

காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

உன் .....
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
 

  • தொடங்கியவர்

காதலில் தோற்ற இதயம்.....
சஹாரா பாலவனம்.....
புரிந்துகொண்டேன்......
உன் காரணமில்லாத.....
பிரிவால் - உன் பிரிவு.....
காயமாக இருந்தாலும்.....
உன் வலிகளில் சுகமும்.....
இருக்கத்தான் செய்கிறது.....
நான் எப்படியோ போகிறேன்....
நீ மட்டும் இதயத்தில்.....
பத்திரமாய் இருக்கிறாய்.....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
 

சேர்ந்து .......
வாழும் காதலில்.....
 சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!

தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

  • தொடங்கியவர்

உன்னை ......
பார்க்கமுன்னர்.....
நான்கு வார்த்தை திட்டனும்.....
நாக்கு புடுங்கும் வகையில்....
கேள்வி கேட்கனும்......
என்றெல்லாம் ஜோசிப்பேன்......
உன்னை கண்ட நொடியில்....
இரக்கத்தோடு பார்க்கும்.....
கண்களாளும்......
படபடக்கும் இதயத்தாலும்....
தோற்றுவிடுகிறேன்.....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

  • தொடங்கியவர்

இன்னும் 
தேடிக்கொண்டு இருக்கிறேன்.......
உன் இதயத்தை கவரும்.....
கவிதை எழுத்தும் வார்தைகளை....
முடியாமல் தவிக்கிறேன்....
உன் காதலுக்காய்.....!

உன் நிவைவுகளை......
தொகுத்து ஒரு அகராதி......
எழுத முடியும் ஆனால்........
உனக்கு என் கவிதை 
பிடிக்கவேண்டுமே..........
தவிக்கிறேன் உனக்காக.....
ஒரு கவிதை எழுத உயிரே....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 05

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.