Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம்

Featured Replies

மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம்

 

இன­வாதம் தொடர்ச்­சி­யாக தலை­வி­ரித்­தாடும் இலங்­கையில் அதன் வளர்ச்­சி­வேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பார­தப்­பி­ர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் பின்னர் எழும் பல இன­வாத கருத்­துக்கள் இந்­நாட்டில் எப்­போதும் ஒரு சமா­தா­னத்­திற்­கான வழி இல்லை என்­ப­தற்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தாக இருக்­கின்­றது. இதன் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தென்­னி­லங்­கையில் தலை­வி­ரித்­தா­டு­கின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் உரு­வ­கித்து வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பார­தப்­பி­ர­தமரின் மலை­யக விஜ­யத்தின் போது அறி­வித்த கருத்­துக்கள் கொழும்பு அர­சி­ய­லிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பத்­தா­யிரம் வீடுகள் உட்­பட இதர சில விட­யங்­களை மலை­ய­கத்­துக்கு வழங்­கு­வ­தாக அவ­ரது அறி­வித்­தலின் பின்னர் பல இன­வா­திகள் தமது கருத்­துக்­களை கக்க தொடங்கி ­விட்­டனர். இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான மலை­ய­கத்­தமிழ் மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­க­ளையும் அவர்­களின் அடிப்­படை அர­சியல் இருப்­புக்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தார்­மீக பொறுப்பும் கடப்­பாடும் இந்­தி­யா­விற்கு இருக்­கின்­றது.

மலை­யக மக்­களின் இருப்­பினை கேள்­விக்­கு­றி­யாக்­கிய ஸ்ரீமா – சாஸ்­தரி ஒப்­பந்­தத்தின் பின்னர் மலை­யகத் தமிழ் மக்கள் இந்­நாட்டில் சனத்­தொ­கையில் இரண்­டா­வது இடத்­தி­லி­ருந்து நான்­கா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்ட விடயம் யாவரும் அறிந்­ததே. அந்த ஒப்­பந்­தமே அம்­மக்­களின் அர­சியல் இருப்­பினை கேள்­விக்­கு­றி­யாக்­கி­ய­துடன் இன அடை­யா­ளத்­தையும் கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இம்­மக்கள் இன்று இலங்­கையில் இருந்­தாலும் இவர்கள் இலங்கைத் தமி­ழர்­க­ளாக முழு­மை­யாக இன்று அங்­கீ­க­ரி­கப்­பட்­டுள்­ளார்­களா? இப்­படி பல தரப்­பட்ட கேள்­வி­களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது இவ்­வா­றி­ருக்க பார­தப்­பி­ர­த­மரின் வரு­கையின் பின்­ன­ரான சில விட­யங்­க­ளைப்­பற்றி இக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டு­கின்றேன்

''பாரதப் பிர­தமர் மோடி மலை­ய­கத்­துக்கு வரு­வ­தனால் மாத்­திரம் எல்லாம் நடந்­து­வி­டுமா?''. இவ்­வா­றா­ன­தொரு கேள்வி அவர் இலங்கை வருமுன் பல­ரது மன­திலும் எழுந்­தது. அது பற்­றிய கருத்து பரி­மாற்­றங்கள் வலைத்­த­ளங்கள், சமூக ஊட­கங்­க­ளிலும் ஆதிக்கம் செலுத்­தி­ன. ஆனால், அவ­ரது விஜ­யத்தின் பின்­னரே 'மலை­யகம்' இன்று சர்­வ­தே­ச­ரீ­தியில் பேசும் அள­வுக்கு வந்­துள்­ள­தனை கடந்­த­வா­ரத்தில் இந்­தி­யாவில் உள்ள பிர­பல ஊட­கங்­களில் மலை­யகம் தொடர்­பாக வெளி­யான பல கட்­டு­ரைகள், நேர்­கா­ணல்கள் என்­பன வெளிப்­ப­டுத்­தி­ன.

ஏன்? உள்­ளூரில் உள்ள ஆங்­கில ஊட­கங்­களில் கூட மலை­யகம் பற்­றி­ய­தான விடயம் அழுத்­த­மாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எப்­ப­டியோ ஒரு பெருந்­த­லை­வரின் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க விஜ­யத்­தினால் இவ்­வ­ளவு காலமும் 'பின்­தங்­கிய' சமூ­க­மாக பேசப்­பட்டு வந்த மலை­யகம் வெளி உல­குக்கும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

அந்த பின்­தங்­கிய சமூ­கத்தின் வளர்ச்சி குறித்து அவர்­களின் நலன் குறித்து அதி­க­ளவு கரி­சனை கட்ட வேண்­டிய இந்­தியா பல அறி­விப்­புக்­களை விடுத்­துள்­ள­மை­யா­னது இங்­குள்ள இன­வா­தி­க­ளுக்கு பெரும் வாத­மா­கவே இருந்­து­விட்­டது. இதே அறி­விப்­பினை தெற்­குக்கு அறி­வித்­தி­ருந்தால் அவர்­களின் மனம் எப்­படி குளிர்ச்­சி­ய­டைந்­தி­ருக்கும் என்று சிந்­தித்துப் பார்க்க வேண்­டிய ஒரு தேவையும் இங்கு எழு­கி­றது. ஆனால், இந்த அறி­விப்பின் பின்னர், ''தெற்­கிற்கு உத­வினால் சகோ­த­ரத்­துவம் ,மலை­ய­கத்­திற்கு உத­வினால் இன­வாதம்'' எனும் தொனியில் கருத்­துக்கள் வெளி­யா­கின்­றன. பொது­வாக தமி­ழர்­க­ளுக்கு வெளி­நா­டுகள் கரி­சனை காட்ட முனையும் போது தென்­னி­லங்கை கொதித்­தெ­ழும்­பு­வது புதி­தான விட­யமும் அல்ல.

மலை­ய­கத்­துக்­கான பத்­தா­யிரம் வீடுகள், இதர வச­திகள் வழங்­கு­வது பற்றி மோடியின் அறி­விப்பின் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கம்மன்பில கூறிய கருத்­துக்கு அமைச்சர் மனோ­க­ணேசன் விடுத்­தி­ருந்த அறிக்­கையின் ஒரு பகு­தியை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும் ''மோடி, மலை­யகம் சென்று, தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 10,000 வீடு­களை அமைத்து தர உறு­தி­ய­ளித்­துள்ளார். அதேபோல், இலங்­கையில், இந்­தியா ஏற்­க­னவே வழங்­கி­வரும் இல­வச அம்­புலன்ஸ் என்ற மருத்­துவ வாகன வச­தியை இன்னும் ஏழு மாகா­ணங்­க­ளுக்கு விஸ்­த­ரிப்­பது தொடர்­பா­கவும் அறி­வித்­துள்ளது. இவை பற்­றிய பின்­ன­ணி­களை அறி­யாமல், புரிந்­து­கொள்ள முயற்சி செய்­யாமல், இத்­த­கைய அறி­விப்­பு­களை செய்ய நரேந்­திர மோடி யார்? இலங்கை இந்­தி­யாவின் 30ஆவது மாநி­லமா? என்ற கேள்­வி­களை எழுப்பி, அதன்­மூலம் இவற்­றுக்கு தவ­றான அர்த்­தங்­களை கற்­பித்து, சிங்­கள மக்­களை தூண்­டி­விடும் முக­மாக, இன­வாத பைத்­தியம் பிடித்த நிலையில் கூட்டு எதி­ரணி எம்.பி உதய கம்­மன்­பில பேசி வரு­கிறார்'' என்று அமைச்­சரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பார­தப்­பி­ர­த­மரின் விஜ­யத்தின் பின்னர் சிங்­கள பத்­தி­ரி­கைகள், சமூக ஊட­கங்­களில் பெரு­ம்பான்மை தரப்­பி­னரால் விடுக்­கப்­பட்ட கருத்­துக்கள் அவர்கள் எவ்­வா­றான ஆத்­தி­ரத்தில் இருக்­கின்­றார்கள் என்று எண்­ணிக்­கொள்­ளலாம். முஸ்­லிம்­க­ளுக்கு அரபு நாடுகள் வீடுகள் கட்டிக் கொடுக்­கின்­றன, வடக்கு கிழக்­கி­லுள்­ள­வர்­க­ளுக்கு டயஸ்­போரா காரர்கள் கட்டிக் கொடுக்­கி­றார்கள், மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு இந்­தியா கட்­டிக்­கொ­டுக்­கி­றது. சிங்­க­ள­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யொரு அநி­யாயம் நடக்­கி­றது என்­ப­தையும் இத்­த­ளங்­களில் சுட்­டிக்­காட்­டத்­த­வ­ற­வில்லை.

இது­வரை இந்­தியா இலங்­கைக்கு வழங்­கிய உதவி நட­வ­டிக்­கை­களில் மலை­ய­கத்­துக்கு எவ்­வ­ளவு வந்து சேர்ந்­தது என்று மலை­ய­கத்தில் இருந்து கேள்வி தான் எழுப்­பி­யி­ருக்­கி­றோமா...? ஆம்!!! பத்­தா­யிரம் வீடுகள் குறித்து பேசு­வ­தற்கு முன்பு இது­வரை இந்­தியா இலங்­கைக்கு எவ்­வா­றான உத­வி­களை வழங்­கி­யுள்­ளது என்­பது பற்றி குறிப்­பிட வேண்­டிய தேவையும் இங்கு எழுந்­துள்­ளது.

யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு 458 மில்­லியன் அமெ­ரிக்க டொலர், இந்­திய வீட­மைப்­புத்­திட்­டத்­திற்கு 1372 கோடி இந்­திய ரூபாய்கள். (இதில் 46,000 வடக்கு, கிழக்கு பகு­திக்கு – 4000 மலை­யகப் பகு­திக்கு) நடை­பெறும் திட்­டங்கள்,- யாழ்ப்­பா­ணத்தில் கலா­சார மத்­திய நிலையம், திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­தினை புன­ர­மைத்தல், வடக்கு, கிழக்கு பகு­தியில் 3000 மழை நீர் சேமிப்­புத்­திட்டம், யுத்தத்தின் பின்னர் வடக்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, சுனாமியின் பின்னர் தெற்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, யாழ்ப்­பா­ணத்தில் கைவி­னைப்­பொ­ருட்­களின் உற்­பத்­தியை செய்யும் கிரா­மங்­களை விருத்தி செய்தல், மட்டு. போதனா வைத்­தி­ய­சா­லையில் சத்­தி­ர­சி­கிச்சை பிரிவு ஒன்றை அமைத்தல், இலங்கை மாண­வர்­க­ளுக்கு இந்­தி­யாவில் புல­மைப்­ப­ரிசில் பரீட்சை (இதில் சிங்­கள மாண­வர்­களும் அடக்கம்), மாத்­தளை, மகாத்மா காந்தி நிலையம், மேல்­மா­கா­ணத்­திற்கு மாத்­திரம் இந்­தியா வழங்கி வந்த அம்­புலன்ஸ் சேவைத் திட்டம் இப்­போது எல்லா மாகா­ணங்­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

றுஹுணு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ரவீந்­தி­ரநாத் தாகூரின் பெயரில் கேட்போர் கூடம், அம்­பாந்தோட்­டையில் கைவி­னைப்­பொ­ருட்­களின் உற்­பத்­தியை செய்யும் கிரா­மங்­களை விருத்தி செய்தல், அம்­பாந்தோட்­டை­யில் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் சைக்­கிள்கள் போன்­ற­வற்றை வழங்­கி­வைத்­தமை, பொல­ன­று­வையில் பல்­லின மாண­வர்கள் கற்கும் பாட­சாலை ஒன்றை விருத்தி செய்தல் இந்த திட்­டங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது மலை­ய­கத்­திற்­கான 10000 வீடுகள் என்­பது இந்­திய உத­வித்­திட்­டத்தின் சிறு பகு­தியே..

இந்­தியா இலங்­கையில் காலங்­கா­ல­மாக தனது உரித்தை நிலை­நாட்­டவும் தனது கையை வைத்­தி­ருப்­ப­தற்கும் இலங்­கையின் பிரச்­சி­னை­களை கையாண்டு வந்­தி­ருக்­கி­றது. யுத்­தத்தின் பின்னர் இப்­போது மீண்டும் மலை­ய­கத்தில் இந்­தியா நுழைந்­தி­ருக்­கி­றது, மலை­ய­கத்­துக்கு வந்த முத­லா­வது இந்­தியப் பிர­தமர் மோடி. நேரு இலங்கை வந்­தி­ருந்த போது அவர் பிர­த­ம­ராக இல்லை என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது. தனது பிடியை வைத்­தி­ருக்க வேண்­டு­மென்றால் முழு­மை­யாக அந்த பிரச்­சி­னையை இந்­தியா தீர்க்­கவும் விரும்­பாது. தீர்க்க விரும்­பி­யதும் இல்லை. எனவே தான் இந்­தியா மலை­யக விட­யத்­திலும் இம்­முறை நிரந்­தர அர­சியல் தீர்வு விடயம் குறித்து ஒன்றும் பண்­ண­வு­மில்லை. அதற்­கான சிறு சமிக்ஞையைக் கூட காட்­ட­வு­மில்லை. ஆனால், நிவா­ரண விட­யங்­களில் அது கவனம் செலுத்­தி­யி­ருக்­கி­றது.

காலங்­கா­ல­மாக இந்த நிவா­ரண அர­சி­ய­லுக்குள் சிக்கித் தவித்து, அடிப்­படை அர­சியல் தீர்வை அடுத்­த­டுத்த நிலைக்கு தள்­ளிய கைங்­க­ரி­யத்தை மலை­யக அர­சியல் தலை­வர்­களும் காலங்­கா­ல­மாக செய்து வந்­தி­ருக்­கி­றார்கள். “நிவா­ரண அர­சி­ய­லுக்கு” மலை­யக மக்கள் பழக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை இந்­தி­யாவும் நன்­றாக தெரிந்­துதான் வைத்­தி­ருக்­கி­றது. அது மக்கள் மத்­தியில் எவ்­வா­றான வர­வேற்பை கொடுக்கும் என்­ப­தையும் அறிந்து வைத்­துள்­ளது.

ஏன், அதற்­கான தேவையும் இருக்­கவே செய்­கி­றது. ஆனால், அதைத் தாண்டி ஏன் இந்­தி­யாவால் எதையும் செய்ய முடி­வ­தில்லை என்­பதே நமக்கு இருக்கும் அடுத்த கேள்வி. பேரி­ன­வா­த­ம­யப்­பட்ட இலங்­கையின் அர­சியல் இயந்­திரம் மலை­யக மக்­க­ளுக்கு இத்­தனை காலம் செய்து கொடுக்­கா­ததைத் தான் இன்­னொரு நாடு வந்து செய்து தந்து போயி­ருக்­கி­றது.

சிங்­கள மக்­களின் வரிப்­ப­ணத்தில் அல்ல இந்த வீடு, ஆஸ்­பத்­திரி, கல்வி போன்ற அடிப்­படை வச­திகள் செய்­து­கொ­டுக்­க­ப்ப­டு­கின்­றன என்­ப­தையும் பேரி­ன­வாத சக்­தி­க­ளுக்கு நினை­வு­றுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

மலை­ய­கத்தில் நிலவும் உயர்­தர பாடங்­க­ளுக்­கான கணித, விஞ்­ஞான பிரி­வுக்­கான பட்­ட­தாரி ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையின் கார­ண­மாக இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் கோரி­யி­ருந்தார். மோடி விஜயம் செய்த காலத்­தி­லேயே இந்த செய்­தியும் வெளி­யா­கி­யிருந்­ததால் ஒட்­டு­மொத்த இந்­திய எதிர்ப்பு வாதத்­துடன் இத­னையும் இன­வா­திகள் சேர்த்துக் கொண்­டார்கள். இந்­தி­யாவின் கால­ணி­யாக இலங்­கையை ஆக்­கி­வி­டு­வதில் மலை­யகத் தலை­வர்கள் எத்­த­னிக்­கி­றார்கள் என்றும் பிரச்­சாரம் செய்­யப்­பட்­டது.

இலங்­கையின் அர­சியல் இயந்­திரம் மலை­யக மக்­க­ளையும் சமத்­து­வ­மாக நடத்­தி­யி­ருந்தால் ஏன் இந்த உத­வி­களை ஏற்க வேண்டும். சாதா­ரண அடிப்­படை உரி­மை­க­ளுக்­கா­கவும் போரா­டிக்­கொண்டே இருப்­பதை வாழ்க்­கை­யாகக் கொண்ட மக்­களின் முன் உள்ள தெரிவு தான் என்ன. நாட்டில் சுதந்­திரக் கல்வி ஆரம்­பிக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் ஆகியும் அதன் உள்­ள­டக்­கத்தை மலை­யகம் எட்­டு­வ­தற்கு பல ஆண்­டுகள் போராட வேண்­டி­யி­ருந்­தது. இன்றும் மலை­ய­கத்­துக்கு முழு­மை­யாக போய் சேர­வில்லை. இப்­படி அடுக்­கிக்­கொண்டே போகலாம்.

பார­தப்­பி­ர­தமர் மோடியின் இலங்கை விஜயம் வெசாக் நிகழ்­வு­களை மையப்­ப­டுத்தி அமைந்­தது. மலை­யக விஜயம் இரண்­டாம்­பட்ச நிகழ்ச்­சி­நிரல் தான். இந்த பயணம் நேர­டி­யாக மலை­ய­கத்தை மட்­டுமே மையப்­ப­டுத்தி நிகழ்ந்­தி­ருந்தால். அதன் அர­சியல் விளை­வுகள் வேறு மோச­மான வடி­வத்தைத் தந்­தி­ருக்கும் என்­பதை இப்­போது எழும் இன­வாதக் கருத்­துக்கள் மூலம் அறி­யலாம்.

மோடியின் வரு­கையை ஏற்­க­னவே எதிர்க்கத் தொடங்­கி­யி­ருந்­தார்கள் இந்­திய எதிர்ப்பு பெரும்­பான்மை சக்­திகள். இந்­தி­யா­வோடு மேற்­கொள்­ள­வி­ருக்கும் ஒப்­பந்­தங்கள் உட்­பட பல­த­ரப்­பட்ட விட­யங்­க­ளையும் கறுப்பு கலரை மையப்­ப­டுத்தி கருத்­துக்­களை தெரி­வித்­தார்கள். ஆனால், இறு­தியில் நடந்தது ஒன்றுமில்லை.

இதனை கடந்த வாரங்களில் பல செய்திகள் வெளிப்படுத்தியிருந்தன. இந்த இன­வாத நோக்கம் இருக்கும் வரைக்கும் இலங்கை அர­சி­யலில் எந்­த­வொரு சமா­த­ானத்­து­வத்­தையும் உரு­வாக்க முடி­யாது. இன­வாத பேச்­சுக்­காக விஜயன் இந்­தி­யாவில் இருந்து வந்தார் என்று மகா­வம்சம் குறிப்­பிட்­டி­ருப்­ப­தையே பொய் என ஞானசார தேரர் சொல்­வ­தற்கு கூட தயங்­க­வில்லை என்­பதை அண்­மையில் அமைச்சர் மனோ­வு­ட­னான வாக்­கு­வா­தத்தில் அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

குறு­கிய அர­சியல் இலா­பத்­துக்­காக எழும் தொடர் இன­வாத பார்­வையின் கண்­ணோட்­டமே தொடர்ச்­சி­யாக இந்த நாட்டை இதே நிலை­மையில் வைத்­தி­ருப்­ப­தற்கும் சமா­தா­ன­மற்ற நாடா­கவும் ஒரு இன வன்­மு­றைக்கான அறி­கு­றி­யாக தொடர்ச்­சி­யாக தெரி­கின்­றது.

 

இந்­நி­லை­மையின் உச்ச கட்டம் கடந்த ஆட்­சியில் இருந்­த­மை­யி­னா­லேயே அந்த ஆட்சி ஆட்டம் கண்­ட­துடன் அதன் விளை­வாக மாற்­றமும் ஏற்­பட்­டது. இந்த ஆட்­சி­யிலும் இந்­நிலை தொடர்­வதை இந்­நல்­லாட்சி அனு­ம­திக்­கு­மானால் கடந்த ஆட்சியில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இந்த ஆட்சி அமையாது.

– ஜீவா சதாசிவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.