Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா?

Featured Replies

புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா?

 
புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா?
 

எதிர்க்­கட்சி என்­றால் தின­மும் அர­சுக்கு எதி­ராக ஏதா­வது ஒன்­றைச் செய்­து­கொண்டே இருக்க வேண் டும், எதை­யா­வது பேசிக்­கொண்டே இருக்க வேண்­டும், அரசு கொண்டு வரும் சகல வேலைத் திட்­டங் களை­யும் எதிர்க்க வேண்­டும், அவற்­றில் இருக்­கும் குறை­களை மாத்­தி­ரம் தேடிப் பிடித்து விமர்சிக்க வேண்­டும்.

இது­தான் எதிர்க் கட்­சிக்­கான எழு­தப்­ப­டாத விதி.அவ்­வாறு இருந்­தால்­தான் எதிர்க்­கட்சி என்று ஒன்று இருப்­பதை மக்­கள் உணர்­வர். ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கும் அந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­தான் உத­வும்.

மகிந்­த­வின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டதும் இவ்­வா­று­தான். மகிந்­த­வுக்கு எதி­ரா­கப் பேசிப் பேசித்­தான் அவரை வீட்­டுக்கு அனுப்பி வைத்­தார்­கள்.அவ­ரது ஒவ்­வொரு வேலைத் திட்­ட­மும் விமர்ச்­சிக்­கப்­பட்­டது; ஊழல் மோச­டி­கள் வெளி­யில் கொண்டு வரப்­பட்­டன.அதே­வே­லை­யைத்­தான் மகிந்த அணி­யும் இப்­போது கூட்டாட்சி அர­சுக்கு எதி­ரா­கச் செய்­கின்­றது.
ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு அடுத்த மாதமே மத்­திய வங்கி பிணை முறி மோசடி என்­றொரு துருப்­புச் சீட்டு மகிந்த அணிக்­குக் கிடைத்­தது.அதை வைத்­துக்­கொண்டு அர­சுக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடக்கி வைத்­த­னர்.அவர்­கள் இன்­று­வரை அந்­தப் போராட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன் கொண்டு செல்­வ­தற்கு ஏது­வாக பல விட­யங்­கள் நடந்­துள்­ளன.அவை அனைத்­தை­யும் ஒவ்­வொன்­றா­கப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

மத்­திய வங்கி மோச­டி­யைத் தொடர்ந்து அம்­பாந்­தோட்டை துறை­ மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கு­தல், திரு­கோ­ண­மலை எண்­ணெய்க் குதங்­களை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­தல்,அரச நிறு­வ­னங்­களை தனி­யார் மயப்­ப­டுத்­து­தல் மற்­றும் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­றல், சைட்­டம் மருத்­து­வக் கல்­லூரி விவ­கா­ரம், அமைச்­சர்­க­ளுக்­கான வாகன இறக்­கு­மதி,போர்க்­குற்­றச்­சாட்டு,தேர்­தல் ஒத்­திப்­போ­டல் மற்­றும் புதிய அர­ச­மைப்பு என இந்த அர­சு­டன் தொடர்­பு­டைய அனைத்து விட­யங்­க­ளை ­யும் மகிந்த அணி பயன்­ப­டுத்தி அர­சி­யல் செய்து வரு­கின்­றது.

அவற்­றுள் இப்­போது முக்­கி­ய­ மா­னது, புதிய அர­ச­மைப்­புக்­கான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யா­கும்.இந்த அர­ச­மைப்புத் தொடர்­பில் எவ்­வா­றெல்­லாம் கதை­க­ளைக் கட்­டி­விட முடி­யுமோ அவ்­வா­றெல்­லாம் கதை­க­ளைக் கட்டி தெற்­கில் பரப்­புரை செய்து வரு­கின்­ற­னர்.தங்­க­ளின் முழு­மை­யான கற்­பனா சக்­தி­யைப் பயன்­ப­டுத்தி தீவிர பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அடிப்­படை ஆதா­ரங்­கள் எவை­யு­மின்றி- இந்­தப் பொய்ப் பரப்­பு­ரை­கள் தெற்­கில் கொடி கட்­டிப் பறக்­கின்­றன.பௌத்த மதத்­தின் முக்­கிய பீடங்­கள் கூட குழம்­பிப் போகும் அள­வுக்கு இந்­தப் பரப்­பு­ரை­கள் அமைந்­துள்­ளன.

அரசு கூறு­வ­து­போல் இன்­னும் பிறக்­காத குழந்­தைக்­குப் பெயர் வைக்­கும் வேலை­யைத்­தான் இந்த மகிந்த அணி செய்து வரு­கின்­றது.ஆனால், பிள்­ளை­யைக் கண்­ணில் காட்­டா­மல் பிள்ளை பிறந்­து­விட்­டது என்று மகிந்த அணி வாதி­டு­கின்­றது. ஆனால் பிள்ளை பிறந்­த­ தற்­கான ஆதா­ரம் எது­வும் அவர்­க­ளி­டம் இல்லை.

இந்த அர­ச­மைப்பை அவர்­கள் எதிர்ப்­ப­தற்கு இரண்டு விட­யங்­களை அவர்­கள் நியா­யப்­ப­ டுத்­து­கின்­ற­னர்.ஒன்று கூட்டாட்சி அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரப் பகிர்வு; மற்­றை­யது, பௌத்த மதத்­துக்கு இருக்­கின்ற முதன்மை இடம் நீக்­கப்­ப­டல்.

கூட்­டாட்­சித் தீர்வு

உண்­மை­யில் புதிய அர­ச­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டு­மாக இருந்­தால், அதற்­கான முக்­கிய கார­ணம் வடக்கு- கிழக்­குக்கு அர­சி­யல் தீர்வை வழங்­கும் நோக்­கம்­தான். இந்­தத் தீர்வு கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லேயே இருக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பும், ஒற்றை ஆட்­சி­யின் அடிப்­ப­டை­யில்­தான் தீர்வு வழங்­கப்­ப­டும் என்று அர­சும் கூறி வரு­கின்­றன.
ஒற்­றை­யாட்­சி­தான் என்­பது அர­சின் உறு­தி­யான நிலைப்­பா­டா­ கும். ஒற்றை ஆட்சி என்ற தலைப் பின்­கீழ் கூட்­டாட்­சித் தீர்வே வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்று மகிந்த அணி கூறு­கின்­றது.

அது மாத்­தி­ர­மன்றி,போர்க்­குற்­றச்­சாட்டு,காணா­மல் போனோர் விவ­கா­ரம் மற்­றும் தமி­ழர் கைவ­சம் இருக்­கும் நிலப்­ப­ரப்பு போன்­ற­வற்றை சாத­க­மா­கக் கொண்டு வடக்­கு-­­கி­ழக்­கைத் தனி நாடாக உரு­வாக்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­டு­கின்­றன என்­றும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உள்­ளிட்ட சட்­ட­வாக்க மற்­றும் நிதி அதி­கா­ரங்­க­ளும் அதற்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் மகிந்த அணி கூறு­கின்­றது.

மேற்­கு­றிப்­பிட்­ட­வற்­றுள் ஒன்­றைக்­கூட வழங்க இந்தச் சிங்­கள அரசு தயா­ரில்­லாத நிலை­யில்,ஒரு நாட்­டையே உரு­வாக்­கிக் கொடுக்­கப் போகின்­றது என்­ப­தும், மேல­தி­க­மாக இன்­னும் அதி­கா­ரங்­க­ளைக் கொடுக்­கப் போகின்­றது என்­ப­தும் குழந்­தை­கள்­கூட நம்­ப மறுக்கும் விட­யங்­க­ளா­கும்.

பௌத்த மதத்­துக்கு ஆபத்தா?

மகிந்த அணி­யி­ன­ரின் மற்­றொரு கற்­ப­னைக்­க­தை­தான் பௌத்த மதத்­துக்கு இருக்­கின்ற முதன்மை நிலை நீக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற கருத்து.தமது மதத்­தின்­மீது கைவைத்­தால் அந்த மதத்­தைச் சேர்ந்­த­வர்­கள் எவ­ரும் அத­னைத் தாங்­கிக்­கொள்­ள­மாட்­டார்­கள் என்ற யதார்த்­தத்­தைக் கையில் எடுத்து ,சிங்­கள பௌத்­தர்­களை அவர்­கள் உசுப்­பேத்தி வரு­கின்­ற­னர்.

பௌத்த அரசு,- பௌத்த மக்­க­ளின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் உரு­வான அரசு தங்­க­ளின் மதத்­தையே அழிக்­கப் போகின்­றது என்று சொன்­னால் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்­தான் அதை நம்­பு­வர்.
பௌத்த மதத்­துக்கு இருக்­கின்ற முதன்மை இடம் நீக்­கப்­ப­டு­வ­தன் மூ­லம் அர­சி­யல்­ரீ­தி­யாக இந்த அர­சுக்கு ஏதா­வது நன்மை கிடைக்­கு­மாக இருந்­தால், ஓர­ள­வா­வது இந்­தப் பரப்­பு­ரையை நம்­ப­லாம். இத­னால் அர­சுக்கு எந்த இலா­ப­மும் இல்லை என்­ப­து­தான் நிதர்­ச­னம்.

பௌத்த மத­மும்
தமிழ்-­­முஸ்­லிம்
மக்­க­ளின் நிலைப்­பா­டும்

பௌத்த மதத்­தின்­மீது கை வைப்­ப­த­னால், தமிழ்-­­முஸ்­லிம் மக்­க­ளின் ஆத­ரவு அர­சுக்­குக் கிடைக்­குமா என்­றால் அப்­ப­டி­யா­ன­தொரு நிலை அறவே இல்லை.

பௌத்த மதத்­துக்­கான முதன்மை இடம் என்று சொல்­லும்­போது பல விட­யங்­களை இதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பி­ட­லாம்.அவற்­றுள் நடை­மு­றை­யில் நாம் கண்டு வரு­கின்ற சில விட­யங்­களை மாத்­தி­ரம் எடுத்­துப் பார்ப்­போம்.
மாதாந்­தம் வரும் போயா தினம் பௌத்த மக்­க­ளுக்கு உரி­ய­தா­கும்.அது அரச விடு­மு­றையாக ஆக்­கப்­பட்­டுள்­ளது.இந்த அரச விடு­முறை பௌத்த மதத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள முதன்மை நிலை­யா­கும். இதற்கு எதி­ராக ஏனைய மதங்­கள் குரல் எழுப்­பு­கின்­ற­னவா என்­றால் இல்­லவே இல்லை என்­பதே அதற்­கான பதில்.
போயா தினத்­தில் இறைச்­சிக் கடை­கள் அனைத்­தும் மூடப்­ப­டும்.இத­னால் இந்த இறைச்­சிக் கடை­களை நடத்­தும் முஸ்­லிம்­கள் ஒரு­போ­தும் அசௌ­க­ரி­யம் அடைந்­த­தில்லை.

அதே­போல் வெசாக் மற்­றும் பொசன் தினங்­க­ளும், அந்­தத் தினங்­க­ளில் வழங்­கப்­பட்டு வரும் அரச விடு­மு­றை­க­ளும் பௌத்த மதத்­துக்­கான முதன்மை இடங்­க­ளாக இருக்­கின்­றன.இந்­தத் தினங்­க­ளில் இடம்­பெ­றும் கொண்­டாட்­டங்­க­ளால் ஏனைய மதங்­க­ளைப் பின்­பற்­று­வோர் பாதிக்­கப்­ப­டு­வ­தில்லை.

இத்­த­கைய பின்­பு­லத்­தில் எவ­ரு­டைய நன்­மைக்­காக இந்த அரசு பௌத்த மதத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப் போகின்­றது என்ற கேள்வி எழு­கின்­றது.அந்­தக் கேள்­வியை சிங்­கள மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தம்­மைத்­தாமே கேட்­டுக் கொண்­டால், தங்­க­ளது அர­சி­யல் இருப்­புக்­கா­க-க் குறு­கிய அர­சி­யல் இலா­பத்­துக்­காக மகிந்த அணி­யி­னர் நடத்­தும் போலி நாட­கம்­தான் இந்­தப் போலிப் பரப்­புரை என்­பதை அவர்­கள் விளங்­கிக்­கொள்­வர். மகிந்த அணி­யி­ன­ரின் இவ்­வா­றான பரப்­பு­ரை­க­ளை­யெல்­லாம் முறி­ய­ டித்­து -­­பௌத்த மக்­க­ளுக்கு உண்மை நிலை­மை­யைத் தெளி­வு­ப­டுத்தி, இந்த நாட்­டுக்­கும் சிறு­பான்மை இன மக்­க­ளுக்­கும் நன்­மை­ ப­யக்­கக்­கூ­டிய புதிய அர­ச­மைப்பை இந்த அரசு கொண்டு உரு­வாகுமா? என்­ப­தைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

http://uthayandaily.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.