Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தஸநாயக்க கடத்தப்பட்ட இருவரின் உறவினரை அழைத்து பேசமுற்பட்டார்

Featured Replies

தஸநாயக்க கடத்தப்பட்ட இருவரின் உறவினரை அழைத்து பேசமுற்பட்டார்

p10-8e2e167083f5400c3be2cb44286efc44f04936c6.jpg

 

பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு; அனைவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் தஸ­நா­யக்க, கடத்­தப்­பட்ட 11 பேரில் உள்­ள­டங்கும் தந்தை, மகன் உற­வை­யு­டைய அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோரின்

உற­வி­னரை கொழும்­புக்கு அழை த்து பேசு­வ­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்ளார். இதுதொடர்பில் அமலன் லியோ னின் மனைவி,கடத்­தப்­பட்­டோ­ருடன் தொடர்பில் 

 இருந்­த­தாக கூறப்­படும் வெளி­நாட்­டவர் ஒரு­வரை திரு­ம­லையில் இருந்து கொழும்­புக்கு அழைத்து வர நீர்­கொ­ழும்பை சேர்ந்த எண்டன் பெர்­னாண்டோ எனும் நபர் ஊடாக முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கடத்­தப்­பட்ட அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோரை விடு­விக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறியே இந்த ஏற்­பாடு நடை பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் எண்டன் பெர்­னாண்டோ, அமலன் லியோனின் மனை­வியின் வாக்கு மூலங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே தஸ­நா­யக்­க­வுக்கு இந்த கடத்­தல்கள் தொடர்பில் சுமத்­தப்­பட்­டுள்ள மனிதக் கொலை­க­ளுக்கு சதித் திட்டம் தீட்­டி­யமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எவ்­வித அடிப்­ப­டையும் இல்லை என சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன நேற்று கோட்டை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச்­செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது 7 ஆவது சந்­தேக நப­ரான தச­நா­யக்­கவின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, தஸ­நா­யக்­க­வுக்கு எதி­ராக எந்த ஆதா­ரமும் இல்லை எனவும் மகேஷ் குமார என்­ப­வரின் வாக்கு மூலத்தை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவரை சிறையில் வைப்­பது அநீ­தி­யா­னது எனவும் வாதிட்டார். இந்த நிலை­யி­லேயே பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்ன தஸ­நா­யக்­க­வுக்கு எதி­ரான மேலும் சில ஆதா­ரங்­களை வெளிப்­ப­டுத்தி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த 11 பேர் கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­ன­ய­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்­ட­ராக ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ, கித்­சிறி ஆகி­யோ­ருடன் கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சா­ளரும் சிறப்பு புல­னாய்வு நட­வ­டிக்கை பிரிவு மற்றும் சிறிய பட­குகள் படை­யணி தொடர்­பி­லான பிர­தா­னி­யா­கவும் செயற்­பட்ட கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சம்பத் முன­சிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றனர்.

 நேற்­றைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது சந்­தேக நபர்கள் மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் , ஏழா­வது சந்­தேக நப­ரான தஸ­நா­யக்க அம்­பி­யூலன்ஸ் வண்­டி­யி­லேயே மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் இருந்து இறங்­காத அவரால் நடக்க முடி­யாது என நீதி­வா­னுக்கு சட்­டத்­த­ர­ணிகள் குறிப்­பிட்ட நிலையில் அம்­பி­யூலஸ் வண்­டிக்கு அருகே சென்று நீதிவான் தஸ­நா­யக்­கவை பரி­சோ­தித்தார்.

இத­னை­ய­டுத்து தஸ­நா­யக்­கவின் உடல் நிலை, அவரால் திறந்த மன்றில் ஆஜ­ராக முடி­யாமை தொடர்பில் சிறப்பு மருத்­துவ அறிக்­கையை எதிர்­வரும் தவ­ணையில் மன்றில் சமர்­பிக்க சிறைச்­சாலை வைத்­திய அத்­தி­யட்­ச­ருக்கு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

நேற்று சிறப்பு மேல­திக அறிக்­கை­யுடன் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க தலை­மையில் உப பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான உபாலி பண்­டார, ஓ.எச்.உபாலி ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

 கைது செய்­யப்­பட்ட தஸ­நா­யக்­க­விடம் எதிர்­வரும் 31, ஆகஸ்ட் 1,2 ஆம் திக­தி­களில் சிறைச்­சா­லையில் சிறப்பு விசா­ர­ணையை நடாத்தி வாக்கு மூலம் பெற வேண்டும். எனவே அதற்கு அனு­மதி வழங்­குங்கள் என இவர்கள் கோரினர். அந்த கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட நீதிவான் அதற்கு அனு­மதி வழங்­கினார்.

இத­னை­ய­டுத்து தஸ­நா­யக்க சார்பில் மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா,

எனது சேவைப் பெறு­ந­ரான தச­நா­யக்­க­வுக்கு எதி­ராக கொலைக்கு சதித்­திட்டம் தீட்­டிய குற்றச் சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்த குற்­றச்­சாட்­டுக்கு பிணை வழங்க முடி­யாதுன். எனினும் அந்த குற்­றச்­சாட்டை சுமத்த போது­மான ஆதாரம் குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் இல்லை. மகேஷ் குமார எனும் கடற்­படை வீரரின் சாட்­சியின் அடிப்­ப­டையில் அமலன் லியோன், ரொஷான் லியோனின் கடத்தல் தொடர்பில் தஸ­நா­யக்­கவின் பெயர் சந்­தேக நபர்கள் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. அமலன், ரொஷான் ஆகியோர் புலிகள் தொடர்­பி­லான தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ள கடற்­படை பயன்­ப­டுத்­திய டபிள் ஏஜட்­டுக்கள். எங்­க­ளுக்கு உதவி புரிந்­த­வரை கொலை செய்ய வேண்­டிய அவ­சியம் எங்­க­ளுக்கு இல்லை.

300 கடல் மைல் தொலைவில் புலி­களின் பட­கு­களை அழிக்க இந்த ஏஜட்­டுக்கள் வழங்­கிய தக­வல்கள் முக்­கிய கார­ண­மாக அமைந்­தன. எமக்கு அவர்­களை கொலை செய்ய எந்த தேவையும் இருக்­க­வில்லை. எதற்­காக நாம் அவர்­களை கடத்தி கொலை செய்ய வேண்டும். என தனது வாதத்தை முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்து 2 ஆவது சந்­தேக நப­ரான ரண­சிங்க சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ரசிக பால­சூ­ரிய கருத்­துக்­களை முன்­வைத்தார். கடத்­தப்­பட்­ட­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் திரு­மலை முகாமில் இரண்டாம் நிலை கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட வெல்­கெ­தர என்­ப­வரை ஏன் கைது செய்­ய­வில்லை. அவர் தற்­போது அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்­றுள்ளார். பொலித்­தீனில் சுற்­றப்­பட்டு சட­லங்கள் அங்­கி­ருந்து கெப் வண்­டியில் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அவரே வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். ஏன் அவரை இன்னும் கைது செய்­ய­வில்லை என கேள்வி எழுப்­பினார்.

இத­னை­ய­டுத்து மூன்றாம் சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணி­யான அசித் சிறி­வர்­தன, எனது சேவைப் பெறு­ந­ருக்கு எதி­ராக கப்பம் பெற்­றமை தொடர்பில் எந்த ஆதா­ரங்­களும் இல்லை.

கப்பம் கோரி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னாலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பாலும் கூறப்­பட்ட கொத்­த­லா­வ­லகே பந்­து­கு­மார இது வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. அத்­துடன் வத்­த­ளையில் வைத்து கடத்­தப்ப்ட்ட ஜோன் ரீட் மற்றும் அவ­ரது தந்­தையை விடு­விக்க சம்சுன் நிஹா­ரா­விடம் கப்பம் கோரிய அண்­ணாச்சி யார் என இது­வரை சி. ஐ.டி. விசா­ரணை செய்­ய­வில்லை. அப்­படி இருக்­கையில் எம்­மீது வீண் பழி போடு­வது பொருத்­த­மற்­றது.

முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட முறைப்­பா­ட­ளித்த போது வாக்­கு­மூலம் வழங்­கிய அளுத்­கெ­தர உபுல் பண்­டார எனும் கடற்­படை சிப்பாய், தானும் சம்பத் முன­சிங்­க­வுடன் இக்­க­டத்­தல்­க­ளுக்கு போன­தாக கூறி­யிந்தார். அப்­படி இருக்­கையில் தேடப்­படும் சந்­தேக நபர் ஹெட்டி ஆராச்­சி­யுடன் கடத்­த­லுக்கு சென்ரோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் சம்பத் முன­சிங்­க­வுடன் சென்ற அலுத்­கெ­தர உபுல் பண்­டார கைது செய்­யப்­ப­ட­வில்லை. இது என்ன நியாயம் என கேள்வி எழுப்­பினார்.

இத­னை­ய­டுத்து சம்பத் முன­சிங்க சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி நிரோஷன், ஊட­கங்கள் வாயி­லாக தனது சேவை பெறுநர் தொடர்பில் தவ­றான பிர­சாரம் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாக கூறி மன்றில் விசா­ர­ணையில் உள்ள வழக்கு தொடர்பில் இவ்­வாறு கருத்து தெரி­விப்­பது மன்றை அவ­ம­திக்கும் செயல் என வாதிட்டார். எனினும் அவ­ரது கோரிக்­கையை எழுத்து மூலம் சமர்­பிக்க நீதிவான் கோரினார்.

 இந் நிலையில் ஏனைய சந்­தேக நபர்­களின் சட்­டத்­த­ர­ணி­களும், ஊட­கங்கள் வாயி­லான குறித்த விவ­காரம் தொடர்பில் பல்­வேறு விசா­ரணை தக­வல்கள் வெளி­ப­டுத்­தப்­ப­டு­வதன் ஊடாக தமது தரப்­பினர் அசெ­ள­க­ரி­யங்­களை சந்­திப்­ப­தாக கூறி அதற்கு கட்­டுப்­பாடு விதிக்க உத்­த­ரவைப் பெறுக்­கொள்ள முயற்­சித்­தனர்.

இந் நிலையில் மன்­றுக்கு கருத்து முன்­வைத்த பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன, ஊட­கங்­க­ளுக்கு கட்­டுப்­பாடு விதிக்க முடி­யாது என கருத்­து­ரைத்தார். ஊட­கங்கள் மன்றில் நடை பெறு­வ­தையும் அவர்­க­ளுக்கு கிடைக்கும் தக­வல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வது எந்த வகை­யிலும் வழக்­கிற்கு பாதிப்­பில்லை எனவும் அவர்­க­ளுக்கு தடை விதிக்க நீதி­மன்­றுக்கு அதி­காரம் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.

அத்­துடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, தஸ­நா­யக்­க­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆதாரம் இல்லை என்­ப­தையும் வன்­மை­யாக எதிர்த்த அவர், முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் தஸ­நா­யக்க, கடத்­தப்­பட்ட 11 பேரில் உள்­ள­டங்கும் தந்தை, மகன் உறவை உடைய அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோரின் உற­வி­னரை கொழும்­புக்கு அழைத்து பேசு­வ­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்ளார். கொழும்பில் பேசு­வ­தற்­காக இது தொடர்பில் தங்­கு­மி­டங்­க­ளையும் ஏற்­பாடு செய்­வ­தாக அவர் கூறி­யுள்ளார். இது தொடர்பில் அமலன் லியோனின் மனைவி, கடத்­தப்­பட்­டோ­ருடன் தொடர்பில் இருந்­த­தாக கூறப்­படும் வெளி­நாட்­டவர் ஒரு­வரை திரு­ம­லையில் இருந்து கொழும்­புக்கு அழைத்து வர நீர்­கொ­ழும்பை சேர்ந்த எண்டன் பெர்­னாண்டோ எனும் நபர் ஊடாக முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கடத்­தப்­பட்ட அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோரை விடு­விக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறியே இந்த ஏற்­பாடு நடை பெற்­றுள்­ளது. இது தொடர்பில் எண்டன் பெர்­னாண்டோ, அமலன் லியோனின் மனை­வியின் வாக்கு மூலங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே தஸ­நா­யக்­க­வுக்கு இந்த கடத்­தல்கள் தொடர்பில் சுமத்­தப்­பட்­டுள்ள மனிதக் கொலை­க­ளுக்கு சதித் திட்டம் தீட்­டி­யமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ட்டுள்ளது. எனவே தஸநாயக்கவுக்கு இந்த கடத்தல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள மனிதக் கொலைகளுக்கு சதித் திட்டம் தீட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்பதை நாம் ஏற்க முடியாது.அன்று முதல் பல்வேறு சாட்சியங்கள் அம்பலத்து வந்த நிலையிலேயே தஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அம்பியூலன்ஸ் வண்டியில் உள்ளார். ஏன் அவருக்கு மட்டும் சிறப்பு சலுகை. பயிற்சிக்காக வெளிநாடு போக தஸநாயக்க கோரினார். தற்போது வைத்தியசாலையில் நடக்கக் கூட முடியாது என கூறுகின்றனர். நோயாளிக்கு எப்படி வெளிநாட்டுக்கு பயிற்சிகளுக்கு செல்ல அனுமதிப்பது.

தஸநாயக்க கைது செய்யப்படுவதை அறிந்தே வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் போய் சிகிச்சைகளுக்கு அவர் முன்னிலையானார். எனவே அவரது உடல் நிலைமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி ஊடாக சிறப்பு அறிக்கையை மன்று கோர வேண்டும் என வாதிட்டார்.

 இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் தஸநாயக்க தொடர்பில் சிறப்பு வைத்திய அறிக்கையை அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு அது வரை 2 முதல் 7 வரையிலான சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.