Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன்

Featured Replies

அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன்

DSC_0099.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்  ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது  இலங்கையில்  இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே   இலங்கையில் ஏற்பட்டுள்ள  முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்   இரா.சம்பந்தன்  எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அவுஸ்ரேலிய அமைச்சருடன் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளார்.

DSC_0107.jpg

 

DSC_0109.jpg

http://globaltamilnews.net/archives/33510

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மக்களின் சம்மத்துடனான புதிய அரசமைப்பே தேவை

 
மக்களின் சம்மத்துடனான புதிய அரசமைப்பே தேவை
 

அனைத்து மக்களின் சம்மதத்துடனான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசமைப்பு அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமத்துவத்தின் அடிப்படையில் நாட்டில் நிரந்த சமாதானம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலிய அயலுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிசெப், இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினருடன் இன்று சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது.

முக்கியமாக அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகப் பேசப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள், எவ்விதமான பிளவும் ஏற்படாமல் ஒரு புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசமைப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டும். சமாதானம் ஏற்பட்டால்தான் நாட்டுக்கு எதிர்காலம் இருக்கின்றது. பொருளாதார ரீதியில் முன்னேறலாம்.

 

இந்த விடயங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவுபடுத்திக் கூறினோம். இதுவரையில் அனைத்து மக்களின் சம்மதத்துடனும் இந்த நாட்டில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. அந்த நிலைமைதான் நாட்டில் நிலவிய மோதல்களுக்குக் காரணம். அந்தப் பிரச்சினையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வதற்கு அனைத்து மக்களின் சம்மதத்துடன் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டினோம். எமது கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள், மீள்குடியமர்வு போன்ற பல விடயங்களைப் பற்றியும் பேசினோம். தங்களது அக்கறை தொடரும் என்றும் இந்த விடயங்களில் தங்களால் இயன்ற கருமங்களை ஆற்றுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.- என்றார்.

http://newuthayan.com/story/12686.html

  • தொடங்கியவர்
‘ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிபடாது’
 

“ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிபடாது. நாட்டுக்குள் எவ்வித பிளவும் ஏற்படாமல் ஒரு புதிய அரசியல் சானம் உருவாக்கப்பட வேண்டும்” என்று, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜூலி பிஷப்பை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து நேற்று (20) சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். 

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனும் அவருடைய அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின்போது, விசேடமாக, அரசமைப்பு விடயம் சம்பந்தமாக பேசப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிபடாது.  

நாட்டுக்குள் எவ்வித பிளவும் ஏற்படாமல் ஒரு புதிய அரசியல் சானம் உருவாக்கப்பட்டு, அந்த அரசியல் சாசனம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் சமத்துவத்தின் அடிப்படையில், ஒரு நிரந்தரமான சமதானம் ஏற்பட வேண்டும்.  

அவ்விதமான சமாதானம் ஏற்பட்டால் மாத்திரமே, இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன், இந்நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைவதுடன், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முடியும். 

இது விடயம் தொடர்பாக, அவர்களுடன் தெளிவாகப் பேசினோம். இதுவரையில், எல்லா மக்களுடைய சம்மதத்துடனும் இந்நாட்டில் அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. அவ்விதமான ஒரு நிலைமைதான் இந்நாட்டில் நிலவிய மோதல்களுக்கு காரணமாக அமைந்தது. 

ஆகையால், அதை நிரந்திரமாக நீக்கப்பட வேண்டுமாக இருந்தால், அனைத்து மக்களுடைய சம்மதத்துடனும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.  

எமது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே நடக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்” என்றார்.  

“அத்துடன், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், காணி, காணாமல்போனோர், கைதிகள், மீன்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பேசினோம்.  

தங்களுடைய அக்கறை தொடரும் என்றும் இவ்விடயம் சம்பந்தமாக தங்களால் இயன்ற பணிகளை  

 ஆற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” எனவும் அவர் தெரிவித்தார்.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒருமித்த-நாட்டுக்குள்-நாடு-பிரிபடாது/175-201062

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.