Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.அரசியல் செயலரிடம் முறையிட்டது அரசாங்கம்

Featured Replies

ஐ.நா.அரசியல் செயலரிடம் முறையிட்டது அரசாங்கம்

02-8e3c3744910734ae2481d1568dd485040bb2728f.jpg

 

காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர்

(ரொபட் அன்­டனி)

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பென் எமர்சன் உண்­மைக்கு புறம்­பான மற்றும் பொருத்­த­மற்ற சில விட­யங்களை தனது அறிக்­கையில் வெளி­யிட்டி­ருக்­கின்றார். நாம் அது­தொ­டர்பில் ஐ.நா.வின் உயர்­மட்­டத்­திடம் எடுத்­துக் ­கூ­றி­யி­ருக்­கின்றோம். இலங்கை வந்­துள்ள ஐ.நா.வின் அரசியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிசெயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் இது குறித்து அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் ஐ.நா.வின் உறுப்பினர் அல்ல. மாறாக அவர் ஒரு அறிக்­கை­யாளர் மட்­டுமே ஆவார். எனவே அவரின் கருத்­துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்­த­வேண்­டிய  அவ­சி­ய­மில்லை  என்றும் அமைச்சர் ரவி சுட்­டிக்­காட்­டினார்.  

அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வதில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றது. தேரர்கள் முன்­வைக்கும் விட­யங்­க­ளையும் கருத்தில் கொண்டு அர­சாங்கம் இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்தே தீரும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்: கடந்த சில தினங்­களில் இரண்டு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்கள், மற்றும் ஐ.நா.வின் அர­சியல் துறை செயலர் உள்­ளிட்ட பலர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தனர். குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்சர், சிங்­கப்­பூரின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோர் இலங்­கைக்கு வந்­தனர். இவர்­க­ளுடன் பல்­வேறு வித­மான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.   

சிங்­கப்­பூ­ருடன் விரைவில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வுள்ளோம். இது எமது நாட்­டுக்கு பாரிய நன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். அத்­துடன் ஐ.நா.வின் அர­சியல் விவ­கார உதவி செயலர் ஜெப்ரி பெல்ட்டும் இலங்­கைக்கு விஜயம் செய்து நாட்டின் முன்­னேற்ற நிலை­மை­களை பார்­வை­யிட்டார். அந்­த­வ­கையில் வெளி­வி­வ­கார அமைச்­சா­னது வர்த்­தக துறை சார்ந்த இரா­ஜ­தந்­திர கொள்­கையை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம். குறிப்­பாக எமது அமைச்சை செயற்­றிறன் மிக்க அமைச்­சாக மாற்­றி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் வேறு அமைச்­சுக்­களில் பணி­யாற்­று­ப­வர்கள் வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு வந்து சுற்­றுலாப் பய­ணங்கள் மேற்­கொள்ளும் ஒரு இட­மா­கவே வெளி­வி­வ­கார அமைச்சு இருந்­துள்­ளது. அதனை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாங்கள் முன்­னெ­டுத்­துள்ளோம்.

மேலும் ஊட­கங்கள் சில தவ­றான தக­வல்­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. அதா­வது அமைச்­ச­ர­வையில் நடந்த சம்­ப­வங்கள் தொடர்பில் பொய்­யான தக­வல்­களை ஊட­கங்கள் வெளி­யிட்டு வரு­கின்­றன. நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்ற நிலையில் அதனை குழப்­பு­வ­தற்­காக செயற்­ப­ட­வேண்­டா­மென கோரிக்கை விடுக்­கின்றோம். அர­சியல் சுய­லா­பங்­களை கருத்தில் கொண்டு இவ்­வாறு செயற்­ப­ட­வேண்டாம் எனக் கூறு­கின்றோம்.

கேள்வி: இலங்கை வந்­தி­ருந்த ஐ.நா. விசேட நிபுணர் பென் எம்ர்சன் வெலிக்­கடை மற்றும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­க­ளுக்கு சென்­றி­ருந்தார். இதற்­கான அனு­மதி எவ்­வாறு வழங்­கப்­பட்­டது?

பதில்: ஐ.நா. அறிக்­கை­யா­ளர்கள் இலங்கை வரும்­போது அவர்கள் இவ்­வா­றான இடங்­க­ளுக்கு செல்­வ­தற்­கான ஒரு முறைமை காணப்­ப­டு­கின்­றது. அந்த முறை­மையின் அடிப்­ப­டை­யி­லேயே பென் எமர்­சனும் இந்த சிறைச்­சா­லை­க­ளுக்கு சென்­றி­ருந்தார். அதா­வது பொலிஸ் மற்றும் சிறைச்­சாலை விட­ய­தா­னங்கள் சம்­பந்­தப்­பட்ட அமைச்சின் அனு­ம­தி­யு­ட­னேயே அவர் இவ்­வாறு சென்­றி­ருந்தார். அவர் 25க்கும் மேற்­பட்ட இடங்­க­ளுக்கு சென்­றி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி அர­சாங்கத் தலை­வர்­க­ளையும் பல்­வேறு அதி­கா­ரி­க­ளையும் சந்­தித்­தி­ருந்தார். எதிர்க்­கட்சித் தலை­வ­ரையும் ஐ.நா. பிர­தி­நிதி சந்­தித்­தி­ருந்தார். ஆனால் இந்த இரண்டு விட­யங்­களை மட்டும் கையில் எடுத்­துக்­கொண்டு கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. உரிய அனு­ம­தி­களைப் பெற்றே அவர் சிறைச்­சா­லை­க­ளுக்கு சென்­றி­ருந்தார். எவ்­வா­றெ­னினும் அவரின் அறிக்­கையில் சில பொருத்­த­மற்ற விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அது­தொ­டர்பில் ஐ.நா.வின் உயர்­மட்­டத்­திற்கு அறி­வித்­தி­ருக்­கின்றோம். எனவே அங்கு திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கேள்வி: ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சன் கடு­மை­யான சில விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார். இது­தொ­டர்பில் ?

பதில்: அவரின் அறிக்­கையில் சில பொருத்­த­மற்ற விட­யங்கள் இருந்­தன என்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம். நல்ல விட­யங்­களும் இருந்­தன. அதே­நேரம் ஒரு­சில பொருத்­த­மற்ற விட­யங்­களும் காணப்­பட்­டன. எனவே பொருத்­த­மற்ற விட­யங்கள் தொடர்பில் நாங்கள் ஐ.நா.வின் உயர்­மட்­டத்­திற்கு அறி­விப்போம்.

அதா­வது இலங்­கை­தொ­டர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள உண்­மைக்குப் புறம்­பான கருத்­துக்கள் தொடர்பில் தற்­போது இலங்கை வந்­துள்ள ஐ.நா.வின் அர­சியல் உதவி செய­ல­ரிடம் நாம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். அந்த தெளி­வு­ப­டுத்­தல்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஐ.நா. அறிக்­கை­யாளர் என்­பவர் ஐ.நா.வின் உறுப்­பினர் அல்ல. ஒரு சுயா­தீன அறிக்­கை­யாளர் மட்­டு­மே­யாவார்.

கேள்வி: சிங்­கப்­பூ­ருடன் எவ்­வா­றான உடன்­ப­டிக்கை செய்­யப்­ப­ட­வுள்­ளது?

பதில்: சிங்­கப்­பூ­ருடன் மிகவும் பரந்­து­பட்ட ரீதி­யான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இன்னும் சில மாதங்­களில் இந்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும். சிங்­கப்பூர் பல்­வேறு நாடு­களின் நுழை­வா­யி­லாக இருக்­கி­றது. எனவே அந்த நாட்­டுடன் இவ்­வாறு உடன்­ப­டிக்­கையை செய்­வது எமது நாட்­டுக்கு பல நன்­மை­களைப் பெற்­றுத்­தரும். அதனை அறி­விப்­ப­தற்கு சிங்­கப்பூர் வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கை­வந்தார். விரைவில் சிங்­கப்பூர் பிர­த­மரும் எமது பிர­த­மரும் எமது ஜனா­தி­ப­தியும் இந்த உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வார்கள்.

கேள்வி: தேசிய லொத்தர் சபையை ஏன் உங்­க­ளுக்கு கீழ் எடுத்­துக்­கொண்­டீர்கள்?

பதில்: உயர்­கல்வி அமைச்சும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சும் ஒரு­சேர இருப்­பது தொடர்பில் கேள்வி எழுப்­பாத நீங்கள் இது­தொ­டர்பில் மட்டும் கேள்வி எழுப்­பு­வது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. ஒவ்­வொரு அமைச்­ச­ரி­னதும் முகா­மைத்­துவ திறன்­களைப் பொறுத்தே அந்தப் பொறுப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. லொத்தர், முறை­மையை சர்­வ­தேச மயப்­ப­டுத்தும் திட்­டமும் இருக்­கலாம். அதனால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அந்த சபை­களை என்­னிடம் தந்­தி­ருக்­கலாம்.

கேள்வி: 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் என்ன சிக்­கல்கள் உள்­ளன?

பதில்: 2014 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை இலங்­கைக்கு பாத­க­மாக இருந்­தது. அத­னால்தான் 2015 ஆம் ஆண்டு பிரே­ரணை வந்­தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது இவற்றை மிகவும் துள்­ளி­ய­மாக ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இந்த நாட்டை விற்­று­விட்­ட­தாக உள்­நாட்டில் உள்­ள­வர்கள் கூறு­கின்­றனர். ஒன்­றுமே செய்­ய­வில்­லை­யென வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் கூறு­கின்­றனர். எவ்­வா­றெ­னினும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது நான்கு பிரி­வு­களை கொண்­டது. அதில் முக்­கி­ய­மாக காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை குறிப்­பி­டலாம். அது விரைவில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது.

தொடர்ந்து உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­ப­ட­வுள்­ளது. நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கமும் நிறு­வப்­ப­ட­வுள்­ளது. பொறுப்­புக்­கூறல் என்­பது ஒரு­வித்­தி­யா­ச­மான பரந்­து­பட்ட விட­ய­மாகும். அது தொடர்பில் தற்­போ­துநான் எத­னையும் பேசு­வ­தற்கு தயா­ராக இல்லை. எவ்­வா­றெ­னினும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

குறிப்­பாக பொது­மக்­களின் காணிகள் மீள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இரா­ணு­வத்­தினர் தற்­போது வர்த்­தகப் பிர­தே­சங்­களில் இருந்து வெளி­யேறி வரு­கின்­றனர். காணிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. தாமதம் நில­வு­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

கேள்வி: நட்­ட­ஈடு செயற்­பாடு எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும்?

பதில்: யுத்­தத்தில் இழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்குவதற்கான பொறிமுறை முன்னெடுக்கப்படும். அதனுடன் மீள் நிகழாமையும் உறுதிப்படுத்தப்படும். புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி: புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் செயற்பாடானது பாரிய தடைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. தேரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இந்தத் தடைகளைத் தாண்டி எவ்வாறு அரசியலமைப்பு கொண்டுவரப்படும்?

பதில்: புதிய அரசியலமைப்பு வேண்டுமென அனைவரும் கூறுகின்றனர். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப நாங்களும் அவற்றை நோக்கிப் பயணிக்கவேண்டும். எனவே புதிய அரசியலமைப்பு அவசியமாகும். ஆனால் தேரர்கள் தெளிவு உரியமுறையில் கிடைக்காததன் காரணமாக தமது கருத்தை வெளியிட்டிருந்தனர். எனவே அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம். தேரர்களுக்கும் இதன் முன்னேற்றங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவோம். ஜனாதிபதி தேரர்களை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்திருந்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.