Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று

Featured Replies

ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று

 
 
 
ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று
 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமச்சந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

http://uthayandaily.com/story/13896.html

  • தொடங்கியவர்

ஹேமச்சந்திரவின் உடலுக்கு பொலிஸ்மா அதிபர் அஞ்சலி

o
ஹேமச்சந்திரவின் உடலுக்கு பொலிஸ்மா அதிபர் அஞ்சலி
 

நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உப பரிசோதகர் ஹேமச்சந்திரவின் உடலுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மாலை சிலாபத்தில் உள்ள பொலிஸ் உப பரிசோதகரில் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பொலிஸ் மா அதிபர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

20424578_1446118445435739_614607140_o-75

 

http://uthayandaily.com/story/13970.html

  • தொடங்கியவர்

ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் நடைபெறுகின்றன – காணொலி

 
ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் நடைபெறுகின்றன – காணொலி
 

நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உப பரிசோதகர் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் தற்போது நடைபெற்று வருகின்றனர்.

 

வடக்கு மாகாண நீதிபதிகள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளும், பெருமளவான மக்களும் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

image-0-02-06-87974f5a611f6f7b27f2851b6fimage-0-02-06-c4a5e546838a41c98f79b2b0a0image-0-02-06-a0d80b0ac721213ca9768a34da

http://uthayandaily.com/story/14000.html

  • தொடங்கியவர்

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடல் நல்லடக்கம்: யாழ். மக்கள் அஞ்சலி

 


உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடல் நல்லடக்கம்: யாழ். மக்கள் அஞ்சலி
 

யாழ். நல்லூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, இறுதிக்கிரியைகள் நடைபெற்றதுடன், அன்னாரின் பூதவுடல் குமாரகட்டுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவுக்கு யாழ். முஸ்லிம் மக்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் அன்றைய தினம் இரவு உயிரிழந்தார்.

இதேவேளை, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் நேற்று காலை பொலிஸில் சரணடைந்தார்.

யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நல்லூர் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/உப-பொலிஸ்-இன்ஸ்பெக்டர்-ச/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.