Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய தேவை என்ன !விழித்துக்கொள்ளுமா பேரவை?

Featured Replies

தற்போதைய தேவை என்ன !விழித்துக்கொள்ளுமா பேரவை?

 

கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் ஈ.பி.­ஆர்­.எல்.எப்., புளொட், தமி­ழ­ரசுக் கட்சி அதி­ருப்­தி­யா­ளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்­னணி என்­ப­வற்றைக் உள்­ள­டக்­கி­ய­தா­கவும், கல்­வி­யிய­லா­ளர்கள், வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், மனி­த­வு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் என பல்­துறை சார்ந்­த­வர்­க­ளையும் உள்­ள­டக்­கிய மக்கள் இயக்­க­மாக தமிழ் மக்கள் பேரவை உரு­வெ­டுத்­தது. இன்று அதன் உரு­வாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்­கி­றது

தமிழ் தேசிய இனம் தனது உரி­மைக்­காக ஒரு சதாப்த காலத்­திற்கு மேலாக போராடி வரு­கின்­றது. அகிம்சை வழி­யாக தமிழ் தலை­வர்கள் போரா­டிய போது அப்­போது ஆட்­சியில் இருந்த தென்­னி­லங்­கையின் பிர­தான இரு கட்­சி­களும் அதனைக் கண்­டு­கொள்­ள­வில்லை. ஜன­நா­யக நீரோட்­டத்தில் இருந்து உரி­மை­களை கேட்ட தமிழ் தலை­வர்­களை கேலி செய்­த­துடன், அவர்­க­ளது கோரிக்­கை­க­ளையும் உதா­சீனம் செய்து தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆள்­வ­திலும், அவர்­க­ளது ஆட்­புல அடை­யா­ளங்­களை அழிப்­ப­திலும் கவனம் செலுத்­தி­ன. தமிழ் தேசிய இனம் தனக்­கான நிலம், மொழி, கலா­சாரம், பண்­பாடு, அடை­யாளம் என்­ப­வற்றைக் கொண்ட ஒரு தனித் தேசத்­திற்­கு­ரி­ய­வர்கள்.  அவர்­க­ளது தேசத்தை அல்­லது இருப்பை அழித்து, இந்த நாட்டை பௌத்த சிங்­கள நாடாக காட்­டு­வ­தற்கு அடிப்­படை சிங்­கள பௌத்த மேலா­திக்­க­வா­திகள் முனைப்புக் காட்­டினர். அதற்கு மாறி மாறி வந்த தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்­களும் ஒத்­து­ழைத்­தனர். இந்த நிலையில் தமது தேசத்தின் இருப்­பையும், இனத்தின் இருப்­பையும் காப்­ப­தற்கு தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள் ஆயு­த­மேந்திப் போராட வேண்­டிய நிர்­ப்பந்தம் உரு­வா­கி­யது. 

ஜன­நா­யக வழியில் நம்­பிக்­கை­யி­ழந்த தமிழ் இளை­ஞர்கள் 'இரும்பும் இரத்­தத்தின் மூலமே இலக்கை அடை­யலாம்' என்ற ஜேர்­ம­னிய ஐக்­கி­யத்தின் கர்த்தா ஒட்­டோமன் பிஸ்மார்க்­கின் வழியைப் பின்­பற்­றி­ய­வர்­க­ளாக போரா­டினர். தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்­டத்தை பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­ட­மாக சித்­தி­ரித்த தென்­னி­லங்கை அதனை நசுக்­கு­வ­தற்கு சர்­வ­தே­சத்தின் உத­வி­களைப் பெற்றுக் கொண்­டது. தரைப்­படை, கடற்­படை, விமா­னப்­படை கட்­ட­மைப்­புக்­களைக் கொண்­ட­வர்­க­ளா­கவும், தம்­மையே இலட்­சி­யத்­திற்­காக ஆகு­தி­யாக்க கூடி­ய­வர்­க­ளா­கவும் தமிழ் தேசிய இனத்தின் உரி­மைக்­காக போரா­டி­ய­வர்கள் எழுச்­சி­பெற்­ற­மை­யா­னது பிராந்­திய நல­னுக்கும் அச்­சு­றுத்­த­லாக அமையும் என்ற சிந்­த­னை­யிலும் காய்­களை நகர்த்­திய இந்­தி­யாவும், மேற்­கு­ல­கமும் விடு­தலைப் புலி­களை அழித்து போரை முடிப்­ப­தற்கு கடந்த மஹிந்த அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தன. விடு­தலைப் புலிகள் இருந்த போது இந்து சமுத்­திர பிராந்­திய நகர்­வு­களை தீர்­மா­னிக்கும் சக்­தி­யா­கவும் அவர்கள் விளங்­கி­யி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.   

மனி­த­கு­லமே வெட்கித் தலை­கு­னியும் அள­வுக்கு மோச­மான மனி­த­வு­ரிமை மீறல்கள், போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை இழைத்து தமிழ் மக்­களின் உரி­மைக்­கான தற்­காப்பு போராட்­டத்தை மஹிந்த அர­சாங்கம் முடி­வுக்கு கொண்டு வந்­தி­ருந்­தது. ஆயுதப் போராட்­டத்­திற்கு முன்­ன­ரான ஜன­நா­யக ரீதி­யான போராட்டம் தோல்­வி­ய­டைந்த போது தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள் தனி­நாட்டுக் கோரிக்­கை­யுடன் ஆயுதம் ஏந்தும் நிலையை உரு­வாக்­கி­யது. அதற்கு தயா­ராக அப்­போ­தைய இளைஞர், யுவ­திகள் இனப்­பற்­று­டனும், தேசப்­பற்­று­டனும், தமிழ்ப் பற்­று­டனும் இருந்­தனர். 2009 இல் முள்­ளி­வாய்க்கால் மண்ணில் மௌன­மா­கிய ஆயு­தப்­போ­ராட்ட அழி­வு­களும், மோச­மான யுத்த மீறல்­களும் சர்­வ­தே­சத்தின் மனச்­சாட்­சியை தட்­டி­யெ­ழுப்­பி­ன. அதனை மூல­த­ன­மாகக் கொண்டு சர்­வ­தேச உத­வியைப் பெற்று ஒரு நிரந்­தர அர­சியல் தீர்வைப் பெறு­வ­தற்­கான களச் சூழலை அது உரு­வாக்­கி­யது. அதற்­கா­கவே அத்­தனை உயிர்­களும் காவு கொள்­ளப்­பட்­டன. அதற்­கா­கவே அவ்­வ­ளவு இழப்­புக்­களும் ஏற்­பட்­டன. ஆனாலும் அந்த களச் சூழலை தமிழ் சமூகம் குறிப்­பாக தமிழ் தலை­மைகள் சரி­யாக கையாண்­டி­ருக்­கின்­றனவா...?

ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் தமிழர் அர­சி­யலை முன்­ன­கர்த்த வேண்­டிய பொறுப்பும் கட­மையும் கூட்­ட­மைப்­பி­டமே இருந்­தது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆயுத வழிப்­போ­ராட்­டத்தை நம்­பி­யி­ருந்த காலத்­தி­லேயே தமது ஜன­நா­யக ரீதி­யான அர­சியல் நகர்வை ஆரம்­பித்­தி­ருந்­தனர். ஜன­நா­யக ரீதி­யாக தமது அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக தமிழ் தேசியக் கூட்­மைப்பை உரு­வாக்கி அதனை பயன்­ப­டுத்­தியும் வந்­தனர். இதனை தற்­போது சில அர­சியல் தலை­மைகள் மறுத்து கூட்­ட­மைப்பை விடு­த­லைப்­பு­லிகள் உரு­வாக்­க­வில்லை என கூறலாம். ஆனால் அது அல்ல உண்மை என்­பதை வாக்­க­ளிக்கும் மக்கள் நன்கு அறிவர். விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு தமிழ் தேசிய விடு­தலைப் போராட்­டத்தில் இருந்து அகற்­றப்­பட்ட சூழலில் அவர்­களின் கீழ் செயற்­பட்ட கூட்­ட­மைப்­பி­டமே தமிழ் மக்­களின் விடு­தலைப் பய­ணத்தை ஜன­நா­யக வழியில் வழி­ந­டத்த வேண்­டிய பொறுப்பும், கட­மையும் இருந்­தது. ஆனால் அவர்கள் கடந்த 8 வரு­டங்­களில் பொறுப்­புடன் செயற்­பட்டு எதைச் சாதித்­தி­ருக்­கி­றார்கள்...? மாறி­வந்த சர்­வ­தேச சூழலை எவ்­வாறு கையாண்டு இருக்­கின்­றார்கள்...? என்ற பல­மான கேள்­விகள் எழு­கின்­றன.

மஹிந்த அர­சாங்கம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்த போது சர்­வ­தேச சமூ­கத்­திற்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மை­யாலும், சீன சார்பு நிலைப்­பாட்டில் தமது நலனை முன் நகர்த்தி வந்­த­மை­யாலும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும், இந்­தி­யா­வி­னதும் கோபத்­திற்கு ஆளா­னது. அதன் விளைவே 2015 இல் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட வழி­வ­குத்­தது. மஹிந்த அர­சாங்­கத்தை அகற்­று­வ­தற்கும், நெருக்­கடி கொடுப்­ப­தற்கும் சர்­வ­தேச சமூகம் தமிழர் நலனை முன்­னி­றுத்தி அழுத்­தங்­களைக் கொடுத்து வந்­த­துடன், ஐ.நா. மனி­த­வு­ரிமை பேர­வை­யிலும் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணை­களை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யி­ருந்­தது. அந்த நேரத்தில் அந்த பிரே­ர­ணையை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும், சர்­வ­தேச அழுத்­தத்தை மேலும் அதி­க­ரித்து தமிழ்­ மக்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வை நோக்கி நகர்த்­து­வ­தற்கும், அடிப்­படை பிரச்­ச­ினை­களை உட­ன­டி­யாக தீர்ப்­ப­தற்­கு­மான கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்பந்தனின் இரா­ஜ­தந்­திரம் தோற்றுப் போயி­ருந்­தது. 

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மேற்­கு­லகம்  2015 இல் ஐ.நா,=. மனி­த­வு­ரிமை பேர­வையில் நிறை­வேற்­­றிய 30–-1 தீர்­மானத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­கு­றிகள் எது­வு­மின்­றியே அதே தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு 34-–1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. இதற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் இந்த கால­நீ­டிப்பில் அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது. கால நீடிப்பு வழங்­கப்­பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்­டன. இந்த நிலை­யிலும் கூட்­ட­மைப்பு தலைவர் இரா. சம்பந்­தனின் இரா­ஜ­தந்­திரம் தமிழ் மக்கள் நலன்­சார்ந்து வெற்றி பெற்று இருக்­கின்றதா...?

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மைத்­திரி – ரணில் கூட்­ட­ர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை அந்த ஆத­ர­வையும், இணக்க அர­சியல் என்னும் பேரில் முன்­னெ­டுக்கும் சர­ணா­கதி நிலை­யையும் வைத்து இது­வரை தமிழ் மக்கள் நலன் சார்ந்து எதைச் சாதித்து இருக்­கின்­றது? தமக்­கான பத­வி­களைப் பெற்றுக் கொண்­டது வேறு விடயம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­க்கு என்ன நன்மை கிடைத்­தி­ருக்­கின்­றது என்­பதே இங்­குள்ள கேள்வி. ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு இரண்டு ஆண்­டுகள் கடந்து விட்­டன. இதன் பின்னர் ஏற்­பட்ட மாற்றம் ஏன்ன...? ஒரு ஜன­நா­யக இடை­வெளி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த இடை­வெ­ளி­யைப் பயன்­ப­டுத்தி மக்கள் தமது உரி­மைக்­காக போராடி வரு­கின்­றார்கள். கடந்த ஆறு மாதங்­களைக் கடந்து மக்­க­ளது நில­மீட்பு போராட்­டங்­களும், காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதி கோரிய போராட்­டங்­களும் தொடர்­கின்­றன. தென்­னி­லங்­கை­யுடன் உள்ள உறவைப் பயன்­ப­டுத்­தியும், சர்­வ­தே­சத்தினுட­னான இரா­ஜ­தந்­திர நகர்வைப் பயன்­ப­டுத்­தியும், மக்கள் வழங்­கிய ஆணையைப் பயன்­ப­டுத்­தியும் இதற்கு நிரந்­தர தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய சூழல் கூட்­ட­மைப்பு தலை­மைக்கு இருந்­துள்­ளதா...? அல்­லது இருந்தும் அதனை மேற்­கொள்­ள­வில்­லையா..? என்றும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இந்த பின்­ன­ணி­களை நாம் நோக்கும் போது கூட்­ட­மைப்பு தலைமை அதன் நகர்­வு­களில் ஏதோ­வொரு தொய்வு நிலை அல்­லது மாற்றம் இருப்­பதை ஏற்றுக் கொண்டே ஆக­வேண்டும். இந்த நிலை தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்­பிக்­கையை மக்­க­ளி­டத்தில் தகர்த்து வரு­கின்­றது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்­ப­டைய வேண்டும். இதனால் நிரந்த தீர்வு நோக்­கியும், இது­வரை கால போராட்­டத்­திற்கு பரி­காரம் தேடவும் தமிழ் மக்கள் முன் இரண்டு தெரி­வு­களே உள்­ளன. 

ஒன்று, பல­மான மக்கள் சக்­தி­யா­கவும், ஒரு மக்கள் இயக்­க­மா­கவும் ஒன்­று­பட்டும் அணி­தி­ரண்டும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு அழுத்தம் கொடுத்து அவர்­களை தமிழ் மக்கள் பக்கம் திரும்பச் செய்ய வேண்டும். மக்­க­ளது அழுத்தம் கார­ண­மாக அவர்­க­ளது தென்­னி­லங்­கை­யு­ட­னான மற்றும் சர்­வ­தே­சத்­து­ட­னான அணு­கு­மு­றை­களில் மாற்றம் ஏற்­பட்டு சர­ணா­கதி நிலையில் இருந்து மீண்­டெ­ழுந்து மக்கள் நலன்­சார்ந்து செயற்­பட வைக்க வேண்டும். அவ்­வாறு நடந்தால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவையும் ஏற்­படும். 

இரண்­டா­வது தெரிவு, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது பய­ணிக்கும் பாதையில் சர­ணா­கதி நிலையில் தென்­னி­லங்­கை­யுடன் இணைந்து பய­ணிக்­கு­மாக இருந்தால் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் எந்­த­வொரு தீர்வுத் திட்­டத்­தையும் பெற முடி­யாத நிலை உரு­வாகும். கிடைப்­பதைப் பெறுவோம் என்ற மன­நி­லையில் இருந்தால் இது­வரை உரி­மை­க­ளுக்­காக இழந்த இழப்­புக்­க­ளுக்கு பதில் இல்­லாது போய்­விடும். தென்­னி­லங்கை கொடுப்­பதை பெற்­று­விட்டு மீண்டும் உரி­மைக்­காக ஜன­நா­யக ரீதி­யாக போராட வேண்­டிய நிலையே உரு­வாகும். இதனால் அர­சிற்கும், சர்­வ­தே­சத்­திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மாற்றுத் தலைமை ஒன்றை தமிழ் மக்கள் தேட வேண்­டிய ஒரு சூழல் உரு­வாகும். அதன் மூலம் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை முன்­ன­கர்த்த வேண்­டிய நிலமை ஏற்­படும்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நான்கு கட்­சி­களைக் கொண்­டி­ருக்­கின்ற போதும் அதன்­ ந­கர்­வு­க­ளையும், போக்­கு­களையும் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக தமி­ழ­ரசுக் கட்­சியே இருக்­கின்­றது. ஏனைய பங்­கா­ளிக்­கட்­சிகள் கூட தலை­மையின் செயற்­பாட்டில் அதி­ருப்தி அடைந்­த­வர்­க­ளா­கவும், மக்­க­ளது எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற தீர்வுத் திட்டம் வரும் என்ற நம்­பிக்­கை­யற்­ற­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். அவர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தமிழ் தேசிய அர­சி­யலை தற்­போ­தைய சூழலில் நேர்­மை­யு­டனும், உறு­தி­யு­டனும் முன்­ன­கர்த்தும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஆகியோர் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும், தமி­ழ­ரசுக் கட்சி தலை­மையின் செயற்­பாட்டில் விரக்­தி­ய­டைந்­துள்ள அதன் உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைய வேண்­டிய நிலை­மையே உரு­வாகும். இந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் பேரவை பற்­றிய ஒரு கேள்வி எழு­கின்­றது. 

கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் ஈ.பி.­ஆர்­.எல்.எப்., புளொட், தமி­ழ­ரசுக் கட்சி அதி­ருப்­தி­யா­ளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்­னணி என்­ப­வற்றைக் உள்­ள­டக்­கி­ய­தா­கவும், கல்­வி­யிய­லா­ளர்கள், வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், மனி­த­வு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் என பல்­துறை சார்ந்­த­வர்­க­ளையும் உள்­ள­டக்­கிய மக்கள் இயக்­க­மாக தமிழ் மக்கள் பேரவை உரு­வெ­டுத்­தது. இன்று அதன் உரு­வாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்­கி­றது. வடக்­கிலும், கிழக்­கி­லு­மாக உரி­மைக்­காக அலை­யென திரண்ட மக்கள் எழுச்­சி­யுடன் இரண்டு எழுக தமிழ் பேர­ணியை நடத்­தி­யுள்­ள­துடன்,  அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்த வரைவு ஒன்­றையும் தயா­ரித்து வழங்­கி­யுள்­ளது. அத்­துடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக ஒரு கதவடைப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்த நிலையில், தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் வேலைத்திட்டத்திலும் இறங்கியுள்ளது.

எதிர்­வரும் 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணிக்கு யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் அந்த கருத்­த­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் பல துறை­சார்ந்­த­வர்­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். அதன் பின்னர் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் அதனை முன்­ன­கர்த்­த­வுள்­ளது. பேர­வை­யி­னு­டைய இந்த நகர்­வு­க­ளுக்கும், கூட்­ட­மைப்பு தலை­மையின் நகர்­வு­க­ளுக்கும் இடையில் நிறை­யவே வேறு­பா­டுகள் உள்­ளன.

 

மக்கள் இயக்­க­மாக உரு­வெ­டுத்­துள்ள பேரவை மக்­க­ளது அபி­லா­ஷை­க­ளையும், கோரிக்­கை­க­ளையும் முன்­ன­கர்த்தும் அர­சியல் சக்­தி­யா­கவும், தமது கருத்­துக்­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் முன்­ன­கர்த்தும் அர­சியல் அமைப்­பா­கவும் எதனை இனங்­காட்டப் போகின்­றது? அவ்­வா­றா­ன­தொரு சக்­தியை அடை­யா­ளப்­ப­டுத்­தாத வரை விழ­லுக்கு இறைத்த நீராக அவர்­க­ளது கருத்­துக்­களைக் கேட்­டு­விட்டு அதற்கு எதிர்­மா­றாக செயற்­படும் கூட்­ட­மைப்பு தலை­மைக்கு பின்­னா­லேயே தேர்தல் அர­சி­ய­லுக்­காக மக்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இதனை புரிந்து கொண்டு இனியாவது விழித்துக் கொள்ளுமாக தமிழ் மக்கள் பேரவை..?

– கிருஸ்­ண­கோபால் -

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.