Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­பாரா?

Featured Replies

சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­பாரா?

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

அண்­மைக்­கா­லங்­களில் மியன்மார் ரோஹிங்யா முஸ் லிம் இன சிறு­பான்மை மக்கள், ராக்கன் மாநிலம், இனப்­ப­டு­கொலை, அக­திகள் பங்­க­ளா­தேச எல்­லையை கடந்து தஞ்­ச­ம­டைதல் போன்ற செய்­திகள் அச்சு ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் பிர­தான இடங்­களை ஆக்­கி­ர­மிப்பு செய்­கின்­றன. முன்னர் இரா­ணுவ தர்பார் ஆட்சி இடம் பெற்ற காலங்­களில் அதா­வது கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஜன­நா­யக மீட்புக் கோரி ஆங்சாங் சூகி என்­கின்ற தலை­வியின் போராட்­டத்தால் ஜன­நா­யக ஆட்சி மீள 2015 ஆம் ஆண்டு தாபிக்­கப்­பட்­டமை பழைய செய்­தி­யாகும். ஆவணி 2017 இல் றக்கான் விடு­தலை இயக்கம் ஒரு இரா­ணுவ படைப்­பி­ரி­வையும் 24 பொலிஸ் நிலை­யங்­க­ளையும் உள்ளூர் ஆயு­தங்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தினர். பன்­னி­ரண்டு படை­யினர் உயி­ரி­ழந்­தனர். இதன் பின்னர் நடை­பெற்ற இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக முஸ்லிம் மக்­களின் வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­தா­கவும் பலர் கொல்­லப்­பட்­ட­தா­கவும் பல பெண்கள் கற்­ப­ழிக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றச்சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன. மியன்மார் அர­சாங்கம் இவற்றை மறுத்­துள்­ளது. பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களே இவற்­றுக்­கெல்லாம் காரணம் என அந்­நாட்டு இரா­ணுவம் கூறு­கின்­றது. இத்­தாக்­கு­தல்­களின் எதி­ரொ­லி­யாக 4 இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட ரோஹிங்யா முஸ்­லிம்கள் பங்­க­ளாதேஷ், மியன்மார் எல்­லையை கடந்து அக­தி­க­ளாக உள்­ளனர். பல மனித உரிமை அமைப்­புக்கள், பாகிஸ்­தானைச் சேர்ந்த மலாலா, தென்­னா­பி­ரிக்க டெஸ்மன்ட் டூட் ஆகியோர் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு அவ­சர கோரிக்­கையை அனுப்­பி­யுள்­ளனர். மியன்மார் இரா­ணு­வத்­தினர் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­களை இழைப்­ப­தா­கவும் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு மிகச் சிறந்த உதா­ர­ண­மாக இந்­ந­ட­வ­டிக்­கைகள் அமை­வ­தா­கவும் குற்றச் சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. மியன்மார் பற்­றிய பய­னுள்ள தக­வல்கள் இப்­பி­ரச்­சி­னையை மேலும் விளக்க உத­வக்­கூ­டி­யவை.

மியன்மார் என்­பது முன்னர் பர்மா என அழைக்­கப்­பட்ட தென்­கி­ழக்­கா­சிய நாடாகும். 5 கோடிக்கு மேற்­பட்ட சனத்­தொ­கையைக் கொண்­ட­தாகும். இந்­நாட்டில் 100க்கும் மேற்­பட்ட இனக்­கு­ழுக்கள் வாழ்­கின்­றன. பெரும்­பா­லா­ன­வர்கள் பர்மிஸ் ஆகும். இந்த நாட்டில் பெரும்­பா­லான மக்கள் தேர­வாத புத்த சம­யத்­தி­ன­ராகும். இந்­நாட்டின் அயல்­நா­டு­ க­ளாக சீனா, இந்­தியா, வங்­க­ளா­தேசம், லாவோஸ், தாய்­லாந்து ஆகிய நாடுகள் காணப்­ப­டு­கின்­றன.

கடந்த 50 ஆண்­டு­கட்கு மேலாக இரா­ணுவ ஆட்சி நடை­பெற்­றது. மியன்மார் வர­லாற்றில் இரா­ணுவ ஆட்­சியும் இரா­ணுவத் தலை­வர்­களும் பிர­தான இடத்தை வகித்­தனர். இரா­ணுவ ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வர­வேண்­டு­மென ஜன­நா­யக ஆத­ரவுப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மியன்­மாரின் எதிர்க்­கட்சித் தலை­வி­யாக விளங்­கிய ஆங்சாங் சூகி இப்­போ­ராட்­டங்­களின் அடை­யா ­ள­மாகும். இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களால் உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் சாசனம் பாரா­ளு­மன்­றத்தில், உயர் நிர்­வாக பீடங்­களில் இரா­ணு­வத்­துக்கு 25% ஐ ஒதுக்­கி­யுள்­ளது அத்­துடன் இச்­சா­ச­னத்தில் இன்­னொரு ஏற்­பாடும் உண்டு. வெளிநாட்டுப் பிர­ஜை­களை தார­மாகக் கொண்­ட­வர்கள் மியன்மார் நாட்டுத் தலை­வ­ரா­கவோ, ஜனா­தி­ப­தி­யா­கவோ பத­வி­யேற்க முடி­யாது என்­ப­தாகும். இந்த ஏற்­பாடு எதிர்க்­கட்சி தலை­வி­யாக இருந்த சுகிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஏற்­பா­டாகும். சூகியின் கணவர் மைக்கல் அரிஸ் பிரிட் டிஸ் பிரஜை. அவர் கால­மா­கி­விட்டார்

அண்­மைக்­கா­லங்­களில் மியன்மார் வன்­மு­றை­க ளின் பின்­ன­ணியில் இவ்­வார முற்­ப­கு­தியில் சுகி அம்­மை­யாரால் உல­கு க்கு ஆற்­றிய உரை முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அவர் நீண்ட காலம் பர்­ மிய இரா­ணுவ ஆட்சிக்­ கெ­தி­ராக அகிம்சை முறையை கடைப்­பி­டித்து போரா­டி­ய­தற்­காக 1991 ஆம் ஆண்டு நோபல் பரி­சுக்கு தெரி­வான புகழ்வாய்ந்த பெண்­ம­ணி­யாவார். மியன்­மாரில் இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களால் உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் அமைப்பு ஏற்­பா­டுகள் வெளிநாட்­ட­வரை தார­மாகக் கொண்­ட­வர்கள் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க முடி­யாது எனக் கூறு­வதால் அவர் ஜனா­தி­ப­தி­யாக முடி­ய­வில்லை. 2015 இல் இடம் பெற்ற தேர்­தலில் அவரின் கட்சி பெரும் வெற்றி பெற்­றது. ஆனால் அவர் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு அர­சியல் அமைப்பு தடை­யா­க­வுள்­ளதால் அவ­ருக்­காக அரச கவுன்­சிலர் எனும் பதவி உரு­வாக்­கப்­பட்­டது. நடை­மு­றையில் அவரே அரச தலை­வ­ராக சர்­வ­தே­சத்­தாலும் மியன்மார் மக்­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார். வெளிவி­வ­கார அமைச்­சையும் கையாள்­கின்­றார். ரோஹிங்யா மக்­களின் பிரச்­சி­னையை தீர்த்­து­வைப்பார் என பல தரப்­புக்­க­ளாலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதேநேரம் அவர் இரா­ணுவம், பாது­காப்பு, உள்­நாட்டு நிர்­வாகம் ஆகிய விட­யங்­களில் அதி­கா­ர­மற்­ற­வ­ராக காணப்­ப­டு­கின்றார் என்றும் பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. காரணம் என்­ன­வெனில் பாது­காப்பு தொடர்­பான விட­யங்­களை இரா­ணு­வத்­தி­னரே கையாள்­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்பு பிர­காரம் இரா­ணுவ அதி­கா­ரங்­களை சிவி­லி­யன்­க­ளுக்கு கைய­ளிக்க முடி­யாது. இரா­ணுவ தலை­வரின் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக சூகி நட­வ­டிக்கை எடுக்க முடி­யாத நிலையில் உள்ளார் என்­கின்ற வியாக்­கி­யா­னமும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. சபை கூட்டத் தொட­ருக்கு வரு­கை­த­ரு­வதை ஆங் சாங் சூகி தவிர்த்து கொண்டார். நிச்­ச­ய­மாக சர்­வ­தேச கண்­ட­னங்கள் விமர்­ச­னங்­களுக்கு பதி­ல­ளிக்­கும் ­மு­க­மா­கவே ஆங்­கி­லத்தில் உரை­யாற்­றி­யுள்ளார். அவ­ரது உரையில் எங்கும் மியன்மார் இரா­ணு­வத்தை கண்­டிக்கும், விமர்­சிக் கும் வாச­கங்கள் இடம்­பெ­ற­வில்லை. ரக்கன் மாநி­லத்தில் இடம்பெறும் சகல மனித உரிமை மீறல்­க­ளையும் கண்­டிப்­ப­தா­கவும் விசே­ட­மாக சட்­ட­வி­ரோத வன்­மு­றை­களை கண்­டிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். ரக்கான் விடு­தலை இயக்கம் ஒரு பயங்­க­ர­வாத இயக்கம் என்றும் பயங்­க­ர­வாத செயல்­களே இன்­றைய நிலைக்கு காரணம் என்றார். அத்­துடன் றக்கான் பிர­தே­சத்தில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் சுகா­தார வச­தி­கள், ஒலி­ப­ரப்பு செய்­தி­களை கேட்­ப­தற்­கான வச­திகள் செய்து தரப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கின்றார். இப்­பி­ரச்­சி­னையை பொறு­மை­யாக கையா­ள­வேண்டும் எனக்­கூ­றி­யுள்ளார். எது எவ்­வா­றா­யினும் சென்ற வாரம் சூகி ஆற்­றிய உரை பல தரப்­பி­னர்­க­ளாலும் ஆராய்ந்து விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது

உலகின் பல­பா­கங்­க­ளிலும் இடம்பெற்ற, இடம்பெறு­கின்ற நெருக்­க­டிகள் பிரித்­தா­னிய சாம்­ராச்­சியம் ஆட்சி புரிந்த நாடு­களை விட்டுச் செல்லும்போது ஏற்­ப­டுத்­திய திட்­டங்­களே கார­ண­மாகும். இந்­தியா, பாகிஸ்தான் ஜம்­மு­காஷ்மீர் பிரச்­சினை நல்ல உதா­ர­ண­மாகும். பிரித்­தா­னி­யாவின் இக்­கொள்­கையைத் தான் பிரித்­தாளும் தந்­திரம் என அர­சி­ய­ல­றி­ஞர்கள் கூறி­னா­ர்கள். இந்த வகையில் பர்மா பிரித்­தா­னிய ஆட்­சிக்­குட்­பட்ட காலத்தில் இரண்டாம் உலக மகா­யுத்­தத்தின் போது பர்­மிய பெரும்­பான்மை மக்கள் (பர்­மிய பௌத்­தர்கள்) பிரித்­தா­னிய ஆட்­சிக்­கெ­தி­ராக போரா­டினர். பார­தத்தில் மகாத்மா காந்­தி­ஜியின் போராட்டம் இத்­த­ரு­ணத்தில் நினைவு கூரத்­தக்­கது. பிரித்­தா­னிய ஆட்சி றக்கன் மாநில முஸ்­லிம்­க­ளுக்கு தனி­நாடு தரு­வதாய் ஆசை காட்டி பர்­மிய பௌத்த பெரும்­பான்மை மக்­களை எதிர்த்து போராட உற்­சா­க­மூட்­டி­யது. இதன் கார­ண­மாக பௌத்த - முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் கசப்­பு­ணர்வு வளர்ந்­தது. 1948 இல் பர்மா சுதந்­திர நாடா­கி­யது. சுதந்­திர பர­மிய அர­சாங்கம் ரோஹிங்யா முஸ்லிம் சிறு­பான்மை இன மக்­களின் குடி­யு­ரி­மையை மறுத்­தது. பிரச்­சி­னை­க­ளுக்கு இதுவே அடிப்­ப­டை­யாகும். அத்­துடன் ரோஹிங்யா முஸ்­லிம்கள் கிழக்கு பாகிஸ்­தானில் இருந்து (தற்­போ­தைய பங்­க­ளாதேஷ்) வந்து குடி­யே­றி­னார்கள் என்ற கருத்தும் நில­வு­கின்­றது. இம்­மக்­க­ளுக்கு அழைக்­கப்­பட்ட அநீ­தி­களை எதிர்த்து போராட ரோஹிங்யா முஜா­கிடீன் இயக்கம் அமைக்­கப்­பட்டு 1948-–1961 காலப்­ப­கு­தி­களில் அரச படை­க­ளுடன் மோதல்­களில் ஈடு­பட்­டனர். இவர்­களின் நோக்கம் ரக்கான் பிர­தே­சத்தை பர்­மா­வி­லி­ருந்து பிரித்து கிழக்கு பாகிஸ்­தா­னுடன் இணைப்­ப­தாகும். இது மிகவும் சர்ச்­சைக்கு உள்­ளான நோக்­க­மாகும். எவ்­வா­றா­யினும் இப்­போ­ராட்டம் நசுக்­கப்­பட்­டது. போரா­ளிகள் சர­ண­டைந்­தனர். 1970களில் வேறு தீவி­ர­வாத அமைப்­புக்கள் உரு­வா­கின. ஆங்­காங்கே அர­ச­ப­டை­க­ளுடன் மோதல்கள் இடம்பெற்­றன. 2016 இல் ரகன் விடு­தலை இயக்கம் மியன்மார் பங்­க­ளாதேஷ் எல்­லையில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. முத­லாம் பந்தியில் கூறப்­பட்ட ஆவணி 2017 றக்கான் விடு­தலை இயக்க தாக்குதலே இன்­றைய நிகழ்­வு­களுக்கு பின்­னணி எனக்­கூ­றலாம். இவ்­வி­யக்கம் இம்­மாதம் புரட்­டாதி 9 ஆம் திகதி ஒரு தலைப்­பட்ச யுத்த நிறுத்­தத்தை அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­கட்கு உதவி கிடைப்­ப­தற்கு ஏது­வா­கவும் தொண்டர் நிறு­வ­னங்கள், மனி­தா­பி­மான செயற்­பாட்­டா­ளர்கள் இயங்­கு­வ­தற்கும் உத­வி­யா­கவே யுத்த நிறுத்தம் செய்­வ­தா­கவே இவ்­வி­யக்கம் தெரி­வித்­துள்­ளது. மியன்மார் இரா­ணுவம் துப்­பாக்­கி­களை கீழே வைத்து யுத்த நிறுத்­தத்தை ஏற்க வேண்டும் எனவும் இயக்கம் நிபந்­தனை விதித்­துள்­ளது. மியன்மார் அர­சாங்கம் இக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரித்­துள்­ளது. பயங்­க­ர­வா­தி­க­ளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்­சுக்கே இட­மில்­லை­யென நிரா­க­ரித்­துள்­ளது.

ரோஹிங்யா முஸ்லிம் மக்­களின் அவ­ல­நிலை இலங்கை உட்­பட பல நாடு­களில் முஸ்லிம் கட்­சிகள், அமைப்­பு­களால் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இலங்­கையைப் பொறுத்­த­ளவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இலங்கை அரசு மியன்மார் அரசை கண்­டிக்­க­வில்லை. ஆனால் மியன்மார் அக­தி­க­ளுக்கு இலங்­கையில் விசா வழங்­கப்­ப­ட­மாட்­டாது எனக் கூறி­யுள்­ளது. இலங்கை முஸ்லிம் கட்­சிகள் அமைப்­புகள் அரசை வற்­பு­றுத்தும் வகையில் ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லங்­களை நடாத்­து­கின்­றன. இலங்­கையில் இவ்­வாரம் முப்­பது ரோஹிங்யா முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக கடல் மார்க்­க­மாக வந்­துள்­ளனர். இவர்கள் பூசா தடுப்பு முகாமில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்கு முன்­ன­தாக ரோஹிங்யா மக்கள் பங்­குனி 2008 இல் 55 பேர் அக­தி­க­ளாக இலங்­கைக்குள் வந்­தனர். ஐ.நா. சபை மூல­மாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர். மாசி 2013 இல் 101 ரோஹிங்யா அக­திகள் வந்­தனர். மாசி 2015 இல் ஏறத்­தாழ நூறு பேர் வந்­தனர். பின்னர் மியன்­மா­ருக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டனர். ரோஹிங்யா அக­திகள் சென்­ற­வாரம் அக­தி­க­ளாக வந்­தமை புதிய விடயம் இல்லை. ஆனால் எம்­ம­வர்கள் சிலர் அவர்­க­ளுக்­கெ­தி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­தமை மனி­தா­பி­மா­ன­மற்ற செயல் மட்­டு­மல்ல வேதனை தரும் செய­லு­மாகும்.

சவூதி அரே­பியா, ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய கூட்­டு­ற­வுக்­கான அமைப்பில் செல்­வாக்கு மிகுந்த நாடு என்­ப­தற்­கப்பால் 1960 ஆம் ஆண்டு பர்­மாவில் இடம்­பெற்ற நெருக்­க­டி­க­ளினால் 3 இலட்சம் வரை­யி­லான ரோஹிங்யா முஸ்­லிம்கள் சவூதியில் தஞ்­ச­ம­டைந்து தற்­போது சவூதிப் பிர­ஜை­க­ளா­கி­விட்­டனர். சென்­ற­வாரம் ஐ.நா. கூட்­டத்­தொடர் நடை­பெற்­ற­போது ஓ.ஐ.சி. கூட்டம் ஐ.நா. மாநாட்டு மண்­ட­ப­மொன்றில் இடம்­பெற்­றது. இவ் அமைப்பு ஆழ்ந்த கரி­ச­னை­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அக­திக­ளுக்கு தற்­கா­லிக தங்­கு­மிட வச­திகள் உணவு, உடை, மருந்து வகைகள், குழந்­தை­க­ளுக்­கான பால்மா வகை­களை அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மியன்மார் அர­சாங்கம் இப்­பி­ரச்­சி­னையை சகல தரப்­பி­ன­ரதும் அக்­க ­றை­களை கவ­னத்­தி­லெ­டுத்து தீர்க்­க­வேண்­டு­மென கூறி­யுள்­ளது. சவூதி­ அ­ரே­பியா இவ்­வி­வ­கா­ரத்தில் மியன்­மாரைக் கண்­டிக்கும் தோற­ணையில் செய­லாற்­ற­வில்லை. நாடு­களின் இரு­த­ரப்பு உற­வுகள் சார்ந்த கொள்­கைகள் தத்­து­வ­ரீ­தி­யாக கூறப்­பட்ட சுதந்­திரம், சமத்­துவம், உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டாமை, பிரச்­சி­னை­களை சமா­தா­ன­மாகத் தீர்த்தல் என்ற ஐ.நா. சாச­னத்­தி­னதோ பொது­ந­ல­நா­டு­களின் கொள்கைப் பிர­க­ட­னங்­க­ளிலோ கூறப்­பட்­ட­வாறு இடம்­பெ­ற­வில்லை என்­பது யதார்த்­த­மாகும். சொந்­த­ந­லன்கள் (முக்­கி­யத்­து வம் பெறு­கின்­றன. சவூதி அரே­பி­யா­வுக்கு சீனா பெரிய சந்­தை­யாகும். சீனா­வுக்கு எண்ணெய் வழங்­கு­வதில் சவூதி பிர­தான நாடாகும். சீனா­வுக்­கான எண்ணெய் விநி­யோக பெருங்­குழாய் மியன்­மாரின் ரக்கன் பகு­தி­யூ­டாக செல்­கி­றது. இதன் கார­ண­மாக சவூதி உரத்துப் பேச­வில்லை, அரா­பிய உலகில் தலை­மைத்­துவ போட்­டியில் சவூதி­யுடன் முரண்­டு­பி­டிக்கும் ஈரான் ரோஹிங்யா அக­தி­கட்கு ஏரா­ள­மான நிவா­ர­ணப் ­பொ­ருட்­களை அனுப்­பி­யது மட்­டு­மல்ல சவு­தியின் நிலைப்­பாட்டை விமர்­சித்­துள்­ளது. அத்­துடன் சிரியா, யேமன் லிபிய உள்­நாட்­டு­ மோ­தல்­களால் ஏற்­க­னவே பாரிய அக­திகள் பிரச்­சினை ஏற்­பட்­டதால் அரா­பிய நாடுகள் மியன்மார் விட­யத்தில் பெரும் அவ­தானம் காட்­ட­வில்லை

இந்­தியா, மியன்­மாரின் அயல்­நாடு பொது எல்­லையைக் கொண்­டது. உலகில் அதி­க­ளவு முஸ்லிம் மக்கள் வாழ்­கின்ற நாடு இந்­தியா என்­பது நினைவு கூரத்­தக்­கது. அண்­மையில் மியன்மார் இரா­ணுவ தலைவர் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்தார். அவ­ருக்கு செங்­கம்­பள வர­வேற்பு அளிக்கப்­பட்­டது. பிர­தமர் மோடி மியன்மார் தலை­வரை வாயாரப் புகழ்ந்தார். இந்­தியா இன்­று­வரை மியன்மார் அரசை கண்­டிக்கும் வகையில் எந்­த­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. மக்கள் சீனா மியன்­மாரின் அயல்­நாடு. பொது எல்லை இரு­நாட்­டையும் பிரிக்­கின்­றது. மக்கள் சீனா இன்­னொரு நாட்டின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தில்லை நாடுகளுடன் இரு­த­ரப்பு உற­வு­களில் மட்டும் கவனம் செலுத்­து­கி­றது. இரா­ணுவ ஆட்சி கால­மா­யினும் சரி. ஜன­நா­யக ஆட்சிக் கால­மா­யினும் சரி, சீனா தொடர்ந்து மியன்­மா­ருடன் நல்­லு­ற­வு­களை பேணு­கி­றது. அசர்­பஜான் (முன்­னைய சோபி­யத்­தி­லி­ருந்து பிரிந்த நாடு) எண்ணெய் விநி­யோகம் ரக்கன் பகு­தி­யூடாக செல்­வதால் வெறும் நிவா­ரண உத­வி­க­ளுடன் செய­லாற்­று­கி­றது. இந்­தோ­னே­சியா, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளிலும் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகவும் மியன்மார் அரசை கண்டித்தும் பலகட்சிகள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்துகின்றன.

அகதிகள் பிரச்சினை மனிதக் கடத்தலுடன் தொடர் பான பிரச்சினை என அண்மைய பலதரப்பு அமைப்பு மாநாடுகளில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் விடுத லைக்காக போராடும் அமைப்புக்கள் எனக்கூறும் பல அமைப்புக்கள் தங்கள் பக்க நியாயத்தை பலதரப்பினரும் ஏற்க வைக்க அகதிகள் என்ற துருப்புச்சீட்டைப் பயன்ப டுத்துகின்றார்கள். என்றும் தலிபன் போன்ற அமைப் புக்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி அகதிகள் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர் என சி.ஐ.ஏ. அண்மையில் குற்றஞ்சாட்டியுள்ளது

ஆனால் ரோஹிங்யா மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தட வைகளில் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந் தார்கள். ரோஹிங்யா மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக ஆட்சி எனக்கூறும் சூகி அம்மையாரின் ஆட்சி நியாய பூர்வமாக தீர்க்கவேண்டும். 50 வருட இராணுவ ஆட்சியில் பின்னர் சூகி அம்மையார் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை கட்டியெழுப்ப வறுமை, வேலையில்லாமை போன்ற பிரச்சினைகள் மீது கூடிய கவனம் காட்ட வேண் டிய சவால்கள் மத்தியில் மியன்மாரின் இராணுவ ஆதிக் கம் இன்னும் ஓரளவு பலமாக இருப்பதும் முகங்கொடு க்க வேண்டிய சவாலாகும். உலகின் பலமான நாடுகள், பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையான முறையில் ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் நடவடிக்கைகள் எதையும் முன் னெடுக்கவில்லை. சூகிக்கு நியாயமான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்கின்ற போக்கை கடைப்பிடிக்கின் றார்கள். எவ்வாறுதான் அரசியல் சாசன சட்டங்களை வகுத்தாலும் மக்களின் பேராதரவு சூகிக்கு கிடைக்கின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.