Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரணம் என்ன?

Featured Replies

காரணம் என்ன?

 

ஏலவே 1972ஆம் ஆண்டு  குடி­ய­ரசு யாப்பு கொண்­டு­  வ­ரப்­பட்­ட­போது வட கி­ழக்­கெங்கும் கறுப்புக்  கொடி­யேற்­றப்­பட்டு எதிர்ப்பு  தெரி­விக்­கப்­பட்­டது. இதன் தொடர் நிலை­யா­கவே தொடர்ந்து வந்த சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்கள் வட­கி­ழக்கில் தமிழ் மக்­களால்  பகிஷ்­க­ரிக்­கப்­பட்ட நிலையில்  இலங்­கையின் நான்­கா­வது   குடி­ய­ரசு தின­மான 1976 ஆம் ஆண்டு கொழும்­பிலும் ஏனைய  இடங்­க­ளிலும்  விநி­யோ­கிக்­கப்­பட்ட துண்டுப்  பிர­சு­ரங்கள் அர­சியல் அமைப்­புக்கு முர­ணா­னது எனக் குற்றம் சாட்டி அர­சியல் அமைப்­புக்கு முர­ணான குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டார்கள் என்ற கார­ணத்­தினால்   ஆ.அமிர்­த­லிங்கம்,  வி.என். நவ­ரத்­தினம்,  க.பொ.இரத்­தினம்,  கே. துரை­ரத்­தினம் ஆகி­யோரை இலங்கை அர­சாங்கம் கைது செய்து சிறையில் அடைத்­தது.

 

 

தேசியக் கொடி­யேற்­றுதல், தேசிய கீதத்தை பாடுதல் என்னும் நாட்­டுடன் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­பது இலங்கை அர­சி­யலில் காலத்­துக்கு காலம் பல சர்ச்­சை­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் கொண்டு வரும் விவ­கா­ர­மா­கவே மாறிக்­கொண்­டி­ருப்­ப­தற்கு உதா­ரணம் தான் அண்­மையில் இடம் பெற்ற தேசியக் கொடி ஏற்ற மறுத்த சம்­ப­வ­மாகும்.

வட­மா­கா­ணத்தில் கல்வி அமைச்சர் சர்­வேஸ்­வரன் தான் கலந்து கொண்ட பாட­சாலை நிகழ்­வொன்றில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த சம்­ப­வ­மா­னது தற்­போது பெரும் விமர்­ச­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என தென்­னி­லங்கை மக்­களை சன்னதம் ஆட­வைத்­தி­ருப்­ப­துடன் தேசிய அர­சி­ய­லிலும் குழப்­பத்­தையும் குந்­த­கங்­க­ளையும் கொண்­டு­வந்து விடு­மோ­வென பயம் கொள்ளும் அள­வுக்கு நிலை­மைகள் தீவிரம் அடைந்து கொண்­டி­ருக்­கி­றது.

சின்ன அசம்­பா­வி­த­மொன்றை ஊதிப் பெருப்­பிக்க நினைக்­கி­றார்கள் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள். இதே­வேளை சம்­ப­வத்தை பூத­ாக­ர­மாக்கி அதில் குளிர்­காய நினைக்­கி­றார்கள் இன்­னொரு சாரார்.

அண்­மையில் வவு­னியா பரக்­கும்பா மகா­வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்­வேஸ்­வரன் தேசியக் கொடியை தான் ஏற்ற மாட்டேன் என்று மறுப்புத் தெரி­வித்­துள்ளார். நிகழ்ச்சி ஒழுங்­க­மைப்­பா­ளர்கள் தேசியக் கொடியை ஏற்­று­மாறு உரிய முறையில் கோரி­யி­ருந்­த­போ­திலும் அதற்கும் மறுப்பு தெரி­வித்த அமைச்சர் நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய அதி­தி­களைக் கொண்டு ஏற்­று­மாறு கூறியதுடன் தான் ஏற்ற மறுப்புத் தெரி­வித்­ துள்ளார். இந்த நிகழ்வு விவ­கா­ரங்கள் ஊட­கங்­களில் பெரி­தாகப் பேசப்­பட்­ட­துடன் ஒளி­நா­டாக்கள் மூலம் ஊட­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இக்­கொ­டி­யேற்ற மறுப்புத் தொடர்பில் வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கல்வி அமைச்சர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஏற்­பா­டாக சட்­டமா அதி­ப­ரிடம் ஆலோ­ச­னையை கோரி­யி­ருந்­த­தா­கவும் இதே­வேளை இவ்­வி­வ­காரம் பாரா­ளு­மன்றில் பெரி­ய­தொரு விவா­தத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க வட­மா­காண கல்வி அமைச்­சரின் இத்­த­கைய தேசிய அவ­ம­திப்­பா­னது மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகரும் அர­சியல் நோக்கில் பாதிப்பை உண்­டாக்கும். அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தொடர்ந்தும் தென்­னி­லங்கை மக்­களை ஆத்­தி­ர­மூட்டும் வகையில் கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கிறார். இவ்­வா­றா­ன­தொரு அடா­வடி நிலையில் ஆளுநர் அதி­கா­ரங்­களை குறைக்க முடி­யுமா? ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் மீது கை வைக்க முடி­யுமா எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இதே­போன்றே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜே.வி.பி.யின் தலை­வ­ரு­மான அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் வட­மா­காண கல்வி அமைச்­சரின் இந்த மறுப்பு நிலைக்கு கண்­டனம் தெரி­வித்­தி­ருப்­ப­துடன் அமைச்­சரின் இந்த தேசியக் கொடி மறுப்­பா­னது இலங்கை அர­சியல் அமைப்­பினை மீறும் செய­லா­கு­மென பாரா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயும் வெளி­யேயும் பல அர­சியல் தலை­வர்­களால், கண்­ட­னத்­துக்கு உள்­ளாக்­கப்­படும் விட­ய­மா­கவும் விமர்­ச­னப்­ப­டுத்­தப்­படும் பொல்லாச் சம்­ப­வ­மா­கவும் பேசப்­பட்டு வரு­கி­றது.

1948 ஆம் ஆண்டு சுதந்­தி­ரத்தை இலங்கை பிரித்­தா­னி­யா­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட போதும் சரி, அதன் பின்பும் சரி தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகிய தேசிய மரி­யாதைச் சின்­னங்கள் மீது தமிழ் மக்கள் எத்­த­கைய பற்று நிலை­மை­களும் கொள்­ள­ாமைக்­கு­ரிய கார­ணங்கள் வெளிப்­ப­டை­யா­கவே தெரிந்த விட­யங்கள் தான்.

1948 ஆம் ஆண்டு தொட்டு 1956 ஆம் ஆண்­டு­வ­ரை­யுள்ள காலப்­ப­கு­தியில் சுதந்­தி­ரத்­திற்­கான இலங்­கையில் தமிழ் மக்கள் பற்று நிலை கொண்­ட­வர்­க­ளாக இருந்­தார்­களோ இல்­லையோ தேசிய அடை­யா­ளங்­க­ளான இவை­யி­ரண்டும் மீது எத்­த­கைய வெறுப்புக் கொண்­ட­வர்­க­ளா­கவோ அல்­லது உதா­சீனம் செய்­த­வர்­க­ளா­கவோ காணப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான அசா­தா­ரண நிலை­க­ளுக்கு அவர்கள் தள்­ளப்­ப­ட­வு­மில்லை. எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்­டா­ரா­நாயக்கவைப் பிர­த­ம­ராகக் கொண்டு (08.04.1956) ஆட்சி அமைக்­கப்­பட்­டது. ஆட்சி அமைக்­கப்­பட்டு இரு மாத காலப்­ப­கு­தியில் (05.06.1956) சிங்­களம் மட்டும் அரச கரும மொழி­யெனும் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு அச்­சட்­ட­மூலம் 15.06.1956 நிறை­வேற்­றப்­பட்­டது.

மேற்­படி சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது வட­கி­ழக்கு தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இனக்­க­ல­வரம் வெடித்­தது. இங்கு இடப்­பட்ட வெறுப்­பு­ணர்வின் வெளிப்­பாடே தேசி­யக்­கொ­டி­யையும், தேசிய கீதத்­தையும், தேசி­யக்­கொ­டியையும் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடி­யா­மைக்­கு­ரிய வித்­தி­டப்­பட்­டது.

சிங்­களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து தந்தை செல்­வ­நா­யகம் தலை­மையில் சுமார் 300 க்கு மேற்­பட்ட தமிழ் பொது­மக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் இணைந்து சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்­தினை காலி முகத்­தி­டலில் ஆரம்­பித்­தார்கள். இச்­சத்­தியாக் கிரக போராட்­டத்தை முறி­ய­டிக்க பிக்­குமார் மற்றும் இன­வா­திகள் மேற்­கொண்ட தாக்­கு­தலால் பலர் கொல்­லப்­பட்டு காய­ம­டைந்த சம்­ப­வங்கள் தேசிய அடை­யா­ளங்கள் மீது தமிழ் மக்­க­ளுக்கு வெறுப்பை உண்­டாக்­கிய விவகாரமாக மாறியது. மேற்­படி சம்­ப­வமே தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வா­தி­களால் முதல் முதல் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­யாகும். இந்த வன்முறையின் வடுவே தமிழ் மக்­க­ளுக்கு தேசியக் கொடி மீதும், தேசியக் கீதத்தின் மீதும் வெறுப்­பு­ணர்வை ஊட்டி நின்­றது. இவ்­வெ­றுப்­பு­ணர்வை மீண்டும் வளர்க்கும் வகையில் வர­லாற்றில் இன்­னொரு சம்­ப­வமும் இடம் பெற்­றதை தமிழ் மக்கள் இன்னும் நினைவில் வைத்­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள்.

1972ஆம் ஆண்டு இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பை உரு­வாக்­கிய அன்­றைய பிர­தமர் ஸ்ரீ மாவோ பண்­டா­ர­நாயக்கா சிங்­களம் மட்டும் அரச கரும மொழி­யென்­பதை மேலும் உறுதி செய்து பௌத்த மதத்­துக்கு மேற்­படி யாப்பின் மூலம் அர­சியல் அந்­தஸ்தை வழங்­கினார். இதன் கார­ண­மாக அதி­ருப்­தி­ய­டைந்த தந்தை செல்­வ­நா­யகம் தமிழ் மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­க­வில்­லை­யெ­னவும் அதனை ஒரு தேர்­தலின் மூலம் நிரூ­பிக்க முடி­யு­மெ­னவும் அறை­கூவல் விடுத்து தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை 1972 ஆண்டு அக்­டோபர் 2ஆம் திகதி ராஜி­னாமா செய்தார்.

ஏலவே 1972ஆம் ஆண்டு குடி­ய­ரசு யாப்பு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது வட­கி­ழக்­கெங்கும் கறுப்புக் கொடி­யேற்­றப்­பட்டு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் தொடர் நிலை­யா­கவே தொடர்ந்து வந்த சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்கள் வட­கி­ழக்கில் தமிழ் மக்­களால் பகிஷ்­க­ரிக்­கப்­பட்ட நிலையில் இலங்­கையின் நான்­கா­வது குடி­ய­ரசு தின­மான1976 ஆம் ஆண்டு கொழும்­பிலும் ஏனைய இடங்­க­ளிலும் விநி­யோ­கிக்­கப்­பட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் அர­சியல் அமைப்­புக்கு முர­ணா­னது எனக் குற்றம் சாட்டி அர­சியல் அமைப்­புக்கு முர­ணான குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டார்கள் என்ற கார­ணத்­தினால் ஆ.அமிர்­த­லிங்கம், வி.என். நவ­ரத்­தினம், க.பொ.இரத்­தினம், கே. துரை­ரத்­தினம் ஆகி­யோரை இலங்கை அர­சாங்கம் கைது செய்து சிறையில் அடைத்­தது.

 இவ்­வகை சம்­ப­வங்கள் மேலும் மேலும் இலங்கை அர­சாங்­கத்தின் மீதும், அதன் தேசிய மர­பு­க­ளான, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகி­ய­வற்றின் மீது வெறுப்­பையும் பற்­றின்­மை­யையும் உண்­டாக்­கி­யது என்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட உண்­மை­யாகும்.

 எமது அயல் நாடான இந்­திய உப­கண்­டத்தின் மாநி­லங்கள், மதங்கள், இனங்கள், மொழிகள், கலா­சா­ரங்கள், அர­சியல் கோட்­பா­டுகள் வேறு­பட்­ட­தாயும் மாறு­பட்­ட­தாயும் இருக்­கின்­ற­போதும் அங்கு வாழும் சாமான்யன் தொட்டு உயர் மேல்­நிலை வாதிகள் வரை அந்த நாட்டின் தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்­துக்கும் அளித்­து­வரும் மரி­யா­தையும் கௌர­வமும் உன்­ன­த­மா­ன­தாகும். அவ்­வா­ற­ான­தொரு மனப்­பாங்கு மரி­யாதைப் பண்பும் தேசிய அளவில் நீண்ட கால­மா­கவே வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு வந்­தி­ருப்­ப­துடன் பேணப்­பட்டும் வரு­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு நிலையை இங்கு உரு­வாக்க முடி­யா­மைக்­கு­ரிய காரணம் பல. அவை பற்றி இலங்கை அர­சியல் தலை­வர்­களோ ஆட்­சி­யா­ளர்­களோ கவ­னிக்­காமல் விட்டு நீண்ட கால­மா­கி­விட்­டது.

தமிழ் பாட­சா­லைகள், அதி­கா­ரிகள் விழாக்கள் என்­ப­வற்றில் தேசியக் கொடி­யேற்றல் தேசிய கீதம் பாடல் என்­பது, ஒரு சடங்­காக அல்­லது சம்­பி­ர­தா­ய­மாக கொள்­ளப்­ப­டு­கி­றதே தவிர, தேசிய உணர்­வுடன், பற்­றுடன் ஏற்­றப்­ப­டு­கி­றது என்­பது எந்­த­ள­வுக்கு யதார்த்­த­மா­னது என்று சொல்ல முடி­யாது. இதே­வேளை ஏனைய சமூ­கங்­களின் இதன் தாற்­ப­ரியம் எந்­த­ளவு ஆழம் கொண்­டது என்­பதும் புரி­யாத விவ­காரம்.

இவற்­றுக்­கான அடிப்­படைக் காரணம் இந்­தியத் துணைக் கண்­டத்தைப் போன்று சுதந்­தி­ரத்தை நாம் தியா­கித்துப் பெற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றோ­மென்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, தேசியக் கொடியும் தேசிய கீதமும் குறித்த இனத்தின் தனித்­து­வத்­துக்கு அப்பால் ஏனைய சமூ­கங்கள் அல்­லது இனத்தின் அபி­லா­சை­களை கனங்­கொள்­ள­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு ஒரு புற­மி­ருக்க, இலங்­கை­யொரு சுதந்­தி­ர­மான நாடு என்­ப­தற்கு அப்பால் ஏனைய இனங்­களின் அர­சியல் உரி­மை­க­ளையும் அடிப்­படை விருப்பு வெறுப்­புக்­களை கவ­னத்தில் கொள்ளத் தவ­றி­விட்­டது என்ற ஆற்­றாமை கார­ண­மா­கவே இவ்­விரு அடை­யா­ளங்­க­ளையும் மதிக்கும் பண்­பு­களை இழந்து போயுள்­ளது என்ற உண்­மையை, தேசி­ய­வா­திகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வட­மா­காண கல்வி அமைச்சர் தான் தேசியக் கொடியை ஏற்­றா­த­தற்­கு­ரிய கார­ணத்தைக் கூறு­கின்­ற­போது இவ்­வா­றா­ன­தொரு கருத்தைக் கூறி­யி­ருந்தார். நான் தேசியக் கொடியை அவ­ம­திக்­க­வில்லை.

60 வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் செயற்­பட்டு வந்­ததன் அடிப்­ப­டையில் நானும் நடந்து கொண்டேன். இலங்­கையின் தேசியக் கொடி­யா­னது சிங்­கள பெளத்த மேலா­திக்­கத்தின் வெளிப்­பா­டா­க­வே­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவே தந்தை செல்­வ­நா­யகம் முதல் எமது முன்­னைய தலை­வர்கள் எவரும் இக்­கொ­டி­யினை ஏற்­றி­யி­ருக்­க­வில்லை. இதன் நடை­மு­றை­யி­லேயே நானும் பின்­பற்­றினேன் எனக் கூறி­யி­ருந்தார்.

அமைச்­சரின் இப்­ப­தி­லா­னது உணர்ச்­சி­வ­யப்­பட்ட வகையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டாலும், அறிவு பூர்­வ­மாக சங்­க­டத்தை தரும் விளக்­க­மாக இருக்­கி­றது. அவர் கலந்து கொள்ளச் சென்ற பாட­சாலை சிங்­கள மொழிப் பாட­சாலை. தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்வு இடம் பெறும் என்­பதை முன் கூட்­டியே சிந்­தித்­தி­ருக்க வேண்டும். அதை புத்தி பூர்­வ­மா­கவோ தந்­தி­ர­மு­றை­யிலோ தவிர்த்­தி­ருக்­கலாம்.

இவ்­வா­றான அசம்­பா­வி­தங்­களை தமக்கு சாத­க­மாக்கிக் கொண்டு சட்ட நட­வ­டிக்­கை­யெ­டுக்­க­வேண்டும். எவ்­வாறு அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்க முடியும். ஆளுநர் மற்றும் ஜனா­தி­பதி ஆகி­யோரின் அதி­கா­ரங்­களைக் குறைக்க முடி­யு­மென, கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றார்கள் இன­வா­திகள்.

அமைச்சர் மனோ ­க­ணேசன் குறிப்­பிட்­டது போல் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் 2012 ஆம் ஆண்டு, யாழ்ப்­பா­ணத்தில் எதிர்க்­கட்­சிகள் ஒன்றிணைந்து பொது பேரணி மே தினக்­கூட்டம் நடத்­திய வேளையில் இரா.சம்­பந்தன், தேசியக் கொடியை கை யில் தாங்கி நல்­லெண்­ணத்­தையும் தேசிய ஒற்­று­மையின் சமிக்­ஞை­யையும் துலக்­கி­ய­தற்கு பிர­தி­யு­ப­காரம் இது­வரை காட்­டப்­ப­ட­வு­மில்லை. செய்­யப்­ப­ட­வு­மில்லை என்றார்.

தமிழ்த் தேசி­யத்தின் தலை­வர்கள் எவ­ ராலும் முன்­செய்­யாத ஒரு கைங்­க­ரி­யத்தை இரா.சம்­பந்தன் செய்­தி­ருந்துங் கூட, அதன் நன்­மை­க­ளையோ எதிர்­பார்ப்­புக்­க­ளையோ ஏன் இன்னும் அடைய முடி­ய­வில்­லை­யென்­பதை சிங்­க­ளத்­த­லை­மைகள் ஏன் இன்னும் உணர்ந்து கொள்ள மறுக்­கின்­றார்கள்.

1983ஆம் ஆண்­டுக்குப் பின் பாட­சா­லை­க­ளிலும் சரி பொது வைப­வங்­க­ளிலும் சரி, ஏனைய எந்­த­வொரு நிகழ்­வு­க­ளா­யினும் தேசியக் கொடியை, ஏற்­று­வ­தையோ தேசி­யக்­கீ­தத்தை பாடு­வ­தையோ பெரும் சாபக்­கே­டாக கொண்­டி­ருந்­தார்கள் வட­கி­ழக்கு மக்கள் என்ற உண்­மையை மறுப்­ப­தற்­கில்லை. இருந்த போதிலும் இன்று அந்த நிலை­மை­களில் மாற்றம் ஏற்­பட்டு வரு­கின்­றன.

ஒரு காலத்தில் தேசியக் கொடி ஏற்­று­வது தவிர்க்­கப்­பட வேண்­டு­மென்ற வலி­மை­யான உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டன. மாத்­தி­ர­மல்ல கிழக்­கி­லுள்ள ஒரு சில பாட­சா­லை­களில் தேசியக் கொடியை எரித்த சம்­ப­வங்­களும் இடம் பெற்­றுள்­ளன.

இன்று இந்­நி­லை­மை­களில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான நல்­லி­ணக்கம் தேசியப் பற்று தேசி­யவாதம் உயர்ந்த நிலைக்கு வளர்த்­தெ­டுக்­கப்­பட வேண்­டு­மாயின் தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் மயப்­பட்ட நல்­ல­தொரு தீர்­வொன்று காணப்­பட வேண்­டு­மென்­பதை இன்­றைய அரசும் சரி, தென்­னி­லங்கை மக்­களும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்­கான இறுதி வாய்ப்­பாக இன்­றைய சூழ்­நிலை காணப்படுவதாக கூறப்படுகிற போதும் காலக் கடத்தல்களும் சாதாரண ஒரு சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண் டிய உரிமைகளை தட்டிக் கழிக்க நினைக் கும் பெரும்பான்மைவாதம் இந்த சம்பவங் களுக்கு காட்டுகிற வேகத்தைவிட தமிழ் மக்களின் ஆதியந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தீவிரம் காட்டுவார்களாயின் தேசிய உணர்வு தேசியப்பற்று என்பவை தானாகவே உருவாகிவிடு மென்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட வேண்டும் தமிழில் பாடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என இனவாத குரல்கள் அண்மையில் குரல் கொடுத்த சம்பவங்கள் எதைப் புலப் படுத்துகின்றது. இந்நாட்டில் ஒரேயொரு மொழிதான் தேசிய மொழியாக இருக்க முடியுமென்ற அடிப்படை வாதத்தை துலாம்பரப்படுத்துவதாகவே இருக்கின்றது என்பதை ஏன் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள மறுத்தார்கள் என்பது மாயையான விடயமே.

மீண்டும் மீண்டும் இனவாதத்தையும் சமூக ஒடுக்கு முறைகளை தூண்டும் நிலைமைகள் மாற்றப்பட்டு, எல்லோரும் இந்நாட்டின் தேசியத்தகமை பெற்றவர்கள் அவர்களால் தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் உணர்வுபூர்வமாக மதிப் பளிக்கும் நிலைமை உருவாக வேண்டு மாயின் இனப்பிரச்சினைக்கு நிலை கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை விரைவில் கொண்டு வருவதன் மூலமே இவ்வகை அசம்பாவிதங்களுக்கு முடிவு கட்ட முடியுமென்பதை சிங்களத் தலை மைகள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

திருமலை நவம் 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-25#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.