Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு­பான்­மை­யின பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும்

Featured Replies

சிறு­பான்­மை­யின பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும்

 

நாடு தழு­விய ரீதியில் சகல உள­்ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு மேற்­கொண்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு முன்னர் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக ஆறு வாக்­கா­ளர்கள் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கு கார­ண­மாக தேர்­தலை பிற்­போ­ட­ ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

இருந்­த­போ­திலும் வழக்­குடன் சம்­பந்­தப்­ப­டாத 93 உள்­ளூ­ராட்சி­ ச­பை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்­கோ­ரலை சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கோரி­யி­ருந்­தது. இந்த நிலையில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனுக்கள் மீளப்­பெ­றப்­பட்­ட­தை­ய­டுத்து தற்­போது சகல சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

கடந்த இரண்­ட­ரை­வ­ருட காலத்­திற்கும் மேலாக உள்­ளூ­ராட்சி சபைகள் கலைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தேர்­தலை நடத்­து­வதில் கால­தா­மதம் ஏற்­பட்டு வந்­தது. புதிய எல்லை நிர்­ண­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு தற்­போ­துதான் தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய வாய்ப்பு கிட்­டி­யி­ருக்­கின்­றது. தேர்தல் நடை­பெறும் சூழல் உரு­வா­ன­தை­ய­டுத்து தேர்தல் கூட்­டணி அமைக்கும் நட­வ­டிக்­கை­களில் பிர­தான கட்­சிகள் உட்­பட சகல கட்­சி­களும் அமைப்­புக்­களும் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெரு­ம­ள­வான இடங்­களில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக கூட்­டுக்­கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து தமிழ் முற்­போக்கு கூட்­டணி, சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய உட்­பட பல­கட்­சிகள் போட்­டி­யி­ட­வுள்­ளன. சில இடங்­களில் தனித்தும் சில இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் கூட்­டா­கவும் போட்­டி­யி­டு­வது குறித்தும் இந்தக் கட்­சிகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றன.

மலை­ய­கத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. இதேபோல் கொழும்பு உட்­பட மேல்­மா­கா­ணத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வதா? அல்­லது தனித்துப் போட்­டி­யி­டு­வதா என்­பது தொடர்பில் தமிழ் முற்­போக்­குக் ­கூட்­டணி தொடர்ச்­சி­யான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. நாளை செவ்­வாய்க்­கிழமை இது­கு­றித்து இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வி­டயம் குறித்து கருத்து தெரி­வித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­ கட்சித் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டுள்­ளனர். தனித்தும் சேர்ந்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு நாம் தீர்மா­னித்­துள்ளோம். நுவ­ரெ­லியா மாவட்ட உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களில் ஏறக்­கு­றைய முடி­வுகள் எட்டப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி சபை­களை, நமது வாக்­க­ாளர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சபைகள், குறை­வாக வாழும் சபைகள், கணி­ச­மாக வாழும் சபைகள் என நாம் பிரித்­துள்ளோம். நமது மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சபைகள் மற்றும் குறை­வாக வாழும் சபை­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் கூட்­டி­ணைந்து ஐக்­கிய தேசிய முன்­னணி என்ற அடிப்­ப­டையில் போட்டி­யிடு­வதில் சிக்கல் கிடை­யாது. ஆனால் நமது வாக்­கா­ளர்கள் கணி­ச­மாக வாழும் சபை­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக போட்­டி­யி­டு­வது நமக்குப் பாதிப்பும் ஏற்­படும் என்ற கருத்து நில­வு­கின்­றது. ஏனெனில் புதிய கலப்­புத்­தேர்தல் முறையில் வட்­டா­ரங்­களில் மட்­டுமல்­லாமல் பட்­டி­ய­லிலும் உறுப்­பி­னர்­களைப் பெற­வேண்­டி­யுள்­ளது. ஆகவே, நமது வாக்கா­ளர்கள் கணி­ச­மாக வாழும் சபை­களில் அனைத்து வட்­டா­ரங்­க­ளி­லுமே நாம் போட்­டி­யி­டு­வதன் மூலம் உரிய இலக்கை அடைய முடியும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்ற போதிலும் வடக்கு, கிழக்கில் இந்தக் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யி­டவே விருப்பம் கொண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யுடன் கூட்­டி­ணைந்து தேர்­தலில் போட்­டி­யிட முயற்­சித்த போதிலும் அந்த முயற்­சி­யா­னது கைகூ­ட­வில்லை. இதனால் பொது எதி­ர­ணி­யா­னது பொது­ஜன பெர­முன எனும் கட்­சியின் தாமரை மொட்டுச் சின்­னத்தில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­துடன் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஏனைய கட்­சி­களை கூட்­டி­ணைத்து தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கே ஆயத்­தங்­களை செய்து வரு­கின்­றது.

தென்­ப­குதி அர­சியல் கட்­சி­களின் நிலை­வரம் இவ்­வாறு இருக்­கையில் தமிழர் தரப்பை எடுத்­துக்­கொண்டால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஓர­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்­றது. ஆனாலும் இந்தக் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யா­னது மாற்று கூட்­ட­ணி­யுடன் ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்­றது. தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் சின்­ன­மான உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் இந்தக் கூட்­டணி போட்­டி­யி­டு­வது குறித்து கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்­சி­யுடன் இணைந்து கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி போட்­டி­யிடும் என முன்னர் எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும், தற்­போது அந்த நிலை­வரம் மாறி­யுள்­ளது. இதனால் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி தனித்துப் போட்­டி­யிடும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு நாட்­டி­லுள்ள பிர­தான கட்­சி­களும் தமிழ், முஸ்லிம் கட்­சி­களும் தேர்தல் கூட்­டணி தொடர்பில் மும்­மு­ர­மான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடை­பெறும் முத­லா­வது தேர்தல் இது என்­ப­தனால் தேர்தல் முறை குறித்து பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­த­வேண்­டிய தேவை சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கும் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்­ளன.

தொகு­தி­வா­ரி­யா­கவும் விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டை­யிலும், 60க்கு 40 என்ற அடிப்­ப­டையில் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அத்­துடன் 25 வீதம் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் இடம்­பெ­ற­வேண்டும் என்­பது இந்த தேர்தல் முறையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ளது.

எனவே, தற்­போ­தைய நிலையில் இந்த தேர்தல் தொடர்பில் சிறு­பான்மை கட்­சிகள் மிகுந்த அக்­கறை செலுத்த வேண்­டிய நிலை உள்­ளது. வடக்கு, கிழக்கு, மலை­யகம், மேல்­மா­காணம் உட்­பட சிறு­பான்­மை­யின மக்கள் வாழும் பகு­தி­களில் அவர்­களின் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­ப­டா­த­வ­கையில் கட்­சி­களின் செயற்­பாடு அமை­ய­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.

புதிய தேர்தல் முறையில் அதி­க­ளவு சிறு­பான்­மை­யின பிர­தி­நிதித்­து­வத்தை பெற்­றுக்­கொள்ளும் வகையில் சிறு­பான்­மை­யி­னக்­கட்­சிகள் மிகவும் சாது­ரி­ய­மாக செயற்­ப­ட­வேண்­டிய சூழல் தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது. தொகு­தி­வாரி அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டும்­போது அந்த வாக்குகளைக் கொண்டே விகிதாசார முறையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். எனவே சிறுபான்மை கட்சிகள் வேட்பாளர் நியமனத்தில் மிகுந்த சிரத்தை காண்பிக்கவேண்டும். அப்படியானால்தான் இரு பிரதிநிதித்துவ முறையிலும் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சிறுபான்மை கட்சிகள் தமக்குள் போட்டா போட்டிகளை கைவிட்டு சகல பகுதிகளிலும் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளை அதிகரித்துக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மையின வாக்காளர்களும் மிகவும் கவனமாக இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தவறான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் வகையில் சிறுபான்மையின மக்கள் வாக்குகளை பிரயோகிக்கக்கூடாது.

மொத்தத்தில் நாடுதழுவிய ரீதியில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.