Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிமை யுகம்

Featured Replies

அடிமை யுகம்

 

 
 
அடிமை யுகம்
 

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டு வெற்றிகரமாக சீனாவின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டுவிட்டது. அந்தக் கொடியை பார்த்து இலங்கை கவலைப்பட்டதோ என்னவோ நிச்சயம் இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் இந்தியா சார்பானதாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மஹிந்த காலத்தில் இருந்ததை விட, பன்மடங்கு சீன ஆதிக்கத்தை நல்லாட்சி அரசு விரும்புகின்றது.

அதற்கு பல உதாரணங்களை கூறிவிடலாம். முதலில் கொழும்புத் துறைமுக நகரத்தை இடைநிறுத்திவிட்டுச் சீனாவுடன் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டை ஈடுசெய்வதற்காக தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தாரைவார்த்துள்ளது என்றே சொல்லவேண்டும். 99 வருட குத்தகை மற்றும் பில்லியன் கணக்கான இருநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல் என சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் சட்டபூர்வமாக ஒப்பந்தமாகிவிட்டது.

இங்கு யோக்கியன்கள் என்று எவரும் இல்லை என்பதற்கு பிணைமுறி விசாரணை முடிவும் தகுந்த பாடம் கற்பித்துள்ள நிலையில், சீனாவை நம்பி இருபெரும் முதலீடுகளை நம்பி கையளித்திருப்பது நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கை அடகுவைக்கும் கலாசாரம் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுவரும் வெளிநாட்டுக் கொள்கையாயினும் இந்தக் கொள்கையில் சிக்குண்டு மக்களை கேலிக்கூத்தாக்கும் தனவந்தர்களுக்கு தகுந்த பாடம் நிச்சயம் கற்பிக்க வேண்டும்.

இந்தியாவை திருப்திப்படுத்துவதாக கூறிக்கொண்டு இரண்டாம் கட்ட அம்புயூலன்ஸ் விநியோகத்தையும் கைச்சாத்திட்டுவிட்டுள்ளது இலங்கை. அடுத்ததாக திருமலை எண்ணெய் குதத்தையும் எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என இந்தியா நினைக்கும் முன்பே, அதனை இலங்கை அரசே தாரைவார்க்க தயாராகிவிட்டது.

இவ்வாறான வெளிநாட்டுக் கொள்கைக்கு புறம்பாக தற்போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்திருப்பது புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வந்து பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளார். இதன்போது அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இருநாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

11-Hambantota-Admin-06.jpg

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் என்ற வரிசையில் தற்போது ஜப்பானும் இணைந்துகொண்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்திலும் பார்க்க ஜப்பானின் வெளியுறவுக் கொள்கைகள் மாறுபாடுடையவை, காரணம், இலங்கை அமெரிக்க இணைப்பு அரசியலிலும் பார்க்க ஜப்பான் அமெரிக்க உறவு மாறுபட்டது.

அமெரிக்காவின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளை பிரிந்தறிந்து செயற்படக்கூடிய வல்லமை ஜப்பானுக்கு உண்டு. அப்படியிருக்கும்போது, இலங்கை மீதான அமெரிக்க ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில் பொருளாதார உதவிகளை ஜப்பான் ஒருபோதும் வழங்காது என்பதே உண்மை.

அடுத்ததாக ஜப்பான் பொருளாதாரக் கொள்கையிலும் பார்க்க அடிப்படைவாதக் கொள்கைகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை இலங்கைக்கு பொருந்தாது. ஜப்பானின் உயர் தொழில்நுட்பமும் நவீன கைத்தொழில் புரட்சியும் இலங்கையில் தாக்கம் செலுத்துவதற்கு சீனா ஒருபோதும் இடமளிக்காது.

இப்படியிருக்கும்போது, ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இன்னொரு சீன இந்திய முரண்பாட்டுக்கு நிச்சயம் வித்திடும் என்பதே பொருளியலாளர்களின் அபிப்பிராயம். அந்த அபிப்பிராயத்தில் தவறில்லை என்பதற்கு சீனாவின் கொடி பறக்கவிடப்பட்டமையும் இந்தியாவின் ஆம்பியூலன்ஸ் வசதி அறிமுகமும் சிறந்த உதாரணங்களாக அமைந்துவிட்டன.

வழமையாகவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை வட, கிழக்குப் பிராந்தியத்தை தழுவியதாக இருக்காது. ஒன்று மேற்குலக சார்பானதாகவோ அல்லது இந்து சமுத்திரத்தை சார்ந்ததாகவோதான் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கும்போது, அண்மையில் ஜனாதிபதியின் தென்கொரிய விஜயமும் தற்போது ஜப்பான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயமும் வட, கிழக்கு பிராந்திய வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் கடன் சுமையே தலையிடி இலங்கையின் வெளியுறவுக் கொள்கையெல்லாம் கடன் பெறுவதில் மாத்திரமே தங்கியிருக்கின்றது. சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியும் பன்னாட்டு முதலீடுகளும் இலங்கைக்கு கிடைக்காவிட்டால், இலங்கையின் பொருளாதாரத்தை தூசிதட்டிக்கூட பார்க்க முடியாது. இதற்காகவே இலங்கை மேற்குலக மற்றும் கிழக்கு சார்பு பொருளாதாரத்தை அப்படியே தழுவிக்கொள்கின்றது. ""நிதியுதவி'' என்ற பேரில் மட்டுமே வெளிநாட்டுக் கொள்கையை மட்டுப்படுத்தி வைத்துள்ளது.

இந்த மட்டுப்பாடால் எந்த பிரயோசனமும் இல்லை என்பது "ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது' என்பதை ஒத்ததாக நிதியுதவி வெளிநாட்டுக் கொள்கையின் இருப்பிடமாக இலங்கை இப்போதும் இருக்கின்றது. இதற்கு அப்பால் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவற்றினால் வழங்கப்படும் கடன் உதவிகளைப் போலல்லாது, சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து கடனுதவிகளை வழங்கி வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கும் தந்திரோபாய ரீதியிலும் கேந்திர ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்தக் கடன்களை சீனா வழங்குகின்றது.

இதற்காகவே நீண்டகாலக் குத்தகையை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் விமர்சிக்கப்படுகின்றது. 99 வருட குத்தகை என்பது சாதாரணமான விடயமல்ல. வெளிநாட்டுக் கொள்கையை காரணம்காட்டி அடிமைப்படுத்தும் கலாசாரத்தை சீனா பின்பற்றுகிறதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

உதாரணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளை வர்த்தக ரீதியில் இணைக்கும் முக்கியமான ஓர் கடல் மார்க்கமாகவே காணப்படுகின்றது. நிதி உதவி மற்றும் உட்கட்டுமான வசதிகளை வழங்கி வரும் சீனா, கைமாறாக இயற்கை வளங்களை பெற்றுக் கொள்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகின்றது.

அதற்காகவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை முழுவதுமாக சீனமயமாக்கும் முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. இத்தனை காலமும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இலங்கைக் கொடியே பறக்கவிடப்பட்டது. தற்போது சீனக்கொடியை பறக்கவிட்டதும் இலங்கை அரசுக்கு எந்தவித பதற்றமும் ஏற்படாததுதான் வேடிக்கை.

சமூகப் பொருளாதார பாதிப்புக்கள் அல்லது சுற்றாடல் பாதிப்புக்கள் குறித்து மதிப்பீடு செய்யாது, சந்தை வட்டி அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு கடன் வழங்கி வருகின்றது, சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்படுவதில்லை.
சீனா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்கும் வகையில் நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் செல்வாக்கு செலுத்தவும், ஏற்றுமதியை விஸ்தரிக்கவும் இவ்வாறு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறைக்கு நிகரான அணுகுமுறையே அம்பாந்தோட்டை விவகாரத்தில் பின்பற்றப்படுகின்றது. சீனா இதேவிதமாக பல நாடுகளில் தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார இலக்குகளை முன்னிலைப்படுத்தி அந்தந்த நாடுகளை கடன் பொறியில் சிக்க வைத்து அதன் ஊடாக நலன் ஈட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மீது கண் வைக்கும் சர்வதேசம்இலங்கையின் அமைவிடமே ஒட்டுமொத்த கிழக்குலகிற்கும் அடையாளப்பாதை பொருளாதாரத்திலும் சமூக பண்பாட்டு விடயங்களிலும் இலங்கையின் அமைவிடம் மட்டுமே ஆரம்பகாலத்திலிருந்தே பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தில் முக்கிய இடத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைந்திருப்பதானது, சர்வதேச நாடுகள் கழுகுப் பார்வையினை செலுத்த காரணமாய் அமைந்திருக்கிறது.

1_-6QpsM7Z6-y1jE6Bnvsb1Q.png

குறிப்பாக, சீனாவுடன் பனிப்போரில் ஈடுபட்டு வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்து சமுத்திரத்தில் முக்கிய இடத்தில் அமைக்கப்பட்ட துறைமுகம் ஒன்றினை சீனாவிற்கு வழங்கியிருப்பது பெரும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் மையத்தில்,இலங்கை அமைந்திருப்பதால் நவீன கடல்வழி பட்டுப்பாதையின் முக்கிய பகுதிகளாக கொழும்புத் துறைமுகம்,அம்பாந்தோட்டைத் துறைமுகம், திருகோணமலைத்துறைமுகம் காணப்படுகின்றன.''

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழி பட்டுப்பாதை திட்டத்தினால் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலும் சீனாவிற்கும் பாரிய வர்த்தக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன. அதனை மீளவும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சீனாவின் ஒரே மண்டலம் ஒருபாதைத் திட்டமானது தன்னுடைய 7 சதவீத பொருளாதார வருவாயினை பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த ஒரே மண்டலம் ஒரே பாதை கொள்கைத்திட்டம் முழுவதும் அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது, சீனாவின் ஆதிக்கத்துக்கு இந்த ஒரு திட்டமே மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது. கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த கம்யூனிஸ மாநாட்டில் இதற்கான தெளிவான அத்தியாயங்களும் இடப்பட்டிருந்தன. ஒரே மண்டலாமாக்கும் நோக்கில் சீனா செயற்படுவது இலங்கையை நம்பித்தான் என்பதையும் உணர்ந்தாக வேண்டும். அதற்காக ஒரு வழிமுறையாகக்கூட சீனாவின் இலங்கைமீதான ஆதிக்கத்தை கருதலாம்.

ஆகமொத்தம் சீனாவின் கழுகுப்பார்வையில் தப்பிக்க முடியாது என்றதொரு கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். சீனப் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தாக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். வெளிநாட்டுக் கொள்கையை வெறுமனே நிதியுதவியை மட்டும் பெற்றுக்கொள்ள கட்டியமைத்துக்கொள்ளாது எதிர்கால இலங்கையின் நலன் தொடர்பில் கொஞ்சமாவது கரிசனை கொண்டால் எச்சசொச்ச இலங்கையாவது மிஞ்சும்.

 

https://www.sudaroli.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.