Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார்.

Featured Replies

அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார்.

 
 

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரின் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோபத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சமாதானப்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னரே பெண்களுக்கு மது தொடர்பாக அண்மையில் விலக்கி கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதென்றும் அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மேடைகளில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மீது விலாவாரியாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்

கோபமடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் இருந்து வெளியேறினார் !

 

 

(ஆர். யசி)

மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார்.

maithri-pala-srisena58.jpg

மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கடும் தொனியில் வலியுறுத்தியுள்ளார். 

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சற்று முன் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பேசிய ஜனாதிபதி, பிணைமுறி விவகாரத்தை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததை ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் கடுமையாக விமர்சிப்பதாகவும் ஐ.தே.க.வைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கியிருப்பதாக போலிப் பிரசாரம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

‘இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக நீடித்தால், ஐ.தே.க. தனியே அரசைப் பொறுப்பேற்று நடத்திக் காட்டட்டும்’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்ற ஆலோசனை பெற்றது ஏன் என்றதையும் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெளிவுபடுத்தியுள்ளார். 

கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான ஜனாதிபதி பதவிக்காலம்  மற்றும் நிதி அமைச்சர் கொண்டுவந்த  மதுபான நிலையங்களின் நேர மாற்றம், பெண்களை வேலைக்கு அமர்த்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக  முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் நிதிமன்ற ஆலோசனையினை பெற்றார் என்பதைகான காரணங்களை அமைச்சரவையில் தெளிவுபடுத்தியுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அரச நிருவாகிகள், தனது செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருடன்  தனது  அடுத்த கட்ட வேலைத்திட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அதன்போது அடுத்த ஆண்டுகளுக்கான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது விவாதத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதையும் ஜனாதிபதி அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் 19 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தற்போதைய ஜனாதிபதி காலத்துடன் தொடர்புபடாது எனவும், ஆகவே வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் போது 2020 ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் அதனை ஒழுங்கமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் சிலர் அதனை 2019 ஆம் ஆண்டு இறுதி வரையில் ஒழுங்கமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் தான் கலந்துரையாடலை நிறுத்திவிட்டு சட்டமா அதிபரை தொடர்புகொண்டு என்னை சந்திக்க வருமாறு தெரிவித்தேன். அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் இந்த விடயம் குறித்து குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு குறிப்பிட்டேன். 

ஒரு சில தினங்களில் தான் பதில் கூறுவதாக கூறிய சட்டமா அதிபர் ஆராய்ந்ததன் பின்னர் என்னால் 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக செயற்பட முடியும் என தெரித்தார். எனினும் இந்த விடயம் குறித்து உறுதியாக ஒரு தீர்மானம் பெறவேண்டும் என்றால் நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சட்டமா அதிபர் எனக்கு ஆலோசனை வழங்கினார். 

இந்நிலையிலேயே நான் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தை நாடி ஆலோசனை பெற்றுக்கொண்டேன். மற்ற எந்த காரணிகளும் இதன் பின்னணியில் இல்லை. எனது அடுத்த கட்ட வேலைத்திட்ட ஒழுங்குபடுத்தல் எந்த காலம் வரையில் செய்ய முடியும் என்ற அடிப்படையில் நான் இதனை செய்தேன் என ஜனாதிபதி அமைச்சரவையில் விளக்கமளித்துள்ளார். 

மேலும் கடந்த வாரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட மதுபான சாலைகளின் நேர அட்டவணையில் முன்னெடுக்கும் மாற்றங்கள் மற்றும் பெண்கள் மதுபானசாலைகளில் பணிபுரிவது என்ற திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வினவியுள்ளார். 

அமைச்சராக இவ்வாறான முக்கியமான திட்டங்களை கொண்டுவரும் நிலையில் அதுகுறித்து தனக்கு அறியத்தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இலங்கை நாடானது  கலாசார பண்பாட்டு அரசியல் பின்னணியில் இயங்கிவரும் நிலையில் மேற்கு நாடுகள் திணிக்கும் சகல கொள்கையையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நான் அரசாங்கத்தை நடத்துவது நாட்டினை வீணாக்கும் நோக்கத்தில் அல்ல. 

ஆகவே உடனடியாக இந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளதுடன் இந்த விவகாரம் சற்று சூடு பறக்கும் விவாதங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில் சமத்துவம் என்ற அடிப்படையில் தான் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்து செய்யக் கோரிய ஜனாதிபதி சில காரசார விவாதங்களை அடுத்து ஆசனத்தை விட்டு வெளியேறியதாக தெரியவருகின்றது. 

 

பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியைச் சந்தித்து அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/29479

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையிலிருந்த ஆவணங்களை வீசி எறிந்து விட்டு வெளியேறிய ஜனாதிபதி

Maithripala.jpg?resize=275%2C183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையிலிருந்த ஆவணங்களையும் வீசி எறிந்து விட்டு கடும் கோபத்துடன் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையாக ஆத்திரமுற்ற ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் மிகவும் கோபத்துடன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ரீதியில் தம்மை தாக்கியும் விமர்சனம் செய்தும் சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் செய்து வரும் பிரச்சாரங்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் போன்றவர்கள் தம்மை மிகவும் இழிவாக பேசி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களையும் ஜனாதிபதி திருடன் கொள்ளைக்காரன் என பகிரங்கமாக கூறுவதாகவும் இவ்வாறான விமர்சனங்களை நிதானமாக வெளியிட வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து கோபமுற்ற ஜனாதிபதி கையில் இருந்த அமைச்சரவை பத்திரங்களையும் வீசி எறிந்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் ஜனாதிபதியை மீளவும் சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமைச்சரவைக் கூட்டத்தை மீளவும் சுமூகமாக நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/61703/

  • தொடங்கியவர்

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அதி­ருப்­தி­யுடன் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி வெளி­ந­டப்பு

P14-34b973c25423c291941215a424b1848d85bb2651.jpg

 

நன்றி கெட்டவன் நானல்ல என்றும் உருக்கமாக தெரிவிப்பு

(ரொபட் அன்­டனி, லியோநிரோஷதர்சன்)

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசிய கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பில் கடும் அதி­ருப்  தியை வெளி­யிட்­ட­துடன் உணர்­வு­பூர்­வ­மான உரை ஒன்றை நிகழ்த்­தி­விட்டு அமைச்­ச­ரவைக் கூட்­டத்­ தி­லி­ருந்து இடை­ந­டுவில் எழுந்து வெளியேறிச் சென்­றுள்ளார்.  

ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் தன் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தாக குற்றம் சாட்­டிய ஜனா­தி­பதி   தான் நன்றி கெட்­டவன் அல்ல என்­ப­த­னையும் அழுத்தம் திருத்­த­மாக கூறி­விட்டு இவ்­வாறு அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெ ளிந­டப்பு செய்­துள்ளார்.  

ஜனா­தி­பதி அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெ ளியே­றிய பின்னர் உட­ன­டி­யாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஷ்ட அமைச்­சர்கள் அவரின் பின்னால் சென்று சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் ஜனா­தி­ப­தியை மீண்டும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு அழைத்து வந்­த­தாக அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஒருவர் குறிப்­பிட்டார்.

வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் அமைச்­சர்கள் ஆகி­யோரும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது கருத்து வெ ளியிட்ட ஜனா­தி­பதி ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தன்­மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­தாக விசனம் வெ ளியிட்­டுள்ளார். சுமார் 25 நிமி­டங்கள் இவ்­வாறு ஜனா­தி­பதி கடும் விச­னத்தை வெ ளியிட்டு உணர்­வு­பூர்­வ­மான உரையை அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நிகழ்த்­தினார். கடும் கவ­லை­யான முகத்­துடன் ஜனா­தி­பதி இவ்­வாறு உரை­யாற்­றும்­போது அவரின் கண்கள் சிவந்து காணப்­பட்­ட­தாக கூட்­டத்தில் கலந்­து­கொண்ட ஒருவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் தான் பொலன்­ன­று­வையில் இருந்து அர­சி­யலை ஆரம்­பித்­த­தா­கவும் தான் ஒரு­போதும் நன்­றி­ம­றந்து செயற்­ப­ட­வில்லை என்றும் ஜனா­தி­பதி மிகவும் உணர்­வு­பூர்­வ­மான முறையில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி அங்கு குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசி்ய கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். நான் ஊழ­லுக்கு எதி­ராக செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். அவ்­வாறு நான் ஊழல் வாதி­க­ளுக்கு எதி­ராக பேசும்­போதும் செயற்­ப­டும்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் அவற்றை தமது உடலில் போட்­டுக்­கொள்­ள­வேண்டும்? ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய இளம் அமைச்சர் ஒருவர் ஏன் எனது குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக தொப்­பியை அணிந்­து­கொள்­ள­வேண்டும்? அப்­ப­டி­யானால் நான் ஊழல்­க­ளு­ககு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டாதா? அத­னையா நீங்கள் கூறு­கின்­றீர்கள்? நான் ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கே வந்­தி­ருக்­கின்றேன். அதற்­கா­கவே மக்கள் என்னை தெரிவு செய்­தனர். அவ்­வாறு ஊழ­லுக்கு எதி­ராக செயற்­ப­டும்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏன் அவற்றை தமது உடலில் போட்­டுக்­கொள்­ள­வேண்டும் ? நான் பொலன்­ன­று­வை­யி­லி­ருந்து அர­சி­யலை ஆரம்­பித்­தவன். மிகவும் கஷ்­டப்­பட்­டுத்தான் இந்த இடத்­துக்கு வந்­துள்ளேன். நான் நன்றி இல்­லா­தவன் கிடை­யாது. நான் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை பிர­த­ம­ருக்கு வழங்­கி­யி­ருக்­கின்றேன். பிர­தமர் நேர­டி­யாக தலை­யிட்டு முன்­னெ­டுக்கும் எந்­த­வொரு விடயம் குறித்தும் நான் தலை­யிட்­டது கிடை­யாது. பிர­த­மரும் அந்த அதி­கா­ரங்­களை சரி­யாக கையாண்டு வந்­துள்ளார். மத்­திய வங்கி விவ­கா­ரத்தை யார் மீது தாக்­குதல் நடத்த பயன்­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டேன். ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் தொடர்ச்­சி­யாக என்­மீது தாக்­குதல் நடத்­தி­வ­ரு­கின்­றனர் என்றார்.

ஜனா­தி­பதி இவ்­வாறு உரை­யாற்­றும்­போது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைதி நில­வி­யுள்­ளது. அமைச்­சர்கள் எவரும் ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து இவ்­வா­றான உரையை எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

 இவ்­வாறு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி உட­ன­டி­யாக தனது ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை விட்டு வெ ளியே­றினார். ஜனா­தி­பதி வெ ளியே­று­வதை கண்ட பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஷ்ட அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் சென்று பேச்­சு­வார்த்தை நடத்தி மீண்டும் அவரை கூட்­டத்­துக்கு அழைத்து வந்­துள்­ளனர்.

அதன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உரை­யாற்­று­கையில்

  இது நல்­லாட்­சி­யாகும். சிக்­கல்கள் பிரச்­சி­னைகள் வராமல் நாம் பார்த்­துக்­கொள்­ள­வேண்டும். இரண்டு கட்­சிகள் இணைந்து ஆட்சி நடத்­து­கின்­றன. ஜனா­தி­ப­தியை நாம் பாது­காக்­க­வேண்டும் என்று குறி­ப­பிட்­டுள்ளார். பின்னர் அமைச்­ச­ரவைக் கூட்டம் வழ­மை­போன்று நடை­பெற்­றுள்­ளது.

இது குறித்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட முக்­கிய அமைச்சர் ஒருவர் கேச­ரிக்கு கருத்து வெ ளியி­டு­கையில்

கடந்த சில தினங்­க­ளாக ஐக்­கிய தேசிய கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடு­மை­யாக விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். எனவே அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி அதற்கு பதி­ல­ளித்தார். குறிப்­பாக தான் ஊழ­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடு­க­கும்­போது அதனை ஐக­கிய தேசிய கட்­சி­யினர் தமது உடலில் போட்­டுக்­கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை என்று ஜனா­தி­பதி அதி­ருப்­தி­யுடன் கூறினார் என்றார்.

கேள்வி ஜனா­தி­பதி அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெ ளிந­டப்பு செய்­தது ஏன்?

பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­ருப்­தி­யுடன் பேசி­விட்டு எழுந்து சென்றார். அவர் கோபத்­துடன் வெ ளியே­றி­ய­தாக கூற முடி­யாது. மாறாக இயற்கை தேவையை நிறைவு செய்ய சென்­றி­ருக்­கலாம். இயற்கை தேவை வரும்­போது யாரும் செல்­வது வழக்கம் தானே என்றார்.

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்­கை­யா­னது கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து அது தொடர்­பாக தனது நிலைப்­பாட்டை அறி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு சில­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

இத­னை­ய­டுத்து பிர­தான கட்­ச­கிளின் கோரி்க்­கைக்கு அமைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு நடைபெற்றதுடன் அதில் ஐக்கிய தேசிய கட்சியினரும் கூட்டு எதிரணியினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் அனுராதபுரத்தில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் திருடர்கள் சண்டை போடுவதாக கூறியிருந்தார்.

இதனையடுத்தே ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் வலுவடைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை எம்.பி. க்கள் ஜனாதிபதியை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார் சுஜீவ சேனசிங்க மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் ஜனாதிபதி மீது கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.