Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் ‍பேரவையும் தமிழ் தலைமையும்

Featured Replies

தமிழ் மக்கள் ‍பேரவையும் தமிழ் தலைமையும்

 

2015 ஆம் ஆண்டு சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வுடன் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த மஹிந்த அர­சாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரி­மைக்­காக போரா­டிய விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடி­யி­ருந்­தது. அந்த நாடு­களின் துணை­யுடன் இந்த நாட்டில் இடம்­பெற்று வந்த யுத்­தத்தை முடி­வுக்கும் கொண்டு வந்­தி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. மாறாக சீனா­வு­ட­னான தனது தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­தி­யது. பிராந்­திய நலனை மையப்­ப­டுத்தி தமது நகர்­வு­களை மேற்­கொண்ட இந்­தி­யா­வுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இது பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அதன் விளை­வாக மஹிந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஐ.நா.வில் தமிழர் நலனை முன்­னிறுத்­தி போர்­க் குற்றம் மற்றும் மனி­த­வு­ரிமை மீறல் தொடர்பில் பிரே­ரணை ஒன்றை கொண்டு வந்து சர்­வ­தேச சமூகம் அழுத்தம் கொடுத்­தி­ருந்­தது. அத­னையும் கடந்த அர­சாங்கம் கண்டு கொள்­ளா­மையால் நாட்டில் ஆட்சி மாற்றம் வரை அது சென்­றி­ருந்­தது.

கடந்த மஹிந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு அர­சி­யலே செய்து வந்­தது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட போது சர்­வ­தேச சமூகம் தென்­னி­லங்­கையின் பிர­தான இரு கட்­சி­க­ளு­டனும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும் ஒரே நேர்­கோட்டில் சந்­திக்க வைத்­தது. இன்று அந்த இணைவு இணக்க அர­சியல் என்னும் பெயரால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை சர­ணா­கதி அர­சியல் செய்ய வழி­வ­குத்­தி­ருக்­கின்­றது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் தமிழ் மக்கள் முன்­னுள்ள பிரச்­ச­ினைகள் பல இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இன்றும் மக்கள் தமது சொந்த நிலங்­களை விடு­விக்கக் கோரியும், காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கோரியும் வீதி­களில் போராடி வரு­கின்­றார்கள். கடந்த வருடம் ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தின் மனி­த­வு­ரி­மைகள் கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்­ன­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட மக்­க­ளது போராட்­டங்கள் இன்று ஓராண்டைக் கடந்து சென்று கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த நிலையில், பாதிக்­கப்­பட்ட அம் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அம் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான கோரிக்கை தொடர்பில் அர­சாங்­கத்­திற்கு போதி­ய­ளவு அழுத்தம் கொடுக்க தவ­றி­யுள்­ளது. இதனால் தமிழ் மக்கள் தமது தலை­மைக்கு எதி­ரா­கவும் செயற்­பட தொடங்­கி­விட்­டனர் என்­ப­தனை அண்­மையில் முடி­வ­டைந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தியும் உள்­ளன. ஆட்சி மாற்­றத்தின் போது, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம், இந்த நாட்டில் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­ப­வற்றை முன்­வைத்தே மைத்­திரி,- ரணில் அர­சாங்கம் வாக்குக் கேட்­டி­ருந்­தது. இதில் முதல் இரு விட­யங்­க­ளையும் தற்­போ­தைய நடை­முறை அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொண்டு பாரா­ளு­மன்­றத்தில் அதனை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­வந்­தி­ருக்­கின்­றது. அதில் தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷைகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

1920 ஆம் ஆண்டு பிரித்­தா­னி­யரின் ஆதிக்­கத்­திற்குள் இந்த நாடு இருந்த போது கொண்டு வரப்­பட்ட மனிங் அர­சி­ய­ல­மைப்பில் பிர­தி­நிதித்­துவ ரீதி­யாக தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. இதன்­கா­ர­ண­மாக அது­வரை கால­மா­கவும் ஒற்­று­மை­யாக செயற்­பட்­டி­ருந்த தமிழ், - சிங்­கள தலைமை­களின் உறவு நிலை­களில் விரிசல் ஏற்­பட்டு இரு தலை­மை­களும் தனித்­த­னியே செயற்­படத் தொடங்­கின. அதன் தொடர்ச்­சி­யாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்தும் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள், ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் போரா­டினர். தென்­னி­லங்­கையில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த ஆட்­சி­யா­ளர்கள் அதனை கண்டு கொள்­ளா­ததன் விளை­வாக தமது இருப்­புக்­காக தமிழ் தரப்பு தற்­காப்பு யுத்தம் ஒன்றை மேற்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டது. அது தனி­நாட்­டுக்­கான போராக மாறி 2009 இல் முள்­ளி­­வாய்க்­கா­லுடன் முடி­வுக்கு வந்­தது. தற்­போது தமிழர் தரப்பு மீண்டும் ஜன­நா­யக ரீதி­யாக சம­நீதி, சம­வு­ரிமை, சம அந்­தஸ்து கேட்டு அதி­கா­ரத்­துடன் கூடிய சமஷ்டித் தீர்வைக் கேட்டு நிற்­கின்­றனர். தமிழர் தாயகப் பிர­தே­ச­மான வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்­து­கின்­றனர். இந்த இரு விட­யங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் சாத்­தி­ய­மில்லை என்­பது தெளி­வா­கி­யுள்­ளது. இந்த நிலையில் இனப்­பி­ரச்­ச­ினைக்­கான நிரந்­தர தீர்­வாக இந்த அர­சாங்கம் எதனை முன்­வைக்கப் போகின்­றது...? புதிய அர­சி­ய­ல­மைப்பு என்னும் பெயரில் இன்­னு­மொரு நடை­முறை அர­சி­ய­ல­மைப்­பையே கொண்டு வர முயற்­சிக்­கின்­றதா என்ற கேள்­வியும் எழு­கின்­றது.

தற்­போ­தைய ரணில், - மைத்­திரி கூட்­ட­ர­சாங்­கத்தை சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து பிணை எடுத்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை அர­சினால் திணிக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. தரு­வதைப் பெறுவோம் என்­கின்ற நிலைப்­பாட்டில் இரா.சம்பந்­தரும் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரும் இருக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் ஒரு தசாப்த கால­மாக தமிழ் மக்கள் இதற்­கா­கவா போரா­டி­னார்கள்...?. இதற்­கா­கவா இவ்­வ­ளவு இழப்­புக்கள். இவ்­வ­ளவு அழி­வுகள் ஏற்­பட்­டது என்­பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவ­றி­யி­ருக்­கின்­றார்கள். இதனால் புதிய அர­சி­ய­ல­மைப்பில் என்­ன­வுள்­ளது. அதனை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்ற ஒரு விழிப்­பு­ணர்வு மக்கள் மத்­தியில் தேவை­யா­க­வுள்­ளது. அதனை கூட்­ட­மைப்பு தலைமை மக்­க­ளுக்கு செய்யத் தவ­றி­யி­ருக்­கின்­றது. இந்த நிலையில் வடக்கு முத­ல­மைச்சரின் இணைத் ­த­லை­மை­யி­லான தமிழ் மக்கள் பேரவை அதை உணர்ந்து செயற்­பட்­டி­ருக்­கி­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் சர­ணா­கதி நிலையைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் வடக்­கிலும், கிழக்­கி­லு­மாக இரண்டு எழுக தமிழ் பேர­ணியை நடத்­தி­யி­ருக்­கின்­றது. போருக்கு பின்னர் பாரிய மக்கள் எழுச்­சி­யாக அமைந்த அந்தப் பேர­ணியில் கூட்­ட மைப்பு தலை­மையின் கருத்­துக்­க­ளையும் மீறி மக்கள் தமது அபி­லா­ஷைக­ளையும், உணர்­வு­க­ளையும் ஒரு­மித்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பிலும் பேரவை மக்கள் கருத்­துக்­க­ளை­ய­றிந்து அதனை திட்ட வரைவாக தயா­ரித்து கூட்­ட­மைப்பு தலை­மைக்கும், அர­சாங்­கத்­திற்கும் வழங்­கி­யி­ருந்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்பை எதிர்­கொள்­வது எப்­படி என் மக்கள் மத்­தியில் ஒரு விழிப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களில் பேர­வையின் கொள்­கை­க­ளுடன் ஒரு­மித்து பய­ணித்து, அதில் அங்­கத்­துவம் பெற்ற இரு கட்­சிகள் கணி­ச­மான ஆச­னங்­களைக் கைப்­பற்றி தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு நெருக்­கடி கொடுத்­துள்­ளன. இந்த நிலை­யி­லேயே, பேர­வையின் கொள்­கை­களை மக்கள் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அதனை மேலும் வலுப்­ப­டுத்தி முன்­கொண்டு செல்ல வேண்டும் என அதன் இணைத்­த­லை­வரும், வடக்கு முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி பேர­வையின் கூட்­டத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார். பேர­வையின் மத்­திய குழுவில் அனந்தி சசிதரன், ஐங்­க­ர­நேசன், அருந்­த­வ­பாலன் ஆகியோர் இணைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அர­சியல் கட்சி என்ற அடிப்­ப­டையில் கஜேந்­தி­ர­குமார் மற்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகி­யோ­ருக்கு மத்­திய குழுவில் இடம் வழங்­கப்­ப­ட­வில்லை. இது பேர­வையின் அடுத்த கட்ட நகர்­வு­களில் தாக்கம் செலுத்தும்.

அர­சியல் ரீதி­யாக விழிப்பு கொண்ட மக்­களை எந்­த­வொரு சக்­தி­யாலும் அடக்­கி­விட முடி­யாது என்ற சிந்­த­னைக்கு அமை­வாக ஒரு மக்கள் இயக்­க­மாக பேரவை பரந்­து­பட்ட அளவில் செயற்­பட்டால் மக்கள் மத்­தியில் ஏற்­படும் விழிப்­பு­ணர்வு அர­சியல் ரீதியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது உண்­மையே. ஆனால் அந்த மாற்­றத்­திற்கு தமிழ் மக்கள் பேரவை களம் அமைத்துக் கொடுக்­குமா என்­பது கேள்­வியே...?

 

தமிழ் மக்கள் பேரவை ஒரு அர­சியல் கட்சி அல்ல எனவும் அது பல்­வேறு கட்­சி­கள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­யியலாளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள், தொழி­லா­ளர்கள் என பல்­வேறு தரப்­புக்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரு மக்கள் இயக்கம் என்றே சொல்லி வரு­கின்­றது. இதனை வலுப்­ப­டுத்த இளைஞர் அணி­க­ளையும் உரு­வாக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இந்த நிலையில் இந்த மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகள், கருத்துக்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தற்போதைய செயற்பாடுகள் நகர்வுகளுக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த நிலையில் அரசியல் ரீதியாக விழிப்பூட்டும் மக்கள் பேரவை பாதிக்கப்பட்ட அந்த மக்களை யாருக்கு பின்னால் அரசியல் ரீதியாக அணிதிரட்டப் போகிறது. பேரவையின் கருத்துக்களை கேட்டுவிட்டு அவர்களது கருத்துகளுடன் உடன்பட்டு தமிழ் தேசியம் நோக்கி நகரும் மக்கள் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு பின்னால் வாக்கு அரசியலுக்காக நகருவார்களாகவிருந்தால் இத்தகைய விழிப்புணர்வு மூலம் எதனை அடைய முடியும். கூட்டமைப்பு தலைமை சரியாக பயணித்தால் அம்மக்கள் அதன் பின்னால் செல்வது சரியானதே. ஆனால், கூட்டமைப்பு தலைமை தவறுவிடுவதாகவே பேரவை கூறுகின்றது. அப்படி எனில் அந்த மக்களுக்காக பேரவை காட்டும் அரசியல் தலைமை எது என்பதே பலரதும் கேள்வியாகவுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-03#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.