Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை.

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை.

my32.jpg?resize=719%2C481

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.  யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழினுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 
 
மேலும் தெரிவிக்கையில் ,
 

இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம்.

காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன் விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம்.

ஆகவே, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம்.

இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார்.

நான் அந்த செய்ந்நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றேன். எமக்குப் பல அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அதற்கு அப்பால் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதுவே, மனிதாபிமானம் என்ற இரக்கமும் நெருக்கமும் என்றார்

http://globaltamilnews.net/2018/71523/

  • தொடங்கியவர்

செய்நன்றி மறக்கமாட்டேன் : யாழில் ஜனாதிபதி

(எம். நியூட்டன்)

 

செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கிற்கு வருகை தந்துள்ளேன். சிலர் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலினை தயாரித்து எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று செயற்படுகிறார்கள். நான் இலங்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியே சிந்திக்கின்றேன் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். 

 

maithripala.jpg

காணாமற்போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழாவில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் 

 

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை எல்லோருக்கும் தெரியும். நாட்டுக்கு அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது பிரச்சினையாகவே உள்ளது. 

 

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையை  தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை.  

 

 

அடுத்த ஜனாதிபதி பிரதமர் யார் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாகவுள்ளது. மக்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக இப்படி செயற்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.

 

 

எனவே நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தகவலை சொல்லுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எங்களுக்குத் தேவையில்லை. நாளைய தினத்தில் நாடு எங்கு போக வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதனைத்தான் நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். 

 

எனது பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியிலும்  இங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும், பாசடாலைக்கும் இங்குள்ள வடக்கு மக்களுக்கும் ஒரு கெளரவத்தை வழங்குவதற்காக இங்கு நான் வந்தேன். 

 

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின்போது, தேர்தலின் போது வடக்கு மக்கள் எனக்கு ஆதரளிவத்தமை தொடர்பில் குறிப்பிட்டார். அந்த செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கில் இருக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தவறாது கலந்து கொள்கின்றேன். எங்களுக்கு பலவிதமான அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதுதான் மனிதாபிமானம். மனிதர்கள் மீது அன்பு காட்டுபவர்களும், சேவை செய்வதும் அவர்கள் கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தக் கொள்கையுடன் நான் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். 

 

நான் இங்கு வரும்போது காணாமற்போனனோர் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்கள் காணாமற் போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம். நீங்களும் நாங்களும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டுக்காக எங்களுடைய கடமைகளை செய்வோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமைய ஏற்படுத்துவோம். எங்களிடம் இருக்கின்ற முறுகல் நிலையை இல்லாது செய்வோம். அதற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்றார். 

 

இதேவேளை ஜனாதிபதி தனது உரையின்முடிவில் வணக்கம், நன்றி எனத் தமிழில் கூறியமை குறிப்பிடத்தக்கது.  

 

http://www.virakesari.lk/article/31778

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.