Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்

Featured Replies

கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்

 

 
 

 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

முன்னாள் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே  எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது.  

geniva.jpg

கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார்   என்று  ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட  ஜயனி தியாகராஜா  என்ற பெண்  ஜெனிவா மனித உரிமை பேரவையில்  தெரிவித்தார். 

 

ஜெனிவாவில் நடைபெற்ற  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான  நேரத்தின் போது  இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 

 

 இலங்கை விவகாரத்தில் சர்வதேச நியாயாதிக்கத்தை வலியுறுத்தியுள்ள   ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கையை வரவேற்கின்றோம்.   

நான் எனது சகோதரன் ஜெகன் தியாகராஜாவுக்காக   நீதி கேட்டு இந்த சபைக்கு வந்திருக்கின்றேன். 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம்திகதி   இலங்கை கடற்படையின் அதிகாரி  சம்பத் முனசிங்கவினால் எனது சகோதரர் கடத்தப்பட்டார்.   

எனது சகோதரரை மீளப்பெறுவதற்காக   அனைத்து விதமான இராஜதந்திர பொறிமுறைகளையும்    எனது  குடும்பம்  பயன்படுத்தியது.  ஆனால் இராணுவ ரீதியான சித்திரவதைகளையே  எதிர்கொண்டோம்.  

எங்களது தனிப்பட்ட  நிதி நிலைமை காரணமாக   சகோதரரை மீளப்பெறுவதற்காக ஒருமில்லியன் கப்பம் கொடுத்தோம்.  ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.   துப்பாக்கிமுனையில்  பணத்தை பெற்றுக்கொண்டு  எனது  தாயை  தள்ளிவிட்டு சென்றனர். 

 

2012 ஆம் ஆண்டு விசேட   குற்றவிசாரணை அதிகாரி    நிஷாந்த டி சில்வாவும் அவரது குழுவும்   எனது வீட்டுக்கு வந்து  எனது சகோதரன் காணாமல் போகவில்லை என்றும்  அவர் கடத்தப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.  

 

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய வசந்த கருணாகொட, சம்பந் முனசிங்க, ஹெட்டிராய்ச்சி, தசநாயக்க உள்ளிட்டவர்கள்  எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியதாக  குறிப்பிட்டனர். கப்பம் பெறுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் கூறினர். 

 

 இவ்வாறு கடத்தப்பட்ட 11 பேரும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு  பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு மகாவலி ஆற்றில் வீசப்பட்டதாக  நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்தார்.   அண்மையில்  நான்கு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தினால்  பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

கடந்த பத்து வருடங்களாக   எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமது பிரஜைகளையே இவ்வாறு சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.   இலங்கை அரசாங்கத்திற்கு  அழுத்தங்களை பிரயோகித்து  எமது அன்புக்குரியவர்கள்  மீள்வருவதற்கு   நடவடிக்கை எடுக்குமாறு   இந்த பேரவையின் தலைவரிடம் கோருகின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/31808

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.