Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை இலங்­கையில் தொடரும் வன்­முறை

Featured Replies

10 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை இலங்­கையில் தொடரும் வன்­முறை

05-49efdd4b57800230ab756c8fbf29f2afa600e8b7.jpg

 

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
பாதிக்­கப்­பட்ட தாய்க்கு நீங்கள் கூறும் பதில் என்ன? ஆளும், எதிர்க்­கட்சி தலை­வர்கள் மத தலை­வர்கள், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி

மத தலை­வர்கள், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் ஐ.நா.விசேட நிபுணர் கேள்வி இலங்­கையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர். 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றை­க­ளினால் சமூ­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது என்று உண்­மை­யைக்­கண்­ட­றிதல், நீதியை நிலை நாட்­டுதல், நஷ்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­ நி­க­ழாமை என்­ப­வற்­றுக்­கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணை யாளர் பப்லோ டி கிரீப் தெரிவித்தார்.

இலங்­கையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர். 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றை­க­ளினால் சமூ­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது என்று உண்­மை­யைக் ­கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழாமை என்­ப­வற்­றுக்­கான ஐக்­கி­ய ­நா­டு­களின் விசேட ஆணை­யாளர் பப்லோ டி கிரீப் தெரி­வித்தார்.  

ஜெனிவா மனித உரி­மைப்­பே­ர­வையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விவா­தத்தில் இலங்­கைக்­கான விஜயம் குறித்த அறிக்­கையை வெளி­யிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பப்லோ டி கிரீப் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் இலங்­கை­யுடன் தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்றேன். பல்­வேறு விஜ­யங்­களை அங்கு நான் மேற்­கொண்­டி­ருக்­கின்றேன். கடந்­த­வ­ரு­டமும் இலங்­கைக்கு நான் விஜயம் செய்­தி­ருந்தேன். அது­தொ­டர்­பான எனது அறிக்­கையை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனி­வாவில் சமர்ப்­பிப்பேன்.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் சிவில் சமூ­கத்­திற்கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் எனக்கு வழங்­கிய ஒத்­து­ழைப்­புக்­காக இங்கு நன்றி தெரி­விக்­கின்றேன். பழைய விட­யங்கள் அனைத்­தையும் இங்கு நான் பேச­வில்லை.மாறாக இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் இடம்­பெற்ற முஸ்லிம் சமூ­கத்­தினர் மீதான தாக்­குதல் குறித்து சில விட­யங்­களை முன்­வைக்­கின்றேன்.

2015 ஆம் ஆண்டு காணா­மல்­போனோர் விடயம், காணி விடயம், தடுத்து வைத்தல், சித்­தி­ர­வ­தைகள், வன்­மு­றைகள், சிவில் சமூகம் மீதான கண்­கா­ணிப்பு, பாதிக்­கப்­பட்ட மக்­களை கண்­கா­ணித்தல் போன்ற விட­யங்கள் குறித்து பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்தேன். இந்த விட­யங்­களில் அதி­க­மா­னவை இன்னும் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளன.

ஒரு பரந்­து­பட்ட ரீதி­யிலான நிலை­மா­று­கால நீதி குறித்த பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென நான் ஏற்­க­னவே பரிந்­துரை முன்­வைத்­தி­ருக்­கின்றேன். குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற தீர்­மா­னத்தின் கீழ் இந்தப் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­திற்கு ஆணை­யா­ளர்­களை நிய­மித்­துள்­ளமை எதிர்­பார்ப்­பிற்­கான ஒரு சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யுள்­ளது. அதில் சில கேள்­வி­களும் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தாம­தமும் காணப்­ப­டு­கின்­றது. இந்த அலு­வ­லகம் தொடர்பில் ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­மாறு நான் அனைத்துத் தரப்­பி­ன­ரிடமும் கோரிக்கை விடுக்­கின்றேன்.

காணா­மல் ­போனோர் அலு­வ­ல­க­மா­னது ஒரு ஆரம்பம் மட்­டு­மே­யாகும். இலங்­கையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர். 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றை­க­ளினால் சமூ­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இன­வன்­மு­றைகள் இலங்­கையில் அவ்­வப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1987, 1989 ஆம் ஆண்­டு­களில் வன்­மு­றை­ச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. புலி­களும் தமிழ் சமூ­கத்­திற்கு எதி­ராக வன்­மு­றை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இதில் பாதிக்­கப்­பட்ட அனைத்து மக்­க­ளுக்கும் உண்­மையைக் கண்­ட­றி­யவும் நீதியைப் பெறவும் நட்­ட­ஈடு பெறவும் உரிமை உள்­ளது. அத்­துடன் முழு சமூ­கமும் மீள் நிக­ழா­மையை அனு­ப­விப்­ப­தற்கு உரிமை கொண்­ட­வர்கள். அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டா­தமை நிறுத்­தப்­ப­ட­வேண்டும். தற்­போது இலங்­கையின் தலை­மைத்­துவம், அர­சியல் தலை­மைத்­துவம், எதிர்க்­கட்­சி­யினர், மதத்­த­லை­வர்கள், இரா­ணு­வத்­தினர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளி­டமும் நான் ஒரு கேள்­வியைக் கேட்­கின்றேன். அதா­வது மூன்று மாதங்கள் அல்­லது இரண்டு வரு­டங்கள் அல்­லது ஏழு வரு­டங்­களின் பின்னர் உங்கள் சமூ­கத்தின் தாயொ­ருவர் உங்­க­ளிடம் வந்து எனது மகன் கடத்­தப்­ப­டு­வ­தற்கு அல்­லது கொல்­லப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று கேட்டால் அவ­ருக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

2015ஆம் ஆண்டு நான் முன்­வைத்த விட­யங்­களின் படி அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக சரி­யான நடவ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால் பிராந்­தி­யத்­தி­லேயே நிரந்­தர சமா­தானம் கொண்ட நாடாக இலங்கை சாத­னை­ப­டைத்­தி­ருக்­கலாம். எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்­கைக்கு தீர்க்­க­மான மற்றும் உற்­சா­க­மான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. இலங்கை மக்கள் அனை­வரும் தாம் சமத்­து­வ­மிக்­க­வர்கள் மற்றும் அடிப்­படை உரி­மை­யைக்­கொண்­ட­வர்கள் என்­பதை உணர்த்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு இலங்­கைக்கு தேவைப்­ப­டு­கின்­றது. அதற்­கான சட்ட வடிவம் அவ­சி­ய­மா­கி­றது. யாரும் சட்­டத்­திற்கு அப்­பாற்பட்­ட­வர்கள் கிடை­யாது என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டாத கலா­சாரம் உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். பாது­காப்பு தரப்பு மறு­சீ­ர­மைப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்கு குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை செலுத்தும். தொடர்ந்தும் இதற்­காக காத்­தி­ருக்­க­வேண்டாம். பொறு­மை­யா­கவும் அழுத்த ரீதி­யா­கவும் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுங்கள். அந்த செயற்­பாட்டை விரை­வாக அமுல்­ப­டுத்­துங்கள்.

இதே­வேளை கடந்த ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பப்லோ டி கிரீப் பின்­வரும் விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அர­சாங்கம் உட­ன­டி­யாக பரந்­து­பட்ட ரீதி­யி­லான கால அட்­ட­வ­ணை­யுடன் கூடிய நிலை­மா­று­கால நீதி தொடர்­பான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது உண்­மை­யைக்­கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தா­கவே இந்தப் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு பொது­மக்­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

நல்­லி­ணக்க செய­லணி வெளி­யிட்ட அறி­க்­கையை அர­சாங்கம் பயன்­ப­டுத்­த ­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத்­துடன் இது­வரை அர­சாங்கம் ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் உத­வி­களை பெற்­றுக்­கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. எனவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் தொழில்­நுட்ப உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டியாக ரத்து செய்­ய­வேண்டும். அதற்குப் பதி­லாக கொண்­டு­வரும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது சர்­வ­தேச தரங்­களை பின்­பற்­று­வ­தாக அமை­ய­வேண்டும். அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் காணப்­ப­டு­கின்ற வழக்­கு­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்டும் என்­ப­துடன் வர்த்­தக செயற்­பா­டு­களில் இரா­ணு­வத்­தி­னரின் ஈடு­பாட்டை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும். பாது­காப்புத் தரப்­பி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள காணிகள் தொடர்­பான ஒரு அட்­ட­வணை தயா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். உரிய கால அட்­ட­வணை வழங்­கப்­பட்டு காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் விடு­விக்­கப்­ப­டாத காணி­க­ளுக்­கான நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும். இந்த நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாட்டில் தீர்­மானம் எடுக்கும் அதி­கா­ரி­க­ளாக இரா­ணு­வத்­தினர் இருக்­கக்­கூ­டாது. மனித உரிமை காப்­பா­ளர்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் முக்­கி­ய­மாக பெண்கள் மீதான தொடர் சித்­தி­ர­வ­தைகள் நிறுத்­தப்­பட்டு அவர்கள் மீதான கண்­கா­ணிப்­பு­களும் முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­ப்படவேண்டும்.

தற்­போ­தைய சாட்­சி­களைப் பாது­காக்கும் சட்­ட­மா­னது பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். முன்­னைய அனைத்­து­வி­த­மான ஆணைக்­கு­ழுக்­க­ளி­னதும் அறிக்­கைகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்த ஆணைக்­கு­ழுக்­களின் பதி­வுகள் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போனோர் அலு­வ­லகம் உட­ன­டி­யாக தொழில்­பாட்டு நிலை­மைக்கு வர­வேண்டும். வெளிப்­படைத் தன்மை மிக்க சுயா­தீன ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். மாவட்ட மட்­டங்­க­ளிலும் காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் பிர­சன்னம் இருக்­க­வேண்டும். நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இதன் அலு­வ­ல­கங்கள் நிறு­வப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போ­னோரின் அலு­வ­ல­கத்தை கண்­கா­ணிப்­ப­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைக்­கொண்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போ­னோரின் அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகளில் அனைத்து அரச நிறு­வ­னங்­களும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

உண்­மை­யைக்­கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­ப­ட­வேண்டும். இதற்­கான சட்டம் உரு­வாக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இந்த ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்­க­ளிலும் அதன் உத்­தி­யோ­கத்­தர்­க­ளிலும் பாதிக்­கப்­பட்டோர் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது நீதிபதிமார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைக் கொண்டு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகரமான முறையில் நீதியை வழங்கவேண்டும். நட்டஈடு வழங்கும் அலுவலகம் ஒன்று நிறுவப்படவேண்டும். மதம், இனம், பார்க்கப்படாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் நட்டஈடு வழங்கும் செயற்பாடானது உண்மையைக்கண்டறிதல், மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை மறைத்துவிடுவதாக அமைந்துவிடக்கூடாது. பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும். கட்டாயமாக பாதுகாப்பு கருதி தேவைப்படும் காணிகளை மட்டும் இராணுவத்தினர் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் காணி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நினைவுகூரும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். இது மக்களுக்கு ஆறுதலை வழங்குவதாக இருக்கும்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடானது மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும். இது நல்லிணக்கத்திற்கும் முக்கியமானது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.