Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றவே தீவிர பொறுப்பு முகாமை சட்டம்

Featured Replies

அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றவே தீவிர பொறுப்பு முகாமை சட்டம்

09-9e05bf0641e6ca4c94b2a7493094212de3349ec6.jpg

 

கடன் செயற்பாடுகளில் மீண்டும் அவரை அனுமதிக்கும் நகர்வு  கூட்டு எதிர்க்கட்சி,ஜே.வி.பி. சபையில் குற்றச்சாட்டு 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றி ஊழல் குற் றங்களில் இருந்து தப்பிக்க வைக்கவே தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகின்றது. கடன் செயற்பாடுகளில் மீண்டும் அர்ஜுன மகேந் திரனை அனுமதித்து தீர்மானம் எடுக்கும் நகர்வுகளா என்ற சந்தேகம் எழுவதாக ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.  

அர்ஜுன் மகேந்திரனை காப்பாற்றி சகல குற்றங்களில் இருந்தும் விடுவிக்கவே  பிரதமர் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தினர்.  

தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அந்த விவாதத்தின் போதே இதனைக் குறிப்பிட்டனர்.

ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கூறுகையில்.

மத்திய வங்கி மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள து. , அந்த நம்பிக்கையினை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை நிறைவேற்றுவது ஏற்றுகொள்ள முடியாத ஒரு நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும். கடந்த கால கடன்களில் நாம் நெருக்கடியில் தவிக்கின்றோம். இன்று நாடு பாரிய கடன் சுமையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கை 4200 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமாக திறந்த பொருளாதாரம் தான் சரியானது கூறி செயற்பட்ட அரசாங்கமே இன்று நாம் கடன் சுமையில் தவிக்கிறோம் என கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் மக்களே நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மக்களின் தவறு அல்ல. மக்களின் தீர்மானமும் அல்ல. ஆட்சியில் உள்ள அரசாங்கமும் முன்னைய அரசாங்கமும் சரியான திட்டமிடல் இல்லாத நிலைமையே நாம் பாரிய கடன் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளோம். கடன்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நாடு இலங்கை என்பதை கூறி அதனை ஒரு பெருமையாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும் வாங்கிய கடன்களுக்கு எவ்வாறான ஆரோக்கியமான அபிவிருத்திகளை இடம்பெற்றுள்ளது என்ற யாருக்குமே தெரியவில்லை. இவ்வளவு கடன்களை வாங்கத் தெரிந்த அரசாங்கத்திற்கு அதனை செலுத்தும் வழிமுறை தெரியவில்லை. இதற்கு விடை தேடாது பாராளுமன்றத்தை நிராகரித்து ஒரு அமைச்சருக்கு மட்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளது எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம் இன்று கைப்பற்றப்பட்டு ஒரு அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது மத்திய வங்கி விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள பிரதமர் தான் கடன்கள் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் நிதி அமைச்சர் தலையிட முடியாது என கூறப்படுகின்றது. ஏன் நிதி அமைச்சருக்கு இந்த பொறுப்பினை வழங்க அரசாங்கம் அஞ்சுகின்றதா? பிரதமருக்கு வழங்குவதை விடவும் நிதி அமைச்சர் நம்பிக்கையான நபர் என்று கருதுகின்றேன். எனினும் அதனை பிரதமர் விரும்பவில்லை போல் தெரிகின்றது. இப்போது கொண்டுவந்துள்ள சட்ட திருத்தங்களின் போது அர்ஜுன் மகேந்திரனை மனதில் வைத்தா கொண்டுவந்தனர் என்ற சந்தேகம் எழுகின்றது. சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்ய முடியாத வகையில் மாற்றங்களை கொண்டுவந்து அர்ஜுன் மகேந்திரனை காப்பாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்றும் சரத்துக்கள் தான் அதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளது. 13 சரத்துக்கள் மட்டுமே உள்ள ஒரு சட்டத்தில் அதிகமானவை குற்றங்களை செய்யவும் குற்றவாளிகள் தப்பிக்கும் வழிமுறைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

விவாதத்தில் உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்.

இந்த சட்டமூலத்தில் சில விடயங்களை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். கடன்களை பெற்றுக்கொள்வதில் இப்போதுள்ள தன்மைகளை நாம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மத்திய வங்கியின் சுயாதீன நிறுவனங்களுக்கு அதற்கான அதிகாரம் இப்போதும் வழங்கப்பட்டுள்ளது. கடன் நிறுவனம் தேவையான கடன்களை பெற்றுக்கொள்ளும், தேவைக்கு ஏற்ப ஆராய்ந்து சுயாதீனமாக அவர்கள் இதனை முன்னெடுப்பார்கள். எனினும் நாம் எதிர்ப்பது என்னவெனில் சில சரத்துகளை உள்ளடக்கி அதில் பிரதமர் நேரடியான தலையீட்டை சுட்டிக்காட்டியுள்ளதையேயாகும்.

பிரதமரின் தனிப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே எவ்வளவு பணம், வட்டி மற்றும் ஏனைய விடயங்கள் உள்ளடங்கலாக இந்த தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி என ஒரு வார்த்தையினை அரசாங்கம் சுட்டிகாட்டிய போதிலும் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை அமைச்சரவை அனுமதி இல்லாமலேயே நியமித்தார்கள். ஆகவே 10,4,11 ஆம் சரத்துக்களின் மூலம் பிரதமருக்கு தனிச்சையாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அர்ஜுன் மஹேந்திரன் எங்கே? அவரை ஏன் தேட முடியவில்லை? பிரதமர் கொடுத்த வாக்குறுதி எங்கே? தனக்கு அவரை வரவழைக்க முடியும்,சிங்கபூர் சென்று அவரை அழைத்து வருவேன் என கூறினார். இன்று ஏன் வாய் திறக்காது உள்ளார். ஆகவே இவ்வாறான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது தவறான ஒன்றா ? இல்லையே. முன்னாள் ஆளுநர் ஒளிந்துகொண்டுள்ளார். பிரதமர் மீண்டும் கடன் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது நண்பரை பணத்துடன் அனுப்பிவைத்துவிட்டு மீண்டும் கடன் கேட்கும் நிலையில் பிரதமர் செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறு செயற்பட்டால் யார் இலங்கைக்கு கடன் வழங்குவார்கள்? எந்த வட்டி வீதத்தில் வழங்குவார்கள்? இவ்வாறு பல்வேறு கேள்விகள் எழுகின்றது. கடன் வாங்கும் போது வட்டி தீர்மானம் எடுக்கும் போது மீண்டும் அர்ஜுன் மகேந்திரன் இந்த செயற்பாட்டில் உள்நுழைவாரா என்ற சந்தேகம் எழுகின்றது. பிரதமரும் அதற்கு உதவி வழங்குவார் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்ஜுன் மகேந்திரனை பாதுகாப்பதில் பிரதமர் பாரிய பொறுப்பினை நிறைவேற்றி வருகின்றார். ஆகவே பிரதமரின் உதவியுடன் மீண்டும் அர்ஜுன் மகேந்திரன் எமது கடன் செயற்பாடுகளில் தலையிடுவாரா என்ற சந்தேகம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

விவாதத்தில் உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் பிரதான குற்றவாளிகள் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் பாதுகாப்பாக உள்ளார். சர்வதேச பொலிசார் சிங்கபூருக்கு உள்நுழைய முடியாது. ஆகவே இந்த கள்ளர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் மத்திய வங்கியை கொள்ளையடித்து அதன்மூலம் இன்று அரசாங்கம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் மீண்டும் புதிய சட்டத்தின் மூலமாக மத்திய வங்கியின் அதிகாரங்களை அமைச்சரின் கைகளுக்கு எடுத்து மேலும் கொள்ளையடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கியில் இருந்துமேற்கொண்ட செயற்பாடுகளை இப்போது சிங்கப்பூரில் இருந்து செய்யும் வசதிகளை பிரதமர் செய்துகொடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே கை உயர்த்தி ஆதரவை வழங்கி வருகின்றது. இது மத்திய வங்கி களவை மூடி மறைக்கும் சட்டமாகும். இதனை கொண்டுவர அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். களவுகளை சரிசெய்ய சரியான ஒரு சட்டம் கொண்டுவருவதென்றால் அதுதான் இந்த சட்டமாகும். மக்களின் பணத்தை கொள்ளையடித்த கள்ளர்களை காப்பாற்ற இந்த சட்டத்தை கொண்டு வருகின்றனர். ஆகவே இதனை நிறுத்துங்கள். மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.