Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுமாறும் கூட்டமைப்பு

Featured Replies

தடுமாறும் கூட்டமைப்பு

SAMAKALAM310318-PG04-R3-57464350870f992ff349a4853c84eefaf71a7e2f.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட பின்­ன­டைவைச் சரி செய்யும் ஒரு முயற்­சி­யாக, அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யாத உள்­ளூ­ராட்சி சபை­களில், ஆட்­சி­ய­மைக்கும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ன்றன.

தேசியக் கட்­சியா- அல்­லது தமிழ்த் தேசிய விரோதக் கட்­சியா என்ற எந்தப் பாகு­பாடும் இல்­லாமல், அவர்­களின் ஆத­ர­வுடன் வடக்கு, கிழக்கு உள்­ளூ­ராட்­சி­களில் ஆட்­சி­ய­மைத்து வரு­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு.

இதனால் தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில் கூட்­ட­மைப்பு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­கொண்­டி­ருக்­கி­றது.

அதே­வேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வுக்­கான காரணம் என்ன என்­பதைக் கண்­ட­றி­வ­திலும், தோல்­வியைச் சந்­தித்­தி­ருக்­கி­றது என்றே தெரி­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடிந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற ஒரு கூட்டம் நடந்­தது. அதில் பின்­ன­டை­வுக்­கான கார­ணங்கள் பற்றி ஆரா­யப்­பட்­டன.

பின்­ன­டை­வுக்­கான கார­ணங்­களை ஆராய்ந்து பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கு ஒரு குழு நிய­மிக்­கப்­படும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால் அத்­த­கை­ய­தொரு குழு அமைக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

அதே­வேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி­யாக ஒரு குழுவை அமைத்­தது. அந்தக் குழு கார­ணங்­களைத் தேடி பல்­வேறு தரப்­பு­க­ளி­னதும் கருத்­துக்­களைப் பெற்­றது. அந்தக் குழுவின் அறிக்கை தமிழரசுக் கட்சித் தலை­வ­ரான மாவை. சேனா­தி­ரா­சா­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஏனென்றால், நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் அண்­மையில் நடந்த, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் தெரிவு செய்­யப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பத­வி­யேற்பு நிகழ்வில் உரை­யாற்­றிய- தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராசா, தேர்­தலில் ஏற்­பட்ட பின்­ன­டை­வுக்­கான கார­ணத்தைக் கண்டு பிடித்து விட்டோம் என்று கூறி­யி­ருந்தார்.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கூட்­ட­மைப்­புக்குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டதும், அது­பற்றி பெரும்­பா­லா­ன­வர்கள் வாய்­தி­றக்க மறுத்த போதும், கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் மட்­டுமே, ஊட­கங்கள் மத்­தியில் உட­ன­டி­யாக அதனை ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். பின்னர் மெது­மெ­து­வாகத் தான், ஏனை­ய­வர்கள் ஒப்புக் கொண்­டனர்.

எவ்­வா­றா­யினும், கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வுக்­கான காரணம் என்ன என்­பதை கூட்­ட­மைப்பு இன்­னமும் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. ஆனால், ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு கார­ணத்தைச் சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடிந்த மூன்­றா­வது நாள், ரெலோ நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், அந்தக் கட்­சியின் பொதுச்­செ­ய­ல­ரான என்.சிறீ­காந்தா ஒரு கார­ணத்தைக் குறிப்­பிட்டார்.

யாழ்ப்­பாணம் மாந­க­ர­சபை, நல்லூர் பிர­தேச சபை போன்ற இடங்­களில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக கிளப்­பப்­பட்ட மத­வா­தமே பின்­ன­டை­வுக்­கான காரணம் என்று கூறி­யி­ருந்தார்.

இந்தத் தேர்­தலில் மத­வாதக் கருத்­துக்கள், கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக கிளப்பி விடப்­பட்­டது உண்மை தான். என்­றாலும், ஒட்­டு­மொத்த பின்­ன­டை­வு­க­ளுக்கும் அது கார­ண­மாக இருக்­க­வில்லை. யாழ்ப்­பாணம், நல்லூர் பகு­தி­களில் மாத்­திரம், பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

அதற்குப் பின்னர், தமிழரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்­டத்தில் பின்­ன­டை­வுக்­கான கார­ணங்கள் பற்றி கார­சா­ர­மான விவாதம் ஒன்று நடந்­த­தாக தக­வல்கள் கசிந்­தன.

அந்தக் கூட்­டத்தில், சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சுமந்­தி­ரனே பின்­ன­டை­வுக்­கான காரணம் என்று குற்­றம்­சாட்­டி­ய­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

விசேட அதி­ர­டிப்­படைப் பாது­காப்­புடன், பிர­சாரக் கூட்­டங்­க­ளுக்குச் சென்­றது, புலி­களும் ஆட்­களைக் காணா­மல்­போகச் செய்­தனர் என்று கருத்து வெளி­யிட்­டது, புதுக்­கு­டி­யி­ருப்பில் நடந்த பிர­சாரக் கூட்­டத்­துக்கு வந்­த­வர்­களை பொலிசார் உடல் பரி­சோ­தனை நடத்­தி­யது, அர­சாங்­கத்தின் பிர­தி­நிதி போலச் செயற்­பட்­டது என்று சில கார­ணங்கள் சுமந்­தி­ர­னுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் சொல்­லப்­பட்­டது.

அதற்குப் பிறகு, அமிர்­த­லிங்கம், உருவச் சிலை திறப்­புக்­காக யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அர­சாங்­கத்­துடன் பல விட­யங்­களில் இணைந்து செயற்­பட்­டதால் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டது என்று காரணம் ஒன்றைக் கூறி­யி­ருந்தார்.

ஆனாலும், வவு­னி­யாவில் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்­களின் பத­வி­யேற்பு நிகழ்வில் உரை­யாற்­றிய தமிழரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா, வடக்கு மாகா­ண­சபை சரி­யாகச் செயற்­ப­டாமை தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தோல்­விக்குக் காரணம் என்று குறிப்­பிட்டார்.

உட­ன­டி­யா­கவே கொதித்­தெ­ழுந்த வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், தமிழரசுக் கட்­சியே தோல்­விக்குக் காரணம் என்றும், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக். கொண்டு வந்­ததால் தான் தேர்­தலில் பின்­ன­டைவு ஏற்­பட்­டது என்றும் குறிப்­பிட்டார்.

இவ்­வா­றாக பல்­வேறு கார­ணங்கள் ஒவ்­வொ­ரு­வ­ராலும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொ­ரு­வரும் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தாம் தப்பிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தான் கார­ணங்­களை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

ஒட்­டு­மொத்தக் கார­ணங்­க­ளையும் ஆராய்ந்து ஒரு கூட்­டாக அதனை பகிர்ந்து கொள்ளும் முடி­வுக்கு கூட்­ட­மைப்பு இன்­னமும் வர­வில்லை.

பின்­ன­டைவு ஒன்று ஏற்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொண்ட கூட்­ட­மைப்­பினால், ஏன் அதற்­கான சரி­யான கார­ணத்தைக் கண்­ட­றிய முடி­யாமல் இருக்­கி­றது என்­பது தான் கேள்­விக்­கு­ரிய விடயம்.

பின்­ன­டை­வுகள் ஏற்­ப­டு­கின்ற போது, தவ­று­களைக் கண்­ட­றிந்து சரி செய்­யா­த­வர்கள் எவ­ரா­யினும், தப்பிப் பிழைத்­த­தாக வர­லாறு இல்லை.

அது வாழ்­வி­யலில் ஆகட்டும், வணி­கத்தில் ஆகட்டும், அர­சி­யலில் ஆகட்டும், போரி­யலில் ஆகட்டும், - எதி­லுமே இது தான் விதி.

தவ­று­களைக் கண்­ட­றிந்து அதனைத் திருத்திக் கொள்­ளாத வரை, எந்தத் துறை­யிலும் முன்­னேற முடி­யாது, வெற்­றி­பெற முடி­யாது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருக்­கின்ற நிலையில், அதற்­கான சரி­யான கார­ணங்­களைக் கண்­ட­றிந்­தி­ருந்தால், இப்­படி ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு கார­ணத்தைக் கூறித் தப்பிக் கொள்ளும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள பின்­ன­டை­வுக்கு சரி­யான கார­ணத்தைக் கண்­ட­றிந்து கொள்­ளா­விடின், விரை­வி­லேயே நடக்கப் போகும் மாகா­ண­சபைத் தேர்­தலில் அதற்­கான விலையைக் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும்.

ஆனால் கூட்­ட­மைப்பின் தலை­மையோ, பங்­காளிக் கட்­சி­களோ, அது­பற்­றிய எந்தக் கரி­ச­னை­யையும் கொண்­டுள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. அத்­த­கைய கரி­சனை இருந்­தி­ருந்தால் குடுமி பிடி சண்­டை­களை தவிர்த்து, தவ­று­களைத் திருத்திக் கொண்டு, அடுத்த கட்­டத்­துக்கு நகர்­வ­தற்­கான வழியைத் தேடி­யி­ருந்­தி­ருப்­பார்கள்.

ஆனால், பொது­வா­கவே தமிழ்க் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு பழக்கம் இருக்­கி­றது. தேர்தல் வந்தால் தான் விழித்துக் கொள்­வார்கள். தேர்தல் வரப்­போ­கி­றது என்றால், உச்­சத்­தொ­னியில் நரம்பு புடைக்க பிர­சாரம் செய்வார்கள்.

தேர்தல் முடிந்ததும், வெற்றியோ தோல்வியோ அப்படியே கிடப்பில் போட்டு விட்டு உறங்கி விடுவார்கள்.

தமிழ்க் கட்சிகளின் இந்தப் பண்பு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னமும் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, ஏனைய கட்சிகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இல்லையேல், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இல்லாத- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முந்திக் கொண்டு ஓடுவதற்கு ஏனைய கட்சிகளாவது தயாராகியிருக்க முடியும்.

இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு காலதாமதம் செய்வது, ஏனைய கட்சிகளின் பலத்தை அதிகரிக்கும்.

அது, , வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விரைவில் நடக்கப் போகும் தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.