Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2

Featured Replies

தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2

Ranil-ea2defdce4749714d18eedd7696cf6ac95fd6780.jpg

 

பெப்­ர­வரி 10ஆம் திகதி நடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், கொழும்பு அர­சியல் இரண்­டா­வது அர­சியல் குழப்­பத்தை தாண்­டி­யி­ருக்­கி­றது.

இந்த இரண்டு குழப்­பங்­க­ளுமே, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதி­கா­ரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்­டவை.

இந்த இரண்டு குழப்­பங்­க­ளி­னதும் மூலம், ஒரே இடத்தில் இருந்து தான் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஒரே இடத்தில் இருந்து தான் இது இயக்­கப்­பட்­டது.

ஆனால், இந்த இரண்டு ஒப்­ப­ரே­சன்­க­ளுமே தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி பெற்ற வெற்­றியைத் தொடர்ந்து, ஆட்­சியைக் கைப்­பற்றும் தீவிர முனைப்பில் ராஜபக் ஷக்­களும் அவர்­களின் ஆத­ர­வா­ளர்­களும் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் அவர்­களின் பலத்தை நிரூ­பித்­தி­ருக்­கி­றது. அதனை வைத்துக் கொண்டு, மீண்டும் ஆட்­சிக்கு வந்து விட எத்­த­னிக்­கி­றார்கள்.

அடுத்து, ராஜபக் ஷக்­களின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற முறை­கே­டுகள், குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை முடக்க வேண்­டிய தேவையும் அவர்­க­ளுக்கு இருக்­கி­றது.

இல்­லையேல் அவர்கள் தரப்பில் பலர் கம்பி எண்­ணு­கின்ற நிலைக்குத் தள்­ளப்­ப­டலாம். அதனைத் தடுப்­ப­தற்கு, எப்­ப­டி­யா­வது, ஆட்­சியைப் பிடித்து விட வேண்டும் என்ற அவ­சரம் அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

அதற்­காகத் தான், அவர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் குறி­வைத்­தி­ருக்­கி­றார்கள். அவரை எப்­ப­டி­யா­வது பத­வியில் இருந்து இறக்கி விட்டால், தமக்­கான பாதை ‘கிளி­ய­ராகி’ விடும் என்­பது அவர்­களின் எதிர்­பார்ப்பு.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் கொண்ட பிர­த­மரை, ஜனா­தி­ப­தி­யினால் பதவி நீக்கம் செய்ய முடி­யாது, அதற்கு தற்­போது சட்­டத்தில் இட­மில்லை. அது­போல, பாரா­ளு­மன்­றத்­தையும், நான்­கரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­ப­தியால், கலைக்க முடி­யாது.

இந்த இரண்டு கவ­சங்­களும் தான் ராஜபக் ஷக்­க­ளுக்குப் பெரும் சிக்­க­லாக இருந்து வரு­கி­றது.

தமக்குப் பக்­கப்­பாட்டுப் பாடக் கூடிய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு பகு­தி­யி­னரை வைத்துக் கொண்டு, கடந்த பெப்­ர­வரி மாதம், முத­லா­வது அர­சியல் குழப்­பத்தை தோற்­று­வித்­தனர் ராஜபக் ஷக்கள்.

பிர­தமர் பதவி விலக வேண்டும் என்று, கூட்டு அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் மூலம் அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டது.

ஐ.தே.க. அசைந்து கொடுக்­கா­த­தாலும், ஜனா­தி­ப­திக்கு போதிய அதி­கா­ரங்கள் இல்­லா­த­தாலும், அந்த முத­லா­வது ஒப்­ப­ரே­சனில் ராஜபக் ஷக்­க­ளுக்கு தோல்வி ஏற்­பட்­டது.

அதை­ய­டுத்தே, பிர­த­ம­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது.

இம்­முறை அவர்கள், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக செயற்­படக் கூடிய ஐ.தே.கவி­ன­ரையும், துணைக்கு அழைத்­தி­ருந்­தனர். வழக்கம் போலவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் உள்ள ராஜபக் ஷ விசு­வா­சி­களும், அதற்கு ஒத்­து­ழைத்­தனர்.

ஐ.தே.கவுக்குள் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உள்­ளக குழப்­பங்­க­ளையும் சமா­ளித்து, ராஜபக் ஷக்­களின் வியூ­கத்­தையும் உடைத்து, பெரும்­பான்மை பலத்தை ரணில் நிரூ­பித்­தி­ருக்­கிறார்.

ஐ.தே.கவின் கூட்­டணிப் பலத்தை உடைப்­பதில், ராஜபக் ஷக்­க­ளுக்கு ஏற்­பட்ட தோல்வி தான், நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அவர்கள் மண் கவ்வக் காரணம்.

இதனால், இரண்­டா­வது ஒப்­ப­ரே­சனும் தோல்­வியில் முடிந்­தி­ருக்­கி­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வெற்றி பெற்­றி­ருந்தால், ராஜபக் ஷக்­களின் அதி­கார கைப்­பற்றல் பய­ணத்­துக்­கான பாதை திறந்து விடப்­பட்­டி­ருக்கும். நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­தற்கும், அதனை தோற்­க­டிப்­பதில் சிறு­பான்­மை­யினக் கட்­சிகள் ஒன்­று­பட்­ட­தற்கும் ஒரே காரணம், ராஜபக் ஷக்­களின் (6 ஆம் பக்கம் பார்க்க)

இர­க­சியத் திட்டம் தான். பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கு­வது மட்டும் தான் தமது நோக்கம் என்று கூட்டு எதி­ர­ணி­யினர் கூறி வந்­தாலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மித்தால் அதற்கு ஒத்­து­ழைப்போம் என்று மஹிந்த ராஜபக் ஷவே கூறி­னாலும், அவர்­களின் உண்­மை­யான திட்டம் அது­வல்ல. 

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதி­கா­ரத்தில் இருந்து நீக்கும் வரை தான் அந்தத் திட்டம். அதற்குப் பின்னர் அவர்­க­ளிடம் இன்­னொரு திட்டம் இருந்­தது.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் வெற்றி பெற்ற பின்னர், பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­மாறு ஜனா­தி­ப­திக்கு அழுத்தம் கொடுப்­பது அவர்­களின் இரண்­டா­வது திட்டம்.

ஜனா­தி­ப­தி­யினால் நான்­கரை ஆண்­டு­க­ளுக்குள் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யாது. அதனால், பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஒரு தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து, பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அவர்கள் திட்டம் தீட்­டி­யி­ருந்­தனர்.

இதனை மஹிந்த ராஜபக் ஷ, நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவாதம் நடப்­ப­தற்கு மூன்று நாட்கள் முன்­ன­தாக கொழும்பு ஆங்­கில நாளிதழ் ஒன்­றிடம் கூறி­யி­ருந்தார்.

ஆக, அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வது மட்டும் தான், ராஜபக் ஷக்­களின் திட்டம் என்­பது உறு­தி­யா­கி­றது.

அர­சியல் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதால், நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­படும் பாதிப்­புகள் குறித்தோ, இன்­னொரு தேர்­தலை நடத்­து­வதால், ஏற்­படக் கூடிய பல நூறு கோடி ரூபா செல­வுகள் பற்­றியோ இவர்­க­ளுக்கு எந்தக் கவ­லை­யு­மில்லை.

தாம் அதி­கா­ரத்தைப் பிடிப்­ப­தற்­காக ஆண்­டுக்கு ஒரு முறை தேர்­தலை நடத்­து­வ­தற்கும் இவர்கள் தயா­ராக இருக்­கி­றார்கள்.

ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினால் தான், தமக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற, முன்­னைய ஆட்­சிக்­கால மோச­டிகள், முறை­கே­டுகள் குறித்த விசா­ர­ணை­களை முடக்க முடியும் என்­பது இவர்­களின் நம்­பிக்கை.

எவ்­வா­றா­யினும், தமக்கு எதி­ராக நடத்­தப்­படும் விசா­ர­ணை­களை நிறுத்­து­வ­தற்­கா­கவும், அதி­கா­ரத்தை மீண்டும் கைப்­பற்­று­வ­தற்­கா­கவும், ராஜபக் ஷக்கள் போட்ட திட்டம் தோல்­வியில் முடிந்­தி­ருக்­கி­றது,

இதனால், மீண்டும் ஏற்­பட்ட அர­சியல் குழப்­பங்கள் தற்­கா­லி­க­மாக முடி­வுக்கு வந்­தி­ருக்­கின்­றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­பதில், தமிழ், முஸ்லிம் கட்­சிகள் ஒன்­றி­ணைந்­தி­ருந்­தன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு பகு­தி­யி­னரும் கூட, வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­காமல் அதற்கு ஒத்­து­ழைத்­தனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மீது உள்ள விசு­வாசம் மற்றும் நம்­பிக்­கை­யினால் மாத்­திரம் இது நடந்­தது என்று யாரும் தப்­புக்­க­ணக்குப் போட்டு விடக் கூடாது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மீதும் அவ­ரது அர­சாங்­கத்தின் மீதும், தமிழ், முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு வெறுப்பும், அதி­ருப்­தி­களும் உள்­ளன. தேர்­தலின் போது கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­ற­வில்லை என்ற சினம் அவர்­க­ளிடம் நிறை­யவே இருக்­கி­றது.

இருந்­தாலும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பாது­காப்­பதை விட மற்­றொரு தெரிவு அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை.

ஜே.வி.பியைப் போன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்ற தனி­ந­பரை மாத்­திரம் வைத்து, இந்தக் கட்­சி­களால் முடி­வெ­டுக்க முடி­ய­வில்லை.

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஜே.வி.பி. ஆத­ரவு அளித்­தது. அதற்­காக, ராஜபக் ஷக்­க­ளுக்கு சார்­பாக ஜே.வி.பி. நடந்து கொண்­டது என்று கூற முடி­யாது.

ராஜபக் ஷக்­களின் விவ­கா­ரத்­தையும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் விவ­கா­ரத்­தையும் தனித்­த­னி­யா­கவே ஜே.வி.பி. பார்த்­தது. ரணில் நீக்­கப்­பட்டு விட்டால் அதனால் ஏற்­படும் வெற்­றிடம் யாரால்- எப்­படி நிரப்­பப்­படும் என்று ஜே.வி.பி. சிந்­திக்­க­வில்லை.

ஆட்சி மாற்­றத்­துக்கு கைகொ­டுப்­பதும், பின்னர் வெளியே போய் அந்த அரசை விமர்­சிப்­பதும் ஜே.வி.பியின் கடந்த கால வர­லாறு.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்­தி­ரி­பால சிறி­சேன என்று மூன்று ஆட்சி மாற்­றங்­களில் ஜே.வி.பி. பங்­கா­ளி­யாக இருந்­தது. ஆனாலும், ஒரு கட்­டத்­துக்கு மேல் அவர்­க­ளுடன் இணைந்து பய­ணிக்­காமல், வெளி­யே­றி­யது.

எனவே, ரணில் இல்­லா­விட்டால் இன்­னொ­ருவர் என்று கணக்குப் போட்ட ஜே.வி.பி. அவர் எப்­ப­டிப்­பட்­ட­வ­ராக இருந்­தாலும் பர­வா­யில்லை என்­ற­ள­வுக்கே சிந்­தித்­தது.

ஆனால் தமிழ், முஸ்லிம் கட்­சி­களால் அவ்­வாறு சிந்­திக்க முடி­ய­வில்லை. மீண்டும் அதி­கார வெறி­யோடு காத்­தி­ருக்கும் சக்­தி­க­ளுக்கு தாம் தீனி­யாக அமைந்து விடக்­கூ­டாது என்று அவை கவ­ன­மாக இருந்­தன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டால், அந்த இடத்தை மஹிந்த ராஜபக் ஷவோ அல்­லது அவ­ரது நிழல் ஒன்றோ நிரப்­பு­வதால் ஏற்­படக் கூடிய ஆபத்­துக்­க­ளையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

அத்­த­கை­ய­தொ­ருவர் பத­விக்கு வரு­வதால், ஏற்­படக் கூடிய பாதிப்­பு­க­ளையும் கவ­னத்தில் கொண்டே முடி­வெ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது.

இது தான், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை, நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் இருந்து பாதுகாக்கும் கவசமாக மாறியது.

ஆனால், ஐ.தே.கவோ, ரணில் விக்கிரமசிங்கவோ இதனைத் தமக்கு சாதகமான விடயமாகக் கருதிக் கொள்ளக் கூடாது. தமிழ், முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

ஏனென்றால், ராஜபக் ஷக்களின் இரண்டு ஒப்பரேசன்கள் தோல்வியில் முடிந்தாலும், மூன்றாவது ஒப்பரேசனுக்கு அவர்கள் தயாராக மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியுமில்லை.

அரசாங்கத்தை எந்த நேரமும், பரபரப்புக்குள்ளேயும், குழப்பத்துக்குள்ளேயும் வைத்திருப்பது அவர்களின் உத்தி. அப்போது தான், அரசாங்கம் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்காது. செயலற்ற அரசாங்கமாக – மக்களுக்கும் நாட்டுக்கும் பயனற்ற அரசாங்கமாக அதனை அவர்களால் நிரூபிக்க முடியும்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலையை- தற்காலிக அமைதியை நிரந்தரமானது என்று கூற முடியாது.

மூன்றாவது கட்ட ஒப்பரேசனுக்கு அவர்கள் தயாராகும் வரை விடப்பட்டுள்ள இடைவெளி இது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.